டாடீ எனக்கு ஒரு டவுட்டு


“டாடீ எனக்கு ஒரு டவுட்டு” என்று ஒரு காமெடி பிட்டு ஆதித்யா சேனலில் அடிக்கடி வந்து, சக்கை போடு போட்டு வருகிறது. தினமும் சொல்லி வரும், பேசி வரும், நடைமுறை வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்றாய் பழகிவிட்ட சில சொற்களை செமெயாகக் கிண்டலடிக்கிறது அந்த காமெடி. அனேகமாக அப்பன்களிடம் குடைந்து குடைந்து கேள்வி கேட்கும் வாண்டுகளாகட்டும், சாதாரணமாய் கேட்கும் ஆசாமிகளாகட்டும் இப்பொ எல்லாம், இந்த “டாடீ எனக்கு ஒரு டவுட்டு” என்று தான் ஆரம்பிக்கிறார்கள். சில சமயங்களில் அதில் வரும் கேள்விகளுக்கு விடை தெரியாமல் நானும் முழித்த போது என் பையன் குத்த வருவது போல் வந்ததும் நடந்ததுண்டு. (நல்ல வேளை குத்து மட்டும் விழலை).

இது போகட்டும். சமீபத்தில் சென்னையில் ஒரு நண்பன் வீட்டுக்குப் போயிருந்தேன். (அப்பொ என்ன விரோதி வீட்டுக்கா போவாக..!!) அங்கே இப்பொத்தான் Pre KG படிக்கப் போயிருக்கும் வாண்டு என்னைப் பாத்து, ”அங்கிள் எனக்கு ஒரு டவுட்டு” என்று அப்படியே விரல் தூக்கினான். (ஆண்டவனே… ஏன்.. எல்லா சோதனையும் எனக்கே வந்து சேருது??). சரி… நம்ம சப்ஜெட்டுக்கு வருவோம். கணக்கிலெ கில்லாடிகளா இருக்கிறவங்களை கணக்கில் புலி என்கிறார்களே? ஏன் அப்படி? (இந்தக் கேள்விக்கும் “டாடீ எனக்கு ஒரு டவுட்டு” அப்பா குத்து வாங்கியிருப்பார் என்பது என் அபிப்பிராயம்.

மாம்பழங்களில் கிளிமூக்கு மாம்பழம் செமெ டேஸ்ட் ஆ இருக்கும். கிளியோட மூக்கு மாதிரியே புலியோட மூக்கை கொஞ்சம் உத்துப் பாத்தா (உண்மையான புலி பக்கத்திலெ வரணும் அப்பொத் தெரியும்… சுனாமி வந்தப்பொ ஓடுன மாதிரி, துண்டெக் காணோம் துணியெக் காணோம்னு ஓடியே போயிருப்போம்) லேசா பொறி தட்டுச்சி.. மூக்கு சற்றே பெரியதாகவும் அகலமாகவும் இருந்தால் அவர்கள் கணக்கில் சூரப்புலிகளாக இருப்பர். அப்படியே கணித மேதை இராமானுஜம், சகுந்தலா தேவி ஆகியோர்களது மூக்கை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும். அதே மூக்கு பெரிதாகவும் அகன்றும் சற்றே உப்பிய மாதிரி இருந்தால் அவர்கள் கணக்குப் பன்னுவதில் புலியாக இருப்பார்கள். உதாரணமா… (ஆசை.. தோசெ.. அப்பளம்.. வடை… நானு யார் பேராவது சொல்லி வம்பிலெ மாட்ட, நீங்க ஜாலியா இருப்பீகளா… நீங்களே பாத்துகிடுங்க). ஆதாரம் தேவை என்று விக்கிபீடியாவில் போடுவது போல்னு வச்சிக்குங்களேன். ஆனா நீங்க வேற யாரையாவது வச்சிட்டிருக்கும் சேதியை மூக்கு சொல்லிடும். அம்புட்டுத்தான்.

