Brand Vs Punch Dialogue பிராண்ட் Vs பன்ச் டயலாக்


நக்கீரனும் சிவனும் மோதும் திருவிளையாடல்

நக்கீரனும் சிவனும் மோதும் திருவிளையாடல்

எல்லாம் வெலெ ஏறிப்போச்சி… பாக்கெட்டிலெ காசு கொண்டு போய் பையிலெ காய்கறி வாங்கிணு வந்த காலம் போயி, பையிலெ காசு கொண்டு போய் பாக்கெட்டிலெ காய்கறி வாங்கிணு வர வேண்டியிருக்கே என்கிற புலம்பல் ஒரு பக்கம். ஆனாலும் கார் வாங்கும் மக்களும், பல மாடல்களில் மொபைல் மாற்றி வரும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள். [Tab 1 மாடல் தெரியாத்தனமா வாங்கிட்டேன். அடுத்து Tab 2 வந்த பிறகு, இன்னுமா இதெ வச்சிட்டிருக்கே?? என்று துக்கம் விசாரிக்கிற மாதிரி என் தூக்கத்தெக் கெடுக்கிறாய்ங்கப்பா…அடிக்கடி.]

காலேஜ் டயத்திலெ சூப்பரான ஒரு பாட்டு, சுராங்கனி… சுராங்கனி. [இன்னும் கூட இந்த பாட்டுக்கு ஒரு வேல்யூ இருக்கத்தான் செய்யுது] அதுலெ மாலு மாலு மாலு என்று வரும். அதன் அர்த்தம் அப்பொ தெரியலை. ஆனா இப்போ இந்த மால் கலாச்சாரம் வந்த பிறகு தான் தெரியுது. ஓஹோ இந்த மால் பத்தித்தான் சொல்றாங்களோ என்று. மால் என்றால் பணம் என்கின்ற அர்த்தம் இருந்தாலும், மாலுக்குள் போயிட்டு வந்தா பணம் அம்பேல் தான். [ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது.. லிப்ஸ்டிக்கை விட, அத விக்கிற குமரிகள் உதட்டு லிப்ஸ்டிக் நல்லாவே இருக்குங்க..]

மதுரெயிலும் கூட இப்பொ மால் தலையெக் காட்டியிருச்சி.. எங்கே திரும்பினாலும் பிராண்டட் ஐடம் தான். ஒரு சாதாரண செருப்பு, அதாங்க.. சிலிப்பர் அது 2500 போட்டிருக்கு. அதெ வேறு எங்கேயும் போட முடியாது. பாத்ரூமில் மட்டுமே தான் போட முடியும். வேறு எந்த வேலைக்கும் ஆவாது. (லேடீஸ் சப்பலுக்காவது அப்பப்பொ வேலை வரும்) அதுக்கு போயி அம்புட்டு ரேட்டா?? அப்புறம் அதே மாதிரி ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விக்கும் பேனாக்கள். பெரும்பாலும் நம்ம ஏர்போர்ட்களில் நோட்டம் விட்டா தெரியும். அந்தமான் ஏர்போர்ட்டில் இப்பொத்தான் சிப்பி முத்து வச்சி நகை கடை வச்சிருக்காய்ங்க.. ஒரே மகளிர் அணி கூட்டம் தான். நம்மாலெ எட்டிக்கூட பாக்க முடியலை (தூரத்திலிருந்து பாகிறதோட சரி.)

எனக்கும் இந்த பிராண்டட் பொருளுக்கும் என்னமோ தெரியலை ஏழாம் பொருத்தம் தான். ரெண்டாயிரம் ரூபாக்கும் அதிகமா சொன்ன ஒரு பிராண்டட் சட்டை வாங்கி போட்டால், அதன் பட்டன் அடுத்த நாளே பல் இளிக்கும். செமெ பிராண்ட் பெல்ட் வாங்கி போட்ட அடுத்த வாரம் அது ரெண்டு பீஸா ஆயிருக்கும். சரி பேட்மிண்டன் வெளையாட நல்லா பிராண்டட் ஷூ வாங்கி, போட்ட ரெண்டாவது நாள் அன்பே சிவம் கமல் மாதிரி நடக்க வேண்டி வந்திடுச்சி.. நமக்கு என்னமோ அந்த குமார் ஷர்ட் (இன்னும் இருக்குங்களா 90 ரூபாய்க்கு சட்டை தந்த புண்ணியவான்கள்), சரவனா ஸ்டோர்ஸ் அன்னாச்சி கடை சரக்கு தான் ராசி போல் இருக்கு. (ஆமா… அந்த சரக்குகளோட பிரண்ட் பேரு எனக்கு புரியவே புரியாத புதிர். ஒருவர் சூப்பர் சரக்கு என்பார். இன்னொருவர் அதையே புளிச்ச தண்ணி என்பார். அது ஒரு தனிக் கதை)

