கொடுக்கிற தெய்வம்.,


சமீபத்தில் ஒருவர் ஆபீசுக்கு வந்திருந்தார். வந்த வேலையை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஊர் உலகம் எல்லாம் சுத்தி வந்து பேச்சை எடுத்து வந்து பின்னர் வந்த வேலை பத்தி ஆரம்பிப்பது தான் நம்ம ஆளுங்களுக்கு கை வந்த கலையாச்சே.. (சில சம்பயங்களில் அவர்கள் வந்திருக்கும் வேலையை விட, இந்த மாதிரி இடைச் சொருகலாக வரும் இலவச இணைப்புகள் ரொம்பவுமே சுவாரஸ்யமாக இருக்கும்) சரி..சரி.. மேட்டரைச் சொல்லுப்பா..அது சுவாரஸ்யமா இல்லையா என்பதை நாங்க சொல்றோம் என்கிறீர்களா?? அதுவும் சரி தான்.

பேசிக்கொண்டு வந்தவர், தமிழில் உங்களுக்கு ஆர்வம் இருக்கா? என்று கேட்டார். ஏதோ கொஞ்சமா இருக்கு..என்றேன். (அடிக்கடி மனைவியிடம் நல்லா வாங்கிக் கட்டிக் கொள்ளும் அளவுக்கு இருக்கு என்ற விபரம் அவரிடம் சொல்ல முடியுமா என்ன?? ஏதோ உங்களிடம் அதனைக் கொட்டி ஆறுதல் அடையலாம்.) உங்கள் புளுடூத்தின் கதவைத் திறந்து வைங்களேன் என்றார். நானும் சரி என்று செய்தேன் கேட்டபடி. அவர் ஒரு ஆடியோ சொற்பொழிவினை அமைதியாய் என் மொபைலுக்குக் கடத்தினார்.

ஒரு மணி நேரமாய் ஓடும் உணர்ச்சி பூரவமான சீமான் அவர்களின் பேச்சு அது. தொடக்கத்தில் தமிழருவி மணியனின் நடையில் காமராஜைச் சுற்றி வந்தாலும் பின்னர் அப்படியே பெரியார், ஈழம், தலித், பகுத்தறிவு என்று அழகாய் காட்சி மாறி வருகிறது. கேட்பவர்களை அப்படியே கட்டிப் போடவைக்கும் பேச்சு அது. நடு நடுவே கெட்ட வார்த்தைகள் போல் வந்தாலும், அந்தக் கோபாவேசமான பேச்சுச் சூழலுக்கு அது தவறாகப் படவில்லை. பேச்சுக் கலை என்பது எப்படி சீமானுக்கு இவ்வளவு கைவந்த கலையாய் ஆயிற்று?? கடவுள் கொடுத்த வரமா இருக்குமோ!! அவர் தான் கடவுளே இல்லை என்கிறாரே!!! அவருக்கு ஏன் இந்த பேச்சுக் கலையை கூரையைப் பிய்த்துக் தருவது போல் தந்தார் அந்த (இல்லாத) கடவுள் அவருக்கு??

கோவில்களில் இருவகை. செல்வம் கொட்டும் கோவில்கள் ஒருவகை. மரத்தடி பிள்ளையார் மறுவகை. இது தேவாலயங்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். நான் இருக்கும் சிறிய அந்தமானிலும் 20க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் இருக்கின்றன. பார்த்தாலே பிரமாண்டம் என்று தோற்றமளிக்கும் வகையில் ஒரு பக்கம். பழைய சினிமா டெண்ட் கொட்டகையை நினைவு படுத்தும் தேவாலயங்கள் மறு பக்கம். கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு தரும் என்பது எல்லா கடவுள்களுக்கும் பொதுவோ என்னவோ யாருக்குத் தெரியும்?

