கவிச்சக்கரவர்த்தி:
கணியமும், அதில் தமிழும் இருக்கும் நவீன வசதிகள் கொண்ட இக்காலத்தில் கூட இரண்டு பக்கங்கள் தமிழில் எழுதுவது என்பது மிகவும் சிரம்மான ஒன்றாக தமிழர்கள் கருதி வருகிரார்கள். ஆனால் பத்தாயிரம் பாடல்களுக்கும் மேலாய் ஏடும் எழுத்தாணியும் மட்டுமே கொண்டு எழுதிய அக்காலத்து புலவர்களை நாம் அப்படியே ஒதுக்கி வைத்து விட முடியாது. இக்காலத்தில் திருத்தம் செய்வது எவ்வளவு எளிதோ, அக்காலத்தில் அவை அவ்வளவு கடிது. அச்சூழலில் கவி பாடியவரில் ஒருவர் தான் கவிச் சக்கரவர்த்தி என்று உலகத் தமிழர்களால் அழைக்கப்படும் கம்பர். கம்பரின் கைவன்னத்தில் அமைந்த கம்பராமாயணம் பற்றி அனைவரும் அறிவர். கம்பராமாயணம் ஒரு மதம் சார்ந்த நூல், காப்பியம் என்ற உண்மைகளையும் மீறி இக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் நிர்வாகவியல் தொடர்பான பல செய்திகளும் இருப்பதை அலகிறது இக்கட்டுரை.
தர்க்கம்
தர்க்கம் என்பது ஒருகாலத்தில் ஒரு சாத்திரமாய் அறியப்பட்டு வந்தது. அதனை ஆங்கிலத்தில் Logical thinking என்று மொழி பெயர்ப்பர். தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையே வரும் மோதல்கள், மேலதிகாரிக்கும் உடன் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இடையே வரும் சிக்கலகள், இவைகளுக்கான ஆதாரமம், அந்தப் பிரச்சினையினை தர்க்க ரீதியாக ஆராயாமல் அடம் பிடிக்கும் காரணம் தான். இதைத் தான் நிர்வாகவியல் சார்ந்த புத்தகங்களில் Industrial Relations, Change management என்று புரியாத பல வழிகளில் சொல்கின்றனர்.
ஒரு பிரச்சினைக்கு முடிவு எடுப்பதற்கு ஆதாரமாய் ஆவணங்களும், பிறர் சாட்சியங்களும் தான் மிக மிக முக்கியமான சாட்சிகளாக இன்றளவும் கருதப் படுகின்றன. இவ்வளவு பெரிய சங்கதியினை எடை போட, இடை பற்றிய செய்திகளொடு சேர்த்து சொல்லும் புலமை கம்பன் காட்டும் நிர்வாக இயலுக்கு ஒரு சான்றாகும். சீதையின் இடையினைப் பார்த்தவர்கள் யாரும் இல்லையாம். அதைப் பார்த்து ஆதாரமாய் எழுதி வைத்த ஆவணங்களும் ஏதும் இல்லையாம்.. இப்படிப் போகிறது கம்பனின் பாடல்.ங்கள்
சட்டகம் தன்னை நோக்கி யாரையும் சமைக்கத் தக்காள்
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்பக் கேட்டு உணர்தி என்னின்
கட்டுரைத்து உவமை காட்ட கண்பொறி கதுவா கையில்
தொட்ட எற்கு உணரலாம் மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை.
Goal Setting
நிர்வாகவியல் படிப்புகளில் எங்கு சுற்றினாலும் கடைசியில் சில பல M என்ற ஆங்கில எழுத்தில் துவங்க்கும் வார்த்தையில் வந்துவிடுவர். Money, Man, Material, Machinery இப்படியாக… பல. அதையும் தாண்டி இலக்கை எட்டுவது எப்படி என்று பயில்வது தான் நிர்வாகவியலின் சிறப்பு. இதனை கம்பர் எவ்வாறு சொல்லி இருகிறார் என்பதையும் பார்க்கலாம். அவர் ஒரு செய்லினை எந்த மாதிரி செய்தல் தகும் என்பதை கூறுகிறார்.
1. என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். Objective of the Job.
2. யாருக்கு என்ன வேலை தரவேண்டுமோ அதனைப் அவரிடம் தேர்வு செய்து தருதல் Assighn the Job.
3. வேலைக்குத் தேவையான அனைத்தையும் தருதல் Give him the required resources.
4. இலக்கினை எட்ட நாள் குறித்தல் Fix the Target.
5. செயலின் விளைவுகளைப் பெறுதல் Feed Back.
6. குறித்த நேரத்தில் வேலை நடக்கிறதா என்பதை கன்காணித்தல் வேண்டும் Review the Task.