பிராண்டட் வார்த்தைகளை பன்ச் டயலாக் என்று சொல்லலாமா? (இதென்ன கேள்வி? சொல்லிட்டாப் போச்சி.. யாரு எதிர் கேள்வி கேக்கப் போறாக… கேட்டாலுமே, சும்மா ஜாலிக்காக எழுதினதுன்னு சொல்லிட மாட்டோமா என்ன?) ஏதோ பன்ச் டயலாக் இப்பொ வந்த மாதிரி நெனைக்கிறீங்களா?? (இப்பொ கம்பராமாயணம் வருமே… இப்படி நீங்க நெனைச்சா அது ரொம்ப தப்புங்க.. அதுக்கு கொஞ்சம் இன்னும் டயம் இருக்குங்க)

ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்…. அம்பாள் எப்போது பேசினாள்?. இதெல்லாம் அந்தக் காலத்தில் வந்த, பன்ச் டயலாக் என்று பெயரிடப்படாத.. பன்ச் டயலாக்கள். நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று பேசும் திருவிளையாடல் படம் பாத்திருப்பீங்க. இதுவும் ஒரு வகையில் பன்ச் டயலாக் தானே.. இதே படத்தில் திருவிளையாடல் முடிந்த பிறகு நக்கீரனின் கடைசி டயலாக் “மன்னியுங்கள் தவறிருந்தால்”. (இது உண்மையில் நக்கீரனின் சொல்தானா? அல்லது ஏபி நாகராஜனின் டயலாக்கா என்ற கேள்வியை கொஞ்சம் தள்ளி வைப்போம்). சிவனிடம் மன்னிப்பே கேட்டாலும், மதுரெக்காரெங்க இப்புடித்தான் கேப்போமில்லெ என்று சொல்ற மாதிரி குசும்பா இல்லே..??

சொல்வதை எல்லாம் சொல்லிட்டு, மன்னிக்கனும் ஏதாவது தப்பா சொல்லியிருந்தா என்று சொல்வதற்கு உண்மையில் பெரிய மனசு வேணும். (அப்படிப் பாத்தா, சிவ பெருமானையே வம்புக்கு இழுத்து, உண்டு இல்லைன்னு ஆக்கிய நக்கீரனும் பெரிய மனசுக்காரர் தானா??).. சரி..இப்பொ அப்படியே கம்பர் பக்கம் போவோம். அங்கேயும் இப்படி வக்கனையா தன்னோட பாஸ் கிட்டெ சொல்றதெல்லாம் சொல்லிட்டு… தப்பா இருந்தா உட்ருங்க. என்பதாய் வருகிறது.

கம்பர் கவிச்சக்கரவர்த்தி அல்லவா.. அவர் கொஞ்சம் ஒரு படி மேலேயே போவார். பாஸ் கிட்டே, ”நீ தான் பெரிய்ய சூப்பர் ஸ்டார். நான் சாதாரண டம்மி பீசு..ஏதோ எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன்.. ஏதாவது ஏடா கூடமா இருந்தா, திட்டனுமா திட்டு” என்பதாய் வருகிறது. இங்கே (பழைய) பாஸ் இராவணன். ஊழியர் – விபீஷணன். இராமன் படையைப் பற்றி போருக்கு முன்னர் எச்சரிக்கும் இடம். ஆனா எரிச்சல் இராவணனுக்கு… ஆமா உங்களுக்கு எப்படி இருக்கு?? பாட்டு பாருங்க.

கற்றுறு மாட்சி என்கண் இன்றாயினும்
உற்று உறு பொருள் தெரிந்து உணர்தல் ஓயினும்
சொற்றறு சூழ்ச்சியின் துணிவு சோரினும்
முற்றுறக் கேட்டபின் முனிதி மொய்ம்பினோய்.
(யுத்த காண்டம்; இராவணன் மந்திரப் படலம்)

ஒரு அதிகாரி (அரசன்) கிட்டெ ஊழியம் எப்படி பேசனும்கிறது சொல்லாமெ சொல்ற மாதிரி இல்லே..????

Kamban – a Management Expert


ஆய்வுக் கட்டுரை - தொகுதி 3[காரைக்குடி கம்பன் தமிழ் ஆய்வு மையம் நடத்திய கம்பராமாயண உலகத்தமிழ் ஆய்வுக் கருத்தரங்கில் அடியேன் முதன் முதலாய் படைத்த ஆய்வுக் கட்டுரை. இக்கட்டுரையினையும் ”வேறுள குழுவையெல்லாம் மென்ற மானுடன்: கம்பன்”- என்ற தலைப்பில் கட்டுரைகளின் தொகுப்பாய் வெளிய்ட்டுள்ள நூலில் வெளியிட்டுள்ளனர். வெளியீடு: கபிலன் பதிப்பகம். arunankapilan@gmail.com]

கம்பன் என்றொரு மேலாண்மைத் திறனாளன்

மேலாண்மைக் கோட்பாடுகள்:

