சிலிம் ஜாக்பாட் சிம்ரன்


பழைய கமல் படத்தில் வந்த ஒரு அழகான SPB பாட்டு தான் கம்பன் ஏமாந்தான்.. இந்த கன்னியரை ஒரு மலர் என்றானே, கற்பனை செய்தானே என்று வரும். ஆனா என்னோட கிட்ட்த்தட்ட எல்லா போஸ்ட்களிகளில் எங்கெங்கோ சுத்தி கடைசிலெ கம்பர் வந்து விடும் விபத்து நிகழ்கிறது. இது ஏதும் திட்டமிட்டு செய்த சதி அல்ல. தற்செயலாக வந்தது. அப்படியே தொடர்கிறது. ஏன் இப்படி என்பதற்கான தன்னிலை விளக்கம் தான் இந்த போஸ்ட்.

தினமணி பேப்பரில் முதலும் கடைசி வரை மேய்ந்து முடிக்கும் படிப்பாளி என் மாமா. அவர் எல்லா வார மாத சங்கதிகளையும் படிப்பார். அதிகம் பயணம் செய்வதால் பலபல புத்தகங்கள் அவரிடம் வந்து சேரும். அப்படி அவரிடம் எப்படியோ வந்து சேர்ந்தது தான் அந்த ஒன்பது தொகுதிகள் அடங்கிய வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்ட கம்பராமாயணம் மூலமும் தெளிவும்.

ராமேஸ்வரத்தில் பல வருடங்கள் மீன் பிடி தொழில் சார்ந்து இருந்த போதும் என் மாமா கோவிலுக்கு போய் நான் பாத்த்து இல்லை. ஆனால் கடவுள் இல்லை என்ற ரகமும் இல்லை. 2000 ஆண்டில் அவர் கையில் வந்த்தாய் கையெழுத்து சொல்கிறது. படித்திருக்கலாம். 2005 வாக்கில் என் கைக்கு வந்தது. அந்தமான் வரை சுமந்து வந்த நல்ல காரியம் மட்டும் தான் நான் செய்தது. ஓர் ஆன்டு வரை அலமாரிச் சிறையில் தனிமைத் தண்டனை அனுபவித்த்து அந்தக் கம்பக் காவியம்.

வருடத்துக்கு ஒரு முறையாவது வீட்டைச் புரட்டிப் போட்டுச் சுத்தம் செய்வது என்பது என் மனையாளிடம் இருக்கும் பல நல்ல பழக்கங்களில் ஒன்று. அப்படி ஒழுங்கு படுத்தும் போது தேவையற்ற பொருட்கள் பயன்படுத்தாத பொருள்கள் வெளியேறிவிடும். அப்படி வீட்டை விட்டு வெளியேற்றத்துக்கு ஆன முதல் ஐட்டம் அந்த ஒன்பது தொகுதி கம்பராமாயணம். இதெப் படிச்ச மாதிரியே காணோம்…(படிச்சாலும் இது என்ன ராமாயணம் படிக்கிற வயசா என்ற எதிர் பேச்சும் வரும் என்பது வேறு விஷயம்). தூக்கிப் போட்றலாம் என்பதை நாசுக்காய் எங்காவது படிக்கிற ஆட்கள் அல்லது லைப்ரரிக்கு தரலாமே என்று என் திருமதியின் திருவாய் மொழிந்தது.

நானும் பொறுப்பாய் அதனை எடுத்துக் ஒரே கட்டாக கட்டி அந்தமான் தமிழ் இலக்கிய மன்றத்தின் நூலகத்தில் கொடுத்து விட்டேன். அங்கு மாதம் ஒரு முறை கம்பன் கழகமாய் கூட்டம் நடந்து வந்தது. வாராவாரம் இலக்கிய மன்றக் கூட்டமும் நடைபெறும். கம்பனின் கற்பூர வாசனை அறியா கழுதையான நான் அதென்ன கம்பனுக்கு மரியாதை (ரிசர்வேஷன் தேவையா?) என்று சொல்லி வைக்க, நான் சொன்ன இந்த நல்வாக்கு பலித்தெ விட்டது. கம்பன் கழக மூடுவிழா கம்பன் பற்றி தெரியாமலேயே நடந்தது. (இந்து மதம் பற்றி தெரிஞ்சிக்காமலேயே மதம் மாறுவதில்லையா? அப்படித்தான்..)