இதை எல்லாம் கம்பர் தனது ராமாயணத்தில் கையாண்டு இருக்கிறார். இடம் பொருள் ஆகியவற்றுடன் சற்று நோக்கினால்,நிர்வாக குரு என்று கம்பனை நீங்களே இனி அழைப்பீர்கள்.
1. வேலையில் தெளிவு : சீதையினை தென் திசை சென்று தேட வேண்டும்.
2. Team Leader: அனுமனை அதற்கு தேர்வு செய்தல்.
3. Resource: இரண்டு வெள்ளம்(மில்லியன் அல்லது பில்லியன் என்று என் ஊகம்) வானரப் படை தருதல்.
4. கெடு: முப்பது நாள் தான். (அட..இதைத்தான் இன்றும் தகவல் பெறும் உரிமை சட்டத்திலும் தகவல் தர நாள் கெடுவாய் வைத்துள்ளாட்களே?)
5. தகவல் அவ்வப்போது பெற வேண்டும்.
6. ஒரு மாசம் முடிந்து மறுபடியும் சந்திப்பதாய் முடிகிறது.
இது சுக்ரீவன் இட்ட நிர்வாக திட்டம். கம்பர் தான் இங்கு நிர்வாக ஆசான். இதோ கம்பன் வார்த்தைகள்:
வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும்
சுற்றி ஓடித் துருவி ஒருமதி
முற்று றாதமுன் முற்றுதிர் இவ்விடை
கொற்ற வாகையினீர் எனக் கூறினார்.
இதுக்கு முன்னாடியும் இப்படி
அரசு மற்றும் தனியார் நிர்வாக அலுவலகங்களில் ஏது பிரச்சினை எழும் போது, “இப்படி ஏற்கனவே செய்திருக்கிறார்களா??” என்று கேட்டு முடிவு எடுப்பார்கள். இதற்கு விதி விலக்க்காய் தனித்துவம் வாய்ந்த முடிவுகள் எடுப்பவர்களும் உண்டு. அது ஒரு சிலரால் தான் முடியும். திரு டி என் சேஷன் அவர்கள் தலைமை தேர்தல் அதிகாரியாய் நின்று ஒளிர்ந்தது இந்த ரகம் தான்.
இராமயண காதையில் கம்பருக்கும் இப்படி ஒரு சிக்கல் வருகிறது. அரக்கியாகவே இருப்பினும் ஒரு பெண்ணைக் கொல்ல்லாமா? என்ற குழப்பம் கதாநாயகன் இராமனுக்கே வருகிறது. கூட இருக்கும் ஆலோசகர் விசுவாமித்திர முனிவர் சொல்கிறார்,” இதுக்கு முன்னாடியும் இப்படி நடந்திருக்கிறது”. இப்படி முன்பே நடந்ததாக முனிவர் கொடுக்கும் இரண்டு முன் உதாரணங்கள்: கியாதி & முகதி என்ற இரண்டு பெண் அரக்கிகளை திருமாலும் இந்திரனுமே இதுக்கு முன்னர் அழித்துள்ளனர் என்பது தான். (கம்பராமாயணம் : பாடல் 381 & 382)
ஈகோவை உதறுங்கள்:
அரசு வேலைகளிலும் தாமதம் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகி இருக்கிரது. அதற்கான காரணம் பற்றி சற்றே யோசித்தால், “யார் பெரியவர்? யார் யாரைப் பார்க்க வரவேண்டும் போன்றவைகளால் கூட தாமதங்கள் ஆகும். இந்த சிக்கல் முழுதும் Decision Making, Art of Communication, Relatioship தொடர்பானவைகள். இவற்றிலிருந்து விடுபட கம்பர் ஒரு நல்ல தீர்வு சொல்கிறார். ஒரு சிக்கல் அல்லது பிரச்சினைக்கு முடிவு வேண்டுமா அந்த பிரச்சனையை அலசும் நல்ல ஓர் ஆளைப் பிடியுங்கள். அவரோட ரேங்க் அல்லது status எல்லாம் யோசிக்காதீர்கள். சட்டுன்னு அந்த Expert இருக்கும் இடத்துக்கே செல்லுங்கள்…வேகமாகச் செல்லுங்கள். விமானதிலும் கூட செல்லலாம். எப்படி போனாலும் தனியாகவே செல்லுங்கள். காரோட்டியைக் கூட தவிர்க்கவும். இது தான் கம்பர் தரும் நிர்வாக ரகசியங்கள்.