மனித நாகரீகம் தொடங்கிய காலம் தொட்டே, குழுவுடன் வாழும் மனப்பாங்கும் ஆரம்பம் ஆனது. குழுவினரிடையே ஒரு சுமூக சூழல் நிலவத் தேவையான அனைத்தும் செய்திட வேண்டிய தேவையும் ஏற்பட, மேலாண்மை நிர்வாகம் என்ற பெயர் இடப்படாமலேயே அக்கலையும் (ஒரு வகையில் அறிவியலும் கூட) வளர்ந்தே வந்தது. காலத்திற்கேற்ப அதன் வரம்புகளும் மாறியபடியே இருந்து வருகிறது. ஆயினும் இன்று வரை மேலாண்மையின் மூலத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மேலாண்மைக் கண்ணாடி அணிந்து, கம்பராமாயணத்தை படிக்க ஆரம்பித்த போது தான், கம்பன் ஒரு மேலாண்மைத் திறனாளன் என்பதில் எந்த விதத்திலும் ஐயம் இருப்பதாய்த் தெரியவில்லை. கம்பராமாயணம் ஒரு மதம் சார்ந்த, காப்பியம் என்ற உண்மையினையும் மீறி எக்காலத்திற்கும் பொருந்தும் வகையிலான நிர்வாகவியல் தொடர்பான பல செய்திகளும் அதில் இருப்பதை ஆணித்தரமாய்க் கூற இயலும்.

இலக்கு நோக்கிய பயணம்:

நிர்வாகத்தின் பணிகளாக எதிர்காலமதை உத்தேசமாய்க் கணித்தல், சரியான திட்டமிடல், அதனைச் சரிவர செயலாக்கம் செய்தல், தலைமையேற்று நடத்தல், ஒருங்கிணைத்தல், கட்டுப்படுத்தல் ஆகியவை கூறத்தக்கவை ஆகும். இவை அத்தனையும் ஒன்றுசேர்த்து இலக்கை எட்டுவதை பயில்வது தான் நிர்வாகவியலின் சிறப்பு. இதனை கம்பர் தனது இராமாயணத்தில் பல இடங்களில் கையாண்டு இருக்கிறார்.

உதாரணமாக சீதையினைத் தேடும் முயல்வில் வானரங்கள் ஈடுபடும் செயலினை அவர்கள் எவ்விதம் செய்தனர் என்பதைப் பார்க்கலாம். செய்ய வேண்டியதில் தெளிவு, சீதையினை தென் திசையில் சென்று தேடிட வேண்டும் என்பதில் இருந்தது. யாருக்கு என்ன வேலை தரவேண்டுமோ, அதனைச் சரியாக பிரித்துத் தருதல். அனுமனை அதற்குத் தலைவனாயும் தேர்வு செய்தல். தேர்வு செய்த பின்னர் அவ்வேலை செவ்வனே செய்திடத் தேவையான அனைத்தும் தருதல். அதற்கு இரண்டு வெள்ளப் படை தருதல். திட்டமிடும் போதே இறுதியாய் இலக்கினை எட்ட முப்பது நாள் கெடுவாய்க் குறித்தல் இங்கே கவனிக்கத் தக்கது. இறுதியாய்ப் ’பணிகள் சரிவர நடக்கிறதா?’ என்பதை கண்கானிக்கவும் செய்தல். இவை அனைத்தும் சுக்ரீவன் இட்ட நிர்வாக திட்டம். கம்பர் தான் இங்கு நிர்வாக ஆசான். இதோ கம்பன் வார்த்தைகள்:

வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும்
சுற்றி ஓடித் துருவி ஒருமதி
முற்று றாதமுன் முற்றுதிர் இவ்விடை
கொற்ற வாகையினீர் எனக் கூறினார்.
(கிட்கிந்தா காண்டம்/நாடவிட்ட படலம்/பாடல் எண்- 11)

இன்றைய காலகட்டத்தில்கூட தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி பொதுமக்கள் கேட்கும் தகவல்களை 30 நாட்களில் தந்தே ஆக வேண்டும் என்ற முறை உள்ளது. செல்ல வேண்டிய தூரமோ அதிகம். சிக்கலும் சிரமமும் கூடவே உண்டு. சிதாபிராட்டியினையும் இது வரை கண்டதே இல்லை. ஆனால் கம்பன் விதித்த காலக் கெடுவில் எந்தத் தளர்வும் இல்லை.

வரமான சாபம்

இடுக்கண் வருங்கால் நகுக என்கிறது உலகப் பொதுமறை. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று இருப்பது பக்குவமான நிலை. சில இடர்பாடுகளைக் கூட, நாம் வாழ்வின் கிடைத்தற்கு அரிய வரமாய் கருதும் சூழலும் நிர்வாகத்தில் வரும். கம்பரின் காவியத்திலும் இப்படி, வரமா? சாபமா? என்று கேட்கும் சம்பவம் வருகிறது. வேட்டைக்குப் போன தசரதன், யானை என்று நினைத்து சிரவணனை அம்பு எய்திக் கொல்கிறான். விபரம் தெரிந்த சிரவணனின் தந்தை “நீயும் இப்படி மகனை இழந்து துடிப்பாய்” என்று சாபம் தருகிறார்.. இதை கேட்டு தசரதனுக்கு துயரம் ஒரு பக்கம். தனக்குக் குழந்தைப் பேறு இல்லையே என்ற கவலை ஒழிந்தது குறித்து மகிழ்ச்சி மறுபக்கமாம். சிக்கலைக் கூட சிக்கலாக கருதாமல் இருக்கும் மனோநிலையின் நிர்வாகக் கலையினை கம்பர் கற்றுத் தருகிறார்.