சப்பர் பா2ட்3கே தேத்தா என்று கூரையை பிய்த்துக் கொண்டு தரும் கலையை ஹிந்தியிலும் சொல்வர். பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுந்து அப்படியே உள்ளே போனா எப்படி இருக்கும்? – என்ற கற்பனை ஒரு பழைய படத்தின் காமெடி காட்சி. வாழைப் பழத்தை தரலாம். அதையும் உரிச்சியும் தரலாம். அப்படியே வாயில் தினித்து குச்சி வைத்து தினிக்கவா முடியும் என்றும் சொல்லக் கேள்வி. முயற்சி செய்யாத ஆட்களுக்கு சொல்லும் வார்த்தைகள் இது..

சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும். இதற்கு நேர் மாறாக ஒரு சொல்லாக்கமும் இருக்கத்தான் செய்கிறது. பட்ட இடத்திலேயே படும். கெட்ட குடியே கெடும் என்பது தான் அது. அது எப்படி சாத்தியமாகும்? அடி பட்ட இடத்தில் நாம் சர்வ ஜாக்கிரதையாக இருப்போம். இருந்த போதிலும் அதில், சிறு வேதனை வந்தாலும் அதுவே பிரமாண்டமாய் இருக்கும். உலகையே தூக்கிக் கொண்டிருக்கும் ஹெர்குலிஸுக்கு மேலும் ஒரு வெட்டுக்கிளி கூட தூக்க முடியாதாம். (9ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் படித்தது)

இதையே அதே 9ம் வகுப்பில் தமிழாசிரியர் வள்ளுவர் சொன்னதையும் காட்டினார். மயிலிறகு அளவு அதிகம் சுமந்தாலும் வண்டி குடை சாய்ந்து விடுமாம்.

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும்; அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்

இதனை அந்தக் காலத்தில் தமிழக அரசு சூப்பரா குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியது. மூட்டை முடிச்சை குறையுங்கள். வண்டிப் பயணம் சுகமாகும். குடும்ப பாரம் குறையுங்கள். வாழ்க்கைப் பயணம் சுகமாகும் என்று சொல்லி இந்த குறளையும் நல்ல குறலில் பாட்டாக பயன்படுத்தியது.

ஒரு நிமிஷம்… கம்பர்கிட்டெ இருந்து ஒரு Message வந்திருப்பதாய் டொய்ங்க் என்ற சத்தம் சொல்கிறது… பாத்தா… “என்ன இன்னெக்கி ஐயன் வள்ளுவன் தான் Climax ஆ??”..

இல்லை கம்பரே… உங்களை விட்டா எனக்கு வேறு வழி இல்லை முடிக்க.. இதோ வந்திட்டேன்..

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்று தான் எல்லாரும் சொல்வார்கள். கம்பர் அப்படிச் சொல்லிட்டா.. அப்புறம் கம்பருக்கும் மத்தவங்களுக்கும் என்ன வித்தியாசம்? சீதை சிறையில் (சகல வசதிகளும் இருக்கும் நல்ல உயர்தர Open Jail தான்) இருந்தாலும் சோகம் உருக்குகிறதாம். எப்படி? புண்ணைப் பிளந்து அதில் நெருப்பை நுழைத்தது போல் என்கிறார் கம்பர். புண் சிரமம். நெருப்பு.. கேக்கவே வேணாம். ரெண்டும் சேந்தா??

ஒரு Flow Char போடும் அளவுக்கு கேள்விகள். மாயமானைத் தேடிப் போன இராமன் இலக்குவனை காணலையோ? If Yes இராவணன் தான் கடத்திச் சென்றார் என்பதை அறியவில்லையோ?? If Yes இலங்கை இருக்குமிடம் தெரியாது இருப்பர் போலும்… இப்படி எல்லாம் கவலைப் பட்ட சீதையின் வேதனை இப்படி இருந்ததாம்.
கண்டிலங்கொலாம் இளவலும்? கனை கடல் நடுவண்உண்டு இலங்கை என்று உணர்ந்திலர் உலகு எலாம் ஒறுப்பான்கொண்டு இறந்தமை அறிந்திலராம் எனக் குழையாபுண் திறந்ததில் எரி நுழைந்தாலெனப் புகைவாள்

கம்பன் கலாட்டாக்கள் தொடரும்.