கம்பர் கையில் எடுத்த பிரச்சினை, இராவணன் சீதையை கவர வேண்டும். சரியான ஆலோசகர் மாரீசன். இராவணன் வான வழியே பறந்து செல்லும் விமானத்தில் ஏறி, தனியா போனதை கம்பன் சொல்கிறார்.. என்ன தான் மாரீசன் தன் கீழ் வாழும் சொந்தக்காரன் என்றாலும் Expert Opinion தேவைப்பட்டால், ஈகோவை உதறிவிட்டு நேரில் போகவேண்டும் என்பதாய் கம்பர் சொல்கிறார். (கம்பன் கதாநாயகன் பக்கம் தான் இருக்க வேணும் என்ற கட்டாயம் இல்லையே? வில்லனுக்கும் உதவுகிறார்)
வந்த மநதிரிககளோடு மாசு அற மரபின் எண்ணி
சிந்தையில் நினைந்த செயயும் செய்கையன் தெளிவி இலநெஞ்சன்
அந்தரம் செல்வது ஆண்டு ஓர் விமானத்தில் ஆரும் இன்றி
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான்.
வரமா சாபமா??
உங்களுக்கு ஏதாவது சங்கடங்கள் வரும் போது யாராவது சந்தோஷமாகச் சிரியுங்கள் என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஆனா வள்ளுவர் கூட இதையே இடுக்கண் வருங்கால் சிரி என்றிருக்கிறார்.
நடப்பதெல்லாம் எல்லாம் நன்மைக்கே என்று இருப்பது நல்லது. எது நடந்தாலும் சரி… எதுவுவே நடக்கவே இல்லையென்றாலும் சரி, எல்லாம் நல்லதுக்குத்தான் என்று இருப்பது பக்குவமான நிலை. சில இடர்பாடுகளைக் கூட, நாம் வாழ்வின் கிடைத்தற்கு அரிய வரமாய் கருதும் சூழலும் நிர்வாகத்தில் வரும். கம்பரின் காவியத்திலும் இப்படி, வரமா? சாபமா? என்று கேட்கும் சம்பவம் வருகிறது.
வேட்டைக்குப் போன தசரதன், யானை என்று நினைத்து சிரவணனை அம்பு எய்து கொல்கிறான். விபரம் தெரிந்த சிரவணனின் குருட்டுத் தந்தை சாபம் தருகிறார். “நீயும்இப்படி மகனை இழந்து துடிப்பாய்” என்று. இதை கேட்டு தசரதனுக்கு ஒரே குஷி… “எனக்கு குழந்தை பிறக்கப் போகிறது” என்று. சிக்கலைக் கூட சிக்கலாக கருதாமல் இருக்கும் நிர்வாகக் கலையினை கம்பர் தருகிறார்.
ஹிந்தியில் பான்ச் பான்ச்
பெரும்பாலான தமிழர்கள் அந்தமானுக்கு வருகையில் ஹிந்தி தெரியாமல் தான் வருவர். பின்னர் அதே ஹிந்தியில் கவிபுனையும் திறமையும் பெற்ற தமிழர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழர்களுக்கு ஹிந்தியில் எண்கள் சொல்வது என்பது சிக்கலான ஒரு செயல். தமிழில் பத்து வரை தெரிந்து கொண்டு இருபது, முப்பது..என்று மட்டும் படித்தால் போதும். ஆனால் ஹிந்தியில் ஒன்று துவங்கி நூறு வரை மனப்பாடம் செய்தாக வேண்டும். தமிழர்கள் அந்த சிக்கலுக்கு தீர்வும் கண்டனர். அவர்கள் கண்டுபிடித்த எளிமையான ஹிந்தி நம்பர்கள் இப்படி வரும்.
15 க்கு பந்தராவுக்கு பதிலா ஏக் பான்ச்.
47 க்கு சைந்தாலீஸ் சொல்லனுமா ?? சார் சாத் போதும்
55 க்கு பச்பன்… இதை தமிழ் மக்கள் பான்ச் பான்ச் என்பர்.
இந்த குறுக்கு வழியை நமக்கு சொல்லிக் கொடுத்ததில் கம்பருக்கும் பங்கு உண்டு. பதினான்கு ஆண்டுகள் வனவாசம் பற்றி கோசலையிடம் ராமன் சொல்கிறான். அது என்ன பெரிய்ய பத்தும் நாலும் தானே!! என்பதாய் வருகிறது. பதிநான்கு ஒரு தடவையும், பத்தும் நான்கும் என்று ஒரு முறையும் சொல்லிப் பாருங்கள்.. இரண்டாவதில் மனம் இளகி நிற்கும்.
சித்தம் நீ திகைக்கின்றது என் தேவரும்
ஒத்த மாதவம் செய்து உயர்ந்தோர் அன்றே
எத்தைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை
பத்தும் நாலும் பகல் அலவோ என்றான்.
