பெரியார்தாசன்
கருத்தம்மா திரைப்படம் தந்த வெற்றியால், நடிகர் என்று அடையாளம் காணப்படும் பேராசிரியர் பெரியார்தாசன் அந்தமான் வந்திருந்தார். பச்சையப்பன் கல்லூரியின் தத்துவத்துறைப் பேராசிரியர் அவர். மேடையில் அவர் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. சோர்வுடன் இருக்கும் யாராவது அந்தப் பேச்சைக் கேட்டிருந்தால் உற்சாகத்தில் திக்கு முக்காடிப் போயிருப்பர்.
மேடையை விட்டு இறங்கியதும், “அருமையான வீராவேசம் மிக்க பேச்சு” என சொல்லுகையில், ”இது எனக்கு நானே வைத்துக் கொண்ட பரீட்சையும், அதில் எனக்குக் கிடைத்த வெற்றியும்” என்றார்.
ஒன்றும் புரியாமல் முழித்தோம்.
அவரே தொடர்ந்தார். விளக்கினார். இன்றைக்கு இப்படி தொடர்ந்து பேசும் பெரியார்தாசன், ஒரு காலத்தில் திக்கு வாயால் பேச இயலாது அவதிப் பட்டவராம்! தன் வாயில் சிறுசிறு கூழாங்கற்கள் வைத்துக் கொண்டு கடுமையான பயிற்சியின் காரணமாய்த்தான் இப்படி சரளமாய் பேச வந்திருக்கிறது என வியப்பின் உச்சத்தை எட்டவைத்தார் அவர்.
அவர், மனைவியோடு அந்தமான் வந்திருந்தார்; போக்குவரத்து, தங்க இடம், உணவு எல்லாச் செலவும் தமிழர் சங்கம் செய்து கொடுத்திருந்தது. ஊருக்கு திரும்பும் போது தன் மனைவிக்காய் சங்கம் செலவு செய்த பணத்தை திரும்பிக் கொடுத்தது தான் வியப்பம்மா!!!
தொடரும் அடுத்த விஐபி மெட்ரோ மேன் ஸ்ரீதர்