மலரே குறிஞ்சி மலரே


மலரே….. குறிஞ்சி மலரே….
இந்த மாதிரி ஒரு சேனல் வராதா?? என்ற என் ஏக்கத்தின் பதிலாய் வந்து சேர்ந்தது எங்கள் தீவுக்கும் “முரசு” டீவி. பெயரைப் பார்த்ததும் வைகோ அல்லது விஜயகாந்த் நடத்தும் டீவியாக இருக்குமோ என்று நினைத்தேன். எந்த விளம்பரமும் இல்லாமல் ஆரம்பித்து (இப்போது குறைந்தபட்ச விளம்பரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது). Negative News மட்டுமே குறி பார்த்து சொல்லும் சேனல்களுக்கு மத்தியில் செய்திகளே இல்லாத சேனல் என்றால் மகிழ்ச்சி தானே.. அதுவும் அறிவிப்பாளர் கூட இல்லாமல் தொடர்ந்து பழைய பாடல்கள்.. தேன்மழை தான் போங்கள்..

அதில் அடிக்கடி கேட்கும் பாடல் ஒன்று… எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல் அது. மலரே.. குறிஞ்ச்சி மலரே.. தலைவன் சூட… நீ மலர்ந்தாய். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்ச்சிப் பூவை காதலிக்கு உவமையாய் சொல்ல காதலனுக்கு கசக்குமா என்ன? (காக்கா பிடிப்பது என்று முடிவு செய்தாகி விட்டது. அதில் குறிஞ்ச்சிப்பூ என்ன குஷ்பூ என்ன?? எல்லாம் ஒரே மீனிங்க்தானே..) மலரை யார் சூடுவர்? மகளிர். அதுவும் மலர்ந்த மலரை விரும்பிச் சூடுவர். ஆனால் இந்தப் பாட்டில் பாருங்களேன்… தலைவன் சூட குறிஞ்ச்சி மலர் மலர்ந்ததோ என்று பாடிய சாக்கில் காதலியை சொல்கிறார். தான் அணியவும், பிறருக்கு அணிவிக்கவும் “சூட” என்ற ஒரே வார்த்தை தான். இந்த அர்த்தத்தோடு பாடல் கேட்டால் இன்னும் இனிக்கும்.

நாமெல்லாம் யார் யாருக்கோ வரவேற்பு வளையம் (Welcome Arch) வைக்கிறோம். இந்த லிட்டில் அந்தமான் தீவிற்கு லேனா தமிழ்வாணன் வந்த போது அவரை வரவேற்க வரவேற்பு வளையம் (Welcome Arch) வைத்தோம். ஒரு எழுத்தாளனுக்கு இவ்வளவு வரவேற்பு தந்தவர்கள் நீங்கள் தான் என்றார். பதிலுக்கு நாம் சொன்ன பதில்: இந்த தீவுக்கு வந்த முதல் எழுத்தாளர் நீங்கள். சரி லேனாவை விடுங்க. மலர்களே.. மலர்களே மலருங்கள் என்று வரவேற்பு கொடுப்பதெல்லாம் கூட “ஆயிரம் மலர்களே மலருங்கள்” என்று பாடலாய் பாடி வைத்துள்ளனர். தானாக் கனிவதை தடி கொண்டு கனிய வைக்கும் வித்தையா இது?

பரமக்குடியிலிருந்து 1980 களில் கோவை பொறியியல் கல்லூரியின் விடுதியில் நுழைந்த போது ஏகமாய் புதுமுகங்கள். தமிழகத்தில் தமிழ் பேசவும் தெரியாமல் இருப்பார்களா என்று என் தலையைப் பிய்த்துக் கொள்ள வைத்த பலர். பலர் பேசிய ஆங்கிலம் என்னை ஓர் ஓரம் விரட்டியது. கோலிக் குண்டும் பம்பரமும் மட்டுமே விளையாடி சென்றவனுக்கு அங்கே கிரிக்கெட், வாலிபால், பேஸ்கெட்பால், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் இப்படி எல்லாம் புதிது புதிதாய்த் தெரிந்தது. அந்த விளையாட்டை விட அதற்க்கான உடைகள் பிரமிப்பின் உச்சத்தை அடைய வைத்தன. TMS SPB சுசீலா இவர்களை தாண்டி விரிவடையாத மனசு பல மைக் ஆசாமிகளின் போஸ்டர்களைப் பார்த்து, பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பாத்த மாதிரி விழிலிளித்தேன்.