கொஞ்ச நாள் போனது. இலக்கிய மன்ற வாராந்திரக் கூட்டத்தில் ஒரு தலைப்பு சொன்னார்கள். கம்பனின் பாத்திரங்கள் பற்றி அனைவரும் பேச முடிவானது. ரெண்டு வருஷமா அலமாரிச் சிறையில் இருந்த கம்பனின் காவியத்திற்கு ஒரு வழியா பெயில் கிடைத்தது. கம்பனை அன்று கையில் எடுத்தவன் தான்.. இன்னும் திருப்பி வைத்த பாடில்லை. பாட்டு எழுதி விளக்கம் தான் தருவர் எல்லாரும். விலாவாரியாக எழுதி அப்புறம் நச்சுன்னு ஒரு பாட்டு போடலாமே என்று எனக்கு தோணிச்சி. (ஏன் அப்படி தோன்றியதுது? அது அந்த கம்பனுக்கே வெளிச்சம்).

அதுவரை மனதுக்குள் பட்டதை எனது கல்லூரித் தோழர்களொடு (நோ தோழிகள் ப்ளீஸ்) யாஹு குரூப்பில் எழுதி வந்தேன். அங்கு தான் அந்த கம்பனை வம்புக்கு இழுத்து எழுத ஆரம்பித்தேன். நல்ல ஆதரவு கிடைக்கவே பின்னர் வலைப்பூ துவங்கி ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது. கல்லூரி நண்பர்கள் ஏதாவது எழுதப் போய், இதுக்கு கம்பர் ஏதாவது சொல்லி இருக்கிறாரா என்ற கேள்வியும் அப்பப்பொ வரும்.

சமீபத்தில் இப்படித்தான் கல்லூரித் தோழர் லிவிங்க்ஸ்டன் (மக்கா என்று செல்லமாய் அழைப்போம்) குவைத்தில் கலந்து கொண்ட ஜாக்பாட் நிகழ்ச்சி ஜெயா டிவி யில் சிம்ரனின் ஜிலுஜுலுப்போடு நடந்தது. கல்லூரிக் காலத்தில் தமிழ் மன்றத்தை கலக்கிய அனுபவம், சிம்ரனைப் பற்றி செமெ கவிதை பாட வைத்தது. (கல்யாணம் ஆகி இத்தனை வருஷமா பொன்டாட்டியை பாத்து கவிதை எழுதி இருப்பாங்களா? சிம்ரன் என்றால் ஏன் தான் இப்படி வழியலோ என்று என் பொண்டாட்டி கமெண்ட் அடித்தது ஒரு தனிக் கதை)
ஹைதராபாத் நண்பரிடமிருந்து அந்த ஜாக்பாட் புரோகிராம் நடக்கும் போதெ போன் வந்தது. சிம்ரனையும் கம்பனையும் வச்சி ஏதாவது எழுதலையா என்று. அந்த குறையை ஏன் வைக்கணும். சிம்ரன் கூந்தல் செம்பட்டை கலரில் இருந்ததா என்று கேட்டேன். பதில் ஆமாம் என்று வந்தது.

ராமாயண காலத்துக்கு போவோம். அனுமான் முதல் இன்னிங்க்ஸ் இலங்கையோடு ஆடிய ஆட்டம். ஆட்டம் சூடு பிடித்ததால் வாலில் சூடு வைக்க அதை ஊருக்கே வைத்த இடம் அது. Fire Service இல்லாத அந்தக் காலத்தில் ஊர் மக்களே ஒன்று சேர்ந்து அந்த அனுமன் வைத்த சூட்டை அணைத்து வந்தனர். பாத்தாலே கட்டி அணைக்கத் தோன்றும் வகையில் உள்ள மகளிர் மேலும் ஹோலிக்கு தண்ணி ஊத்துவது போல் ஊத்திக் கொண்டிருந்தனர். பதிலுக்கு ஆடவர் மேல் மகளிரும் வேகமாய் தண்ணி ஊத்தினர். ஏன் இப்படி நடக்கிறது?.

கம்பன் பதில் சொல்கிறார். கொழுந்துவிட்டு எரியும் தீ. மகளிர், ஆடவர் தலையில் இருக்கும் (சிம்ரன் போல்) செம்பட்டை முடி. ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியாததால் வந்த வினை. இதில் “சிம்ரன் போல்” என்பது கம்பன் சொல்லாமல் விட்டு இந்த வம்பன் சேர்த்தது.