பெற்ற தாயிடம் 14 ஆண்டுகள் பத்தும் நாலும் நாள் போல போயிடாதான்னு கேட்டது போல் தான் படுகின்றது. அந்தமான் செல்ல கப்பலில் மூன்றே நாளில் போய் விடுவேன் என்பதற்கும் மூ…ன்று நாளா?? என்று பெரு மூச்சு விடுபவர்களுக்கும் உள்ள வித்தியாசம் உணர கம்பன் பாடல் உதவுகிறது. நிர்வாக சிக்கலைனை எதிகொள்ள நாம் எப்போதும் தயாராய் இருக்க வேண்டும். மேலும் அதனை சுலபமாய் எதிர் கொள்ளவும் பழக வேண்டும் என்பதை கம்பர் மூலம் நாம் அறிய வேண்டும்.
அதுவா? இதுவா?? எதை செய்ய ???
இந்த மாதிரியான சிக்கல்கள் நமக்கு பல நேரங்களில் வந்திருக்கும். சில சமயங்களில் ஆண்டவன் அல்லது இயற்கை objective type கேள்வியாய் சந்தர்பங்களை தந்து விடும். இரண்டில் ஒண்றை த்ற்வு செய்தாக வேண்டிய நிலை அமையும் அல்லது அத்றகு இது பரவாயில்லை மாதிரியும் சூழ்ல்கள் வந்து சேரும்.
ஒரு நிறுவனத்தின் வெற்றி தோல்வி எல்லாமே நாம் நமக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பங்களை எப்படி பயன் படுத்தியுள்ளோம் என்பதைப் பெறுத்து தான் அமையும். சைக்ளோஸ்டைல் மிஷின்களின் ஜாம்பவனாய் இருந்த ஒரு நிறுவனம் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் ஓடி விட்டது. காலச்சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்காமை தான் அதன் வீழ்ச்சிக்குக் காரணம்.
இராமயணத்திலும் ஒரு சூழல் வருகின்றது. ராமனும் சுக்ரீவனும் இருவருமே மனைவியைப் பிரிந்தவர்கள். அனுமன் மெதுவாக ஆரம்பிக்கிறார். (சுக்ரீவனைப் பார்த்து ) “அரசனே, இவர்களைப் பார்த்தால் உங்கள் மனைவியைத் தேடிக் கொடுக்கும் ஆளாத் தெரிகிறார்கள்”.
சுக்ரீவனோ… இந்த இராமனே, மனைவியை பறி கொடுத்து நிற்கிறார். இவரால் எப்படி முடியம்? சந்தேகம்.. நமக்குத்தான் வரனுமா என்ன? வானரங்களுக்கும் வந்தது. வானர அரசனுக்கும் வளர்ந்து வந்தது. ஒரு வழியா கடைசியில் ஒரு முடிவுக்கு .. வழிக்கு வந்தனர். புரிந்தோ புரியாமலோ ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கை குலுக்காமலும் கையெழுத்து போடாமலும் அரங்கேறியது.
அடுத்த கேள்வி.. “யாருடைய மனைவியை முதலில் கண்டு பிடிக்க களம் இறங்குவது?” நாம் பரீட்சையில் பதில் எழுதும் போது என்ன செய்வோம்? நல்லா பதில் தெரிந்த கேள்விக்கு முதலில் பதில் எழுதுவோம். அதே அந்த இரண்டில் ஒன்றினை தெரிவு செய்யும் உத்திதான் இங்கும் வருது.
ஒரு மனையாள் சிறை வைக்கப்பட்ட இடம் வாலியிடம். சீதை இருக்கும் இடம் எங்கே? என்பதே யாருக்கும் தெரியாத விடயம். என்ன செய்யலாம்?. பரீட்சை எழுதும் அதே டெக்னிக். தெரிந்த இடத்துக்கு உடன் போகலாம் . இப்படித்தான் முடிவானது அந்த வாலியின் முடிவின் ஆரம்பம். நிரவாக காரியங்களில் முடிவு எடுப்பது எப்படி என்று கம்பன் கற்றுத் தரும் பாடம் இது.
முடிவுரை:
கம்பனின் காப்பியக் கடலின் ஓரத்தின் நின்று வேடிக்கை பார்த்த போது கிடைத்த செய்திகள் தான் இந்த நிர்வாகவியல் கருத்துகள். இன்னும் கம்பன் கடலில் மூழ்கினால் முத்துக்கள் எடுக்கலாம். நிர்வாகவியல் என்பது இப்போதைய காலகட்டத்தில் பய்ற்சி அளித்து வந்தாலும் அதன் அடிப்படையான கருத்துகளை தமிழர்கள் முன்னரே அறிந்திருந்தனர் என்பதை இங்கே பதிவு செய்வது தான் இக கட்டுரையின் நோக்கம். இன்னும் கலகலப்பாய் கம்பராமாயணம் படித்து மகிழ http://www.andamantamilnenjan.wordpress.com வலைப் பூவிற்கு வருக வருகவென அழைக்கின்றேன்.