ஏதாவது சிக்கலான சேதியாய் இருக்கும் என்று, நாம கேட்கப் போக, அது என்ன பெரிய்ய கம்ப சூத்திரமா என்ன? என்று பதில் சொல்லாமலேயே கேள்வி கேட்டு அலம்பல் செய்பவர்களும் உண்டு. அப்பேற் பட்ட ஆட்களிடம், அது என்ன கம்பசூத்திரம்? என்று திருப்பிக் கேளுங்கள். அவங்களோட டப்பா டான்ஸ் ஆடிடும். (அவங்க திருப்பி, அப்பொ டப்பா டான்ஸ் ஆடிடும்னா இன்னா, என்று கேட்டா… ஆளை வுடுங்க சாமி..)

அது என்ன அப்பாடக்கரா என்பது மாதிரி, கம்ப சூத்திரம் என்றால் என்ன என்று தேடும் அவா வந்தது. இப்பொத்தான் எப்பொ சந்தேகம் வந்தாலும் கூகுளாண்டவரெத் தானே தேடறோம். நானும் தேடத் துவங்கினேன். அப்பொத்தானா இந்த தமிழ் Font கோளாறு செய்யனும். சரி.. மேட்டரு அர்ஜெண்ட் என்று நினைத்து, English லே போட்டுத் தேடலாம் என்று ஆரம்பித்தேன். Kamba Suuthram in Tamil என்று தேடினேன். கூகுள் ஹி..ஹி.. என்று பல் இளித்தது. போதாக் குறைக்கு, கம்ப சூத்திரம் சரக்கு இல்லை. காமசூத்திரத்தில் 53 லட்சத்துக்கும் மேலா பக்கம் இருக்கு. வேணுமா என்று கெஞ்சியது. ம்… 50 வயசுக்கு மேலெ இவ்வளவு பக்கம் பாத்து இன்னா செய்ய?? எல்லாமே இப்படி லேட்டாத்தான் நடக்குமோ? இப்படித்தான் அரசு வழங்கும் வீடும்.

அரசு உத்தியோகம் கிடைச்சவுடன் சின்னதா ஒரு வீடு கிடைக்கும். Type I or Type A என்று சொல்லும் ஒரு Bed & Singe fan இருக்கும் வீடு. அப்பொத்தான் நண்பர்கள் படை சூழ வீடே ஜே ஜே என்று. அப்பொ சின்னதா இருக்கும் வீடு. ஆனா அம்பது வயசிலெ மூனு பெட்ரூம் இருக்கும் Type E or Type V வீடு கிடைக்கும். பசங்க அப்பொ காலேஜ் படிக்கப் போயிருப்பாய்ங்க.. என்ன செய்ய? ஒரு பொண்டாடியும் இல்லாத நேரத்துலெ இப்படி ஒவ்வொரு ரூமா உக்காந்து மாத்தி மாத்தி ராமாயணம் படிக்க வேண்டியது தான். புண்ணியத்துக்கு புண்ணியமாவது கிடைக்கும்.

ஒரு வழியா ரீ பூட் செய்து தமிழ் Font சரியாக்கி, மீண்டும் தேடினால் ஒரு வழியா 6K அளவு பக்கங்கள் இருப்பதாய் தகவல் தந்து ஒதுங்கியது. சில சமயங்களில் ஒரு பக்கம் திறக்கவே லிட்டில் அந்தமான் தீவில் ஒரு நாள் ஆகும். நானு என்னெக்கி எல்லாத்தையும் பாத்து…ம்.. படிச்சி.. எழுதி…??

சிலர் பல விஷயங்களை “அது பெரிய கம்ப சூத்திரம் இல்லை” என்பார்கள். அவர்கள் கம்ப சூத்திரத்தையே அப்படித்தான் சொல்வார்கள். இப்படிச் சொன்னவர் எங்க ஊர் பரமக்குடியார் கமலஹாசன். நிறைய தடவை படிச்சிப் பாத்துட்டேன். எனக்கு ஒன்னும் வெளங்கலெ… உங்களுக்கு ஏதாவது வெளங்குதா?? (அது என்ன பெரிய்ய்ய் க சூத்திரமா என்று சொல்லி விட்டால் நீங்க பெரிய்ய்ய் ஆளு தான்)