கூய் கொழும் புனல் குஞ்சியில் கூந்தலில்
மீச் சொரிந்தனர் வீரரும் மாதரும்
ஏய்த்த தன்மையினால் எரி இன்மையும்
தீக் கொளுந்தினவும் தெரிகின்றலார்.

வேறு ஏதாவது அல்லது யாரையாவது வம்புக்கு இழுக்கலாம் கம்பரோடு சேர்த்து.

TIME MANAGEMENT IN RTI


It is a general argument with in the Government employees that the Right to Information Act 2005 (RTI) takes away their more productive time on just processing the RTI applications and providing information to the applicant who has sought the information under RTI Act. Similarly no training classes of RTI conclude in the absence of such queries like “Is there any mechanism to protect the public servant from Harassment?”

In broader sense, the RTI now a day’s became a dominating pressure creating workforce in the Government functionaries but it was not so before seven years and the current scenario prevails from Oct 2005, the effective date of implementation of RTI Act 2005.

When we raise the question about “why RTI is filed in Government departments?”, the first and foremost vital answer to get is that there exists some problem. The citizen now finds filing a RTI is a simple route to resolve their problem. In some cases the general public tries to get the information through the source of RTI and approach to the other available channels to resolve their problems. In most of the cases, grievances will be redressed on receipt of RTI applications.

In the other hand, the wastage of time in dealing with RTI is mainly due to the lack of Record Management. More time were spent to trace / locate the records which were not been located due to their own poor management record policy. Now this is the time to set right the records which not only easier to locate the information now but also will be useful in the near future to furnish the same when asked in RTI in an efficient manner even after 20 years.

To overcome the stress on RTI applications, the Public Information Officer (PIO) should deal the RTI application with little care instead passing down to the lower level subordinates, as normal paper been dealt. The PIO is expected to read the application full in DAK stage itself and the information sought is not pertains to the own Public Authority these can be transferred at that stage itself. Five days time limit has been provided to transfer the RTI to another Public Authorities which could be done within two days.

The next step is to locate the desired information and also to work out the cost of the same. If any assistance required from other officers under the same Public Authority, the same could be sought immediately. While seeking assistance from other officials / offices, the PIO should seek the specific information sought by the applicant. PIO also obtain the cost of the same information in order to inform to the applicant.

Instead, most of the PIO were just forwarding the application received from the applicant for further action and in some cases the PIO’s were directing other officials to furnish the information directly to the applicant. In this scenario, the PIO’s will be liable for facing show cause notices from Central Information Commission (CIC) in the first instance which creates a panic situation in the working place. The lapses by the defaulting officials will be treated as deemed PIO which is at par with the PIO by the CIC in later stage.

It is also noticed that the PIO’s were intimating the details about the cost of information in the fag end of the stipulated period of disposal (30 days). This leads a very meager time left with for taking huge copies as required in the RTI application and the fees paid. Thus it is advisable to keep a cushion of at least week long duration in hand to take photo copies & provide the information.

The yet another question in the minds of PIO’s is that: “Why 30 Days?; Why not more?” There is no specific reasons were made available for fixation of 30 days target time over the shoulders of PIO. It can be justified with the precedence of the times specified earlier.

To view the said justification, one has to travel in a time machine and move in a backward direction up to the period where Ramayana took place. There was a board meeting going on in the monkey’s kingdom. Several crucial Management decisions were arrived in that meeting. The main agenda of the meeting was to locate Sita.

The series of Managerial activities were decided are: a. Task Definition (To search & locate Sita) b. Identify the Team Leader (Hanuman has identified as Team Leader) c. Recourses to the Team Leader (Requires resources allocated to the Team Leader to perform the Task) d. Target time ( Only 30 days allowed). The 30 days time period was thought of sufficient in that era where the whereabouts of Sita was not known. The Team Leader also not fully aware of the identity of the Task. (Source: Kamba Ramayana)

While coming back to the RTI regime, the 30 days time has been provided to locate the information which is very well within the Public Authority and the Public Authority is fully aware of whereabouts the information. Thus the 30 days provision is fully justifiable in my view.