சிந்தை தளர்வுற்று அயர்தல் சிறிதும் இலெனாய் இன்சொல்
மைந்தன் உளன் என்றதனால் மகிழ்வோடு இவண் வந்தனெனால்
அந்த முனி சொற்றமையின் அண்ணல் வனம் ஏகுதலும்
எம்தம் உயிர் வீகுதலும் இறையும் தவறா என்றான்.
(அயோத்தியா காண்டம்/ நகர் நீங்கு படலம்/பாடல் எண்: 87)

கனிவான சொற்கள்:

வள்ளுவரின் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்பதினை உலகத் தமிழர்கள் அனைவரும் நன்கு அறிவர். நிர்வாகச் சிக்கலின் பெரும்பாலான காரணங்களைத் தேடிப் பார்த்தால் அதில் பரிமாரிய வார்த்தைகளின் தன்மை தான் மேலோங்கி நிற்கும். ஒரு சூழலில் பயன்படுத்தும் சொற்கள் மற்றவர்க்கும் இதமாய் இருக்கும் போது, செய்ய வேண்டிய செயல் இலகுவாய் முடியும். இல்லாவிடில் ஈட்டியாய் குத்திய வார்த்தைகள் காயப் படுத்தும் பணி தவிர்த்து, வேறு எந்த வினையையும் ஏற்படுத்தாது. அந்தமான் தீவுகளில் வழங்கும் மொழி வழக்கை வைத்து கம்பன் பார்வையில் சற்றே இதனை நோக்கலாம்.

அந்தமான் தீவுகளில் வழக்குமொழியாக ஹிந்தியினைப் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான தமிழர்கள் அந்தமானுக்கு வருகையில் ஹிந்தி மொழி தெரியாமல் தான் வருவர். அதுவும் அவர்களுக்கு ஹிந்தியில் எண்களைப் பயன் படுத்துவது மிகச்சிக்கலான ஒரு செயல். தமிழில் பத்து வரை தெரிந்து கொண்டு பின்னர் இருபது, முப்பது என மட்டும் படித்தால் போதும். ஆனால் ஹிந்தியில் ஒன்று துவங்கி நூறு வரை தெரிந்து கொண்டாக வேண்டும். தமிழர்கள் அந்த சிக்கலுக்கு தீர்வும் கண்டனர்.

15 க்கு ஹிந்தியில் “பந்தரா” என்று சொல்வதற்குப் பதிலாக ஏக் பான்ச் (ஒன்றும் ஐந்தும்). இதே போல் 55 ஐ சொல்லிட தமிழர்க்கு ”பச்பன்” தேவைப்பட வில்லை. ”பான்ச் பான்ச்” (ஐந்தும் ஐந்தும்) என்பதே போதுமானதாய் இருக்கின்றது. இந்த குறுக்கு வழியை நமக்கு சொல்லிக் கொடுத்ததில் கம்பருக்கும் பங்கு உண்டு. பதினான்கு ஆண்டுகள் வனவாசம் பற்றி கோசலையிடம் ராமன் சொல்கிறார். அது என்ன “பத்தும் நாலும்” தானே என்பதாய் வருகிறது. பதிநான்கு ஒரு முறையும், பத்தும் நான்கும் என்று ஒரு முறையும் நீங்களே சொல்லிப் பாருங்கள்.. இரண்டாவதில் மனம் இளகி நிற்கும்.

சித்தம் நீ திகைக்கின்றது என்? தேவரும்
ஒத்த மாதவம் செய்து உயர்ந்தோர் அன்றே?
எத்தைக்கு உள ஆண்டுகள்? ஈண்டு, அவை
பத்தும் நாலும் பகல் அலவோ? என்றான்.
(அயோத்தியா காண்டம்/ நகர் நீங்கு படலம்/பாடல் எண்: 21)

அந்தமானிற்கு கப்பலில் மூன்றே நாளில் சென்று விடுவேன் என்பதற்கும் மூ…ன்று நாளா?? என்று பெரு மூச்சு விடுபவர்களுக்கும் உள்ள வித்தியாசம் உணர இந்தக் கம்பன் யுத்தி உதவுகிறது. நிர்வாக சிக்கலினை எதிர்கொள்ள நாம் எப்போதும் தயாராய் இருக்க வேண்டும். மேலும் அதனை சுலபமாய் எதிர் கொள்ளப் பழக வேண்டும் என்பதையும் கம்பர் மூலம் நாம் அறிய வேண்டும். தவிர்க்க இயலாத மாற்றங்கள் வரும் சமயத்தில் அதனை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்பது தான் மேலாண்மைக் கோட்பாடு. மாறி வரும் சூழலில் மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை. அதை ஏற்றுக் கொள்ளும் இதம் மனதளவில் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் தான் இந்த திறனாளன் எவ்வளவு கவனமாய் இருந்திருக்கிறான்?