கம்ப சூத்திரம் என்றால் என்ன என்று புரிவதற்குள் அவர் வைத்திருக்கும் சூத்திரத்தைப் பாக்கலாமே. (போற போக்கிலெ ஒரு சின்ன கொசுறு தகவல்: கம்ப சித்திரம் தான் பின்னர் மறுவி.. அதாங்க மாறிப் போயி சூத்திரம் ஆனதாய் ஏகப்பட்டவர்களின் கருத்தா இருக்குங்க). பெருக்கல் கூட்டல் இப்படி ஏதும் இருந்தாத் தானே அது சூத்திரம். கம்பன் கிட்டெ அப்படி ஏதாவது சூத்திரம் இருக்கா என்று பாத்தபோது கெடெச்ச சேதி.. இதோ உங்களுடன்.

குரங்குப் படைகள் ஏகமா அணிவகுத்து நிக்குது கிஷ்கிந்தாவில் (மறுபடியும் போலாமா டாடீ என்று கிளம்பும் அந்த கிஷ்கிந்தா இல்லீங்கோ.. அது அசல்). எவ்வளவு இருக்கும் என்று தோராயமா, உத்தேசமா நிருபர் ரேஞ்சுலெ கணக்கு போட்டு சூத்திரமா சொல்கிறார் கம்பர். இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா என்று இருக்கும் அந்தப் படை கடலின் பரப்பு மாதிரி இருக்கு என்று சொல்லலாமான்னு மொதெல்லெ யோசிக்கிறார் கம்பர். ஆனா கடலில் எல்லையெப் பாத்தவங்களும் இருக்காகளே. இந்தப் படையின் அளவு பத்தி சொல்ல இந்த கம்பன் என்ன?? எந்தக் கொம்பன் வந்தாலும் முடியாது. அவங்களுக்கும் சொல்றதுக்கும் எந்த உவமையும் சிக்காமெ திண்டாடுவாங்க!!

சரி..இங்கே சூத்திரம் எங்கே வருது? இருங்க வாரென்… பத்தை இரட்டிப்பாக்கி இரவு பகலா பாத்தாலும் பாதி படையைத்தான் பாக்க முடியுமாம். அப்புடீன்னா, முழுப் படை எப்புடி இருக்கும். நீங்களே பாத்துகிடுங்க. அப்படியே பாட்டும் பாக்கலாமே..

அத்தி ஒப்பு எனின், அன்னவை உணர்ந்தவர் உளரால்
வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறு யாதோ
பத்து இரட்டி நன்பகல் இரவு ஒருவலர் பார்ப்பார்
எத்திறத்தினும் நடுவு கண்டிலர் முடிவு எவனோ??

(அத்தி – கடல்)
இங்கே, ”பத்து இரட்டி” தான் சூத்திரம் என்பது என் பதிவின் மூலம். (பத்து இரட்டி என்பதை பல நாட்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்று உரையாசிரியர் பள்ளத்தூர் பழ பழனியப்பன் சொல்கிறார்.) அப்பொ இதையும் அந்த உரை ஆசிரியர் அசைத்து விட்டதால், கடலின் எல்லையைக் கம்பர், சூத்திரம் மூலம் பாத்து தெரிந்து எழுதி இருகிறாரே.. அதையாவது கம்ப சூத்திரம் என்று நம்பலாமே…

ஓய்வு பெறும் நாள்..


விவேக் நடித்த படத்தில் ஒரு காமெடி வரும். பெரிய மாலையுடன் பெரியவர் இருப்பார். அம்மாவிடம், ”என்னம்மா அப்பா போயிட்டாரா?” என்று மப்பில் கேட்பார். ”இல்லெடா… அப்பா ரிட்டையர் ஆயிட்டார்” என்பதாய் பதில் கிடைக்கும். ”அப்பாடா இனிமேலாவது ஒரு இளைஞனுக்கு வேலை கிடைக்கும்” என்று தொடர்ந்து, ”இனிமெ வேலைக்கே போக வேண்டியதில்லை. அப்பொ எதுக்கு கடிகாரம்?” என்று அதையும் பிடிங்கிக் கொள்வது தான் அந்தக் காமெடியின் ஹைலைட்.