Hope this article may help to reduce the stress over the handling of RTI applications. If you need more details feel free to contact over mail in tnkdcealhw@gmail.com .

பத்த வச்சிட்டியே


Do or Die செய் அல்லது செத்துமடி என்று அடிக்கடி சொல்லக் கேட்டிருப்பீங்க.. வாழ்க்கையில் இருக்கும் கடைசி வாய்ப்பு இது தான்… இதனை விட்டால் வேறு வழி இல்லை.. என்கின்ற போது தான் இந்த வார்த்தைகளின் பிரயோகம் வரும். ஆனா இப்பொ எல்லாம் பைக்கில் சிலர் வேகமாப் போவதைப் பாத்தால், அந்த பயணம் தான் வாழ்க்கையின் நோக்கம் என்பதாய் போகிறார்கள். சில சமயம் அதுவே அவர்களின் கடைசிப் பயணமாகவும் மாறி விடுவது தான் வேதனை. இப்படி வேகமாகப் போகும் ஒருவரை மடக்கி கேட்டேன்: “அப்படி என்ன அவசரம்?”. கிடைத்த பதில்: அநிட்3கோ (அந்தமானின் டாஸ்மாக்) கடை மூடி விருவார்கள்.. அதான். அடப்பாவிகளா.

நாட்டுக்காக உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். தலைவர்களுக்காய் எரிந்தும் போய் தங்களின் விஸ்வாசத்தைக் காட்டி இருக்கிறார்கள். ஹிட்லர் வாழ்க்கையில் நடந்ததாய் சொல்லப்படும் பல கதைகளில் இதுவும் ஒன்று. (இப்படியும் நடக்குமா என்ற பில்டப்புடன் ஆரம்பிக்கலாம் இந்தச் சம்பவத்தை)

ஹிட்லரின் திறமையினைக் கேள்விப்பட்ட ஒரு பத்திரிக்கையாளர், அவரிடம் (கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு) உங்களின் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டாராம். அதற்குப் பதில் ஏதும் சொல்லாமல் ஹிட்லர் தன் அடியாளான படையாளனைக் கூப்பிட்டு, இந்த மூனாவது மாடியிலிருந்து குதி என்றாராம். அவனும் ஒன்றும் யோசிக்காமல் குத்தித்து உயிரை விட்டானாம். இதுலெ ஏதும் உள்குத்து இருக்குமோ என்ற சந்தேகம் (பத்திரிக்கைக் காரங்களுக்கு கூடவே எப்பவுமே அது தான் இருக்குமே?) ஒருத்தர் தான் இப்படியா?? என்று இழுத்தார் அந்த நிருபர். ஹிட்லர் அடுத்த படைக் காவலரை கண்ணால் ஜாடை காட்டினார். அடுத்த உயிர் போனது.

நம்பவே முடியலையே…இது நிருபர். ஹிட்லர் மூன்றாவது ஆளை அழைத்தார். நிருபர் காலில் விழாத குறையாய் வேண்டாம். எனக்காய் ரெண்டு உயிர் போனது போதும் என்றார். படைக்காவலன் பேசினான். யோவ் ஆளை வுடுய்யா… இந்த ஆள் கிட்டெ குப்பெ கூட்றதெ விட சாவுறது மேலுண்ணு அவனவன் சந்தோஷமா சாவுறான். (தகவல் உபயம் சுகிசிவம்). இது எப்படி இருக்கு?

செய்யும்தொழிலில் சிரத்தையோடு செய்யணும் என்பது தான் எல்லாரும் எதிர் பார்க்கிறார்கள். சும்மா ரெண்டு நிமிஷத்தில் செய்யும் நூடூல்ஸில் எத்தனை நுணுக்கம் இருக்கு தெரியுமா? (அவனவன் நொந்து நூல் ஆகும் போது, நூடுல்ஸில் நுணுக்கம் வேற கேக்குதா?) நான் செய்யும் நூடூல்ஸில் எப்பவும் அந்த மசாலா சரீய்யா கரைஞ்சிருக்காது. கட்டி கட்டியா இருக்கும். வீட்டு அம்மணி செய்யும் போது லேசா எட்டிப் பாத்தப்பொ நானு செஞ்சிட்டு வந்த தப்பு விளங்கிடுச்சி. முதலில் தண்ணியிலேயே மசாலா போட்டு விட்டால் அந்த பிரச்சினை தீந்தது. (என்ன ஒரு பெரிய்ய கண்டுபிடிப்பு?)