ரூமில் Hubert ஹுபர்ட் என்பவர் இருந்தார். சொந்த ஊர் என்னவோ நாகர்கோவில் தான். ஆனால் ஆளைப் பாத்தா அப்படித் தெரியவில்லை. ஏற்கனவே மிரண்டு கிடக்கும் எனக்கு, அவர் கையில் இருக்கும் கிடார் இன்னும் பயமுறுத்தியது. ஒரே ஆறுதல் அவர் அந்த கிடாரில் வாசித்த ஆயிரம் தாமரை மொட்டுக்களே.. பாடல் மட்டும் தான்.

ஆண்டுகள் கழிந்தன. 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சந்தித்தோம். மைக் என்றால் மைல் தூரம் ஓடிய என் கையில் அப்போது மைக். மேடையில் நான். அந்த ஹுபர்ட் நண்பரை தேடிப் போனேன். அவருக்கு நினைவில் சிக்கவில்லை. கடைசியில் ஆயிரம் தாமரை மொட்டுக்களே.. பாடினேன். நினைவுக்கு வந்தது அவருக்கு. குடும்பப் பாடல் பாடி ஒன்று சேரும் (நாளை நமதே, தம்பிக்கு ஒரு பாட்டு மதிரி) குடும்பம் மாதிரி நண்பரை தேடிக் காண உதவிய பாடல் அது.

பெரும்பாலும் மொட்டுக்களை யாரும் வாங்குவதில்லை.. (மல்லிகை விதிவிலக்கு.. மொட்டாக இருந்தாலும் மணம் தரும்.. மலர்ந்த மலருக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல்) கும்மி அடிக்க கட்டைகள் வைத்திருப்பர். ஆனந்தக் கும்மி அடிக்க மென்மையான tool (Property என்றும் Prop என்றும் தற்போது பாப்புலர் ஆகி விட்டன டீவி மூலமாய்) தேவைப் பட்டிருக்குமோ!! அதனால் தான் ஒரு தாமரை வேண்டாம்.. 1000 தாமரை மொட்டுகளோடு ஆனந்தக் கும்மி என்று கவிஞர் கற்பனை செய்திருக்கிறார் போலெ. தாமரை மேல் கற்பனைக் கண் வைக்காத கவிஞர்களே இல்லை எனலாம்.

கம்பர் மட்டும் விதிவிலக்கா என்ன??

கவிஞர் மனது எப்படியோ, அப்படித் தான் பார்க்கும் இடமெல்லாம் தெரிகிறது. இயற்கையான நிகழ்வுகள் கூட தங்களின் மன நிலைக்கேற்ப பார்க்கும் வலிமை கவிஞர்களின் தனி உரிமை. சாதாரண கவிஞர்களுக்கே இப்படி என்றால், கவிச் சக்கரவர்த்தி கம்பனுக்கு எப்படி இருக்கும்???

சீதையைத் தேடி அனுமன் அலையும் போது, ஒரு அகழி கண்ணில் படுகிறது. அதிலோ மணம் கமழும் தமரை மலர்கள். அது இரவு நேரம். ஆகவே மலர்கள் குவிந்து காணப்பட்டன. நம்ம அனுமனுக்கு எப்படி தெரியுது தெரியுமா?? இவங்க (தாமரை) நம்ம சீதா பிராட்டிக்கு சொந்தக் காரங்களா (காரிகளா) இருக்கணும். இல்லாட்டி அவங்க மாதிரி இவங்க எல்லாம் ஏன் சோகமா இருக்கணும்? இப்படி யோசிக்கிறாராம் அனுமன் மனசு மூலமா கம்பர்.