ஆதாரங்களின் தேவைகள்:

ஒரு பணியினைச் சரியான நேரத்தில், சரியான நபர்களைக் கொண்டு, செவ்வனே செய்திடும் கலையினைத் தான் மேலாண்மை கற்றுத்தருகிறது. அதனால் வரும் சிக்கல்களையும் அது எதிர்பார்க்காமல் இல்லை. ஆனால் திறனாளனுக்கு அந்தச் சிக்கல்களைத் தீர்க்கும் திறன் கண்டிப்பாய் இருத்தல் அவசியம். கம்பனிடம் இல்லாமல் போகுமா என்ன? ஒரு பிரச்சினைக்கு முடிவு எடுப்பதற்கு ஆதாரமாய் ஆவணங்களும், பிறர் சாட்சியங்களும் தான் மிக மிக முக்கியமானதாய் இன்றளவும் கருதப் படுகின்றது. இந்தச் செய்தியினை எடை போட, இடை பற்றிய செய்திகளொடு சேர்த்து சொல்லும் புலமை, கம்பனின் மேலாண்மைத் திறனாளன் பதவிக்கு சான்று சொல்லும். சீதையின் இடையினைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. அதைப் பார்த்து ஆதாரமாய் எழுதி வைத்த ஆவணங்களும் ஏதும் இல்லையாம்.. இப்படி வருகிறது கம்பனின் வரிகள்.

சட்டகம் தன்னை நோக்கி யாரையும் சமைக்கத் தக்காள்
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்பக் கேட்டு உணர்தி என்னின்
கட்டுரைத்து உவமை காட்ட கண்பொறி கதுவா கையில்
தொட்ட எற்கு உணரலாம் மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை.
(கிட்கிந்தா காண்டம்/நாடவிட்ட படலம்/பாடல் எண்- 38)

முடிவுரை:

கம்பனின் காப்பியக் கடலின் ஓரத்தின் நின்று வேடிக்கை பார்த்த போது கிடைத்த செய்திகள் தான் இந்த நிர்வாகவியல் கருத்துகள். இன்னும் கம்பன் கடலில் மூழ்கினால் முத்துக்கள் எடுக்கலாம். நிர்வாகவியல் என்பது இப்போதைய காலகட்டத்தில், பயிற்சி அளிக்கப்பட்டு வந்தாலும் அதன் அடிப்படையான கருத்துகளை தமிழர்கள் முன்னரே அறிந்திருந்தனர் என்பதை இங்கே பதிவு செய்வது தான் இக் கட்டுரையின் நோக்கம்.

Right to Information Act in Ramayan


[This is my article pulished in Echo of India, Port Blair, Andaman on 16th March 2013]

Transparency laws were attempted to make an entry into the Independent Indian Governance since the year 2000. The Freedom of Information Act 2000 was the first of its kind of Act in our country. It did not become popular as that of subsequent laws of similar nature. The Right to Information Act 2005 (RTI Act), which followed earlier laws implemented in 2005 onwardshas been considered as world’s best Transparency Law with many in-built citizen- friendly provisions in the said RTI Act.

The main objective of the RTI Act is to setting out the practicalregime of right to information for citizens to secure access to information under the control of public authorities, in order to promote transparency and accountability in the working of every public authority. Thus this Act serves as a bridge between the Government and common Citizen. The access to the information from the Public authorities were not only just on demand but also on proactive way to disclose the information for the benefits to the public which were uncommon in the Indian Governance scenario earlier. Section 4 of the RTI Act deals with such proactive disclosures from the Government side which is also termed as “Heart of RTI implementation”. If Section 4 of the RTI Act is vimplemented effectively, the receipt of RTI applications will bereduced considerably or handling of RTI applications will becomea tension free exercise.

Among the other features of the voluntary disclosures, every public authority shall publish certain information to the benefit of the public. The Section 4(1)(b)(vii) of the RTI Act reads “the particulars of any arrangement that exists for consultation with, or representation by, the members of the public in relation to the formulation of its policy or implementation thereof”. Further every Public Authority also “to publish all relevant facts while formulating important policies or announcing the decisions which affect public” [Section 4(1)(c) of RTI Act]; Also all Public Authorities bound to “provide reasons for its administrative or quasi-judicial decisions to affected persons” [Section 4(1)(d) of RTI
Act]. Though it seems difficult to implement Section 4, it can’t be avoided since the transparency law effected seven years back.