வாத்தியார் படத்துப் பாட்டில் வரும் சரித்திரப் புகழ் பெற்ற ஒரு வசனம். “எனக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் வாய் தான் கொஞ்ச்சம் நீளம்”. திறமைசாலிகள் கூடவே இருப்பது வெற்றி தரும் என்பதில் சந்தேகமில்லை. ஜால்ராக்களை கூடவே வைத்து இருப்பதில் தான் ஆபத்து ஜாஸ்தி. 100வது திருட்டுக்கு போஸ்டர் ஒட்டி அழகு பார்க்கும் ஜால்ராக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சில “கீழ்படிந்துள்ள” என்பதற்கு உதாரணமாகவும் சிலர் இருப்பார்கள். ஆபீசில் ஒரு பைல் வேண்டும் என்றால் உடனே ஓடி விடுவார்கள் தேட. என்ன பைல் என்பதைக்கூட கேட்காமல் (ஆளை உட்டா பொதுமடா சாமி என்ற ரகம்).

அதே மாதிரி வச்சிட்டு வாடான்னா, பத்த வச்சிட்டு வருகின்ற ஆட்களும் உண்டு. இதிலிருந்து எல்லாரும் தெரிஞ்சிக்கும் உண்மை என்னவென்றால் சொல்ல வேண்டிய சேதியை பக்குவமா பாத்து பதமா சொல்ல வேணும் இல்லாட்டி இப்படி ஏதாவது ஏடா கூடமா நடக்கும். யார் கிட்டெ சொல்றோம் என்பதையும் குறிப்பா சொல்லாமல் விட்டாலும் சிக்கல் தான் வரும்.

ஒரு தலை வச்சிருக்கும் தறுதலைகளான நமக்கே (சாரி.. சாரி.. எனக்கே) இவ்வளவு சிக்கல வந்தா ஒன்பது தலையை extra fitting ஆ வச்சிருக்கும் ராவணனுக்கு வராதா? வந்ததே. “தீ வை” என்ற உத்திரவு பொதுவாய் வந்து விழுந்தது. அனுமன் வாலில் வைத்தனர் அரக்கர் தீயை. அனுமனோ, ஊருக்கே தீயை வைத்தான். அரசாங்க உத்திரவை அச்சரம் பிசகாமல் follow செய்தார்கள் இருவருமே. “என் வாலைக் கொளுத்தும் இவர்களது செயல், இந்த ஊரைக் கொளுத்துக” என்று அனுமனுக்கு பட்டதாய் கம்பர் சொல்கிறார்.

கடவுள் படையைக் கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே
விடுவித்து அளித்தார் தெவ்வரே வென்றேன் அன்றே இவர் வென்றி
சுடுவிக்கின்றது இவ்வூரைச் சுடுக என்று உஐத்து துணிவு என்று
நடு உற்று அமையம் உற நோக்கி முற்றும் உவந்தான் நவை அற்றான்.

என்ன இனிமே ஏதாவது சொல்லும் போது சரிய்யாச் சொல்லுவோமா???

கேக்கிரான் மேக்கிரான் கம்பெனி


நகைச்சுவை உலகில் வெற்றிக் கொடி கட்டிய காமெடி, அந்த வடிவேலு துபாய் போய்
வந்து அலம்பல் செய்வது தான். எக்கு தப்பா “நீயெல்லாம் என்ன கேக்கிரான்
மேக்கிரான் கம்பெனியிலெ என்ன செஞ்சிருக்கப் போறெ? அங்கே டாய்லெட் கிளீன்
செய்யற வேலையில் தானே இருந்தே”…. என்று குத்து மதிப்பா பார்த்திபன்
கேக்க (பார்த்திபன் குறி என்னெக்காவது தப்புமா?) “அடெ.. நான் இங்கே ஒரு
மாதிரி பில்டிங்ங்க்ங்க் கான்ட்ராக்டர்ன்னு சொல்லி வச்சிருக்கேன்”…
என்று வடிவேல் கெஞ்சுவதும் எல்லாருக்கும் நல்லா ஞாபகம் இருக்குமே!!!