நறவு நாறிய நாள் நறுந் தாமரைதுறைகள் தோறும் முகிழ்ந்தன தோன்றுமால்சிறையின் எய்திய செல்வி முகத்தினொடுஉறவு தாம் உடையார் ஒடுங்கார்களோ

திருமணம் ஆன மகளிரை Mrs என்று முன்பு அழைத்தனர். நாகரீகமாய் இப்போது Ms என்று அழைக்கிறோம். ஆனா கம்பர் அப்போதே “செல்வி” என்று அழைத்திருக்கிறார் சீதையினை. என்ன ஒரு தீர்க்கதரிசி!!!!

Hindi translation by Excel


Language is a medium of expression between the human beings through which one could understand the feelings of others. To communicate in a better way there must be a best medium so that both the parties would benefit with the same. The Government policies on Implementation of Official language too serve the same purpose. The ultimate goal of declaring Hindi as official language of the nation is not only for the better communication and also to make a path to reach Government policies and decisions to the common public.

Most of the offices in India celebrating Hindi Fortnight during September every year in various forms. If we closely watch all inaugural as well as valedictory function there will be the mention about a need for more usage of Hindi in making official communication. Of course everyone will agree during the functions but while in practice there are some difficulties in implementation. This article tries to resolve the difficulty and also gives a tool for effective implementation of Official Language.

The yardstick for measuring effective implementation of Official Language is the “documental outputs in Hindi” in any office. Usually computer based outputs only been generated in every offices. Every organization has their small Hindi unit when compared to the total strength of the departments. The output depends on the efficiency of the small skeleton of Hindi Unit which represents the whole organization. In this situation, the Office Automation in Hindi alone may help in improving the effective implementation of Official Language.

Almost all offices were using the popular Microsoft Office packages for their official works. MS Excel – a component of this package, by and large meant for data processing in the form of spread sheet application is also available. The services of MS Excel could be utilized in Office automation in Hindi related works too.

To illustrate how the Office Automation works in Hindi using MS Excel, Let us generate an Office Order on sanctioning of Festival Advances. The basic databases required are employee data’s such as Name, Designation, Office in which the employee works. These are to be made bilingual ie English and Hindi with the self of Hindi unit (one time job) which would be used for many purpose.

The next step is to create a database for the Festivals of the year 2012 (Which requires to modify during subsequent years). The data like name of the Festival & the date are also to be made in bilingual.

A sheet to be made in such a way that user can only select the name of the employee & the Festival for which advances sought. These can easily be made by giving Name Range and also with the Validation facilities of MS Excel.

The Office Order for sanction of Festival Advance is a common format. The variable data’s are the details of employees like Name, Designation, Office in which the employee work, Name of the festival & date of Festival. These will be gathered automatically from the existing database and output will be displayed in Hindi. The facilities (Functions in MS Excel bhasha) available in MS Excel like VLOOUP and CONCATENATE were used effectively for this Hindi translation requirements. The output of the selected employee will be received with no time.

Similar Office Automations can be made by making small modifications in the database and as per the requirements of the Outputs in Hindi. The Techniques of VLOOKUP functions only to be learned by a person who makes format for the output once and the same format can be utilized by all dealing hands to generate the output in Hindi. Such Office Automation in Official Language not only increases the output in Hindi but also improve the overall efficiency of the Government functions. (the author can be reached by email tnkdcealhw@gmail.com in case of further clarification)

அவனா நீ???


