மன்னைப் போக்கி


மறைந்திருந்து காட்டும் கம்பன் – 6

கம்பன் மறைந்திருந்து காட்டிய பெயர்களில் இன்று….

*மன்னைப் போக்கி* இங்கு மன் என்பது தலைவனான இராமனைக் குறிக்கப் பயன் படும் சொல்லாக கம்பன் கூறுகிறார். மன்னன் என்பதின் சுருக்கமாய் இருக்குமோ?

இதே பாடலில் இலக்குவனை, என் மஞ்சனை என்றதும்;

இராவணனை நஞ்சு அனையான் என்றதும் சிறப்பாய் கவனிக்க வேண்டியவை.

Ctrl + C

Ctrl + V

அதாவது காப்பி பேஸ்ட் செய்யும் நவீன தொழில் நுட்பம் தேவையே இல்லாத கம்பன் முன், பல வார்த்தைகளைத் தமிழ்த்தாய் கொண்டுவந்து நீட்டுகிறாள். அதை வைத்து கம்பன் விளையாடுவதும் நம் தமிழுக்குக் கிடைத்த சொத்து தானே!

இதோ முழுப் பாடல்:

‘வஞ்சனைமானின் பின் *மன்னைப் போக்கி*, என்

மஞ்சனை வைது,”பின் வழிக் கொள்வாய்” எனா.

நஞ்சு அனையான்அகம் புகுந்த நங்கை யான்

உய்ஞ்சனென்இருத்தலும், உலகம் கொள்ளுமோ ?

பொய் மானுக்குப் பின்னே தலைவனான இராமபிரானை அனுப்பிவிட்டு என் மகனான இலக்குவனை இராமனைத் தேடிச் செல்க என்று பிறகு இழித்துப்பேசி விடம் போன்ற இராவணனின் வீட்டை அடைந்த பெண்ணாகிய யான் உயிர் பிழைத்து (இறவாமல்) இருப்பதை உலகம் ஏற்றுக் கொள்ளுமா.

[5351 – சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]

*அந்தமான் கிருஷ்ணமூர்த்தி*

நஞ்சு அனையான்


*மறைந்திருந்து காட்டும் கம்பன் – 5*

கம்பன் மறைந்திருந்து காட்டிய பெயர்களில் இன்று….

நஞ்சு அனையான்

*நஞ்சு அனையான்* அகம் புகுந்த நங்கை யான் –

என்று சீதை சொல்வதாய் சொல்கிறது கம்பன் வரிகள்.

சோகத்தில் சீதை புலம்பும் இடத்தில் கம்பன் இட்ட வரிகள் இவை. *விடம் போன்றவன்* என்று இராவணனை குறிக்கப் பயன்படுத்திய உத்தி.

தனியே புலம்பும் போது பயன் படுத்துவது என்ன வீரம் இருக்கிறது? இதே வார்த்தையினை திரிசடையிடமே சொல்வதாயும் கம்பன் வீரமாய் படைத்தமை தான் கம்பனின் சிறப்பு.

இதோ அந்த இரு பாடல்களையும் முழுதும் பார்க்கலாம்:

‘வஞ்சனைமானின் பின் மன்னைப் போக்கி, என்

மஞ்சனை வைது,”பின் வழிக் கொள்வாய்” எனா.

*நஞ்சு அனையான்* அகம் புகுந்த நங்கை யான்

உய்ஞ்சனென்இருத்தலும், உலகம் கொள்ளுமோ ? [5351]

பொய் மானுக்குப் பின்னே தலைவனான இராமபிரானை அனுப்பிவிட்டு என் மகனான இலக்குவனை இராமனைத் தேடிச் செல்க என்று பிறகு இழித்துப்பேசி *விடம் போன்ற இராவணனின்* வீட்டை அடைந்த பெண்ணாகிய யான் உயிர் பிழைத்து (இறவாமல்) இருப்பதை உலகம் ஏற்றுக் கொள்ளுமா.