இன்றைய காலகட்டத்தில் ஒருவன் ஒரே கம்பெனியில் ஐந்து வருஷத்துக்கு மேல் இருந்தால் அவன் அப்டேட் ஆகாதவன் என்ற கெட்ட பெயர் தான் கிடைக்கும். திறமைகளை வளர்த்துக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் வரும். யார் அடிக்கடி கம்பெனி மாற்றுகிறார்களோ, அவர்கள் தான் இன்றைய சூழலில் கொடிகட்டிப் பறக்கும் சூரப் புலிகள்.

ஆனால் அரசுத் துறைகளில் அப்படி இல்லை. 30 வருடத்துக்கும் மேலாய் மாங்கு மாங்கு என்று (உண்மையிலேயே அதன் அரத்தம் தான் என்ன?) உழைத்து ஓய்வு பெறும் ஆட்களும் உண்டு. கடைசி நாளன்று ஒரு சின்ன விழா எடுப்பர். விடைபெற்றுச் செல்லும் நாளன்று அவரை நல்லவர் வல்லவர் என்று புகழ்வது ஒரு சபை நாகரீகம். ஓய்வு பெறும் நபர் எப்போது ஒழிவார் என்று காத்திருக்கும் ஆசாமிகளும் இருக்கத்தான் செய்வார்கள். எல்லாம் கலந்த கலவை தானே மக்கள் என்பது.

சமீபத்தில் அப்பேற்பட்ட விழாவில் நானும் இருந்தேன். ஒருவரை பேச அழைத்தனர். மேடையும் மைக்கும் கிடைச்சாலும் கிடெச்சது என்று இந்திய கலாச்சாரம் தொடங்கி வின் வெளி ஆய்வு வரை சென்று நன்றாக எல்லாரும் உழைக்க வேண்டும் என்பதாய் முடித்தார். எனக்கோ சின்ன கலக்கம் ஏதாவது தப்பான மீட்டிங் வந்து விட்டோமா என்று. அடுத்து ஒருவர் வந்தார். ஏதோ பட்டிமன்றம் போசும் போது முதலில் பேசியவரை வெட்டியோ ஒட்டியோ பேச வேண்டிய கட்டாயத்தில் இருப்பவராய் இருப்பவர் போல் அவரும் பேசிவிட்டுச் சென்றார். விடை பெற்றுச் செல்ல இருப்பவர் பேந்தப் பேந்த முழித்த்து தான் வேதனையாய் இருந்தது பாக்க.

இப்படிப்பட்ட கூட்ட்த்தில் நச்சுன்னு ரெண்டு வார்த்தை, விடை பெறும் நபர் பத்தி சின்னதா ஒரு குட்டிக் கதையோடு சொல்வதால் என் பேச்சு எடுபட்டு விடுகிறது. (எப்படியெல்லாம் நம்மளை நல்ல பேரு எடுக்க வைக்க எத்தனை பேரு பாடு பட்றாய்ங்க??)

ஒருவேளை பிடிக்காத நபராய் இருப்பாரோ அந்த விடை பெறும் நபர். என்னதான் மோசமான ஆளாய் இருந்தாலும் ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடந்திருக்காது வாழ்க்கையில். (தமிழகத்து ஆளும் கட்சி எதிர் கட்சி மாதிரி இருப்பார்களோ..??)

ஆனால் நம்ம மரபு, எதிரியாய் இருந்தாலே கூட அவரும் ஏதாவது நல்லது செய்தால் அதனை பாராட்ட வேண்டும் என்று தானே சொல்லிக் கொடுத்திருக்கிறது. வக்கிரமான சின்னத்திரை சீரியல்கள், பழிக்குப் பழி ரத்தத்திற்கு ரத்தம் என்று தொடர்ந்து வரும் படங்களையும் பாத்ததால் அந்த நல்ல பண்பை எல்லாம் மறந்து விட்டோமோ?? யோசிக்க வைக்கிறது.. நீங்களும் யோசிங்க…