இன்றைய படங்களையும் காமெடி காட்சிகளையும் தொடர்ந்து பார்த்து வந்தால் ஓர் உண்மை தெளிவாகப் புரியும். அவைகள் ஒரு வகையில் நம் சமூகத்தோடு ஒன்றாகக் கலந்து போய் உள்ளன என்பதும் தான், நான் சொல்ல வந்த சேதி. சில வார்த்தைகள் திரைப்படங்களில் “சினிமாவில் பயன்பாட்டிற்கு முன்” மற்றும் “சினிமாவில் பயன்பாட்டிற்கு பின்” என்று சொல்லும் அளவுக்கு மாறியே போய் விட்டன. வருங்கால வரலாறு இதனை கிமு கிபி என்று அழைப்பது போல், சிமு சிபி என்று சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

இப்பெல்லாம் “அவனா நீ?” என்று யாரையும் சாதாரணமாய் கேட்டுவிட முடியாது. கேட்டால் அதனால் உண்டாகும் பாதகங்களுக்கும் அவர்களே பொறுப்பு ஏற்க வேண்டி வரும். அடுத்தவர் மனம் கோணாது நடப்பது என்பது ஒரு கலை. அது சிலருக்கு பிறப்பிலேயே வரும். சிலருக்கு என்பது வயது தாண்டினாலும் வராது. கோவை பக்கம் சூப்பரான ஒரு வட்டார வழக்கு இருக்கு. சுட்டுப் போட்டாலும் வராது என்பார்கள். ஏன் தான் இப்படி சொல்கிறார்கள் என்று எனக்கு இன்னும் சுட்டுப் போட்டாலும் புரியலை.

சமீபத்தில் அலுவலக அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் ஒரு சின்ன உல்லாச விருந்துக்கு ஏற்பாடு ஆனது.. (உல்லாசம் என்றவுடன்.. உங்கள் கற்பனை சிறகுகள் எல்லாம் பறக்க விட வேண்டாம்.. ஏதோ வீட்டுல உக்காந்து சாப்பிடறதுக்குப் பதிலா, ஹோட்டலில் போய் நின்னுட்டு சாப்பிட்டு வர வேணும் அம்புட்டு தான். பில்லுக்கும் பல்லிளிக்கும் நபருக்கும், வாசற்கதவு திறந்து சலாம் வைப்பவருக்கும் பணம் தரவேணும் என்பது எழுதப்படாத விதி).
சில ஜாலியான குடும்ப விளையாட்டுகள் வைத்தோம். பேப்பர் கப் என்று கிடைக்கும் 25 கப்களை ஒன்றாக அடுக்கி, அதனை வலது & இடது என்று கை மாற்றி மேலிருந்து எடுத்து கீழாய் அடுக்க வேணும். கணவன் மனைவி ஜோடிகளுக்கு இடையே போட்டி நடந்தது. போட்டி போட்டு நடந்த போட்டியின் முத்தாய்ப்பாய், அன்று ஓய்வு பெறும் அதிகாரியை அழைத்தோம். பொறுமையாய் தன் மனைவியை சற்றும் விட்டுத் தராமல் மனைவிக்கு சமமாய் கப்களை நகர்த்தி ஒரு நிமிடத்தில் விளையாட்டை முடித்தார். இறுதியில் சிறந்த ஜோடிக்கான சிறப்பு பரிசை தந்தோம் என்பது கொசுறுத் தகவல்.
மனைவியின் மனம் வருந்தி விடக் கூடாதே என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். முகம் தெரியா விருந்தினர்களையும் உபசரிக்க திண்ணை வைத்து வீடு கட்டியது அந்தக் காலம். உழைப்பாளிகளின் சுமைகளை இறக்கி வைக்க, சுமை தாங்கி எல்லாம் இருந்தது. குடிக்க தண்ணி கேட்டால் செம்பு நிறைய கிடைத்தது ஒரு காலம். இப்பொ பாக்கெட் தண்ணி வாங்கி குடிக்கும் காலம். அடுத்தவர் பற்றி நமக்கு அக்கறை குறைக்கும் வித்தை மிக அக்கரையோடு கற்பிக்கப் படுகிறதோ!!!