Though these Transparency Laws appear to be new to the Indian Government, it would be surprising to see such transparency during Ramayana times while taking decisions. It struck me when I was just reading the pages of Kamba Ramayanam (a Tamil Version of Valmiki Ramayan). The situation in the hands of the Poet was whether to accept or not, the proposal on surrender of Vibheeshana by Lord Rama. As the King of those days, Lord Rama did not require to consult anyone while taking the decision. In contrast the poet shows the consultation mechanism that existed.

Even the present RTI Act provision also expects the Public Authority to provide the reason to the affected people. It is inevitable that every action being taken by the Public Authority may be beneficial to most of the people but there may be some people affected by the same action. The RTI Act was silent on taking decisions by every Public Authority on their own way and the same Act expects from the Public Authority to inform about the decision to the affected people.

Let us go deep into Ramanyan and look into the decision making process & how the then Manager Rama brought about confidence among the affected people. Who were are all with Rama? The team consisted of Rama, Lakshmana & Monkeys (the count goes approximately 2055 Lakhs Crores in numbers). But most of the decisions taken by Rama would certainly affect the Army of monkeys. The decision was supposed to be taken about the acceptance of surrender by Vibheeshana. Instead of manager taking his owndecision arbitrarily, the Management consulted with the “to be affected people”. The first chance was given to a common monkey Aymanthan to express his opinion (like common public now a days). Mayanthan was in two minds and was not in a position to decide on his own.

Next opinion was sought from Sughreevaa. He strongly objected to the proposal saying that Vibheeshana had ditched Ravan andhe may ditch Rama too. Hanuman, on the contrary, was in favour of accepting Vibheeshna into the fold. His was the only house where vegetarian food was served and no liquor was consumed, said Hanuman adding that the ladies of the house also supported Sita.

The management got three suggestions viz., either to accept or not, Strong objection and strong support. By weighing the reasons given by the “to be affected people” Manager Ram decided to take Vibheeshana in his team. This proves the existence of consultation mechanism during the problem solving process. The same was now expected in the Section 4 of RTI Act 2005. The proactive disclosures to public are not a new concept which were in our life style in early good olden days too.

[Note: Similar Management aspects in Ramayan were assembled by the author in a form of article titled “Kamban – a Management Guru” and it was accepted by Karaikudi Kamban Kazhagam and invited for presentation of his article in the International Seminor on Kamban Kazhaga Platinum Jubilee Celebration on 23, 24th of March 2013. The author also a Postgraduate in Management (HRM)] (Deputy Chief Engineer ALHW, Hut Bay)

ஜால்ரா ஜாங்கிரிகள்…


அந்த ஆளு சரியான ஜால்ரா என்பார்கள்… ஜால்ரா அடிப்பது என்னமோ அவ்வளவு ஜாலியான வேலெ மாதிரி நெனைக்கிறது அப்படியே தெரியும். ஒத்து ஊதுறது என்பது அதற்குச் சமமான தமிழ் வார்த்தையாகச் சொல்லலாம். ஒத்து ஊதுபவரிடம் ஒரு சிக்கல் இருக்கும். மெயின் கலைஞர் என்ன வாசிக்கிராறோ, அதை ஒத்தபடி தான் ஒத்து ஊத வேண்டும். அவருக்கு என்ன தான் ஆசையா இருந்தாலும் கூட, கும்கி படத்திலெ வரும் ஸொய்ங் பாட்டை வாசித்துவிட முடியாது. பல கணவன் மனைவி உறவுகள் இந்த ஒத்து ஊதும் தர்மத்த்தில் தான் ஓடிகிட்டே இருக்கு. அப்படியே அந்த ஒத்து ஊதலில் ஏதாவது பிசகினால் அப்புறம் தர்ம அடி தான்.

அலுவலகங்களிலும் இந்த ஜால்ரா சமாச்சாரங்கள் அதிகம் காணக் கிடைக்கும். அரசியலில் இது தான் பாலபாடமா இருக்குமோ!! (அரசியலை இங்கே இழுக்காமல் விட்றலாம்… இதுக்கு இதைப் படிக்கும் பலர் ஒத்து ஊதுவீங்கன்னு நெனைக்கிறேன்.) அது சரி ஜால்ராவுக்கும் ஜாங்கிரிக்கும் என்ன சம்பந்தம்…? (அது ப்ளோவிலெ வந்திடுச்சி…இதுக்கும் வெளக்கம் சொல்ல வேண்டியிருக்கு பாருங்க) அது வேறு ஒண்ணுமில்லீங்கோ, ஜாங்கிரி மாதிரி தித்திப்பாவும் இருக்கும். அதே நேரத்தில் சிக்கலாவும் இருக்கும். அளவோட இருக்கணும். அதிகமாப் போனா, திகட்டிடும் முடிச்சை அவிழ்க்கப் பாக்கக் கூடாது..அப்படியே ஸ்வாகா செஞ்சிரணும். ஜாலராவும் அப்படித்தானே?? என்ன ஏதுன்னு யோசிக்கவே படாது.. ஜிங்..ஜிங்.. தட்டிவிட வேண்டும். (இந்த வெளக்கம் போதுமா?)