மத்திய அரசின் ஓய்வு பெறும் தற்போதைய வயதான 60 ஐ மேலும் நீட்டித்து 62 வரை ஆக்க இருப்பதாய் தகவல்கள் வெளிவர, எல்லாருமே ஆளுக்காளுகள் தனக்கு என்ன சாதகம்? பாதகம்? என்பதை அலச ஆரம்பித்து விட்டனர். சிவனே என்று இருந்த என்னையும் சிலர் வம்புக்கு இழுத்தனர். ஒரு ஊழியரின் பிறந்த நாள் மட்டும் தெரிந்தால் அவரின் ரிட்டையர்மெண்ட் தினத்தை தெரிந்து கொள்வது எப்படி? என்று கிளறினார்கள். (நாம தான் எக்செலில் போட்டுக் காட்டி விடுவோம் என்று ஒரு நம்பிக்கை). கேட்டவரும் எக்செலில் போட்டுத்தான் பாத்திருக்கார். இந்த லீப் வருடம் சிக்கல் தரவே நேரெ என்னிடம் வந்துட்டார்.

லாஜிக்கலா யோசித்து சில ஸ்டெப் போட வேண்டும். ஒருவரின் பிறந்த நாள் 12-11-1962 என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு 60 வயது எப்போது ஆகும் என்று முதலில் பாக்க வேண்டும். 11-11-2022 ல் 60 வயது ஆகும். அப்புறம் அது எந்த மாதம் என்று பார்க்க வேண்டும். அதன் கடைசி நாள் தான் அவரின் ரிட்டையர்மெண்ட் ஆகும் தினம். அதாவது நவம்பர் 30, 2022 தான் அவர் ஓய்வு பெறும் நாள். இன்னொரு சிக்கல் உள்ளது. மாதத்தின் முதல் நாள் பிறந்த துரதிருஷ்டசாலிகளுக்கு அந்த மாசத்துக்கு முன்னாடி உள்ள மாதத்தின் கடைசி நாளில் ஓய்வு பெறுவார். உதாரணமாக 1-11-1962 ல் ஒருவர் பிறந்திருந்தால், அவர் 31-10-2022 லேயே வீட்டுக்கு போயிடனும்.

இதெல்லாம் யோசிச்சி அதை அப்படியே எக்செலில் திணிச்சா.. நமக்கு விடை கிடைக்காமலா போகுது?? அது சரி..எப்படி போட்றது? இவ்வளவு வம்பு அளக்கிற நானு, அதையும் சொல்லாமலா போகிறேன்..!!!
கீழே இருக்கும் படி சில தகவல்கள் பதியுங்கள் அந்தந்த செல்களில்:
A1 – Date of Birth
B1 – Date of Retirement
A2 ல் ஒர் ஊழியரின் பிறந்த தேதியினை இடுங்கள். B2 ல் ஈயடிச்சான் காப்பி மாதிரி கீழே உள்ள பார்முலாவை அடிங்க.
=IF(DAY(A2)1,EOMONTH(A2+21915,0),EOMONTH(A2+21915,-1))

A2 ல் நீங்கள் எண்ட்ரி செயத பிறந்த நாளுக்கேற்ப B2 ல் ரிட்டையர்மெண்ட் நாள் வந்திருக்கும். ஏதாவது நம்பர் வந்து கடுப்பேத்தினா, கவலையே படாதீங்க. அதை Date formate க்கு மாத்திட்டா போதும் (சும்மா ஒரு ரைட் கிளிக் செய்ங்க பிரதர்). எப்புடி இந்த ஜாலம் நடக்குதுங்கிறதும் சொல்லிட்டா, நீங்க மத்த வேலைகளுக்கும் யூஸ் செய்யலாமே???