காக்கை வடை திருட்டும் கதை, நரி காக்கையை ஏமாற்றும் கதை இவை எல்லாம் நமக்கு கிடைத்த பால பாடங்கள். ஏமாற்றுவது என்பது ஒரு தவறு இல்லை என்று அந்த பிஞ்சு உள்ளங்களில் பதிந்து விட்டது. நடுவில் சினிமா படங்களும் சில தத்துவங்களை மனதில் பதிக்கின்றன. நாலு பேருக்கு நல்லது என்றால் எதுவுமே தப்பில்லை – போன்றவை சாம்பிள் சினிமா தத்துவங்கள். நேர்மை நியாயம் எல்லாம் அந்தக்காலத்து நாடகம் & சினிமாக்களில் மட்டுமே பாக்க முடிகிறது.

இப்பேற்பட்ட சூழலில் நம்மை யாராவது மனசு நோகடிக்கும்படி செய்தால் அல்லது பேசினால் கஷ்டமாத்தான் இருக்கு. அதை எப்படி சமாளிப்பது என்பது அவரவர் சாமர்த்தியம். ஆனா இதே சங்கடத்தை அடுத்தவர்க்கு நாம் தராமல் இருக்கலாமே?? மாமியார் மருமகள் கொடுமை, ராகிங்க் போன்றவை ஒழிய இந்த மனோபாவ மாற்றம் தேவை. ஒரு புரமோஷன் கொடுக்க உயர் அதிகாரிக்கு வலிக்கிறது. ஏன் என்று கேட்டா, அவருக்கு இப்படி லேசா கெடைக்கலியாம்??? கோர்ட்டுக்கு எல்லாம் போய் தான் கெடேச்சதாம்.. அதனாலெ.. அடுத்தவங்களுக்கும் லேசிலெ தரமாட்டாராம்..
நான் செருப்பு கூட இல்லாமல் ஸ்கூலுக்கு போனேன். நடந்து தான் போனேன். நானும் இப்பொ என் பையனையும் “செருப்பில்லாமெ போ” என்று சொல்லவில்லையே… நல்லதா ஷு வாங்கி தரலையா?? காரில் போக வசதி செய்து தரலையா?? இதே மாதிரியான எண்ணங்கள் வேலை செய்யும் இடத்திலும் இருக்கலாமே என்பது என் கருத்து..
நல்லா இரு… என்று சொல்வதும், நல்லா வருவே என்று சொல்வதும் கூட சினிமாவில் வேறு பொருள்.. சரி.. நாம கம்பர் இந்த மாதிரி சமாசாரம் ஏதாவது சொல்லி இருக்காரா என்று தேட ஆரம்பிக்கலாமா என்று தேடினேன். தேடினால் கிடைக்காமல் போகாது என்பது சரி தான் கிடைத்தது.
ஹனுமன் நெற்றியில் ஒரு Spy Camera வச்சிட்டேன். அவரு என்ன பேசுகிறார் யோசிக்கிறார் (??) பார்க்கிறார் வரைக்கும் நீங்களும் பார்க்கலாம். ஆனா சிந்தனையின் Copy Right மட்டும் கம்பருக்கு. இலங்கையின் ஏரியல் வியூ தெரிகிறதா உங்களுக்கும்?? பிரம்மாண்டமான அரண்மனை… சுகமான நித்திரையில் ஒருவன். ஹனுமன் பார்க்கிறார். “அவனா நீ?” (இராவணனா நீ என்று தான் பொருள்??) அப்படியே இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் தானே ஆயுள்.. அது வரை.. நல்லா இரு என்று ஆசி செய்து நகர்கிறார். செவிக்கு தேனாய் இனிக்கும் இராமனின் புகழினை திருத்தமாய் சொல்கின்ற வானரத் தலைவன் வாயால் வாழ்த்தினால் பலிக்காமலா போகும்!!
அவித்து நின்று எவன் ஆயினும் ஆக என்று அங்கைகவித்து நீங்கிடச் சில பகல்என்பது கருதாசெவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும்கவிக்கு நாயகம் அனையவன் உறையுளைக் கடந்தான்.
இனி மேல் வாழ்க வளமுடன் என்றாவது சொல்லிப் பாருங்கள்.. அவங்களோடு நீங்களும் நல்லா இருப்பீங்க..