செய்யும் தொழிலே தெய்வம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், தான் செய்யும்
தொழிலை சொல்லாமல் மறைப்பதும் சிலருக்குக் கை வந்த கலையாய் இருந்திருக்கு.
அந்தமானிலும் அந்த விபரீதம் அடிக்கடி நிகழும். ஒரு நாள் ஃபோன் வந்தது.
அழுகுரலில் ஒரு பெண்மணியின் குரல். தன் கணவர் அந்தமானில் தன்னை விட்டு
வந்து வாழ்வதாய் தகவல். போய் பாருங்க என்ற வேண்டுகோளொடு முடிந்தது.

நானும் போய் விசரித்தேன். ஊரில் ஐடிஐ மட்டுமே படித்த அவர் அந்தமானில்
இஞ்சினியர் ஆகி (பீலா தான்) இருந்தார். அம்புட்டு பொறுப்பா கம்பெனியில்
வேலை பாத்திருக்கார்.. அவர், வீட்டோட மாப்பிள்ளை ஆகும் ஏற்பாடு வேறு
நடந்திட்டு இருந்திருக்கு. நான் போனதும், வில்லன் வந்த கதையில் வரும்
திருப்பம் போல், ஊருக்கே திரும்ப வேண்டிய நிலை வந்து விட்டது. (ஏதோ
என்னால் ஆன நல்ல காரியம்).

ஒரு காலத்தில் அந்தமானில் இருப்பவர்களுக்கு பொண்ணே குடுக்க மாட்டார்கள்.
அதுக்காகவே இன்னெக்கி அந்தமான், நாளைக்கே மதுரைக்கு மாற்றல் ஆகி வந்து
விடுவேன் என்றெல்லாம் சொல்லி (பொய் தான்) கல்யாணம் செய்து கொண்டு வருவர்.
துறைமுகம் எங்கே மதுரைக்கு வரும் என்ற யோசனை கூட செய்யாமல் பெண் கொடுத்த
புன்னியவான்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

என் மாமனார் ரொம்ப விவரமானவர். 90 களில் மதுரைக்குப் போய் பெண் பார்த்து
விட்டு தீவு திரும்பினேன். நான் இருக்கும் தீவு நன்கவுரி. என்னைப்
பற்றியும் நான் செய்யும் வேலை பற்றியும் விலாவாரியா சிபிஐ ரேஞ்ஜில்
விசாரனை நடத்தி இருப்பது பின்னர் தான் தெரிந்தது. எல்லாம் ஒரு Safety
க்குத்தான் என்றாலும், இப்படி சிபிஐ ரேஞ்சுக்கு தேவையா?? இப்பொ எல்லாம்
அந்தச் சிக்கல் இல்லை. மொபைல் வந்த பிறகு, ஆளைப் புடிச்சிடலாம் என்ற
நம்பிக்கை வந்து விட்டது எல்லாருக்கும்.

சமீபத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானப் பயணம் (மாமனார் செலவு
இல்லிங்க…) மூன்று சீட்டில் நான் நடுவில். இடது பக்கத்தில் இருந்தவர்
என்னைப் பாத்ததும் தமிழா? என்று கேட்டார். (ஏன் அப்படி கேட்டிருப்பார்?).
அவர் துபாயிலிருந்து வருகிறார். வலது பக்கம் இன்னொருவர் வந்து
உக்காந்தார். வந்தவுடன் iPod எடுத்தார் கையில். துபாய்க்காரரோ அப்பா..
பெரிய்ய ஆளுப்பா..என்றார். நானும் என் பங்குக்கு, சலங்கை ஒலி படத்தின்
“கமல் கேமிரா” மாதிரி குட்டியான Galaxy Tab கையில் எடுத்தேன். நீங்களும்
கம்மியில்லையே என்றார் அந்த துபாய்க்காரர்.

நான் பார்த்திபன் ரேஞ்சில் அவரிடம் கேட்டேன் “என்ன செய்யறீங்க துபாய்லெ?”
அவரும் சும்மா வாட்ட சாட்டமா தான் இருந்தார். ஆனா கொஞ்சம் சன்னமான
குரலில், “Labour வேலை தான்” என்றார். “அட நீங்களும் பெரிய்ய ஆள் தான்
என்றேன்” நான். “உலகமே துபாயெப் பாத்து வாயெப் பொளக்கிறதுக்கு நீங்களும்
தான் ஒரு காரணம்” என்றேன். செம ஜாலியாய் ஆகிவிட்டார் மனுஷன். ஊருக்கும்
போனா Building Contractor என்று சொல்வதாய்த் தான் இருந்தாராம். மனதை
மாற்றிக் கொண்டார்.