[5351 சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]

திரிசடையிடம் சொன்ன கம்பன் வரிகள் இதோ:

*’நஞ்சு அனையான்*, வனத்து இழைக்க நண்ணிய

வஞ்சனை நாள்,வலம் துடித்த; வாய்மையால்

எஞ்சல; ஈண்டுதாம் இடம் துடிக்குமால்;

“அஞ்சல்” என்றுஇரங்குவாய்! அடுப்பது யாது ?’என்றாள். [5103]

பயப்படாதே என்று கருணை காட்டுபவளே! *விடம் போன்ற இராவணன்* காட்டிலே வஞ்சகத்தைப் புரிய எண்ணி (பஞ்சவடியை) அடைந்த அன்று வலப்புற அங்கங்கள் துடித்தன ; (இத்துடிப்பு நிகழ்ச்சிகள் நன்மை தீமை) உண்மையால் உணர்த்தும் இப்போது குறைவில்லாதன இடப்புறத்து அங்கங்கள் துடிக்கும் என்னை வந்து அடையும் நன்மை யாது? என்று கூறினாள்.

[5103சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]

*அந்தமான் கிருஷ்ணமூர்த்தி*

என் மஞ்சனை


மறைந்திருந்து காட்டும் கம்பன் – 4

கம்பன் மறைந்திருந்து காட்டிய பெயர்களில் இன்று….

*என் மஞ்சனை*

வஞ்சனைமானின் பின் மன்னைப் போக்கி, *என்*

*மஞ்சனை* வைது,”பின் வழிக் கொள்வாய்” எனா. என்பதாய் செல்கிறது கம்பன் வரிகள்.

நாலு வார்த்தை திட்டும் உரிமை அம்மாவுக்குத்தானே உண்டு. *தன் மகனாக இலக்குவனை* நினைத்து திட்டியதை, சீதை அம்மா பின்னர் உணர்கிறார். *என் மஞ்சனை – என் மகனை* எனப் பாசத்தோடு இலக்குவனை சீதையார் சுட்டும் கம்ப பாச வரிகள் அவை.

இதோ முழுப் பாடல்.

‘வஞ்சனைமானின் பின் மன்னைப் போக்கி, *என்*

*மஞ்சனை* வைது,”பின் வழிக் கொள்வாய்” எனா.

நஞ்சு அனையான்அகம் புகுந்த நங்கை யான்

உய்ஞ்சனென்இருத்தலும், உலகம் கொள்ளுமோ ?

பொய் மானுக்குப் பின்னே தலைவனான இராமபிரானை அனுப்பிவிட்டு என் மகனான இலக்குவனை இராமனைத் தேடிச் செல்க என்று பிறகு இழித்துப்பேசி விடம் போன்ற இராவணனின் வீட்டை அடைந்த பெண்ணாகிய யான் உயிர் பிழைத்து (இறவாமல்) இருப்பதை உலகம் ஏற்றுக் கொள்ளுமா.

[5351 – சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]

நாளையும் பார்ப்போம்.

*அந்தமான் கிருஷ்ணமூர்த்தி*

மின் துன்னும்மருங்குல் விளங்கு இழையாள்


மறைந்திருந்து காட்டும் கம்பன் – 3

கம்பன் மறைந்திருந்து காட்டிய பெயர்களில் இன்று….

*மின் துன்னும்மருங்குல் விளங்கு இழையாள்*

என்றுஎன்று, உயிர் விம்மி, இருந்து அழிவாள்,

மின் துன்னும்மருங்குல் விளங்கு இழையாள்;

– இப்படி, கவலையில் இருக்கும் சீதையைக் குறிப்பிடுகிறார் கம்பர். இடை இருக்கிறதா? இல்லையா?என்பது தெரியவில்லை. மின்னல் போல் இருக்கிறதாம்! ஆனால் இடை இருப்பதை ஒரு ஆபரணம் கொண்டுதான் கண்டுபிடிக்க இயல்கிறதாம்! இது கம்பர் கற்பனை.

பெயர் சொல்லாமல், பெயருக்குரியவர் எப்படி இருந்தார் என்பதை சொல்லிட நாம் கம்பனிடம் தான் கற்க வேண்டும்.