சமீபத்தில் Office Procedures (அலுவலக நடைமுறைகள் – இப்படி சொன்னா சரியா??) பத்தி ஒரு நாள் டிரைனிங் கிளாஸ் எடுக்க அழைப்பு வந்தது. முப்பதுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கூடி இருந்தனர். பெரும்பாலும் போலீஸ், ரிசர்வ் போலீஸ், தீயனைப்பு போலீஸ், தபால்துறை, மற்றும் கூட்டுறவு தொடர்பான அலுவலகங்களின் கூட்டனியாய் வந்திருந்தனர். பொதுவா இந்தமாதிரி வகுப்புகளை அரசு ஊழியராய் சேரும் போது தான் நடத்துவார்கள். வந்திருந்த ஆட்களை பாத்தா, பழம் திண்ணு கொட்டை போட்ட ஆட்களாவே தெரிந்தனர். அறிமுகம் செய்து கொள்ளும் போதே, எத்தனை ஆண்டு அனுபவம் என்பதையும் சொல்லுமாறு வேண்டினேன். ஏழு முதல் முப்பது ஆண்டுகள் வரை பணி செய்த அனுபவசாலிகளுக்கு வகுப்பு எடுக்க வேண்டிய சூழல்.

இந்த அலுவலக நடைமுறைகள் பற்றி 60 பவர்பாய்ண்ட் ஸ்லைட் தயாரிக்கும் போதே, என் உதவியாளர் சந்தேகம் எழுப்பினார்… சார் இதை நாமளே முக்காவாசி ஃபாலோ பன்ற மாதிரி தெரியலையே??? இதையே வைத்து வகுப்பை ஆரம்பித்தேன். தெரியாம செய்றதை, இனி தெரிஞ்சே செய்ய வைக்கிறதுக்குத் தான் இந்த டிரைனிங் உதவும். ”நீங்க பாட்டுக்கு ஏற்கனவே ஒரு பிரச்சினையில்லாம ஓடிக்கிட்டிருக்கிற அரசு இயந்திரத்தை, உங்க அலுவலக நடைமுறை அறிவை பயன்படுத்தி, நிப்பாட்டி வச்சிராதீங்க” – என்ற வேண்டுகோளோடு நடைமுறைக்கு ஒத்துப் போகும் குணமும் இருக்கணும் என்று ஆரம்பித்தேன்..

நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது. கோப்புகளில் எழுதுவது பற்றி வரும் வரை. அதில் தான் சிக்கலே வந்தது. கீழ்நிலை பணியாளர்கள் எழுதியதை மாற்றம் செய்து தரச் சொல்லியோ, எழுதிய பக்கத்தையே கிழிச்சிட்டு ”புதுசா எழுதி தாங்க” என்று சொல்வதையோ, செய்தல் கூடாது என்கிறது நடைமுறை. ஆனா தினம் தினம் இந்த அவஸ்தையில் பலர் இருப்பது தெளிவாய்த் தெரிந்தது. அதிகாரிக்கு விருப்பம் இல்லாத கோப்பு வந்தால் அதனை அவர்தம் விருப்பம் போல் மாற்றி எழுத அதிகாரிகள், சற்றே மூளையினைக் கசக்க வேண்டும். கொஞ்சம் அதிகமாவே எழுதனும். தேவையா இதெல்லாம்.? தனக்கு எப்படி வேணுமோ அப்படி ஊழியர்கள் எழுதிட்டா, அப்புறம் அதிகாரி சும்மா ஒரு கைநாட்டு வச்சா முடிஞ்சது ஜோலி… இப்படி ஒத்து ஊதும் கலைக்கு ஒத்துப் போகும் அதிகாரிகள் அதிகம் என்று சண்டைக்கு வந்தனர் மகளிர் பயிற்சியாளர்கள். மீறி எழுதினா, தண்ணியில்லாக் காடு தானாம்… (அது சரி..அந்தமானுக்கே வந்தாச்சி..அப்புறம் வேறு எங்கே தான் மாத்திட முடியும்?)

தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களை சுதந்திரமாய் வேலை செய்ய அனுமதி அளிக்கும் உயர் அதிகாரி தான் நியாயமான முறையில் பணியாற்ற முடியும். அந்த மாதிரியான அனுமதி கொடுக்காத போது அதன் Scrutiny அவ்வளவு தெளிவாக இருக்காது என்று எவ்வளவோ சொல்லிப் பாத்தேன். அதெல்லாம் கதைக்கு ஆவாது சார்…என்று தான் ஒத்து ஊதினர். கடைசியில் சரி நீங்கள், உங்கள் கீழ் வேலை பார்க்கும் ஆட்களிடம் இதனைச் செய்யாது இருங்கள் என்று சொல்லி முடித்தேன்.