ஒரே வகுப்பில் படித்து பலமாதிரி பதவிகளில் வேலைக்கு சேர்ந்திருப்பார்கள்.
சில சமயம் சிலர் சிலரின் கீழ் வேலை பார்க்கும் நிலை கூட வரலாம். நான்
ஒருவரின் கீழ் வேலை பார்த்து, பின்னர் அவர், என் கீழ் வேலை பார்க்கும்
அசம்பாவிதங்களும் நடந்திருக்கின்றது. அதுக்காக செய்யும் தொழிலை
மாத்திக்கிறதோ மறைக்கிறதோ நல்லாவா இருக்கு?

எதற்கும் தயாராய் இருப்பது தான் நல்ல குணாதியம். எதற்கும் என்பதில்,
எல்லா விதமான மோசமான சந்தர்ப்பங்களும் சேர்த்தி தான். பழைய படத்து டயலாக்
இப்படி வரும். “தூங்குபவனைத் தட்டி எழுப்பி, அவன் கையில் வாளையும்
கொடுத்து, தலையையும் நீட்டச் சொல்கிறான்”. இதுக்கு மேலெ ஒரு மோசமான
சிச்சுவேஷன் வருமா என்ன?

சரீ..எல்லாம் சரி.. இந்த மாதிரி சிச்சுவேசனை எப்படி சமாளிக்கிறது? ஒரு
சின்ன டெக்னிக் இருக்கு. பக்கத்திலெ இருக்கும் ஆளை ஒரு தூக்கு
தூக்கிடுங்க போடும். (இப்போல்லாம் தூக்கிடவா என்றால் வேறு மீனிங்க்…
நான் மெய்யாலும் உசத்தி பேசுங்க என்கிறேன்)

அதெப்படி எதிரியை ஒசத்திப் பேச முடியும்?? இப்படியெல்லாம் எக்குதப்பா
கேள்வி கேட்டீங்கன்னா, அப்புறம் நானு உங்களை ராமாயண காலத்துக்கு
கூட்டிட்டு போயிடுவேன். செய்யும் தொழிலை மறைப்பது மாதிரியே, பெரிய்ய
ஆளையும் சும்மா ஜுஜுபி என்று மறைத்துவிட முடியுமா? ரெண்டுக்கும் ஒரே
பதில் தான்.. கூடாது.

அந்தக் காலத்து விசாரணைக் கமிஷன் இலங்கையில் நடக்கிறது. சத்தியத்துக்கோ
அது ஏதோ ஒரு கயித்துக்கோ கட்டுப்பட்டு அனுமன் நிக்கிறான் கை கட்டி
அமைதியாய். (எவ்வளவு சரக்கு இருந்தாலும் அடக்கி வாசிக்கனும்டா மாமு
என்பது ஓரத்தில் கிடைக்கும் இலவச இணைப்பு உபதேசம்). அனுமன் பத்தி கசமுசா
என்று எல்லாரும் வத்தி வச்சிருக்க… ஒரு மனுஷன் மட்டும் அனுமனுக்கு
சப்போர்ட்டாக வருகிறார். யார் தெரியுமா அது? விபீஷணன் என்கிறீர்களா?
அதான் இல்லை.

இராவணன் சபையில், அனுமன் வல்லவரு நல்லவரு என்று சொல்லி சிச்சுவேஷனை
balance செய்வது இந்திரசித்தன். உருவம் தான் குரங்கு. இவன் பலே
கில்லாடிப்பா.. ஆண்மையில் சிங்கம் மாதிரி… சிவன் & திருமால் மாதிரியே
வீரம் மிக்கவன் என்று சொல்வதொடு ஒரு சலாமும் வச்சாராம் அனுமானுக்கு.

புவனம் எத்தனை அவை அனைத்தும் போர்கடந்
தவனை உற்று அரி உருவான ஆண்தகை
சிவன் எனச் செங்கணான் எனச் செய் சேவகன்
இவன் எனக் கூறி நின்று இரு கை கூப்பினான்.

என்ன நிறைய நாம கத்துக்கணுமோ??