என்றுஎன்று, உயிர் விம்மி, இருந்து அழிவாள்,

*மின் துன்னும்மருங்குல் விளங்கு இழையாள்;*

‘ஒன்று என்உயிர் உண்டு எனின், உண்டு இடர்; யான்

பொன்றும்பொழுதே, புகழ் பூணும்’ எனா,

மின்னலை ஒத்திருக்கும் இடையையும் விளங்கும் ஆபரணத்தையும் உடைய பிராட்டி என்று பலவாறு நினைந்து பெருமூச்சுவிட்டு வருத்தம் அடைவாளாகிய பிராட்டி, உறுதிபெற்று என்னுடன் ஒன்றுபட்டுள்ள என் உயிர் இருந்தது என்றால் துன்பம் உள்ளதாகும் நான் இறக்கும் சமயத்தில்தான் புகழ் என்னைச் சேரும் என்று கருதி.

[5344 – சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]

*அந்தமான் கிருஷ்ணமூர்த்தி*

தொண்டை வாய்மயில்


மறைந்திருந்து காட்டும் கம்பன் – 2

கம்பன் மறைந்திருந்து காட்டிய பெயர்களில் இன்று….

தொண்டை வாய்மயில்

தொண்டைவாய் மயிலினைத் தொழுது,தோன்றினான் என்பது கம்பன் வரிகள்.

கோவைக் கனி போலும் வாயினை உடைய மயில் போன்ற…. எனச் சொல்லும் போதே சீதையினைத் தான் கம்பன் சொல்கிறார் என்ற உங்கள் ஊகம் சரியே தான்.

சோகத்தில் இருக்கும் சீதை கூட, அனுமன் பார்வையில் எப்படி இருந்தார் என்பதை நம் கண் முன் நிறுத்திய வரிகள் அவை.

ஒரே பாடலில் இராமனையும், சீதையினையும் பெயர் கூறாமல் அவர்களின் குனங்களால் குறிப்பிட்டமைதான் கம்பனின் சிறப்புக்குணம்.

இதோ முழுப் பாடல்.

கண்டனன்அனுமனும்; கருத்தும் எண்ணினான்;

கொண்டனன்துணுக்கம்; மெய் தீண்டக் கூசுவான்,

‘அண்டர் நாயகன்அருள் தூதன் யான்’ எனா,

தொண்டை வாய்மயிலி னைத் தொழுது,தோன்றினான்.

[அனுமன்பிராட்டியைப் பார்த்தான் ; பிராட்டியின் நினைவை ஆராய்ந்து; (அதனால்) திடுக்குற்றான்; பிராட்டியின் மெய்யைத் தீண்ட அஞ்சிய அனுமன்; தேவர்களின் தலைவனான இராமபிரானின் திருவருள் பெற்ற தூதன் யான் என்றுகூறி கோவைக் கனிபோலும் வாயை உடைய மயில்போன்ற பிராட்டியை வணங்கி வெளிப்பட்டான்.]

[5357 – சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]

அந்தமான் கிருஷ்ணமூர்த்தி

அண்டர் நாயகன்


*மறைந்திருந்து காட்டும் கம்பன் – 1*

கம்பன் தனது 10000 பாடல்களில் கம்பராமாயண காப்பியம் படைத்துள்ளார். ஒரு சில கதைப் பாத்திரங்களையே அடிக்கடி சுட்டிக் காட்ட வேண்டிய சூழல். கம்பன் அச்சிக்கலை எளிதாக கையாள்கிறார். பெயரினை அடிக்கடி குறிப்பிடாமல், மறைத்து அவர்களின் குணங்கள் அல்லது பொருள்கள் பற்றி சொல்லவிழைகிறான்.

மறைந்திருந்து காட்டிய கம்பன் பெயர்களை, கொஞ்சம் நாமும் தினமும் ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாமா?

இன்று….

*அண்டர் நாயகன்* அருள் தூதன் யான்’ என்பது கம்பன் வரிகள். அண்டர் நாயகன் அருள் பெற்ற தூதன் யான் என்று சீதையிடம் அனுமன் அறிமுகம் செய்து கொள்ளும் இடம் இது.