மொதல்லெ தேதி 1 இல்லாத பட்சத்திலெ எப்படி செய்யனும் முதல் தேதி என்றால் என்ன செய்யனும் என்பதாய் ஒரு IF போட்டு துவங்கியாகி விட்டது. பிறந்த நாளில் தேதியினை மட்டும் சுட்டு தனியே எடுக்க DAY(A2) என்பது பயன்படும். Not Equal to என்பதைத் தான் என்று போட்டுள்ளேன்.
EOMONTH என்றால் End of Month சம்பளப் பணம் எல்லாம் தீந்து போய், சிக்கனமாய் இருக்கும் அல்லது கடன் வாங்கும் மாசக் கடைசி தினம். அது என்ன சம்பந்தமில்லாமல் 21915 வந்திருக்கு என்று கணக்குப் புலிகள் யோசிக்கீகளா?? விளக்கம் சொல்றேன் கேளுங்க. நாலு வருஷத்துக்கு ஒரு தடவை பிப்ரவரி மாசத்துக்கு 29 நாள் வந்து உயிரை எடுக்கும். அப்பொ மட்டும் 366 நாட்கள் வருடத்துக்கு. மத்த மூனு வருஷமும் 365 நாள் தான் வரும். ஆக நாளு வருஷம் கையிலெ எடுத்தா அதில் 365+365+365+366 = 1461. அப்பொ ஆவரேஜா ஒரு வருஷத்துக்கு 1461/4 =365.25. அப்பொ 60 வருஷத்துக்கு ?? 60 X 365.25 = 21915. (தலை சுத்துதா கொஞ்சமா?) அந்த தலை சுத்தலோடவே… கூட வாங்க.

ஒரு கமா போட்டு 0 ஒரு பக்கமும், ஒரு கமா போட்டு -1ம் இருக்குமே! ஒரு மாசத்து கடைசிக்கு போகத்தான் அந்த ஏற்பாடு. ஒரு மாசம் முன்னாடி போக அடுத்த ஏற்பாடு.. அப்பாடா ஒரு வழியா பாடம் முடிந்தது…

கம்பர் உதயமாகிறார். குவைத் எல்லாம் போய் என்னை வம்ம்புக்கு இழுத்துட்டு இந்த போஸ்டிங்கில் கலட்டி உட்டியே கடன்காரா!!! (அந்த கடன் காரன் சாட்தாத் நான் தான்…) எக்செலெப் பத்தி சொல்ற நேரத்திலெயும் கம்பர் வரனும்னு வம்பு செஞ்சா எப்படி?? ஆமா எதிரியை புகழ்வது பத்தி பாதியிலெ வுட்டோமே???… இப்பொ தொடர்வோம்… கம்பனையும் கூட்டிக் கொண்டு…

ஒரு சண்டைக் காட்சி, ரொம்பவுமே பரபரப்பா போயிட்டே இருக்கு. ஆளும் கட்சி எதிர்கட்சி என்று ரெண்டு பேரும் தங்கள் திறமைகள் காட்டி சண்டை போட்டபடி இருக்கிறார்கள். ஒருவர் அப்படி தன் திறமையினைக் காட்ட, சபாஷ் என்று சத்தம் வருது. எங்கேயிருந்து என்று ஓடிப் போய் பாத்தா… அது எதிர் அணியிலிருந்து தான். வருவது கம்பராமாயணத்தில். திறமையினைக் காட்டியது அனுமன். சபாஷ் போட்ட பெரிய்ய மனுசன் கும்பகர்ணன்.

சூலத்தையே ஒடிச்ச அனுமனது ஆற்றல் பாத்து, கும்பகர்ணன் “உன்னோட கைத்திறன் சொல்லவோ, நெனைச்சிப் பாக்கவும் மேலானதா இருக்கு.. மெகா ஈவென்ட் எல்லாம் செய்றதுக்கு உலகத்திலெ உன்னெ விட்டா ஆளு லேது. கம்பேர் செஞ்சி சொல்ல முடியாத அளவுக்கு சூப்பரா கீரேப்பா” என்கிறார். கெட்டவனா இருந்தாலும் மேன் மக்கள் மேன் மக்கள் தான்..

பாட்டும் பாக்கலாமா??

நிருதனும் அனையவன் நிலைமை நோக்கியே
கருதவும் இயம்பவும் அரிது உன் கை வலி
அரியன முடிப்பதற்கு அனைத்து நாட்டினும்
ஒரு தனி உளை இதற்கு உவமை யாது என்றான்.

மீண்டும் நல்லவர்களை தேடுவோம்…