நிலைமை சீரியஸாக போகவே, தமிழருவி மணியன் புத்தகத்தில் படித்த Noting பற்றிய செய்தியினை விவரித்தேன். ஒரு அலுவலகத்தில் எல்லாம் … எல்லாம் தான்… முடிந்த பிறகு Approved என்று எழுதி கையொப்பம் இட்டாராம் ஓர் அதிகாரி. பின்னர் ஏதோ கொடுக்கல் வாங்கலில் சிக்கல் வரவே, கோப்பை வரவழைத்து, Not Approved என்று அர்த்தம் வரும்படி Not சேர்த்து எழுதி விட்டாராம். பின்னர் வரும்படி போய்விடும் என்று பயந்த, பாதிக்கப்பட்டவர் நன்கு, அதிகாரியைக் கவனித்து வைக்க, மீண்டும் கோப்பு பறந்தது. Not Approved என்பது ஒரு எழுத்து d சேர்த்த பின்னர் Noted Approved என்றாகி விட்டதாம். இப்படி தேவைக்கு ஏற்ப எழுதும் அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கு ஜால்ரா அடித்து முடித்தேன்.

உயர் அதிகாரிக்கு எது பிடிக்கும்? எப்பொ எதைப் புடிக்கும்? இந்த மாதிரி தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்கள் வருவதில்லை. நமக்கு எதுக்கு அதெல்லாம், ரூல்படித்தான் எழுதுவேன் என்பவர்களுக்கு சிக்கல் தான். உயர் அதிகாரிக்கும் பிடிக்கனும் அதே சமயம் ரூல் படியும் இருக்கனும் என்று உழைப்பது ஒரு கலை தான். அது எல்லாருக்கும் அவ்வளவு சுலபத்தில் வந்துவிடாது தான். (கவலைப் படாதீங்க, நானும் உங்க லிஸ்ட்லெ தான் இருக்கேன்.)

அது சரி மேலதிகாரி மனசு கோணாமல் நடப்பது அல்லது ஜால்ரா அடிப்பது என்னமோ இப்ப வந்த சங்கதி என்று நினைக்கிறீங்களா?? உங்க கணக்கு தப்புங்க… இதை நிரூபிக்க இப்பொ நானு கம்பராமாயணத்தெக் கொண்டுவர வேண்டி இருக்கும். தேவலிங்களா??

விபீஷணனை தம் கட்சியிலெ சேத்துக்கலாமா என்று ராமர் பொதுக்குழு கூட்டி கேட்கிறார். சுக்ரீவன், கூடவே கூடாது என்கிறார். அப்புறம் தளபதி மாதிரி அனுமன், சேத்துகிடலாம் என்று சொல்ல, அந்தத் தீர்மானம் நிறைவேறுகிறது. சுக்ரீவன் ராமனின் பல்ஸ் பிடிச்சிப் பாத்து வைக்கிறார். என்னெக்காவது தேவைப்படும் என்று. சரியான சான்ஸ் மாட்டுது. கும்பகர்ணனைப் பத்தி நல்லவர் என்று விபீஷணன் சொல்கிறார் மேலதிகாரி ராமரிடம்.

சட்டுன்னு உடனே ஜிங் என்று ஜால்ரா அடிக்கிறார், நம்ம சுக்ரீவன். இவரை நம்ம கூட சேத்துகிட்டா நல்லது என்று. இதிலெ வேடிக்கை என்னென்னா, அதை ராமரும் ஒத்துக் கொள்வது தான். அந்த அதிகாரி ராமர். அங்கே ஊழியர் சுக்ரீவன். கொஞ்ச நாளுக்கு முன் எடுத்த முடிவுக்கும் இப்போது எடுத்த முடிவிற்கும் எவ்வளவு வித்தியாசம். வாலிருக்கும் ஜந்துக்கே விளங்கிடுச்சி.. உங்களுக்கு வெளங்காமெப் போகுமா என்ன??

பாட்டுப் பாருங்க:-

என்று அவன் உரைத்தலோடும் இரவி சேய் இவனை இன்று
கொன்று ஒரு பயனும் இல்லை கூடு மேல் கூட்டிக் கொண்டு
நின்றது புரிதும் மற்று இந் நிருதர்கோன் இடரும் நீங்கும்
நன்று என நினைத்தேன் என்றான் நாதனும் ஈது என்றான்.

[அப்படி விபீடணன் சொன்னவுடன், சூரிய புதல்வனான சுக்கிரீவன். இன்னெக்கி இந்த கும்பகர்ணனை கெடாசுரதாலெ எந்தப் புண்ணியமும் இல்லெ. நம்ம கூட சேத்துகிட்டா, விபீஷணனுக்கும் நல்ல கம்பெனி கெடைக்கும். இதுதான் சூப்பர் ஐடியா என்று சொல்ல, ராமரும் சூப்பரோ சூப்பர் என்று சொல்லி ஏத்துக் கிட்டாராம்]

இனிமேல் உங்க ஆபீசர் மனசு கோணாத மாதிரி வேலை செய்வீங்களா?? கம்பரை எப்படி எல்லாம் பயன் படுத்த வேண்டி இருக்கு??