அண்டர் நாயகன் என்றால் தேவர்களின் தலைவன்.

இராமனைத்தான் இப்படி கம்பன் சொல்கிறார்.

இதோ முழுப் பாடல்.

கண்டனன்அனுமனும்; கருத்தும் எண்ணினான்;

கொண்டனன்துணுக்கம்; மெய் தீண்டக் கூசுவான்,

‘அண்டர் நாயகன்அருள் தூதன் யான்’ எனா,

தொண்டை வாய்மயிலினைத் தொழுது,தோன்றினான்.

[அனுமன்பிராட்டியைப் பார்த்தான் ; பிராட்டியின் நினைவை ஆராய்ந்து; (அதனால்) திடுக்குற்றான்; பிராட்டியின் மெய்யைத் தீண்ட அஞ்சிய அனுமன்; தேவர்களின் தலைவனான இராமபிரானின் திருவருள் பெற்ற தூதன் யான் என்றுகூறி கோவைக் கனிபோலும் வாயை உடைய மயில்போன்ற பிராட்டியை வணங்கி வெளிப்பட்டான்.]

[5357 – சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]

*அந்தமான் கிருஷ்ணமூர்த்தி*

பாமரன் பார்வையில் ஃபாரின் – 88


ஏழு முறை தோற்றவன் எட்டாவது முறை எழுவான்’ – இப்படி ஒரு தத்துவம் இருக்காம். (சமீபத்தில் அதைச் சொல்லி பிரபலம் ஆக்கியவர் சிம்பு அவர்கள். இன்னும் சில ஏழின் சிறப்புகள் பாக்கலாமா?

உலகில் 7 அதிசயங்கள்,
7 கடல்கள்,
வானவில்லின் 7 நிறங்கள்,
7 ஸ்வரங்கள்,
வாரத்தில் 7 நாட்கள்,
7 கண்டங்கள்,
7 கொடிய பாவங்கள்,
திருக்குறளில் 7 சீர்கள்,
கண்ணுக்கு புலப்படக்கூடிய கோள்ககளின் எண்ணிக்கை 7,
தாதுக்கள் எண்ணிக்கை 7,
இந்திய முக்கிய நதிகள்,
கடை ஏழு வள்ளல்கள்,
மனிதனின் கழுத்து எலும்புகள் 7,
முக எலும்புகள் 7,
தலையில் 7 துளைகள்,
கணுக்காலில் 7 எலும்புகள்

போதுமா இன்னும் வேண்டுமா?

இராமன் அம்புவிட்டு துளைத்த மரங்கள் 7

வேதாகமத்தில் 7 என்கிற எண் 735 தடவை வருதாம். (எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள் செலவழித்து கண்டுபிடிச்சாகளோ?க. ஏழாவது, ஏழாம், ஏழு, ஏழு தடவை, ஏழு முறை இப்படி மொத்தமாக 860 இடங்களில் வேறு வருதாம்…

மலேசியாவில் மெர்டேகா, மெர்டேகா என ஏழுமுறை முழங்கினாராம். Tunku Abdul Rahman. சொன்ன நாள 31 August 1957. சரித்திரப் புகழ் வாய்ந்த அந்த புகைப்படத்தை மலேசியா அருங்காட்சியகத்தில். (ஏழு இடங்களில் வைக்கலை… ஒரே ஓர் இடத்தில் தான் வைத்திருந்தனர்.)

அந்தமான் கிருஷ்ணமூர்த்தி

பாமரன் பார்வையில் ஃபாரின் – 87


மலேசியாவின் அருங்காட்சியகத்தில் சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டதை அறிவிக்கும் தினசரியினை வைத்திருந்தனர். 1965 களில் சிங்கப்பூருக்கு நடந்த அல்லது திணிக்கப்பட்ட அநீதி என்றே சொல்லலாம்.

ஆளே இல்லாத இடத்தில் டீ ஆத்தும் வேலை தான் ஒரு நாட்டுக்கும் வந்து வாய்த்தது.

எனக்கு என்னமோ 1968 இல் கண்ணதாசன் எழுதிய வரிகள் தான் ஞாபகத்துக்கு வந்தது.

யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே
வாங்கடா வாங்க

குளத்திலே தண்ணி இல்லே
கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே
பெத்த புள்ளே சொந்தமில்லே

பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா
சொந்தமில்லே பந்தமில்லே

நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக
நீ யார் நான் யார் போடா போ

ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
தேடி வரும் காலம் வந்தா
செல்வமெல்லாம் ஓடி வரும்

அந்தப்பாடலை சிவாஜிக்குப் பதிலா லீ குவான் பாடுவதா நினைத்துப் பார்த்தேன். அப்படியே பொருந்தும் வார்த்தைகள். ஒரு வளமும் இல்லாத இடமாய் சிங்கப்பூர். அட…. குடிக்கத்தண்ணி கூட மலேசியா தந்தாத்தான் உண்டு.

எப்படி இருந்த சிங்கப்பூர்… இன்று… உச்சத்தில்.

வெற்றியைச் சாதித்த அந்த மாமனிதர் லீக்கு வணக்கம் சொல்லியே ஆகணும்.

பாமரன் பார்வையில் ஃபாரின் – 86


சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா
வானக்கருமை கொலோ

பாரதி தன் கண்ணம்மாவுக்கு கற்பனையில் வைத்த பெயர்…

மலேசியாவின் அருங்காட்சியகத்தில் படம் பார்த்ததும், இப்படித்தான் நினைக்கத் தோன்றியது. அப்படியே தொடர்ந்து இந்தப் பாட்டும் காதுகளில் ஒலித்தது…

சம்மதமா ???

நான் உங்கள் கூட வர சம்மதமா?

சரி சமமாக நிழல் போலே
நான் கூட வர
சம்மதமா?
நான் உங்கள் கூட வர சம்மதமா?

மலேசியாவிலும் மறக்க முடியாத அந்த வசீகர முகம்.. யார் இவர்?

மூன்று மொழிகளில் திரைப்படங்கள் தயாரித்து இயக்கிய முதல் பெண்; திரைப்பட ஸ்டூடியோ அமைத்து நிர்வகித்த முதல் பெண். கர்நாடக இசை பாடகி, நவரச நடிகை, திரைக்கதாசிரியர், இசையமைப்பாளர், சிறுகதை எழுத்தாளர், திரைப்பட இயக்குன…
பாடலாசிரியர், படத்தயாரிப்பாளர், பரணி ஸ்டூடியோ அதிபர், கைரேகை நிபுணர், ஜோசியர், கண்டிப்பான எஜமானி (எல்லா வீட்டு அம்மணி போல்).

இந்திய அரசு, இரண்டு தேசிய விருதும் தந்து தபால் தலையும் வெளியிட்டிருக்கு.

எனக்கு என்னமோ, இதே பெயரில் ஒன்பதாம் வகுப்பில் உடன்படித்த மாணவி தான் நினைவுக்கு வருது.

ஆமா… உங்களுக்கு?

பாமரன் பார்வையில் ஃபாரின் – 85


பதினாறு வயதினிலே படம் பாத்திருப்பீங்க. கமல் ரஜினியை விட மயிலின் அழகு கண்ணில் இருக்குமே!… இருக்கட்டும்… இருக்கட்டும்..

அந்தப் படத்தில் ஒரு டயலாக்… இதுக்கு முன்னாடி…இதுக்கு முன்னாடி… என்பதாய் வரும்.

மயிலை அப்படியே மறந்து விட்டு, இந்த டயலாக் நினைவுக்கு வந்த இடம் மலேசியாவின் அருங்காட்சியகமான டயம் டணலில்..

நாமெல்லாம் கணக்கு போட என்ன செய்வோம்.. கால்குலேட்டரில் தட்டுவோம்.

அதுக்கு முன்னாடி?

லாக்ரதம் டேபிளை உயயோகிப்போம்.

அதுக்கு முன்னாடி?

ஸ்லைடு ரூல்… அட…அப்படி ஒன்றைப் பார்த்ததே இல்லையே…

இதோ பாருங்கள்…