வியப்பூட்டும் விஐபி – 37
சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் அந்தமானுக்கு இது வரை வந்ததில்லை, ஆனால் பல முறை தொடர்பு கொண்டுள்ளனர். பல்வேறு காரணங்களால் அவரின் வருகை நடைபெறவில்லை.
இந்தப் பின்னோட்டத்தில் ஒரு முறை எதிர்பாராத விதமாக சென்னை விமான நிலையத்தில் சுகிசிவம் அவர்களைச் சந்திக்க முடிந்தது. அவரும் நானும் போக வேண்டிய நுழைவாயில், வேறு வேறு திசையில் இருந்தது. இருந்தாலும் பொதுவழியில் பிரியும் வரை பேசிக் கொண்டு நடந்தோம்.
முதலில் அவரிடம் மன்னிப்புக் கேட்டேன். ”எனது கம்பன் தொடர்பான பல பதிவுகளில் உங்கள் கருத்துகளைத் திருடிப் போட்டு வருகிறேன்; உங்கள் பெயரோடு. முதலில் அதற்க்காக மன்னிப்பு கோருகிறேன். ” என்றேன்.
”அதனால் என்ன? நல்ல கருத்துகள் நாலு பேருக்குப் போய்ச் சேர்வதென்றால் நான் மகிழ்வேன். அதில் என் கருத்துக்களை என் கருத்தாகவே போடுவதில் எனக்கு மகிழ்வு தான்” என்றார். உலகப் புகழ் பெற்ற பேச்சாளர் தன் கருத்துகள் இன்னும் வேறு வேறு தளங்களில் செல்லட்டுமே என உளமாறச் சொன்னது வியப்பாய் இருந்தது.
என் மானசீக குருவை எதிர்பாராத வேளையில் வியப்புடன் சந்தித்தில் மகிழ்வு தான்.
கிடைத்த சில மணித்துளிகளை செல்ஃபி எடுத்து விரயமாக்காமல் தவிர்த்த காரணத்தால் படம் இல்லை இப்பதிவில்.