[பாமரத்தனமாய் கம்பனை எழுத ஊக்கம் அளித்து, என நூலான பாமரன் பார்வையில் கம்பனுக்கு முனைவர் சரசுவதி இராமநாதன் அளித்த அணிந்துரை…. சாரி… மிகப் பெரிய கௌரவம்… இதோ உங்கள் பார்வைக்கு)
இப்படியும் பார்க்கலாமா?
(முனைவர் சரசுவதி இராமநாதன்.
தமிழ்ப் பேராசிரியை – பணி நிறைவு, பள்ளத்தூர்.
தலைவர், கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்.
தலைவர், இசைப்பிரியா, திருவாரூர்.
தலைவர், சரசுவதி இராமநாதன் அறக்கட்டளை, பள்ளத்தூர்.
தலைவர், ஔவைக்கோட்டம், திருவையாறு)
ஒன்பது வயதில் காரைக்குடி கம்பன் திருநாளில் பாட மேடையேறி, 10 முதல் 12 வயது வரை நடனம் ஆடி, அதே மேடையில் 22 வயது முதல் இந்த 74 வயதிலும் பேசிவரும் பேறு பெற்ற ஒரே பேச்சாளர் நானாகத்தான் இருக்க முடியும். அது குறித்து நான் இறையருளையும், குருவருளையும் வணங்கி மகிழ்கிறேன். பலப்பல கோணங்களில் கம்பனை அணுகி ஆராயும், அல்லது அரைத்த மாவையே அரைக்கும் எந்த அறிஞரும் சிந்திக்காத புதுக் கோணத்தில் கம்பரை அணுகிப் பல கட்டுரைகள் தந்துள்ள அந்தமான் தமிழ்நெஞ்சன் கிருஷ்ணமூர்த்தியை உளமார வாழ்த்துகிறேன். [ ”என்ன பார்வை உந்தன் பார்வை” என்று தலைப்பிட்டு முன்னுரை எழுதலாமா என எண்ணினேன்! சரிதானே?]
அந்தமான் தமிழர் சங்கத்துடன் எங்கள் ஔவைக்கோட்டம் இணைந்து மாநாடு நட்த்திய போது அறிமுகமான சிரித்த முகத்துத் தமிழ்நெஞ்சனின் மடிக்கணினி (அதாங்க லேப்டாப்) கம்பனை கலகலகம்பர் என அறிமுகப் படுத்தியது. கம்பன் கலகலக்க வைத்தாரோ இல்லையோ, கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரைகள் கலகலப்பாக, பாமரனையும், கம்பனையும் இணைத்து மகிழ்கிறது. எளிய யாவரும் அறிந்த திரைப்பாடல் வரிகளைத் தலைப்பாக்கி, நடைமுறைப் பேச்சுத் தமிழில் எழுதி அரிய செய்திகளைக் கம்பன் வழி நின்று விளக்கும் அற்புதக் கலவை இவரது கட்டுரைகள்! புதிய சிந்தனைகளை நூல்கள் வழி வெளியிடுவோர் (தேவகோட்டை) மணிமேகலைப் பிரசுரம், எங்கள் அண்ணா தமிழ்வாணனின் அன்புக் குடும்பம் வாழ்க! வளர்க!
எடுத்தவுடனேயே “காக்கா பிடித்த” விசுவாமித்திரர் நமக்கு அறிமுகமாகிறார். நமக்குத் தமிழ் நெஞ்சன் பாடம் சொல்கிறார், “யாராவது காக்கா பிடித்தா உண்மைன்னு நம்பிடாதீங்க. தள்ளி நின்னு ரசிங்க.” (பக்கம் 4)
டி எம் எஸ் என்ற மாபெரும் இசைக்கலைஞன் ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’ என்றும், ‘என் கதை முடியும் நேரமிது’ என்றும் பாடியது தான் அவரது திரையிசைப் பயணத்தை முடித்ததா? தசரதன், “இத்தனை நாள் மன்பதை காத்து நான்பட்ட வேதனைகளை இனி என் மகன் இராமன் படட்டும்” என்று சொன்ன வேளைதான் இராமனின் துன்பங்களுக்கு ஆளானதோ? சிந்திக்க வைக்கிறார். எதையும் எதையும் முடிச்சுப் போட வைக்க முடிகிறது. (பக்கம் 6)
வரமா – சாபமா – தசரதன் புத்திர சோகத்தால் மரணம் அடைவான் என்று சலபோசன முனிவன் சாபம் கொடுத்தான். அப்போது தசரதனுக்குப் பிள்ளை இல்லை. ஆகவே பிள்ளை பிறப்பா என மகிழ்ந்தான். அது வரமாயிற்று என்றது அழகு! இப்படி கட்டுரை வருவது ‘வரமா? சாபமா?’ (பக்கம் 9)
நீண்ட தமிழால் உலகை நேமியில் அளந்த அகத்தியன் குறுமுனி. இராமனோ நெடுமையால் உலகளந்த நெடியோன். இருவரும் தழுவிக் கொண்டனர். கம்பனின் வார்த்தை ஜாலம் கிருஷ்ணமூர்த்திக்கு நன்றாகப் புலப்பட்டிருக்கிறது. நமக்கும் காட்டுகிறார். (பக்கம் 13)
ஒரு மாலையால் நிலத்தைக் குழி விழச் செய்ய முடியுமா? அவ்வளவு அழுத்தமாகப் பந்து வீசும் “பௌலரா” கூனி என்று கூஇயின் ஆத்திரத்தின் வேகத்தை நாம் அறிய வைக்கிறார் கம்பர்; இல்லை; தமிழ் நெஞ்சன். (பக்கம் 21)
‘பெர்முடாஸ்’ என்ற அரைக்கால் சட்டை நாகரீகம் எங்கும் பரவிவிட்ட்து. குகன் அப்படித்தான் போடு வந்தான். ’காழம் இட்ட குறங்கினன்’ என்ற தொடரின் விளக்கம் நன்று. (பக்கம் 25)
‘மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி’ என்ற வீரப்பனின் வசனம் – சூர்ப்பனகை வாயில் ’உல்டா’ ஆகிறது. (நானும் தமிழ் நெஞ்சன் நடைக்கு வந்து விட்டேனா?) மண்ந்தால் மாதவன் அன்றேல் மரணதேவன் – என்கிறாளாம். (சூர்ப்ப – முறம், நாகா – நகம்) (பக்கம் 31)
‘பெண் பிறந்தேனுக்கென்றால் என்படும் பிறருக்கு?’ என்ற கம்பன் வரி, ‘ செந்தமிழ்த்தேன் மொழியால்’ பாட்டில் ‘பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ?’ என வைத்த்து என்கிறார். சரிதான். ‘கம்பன் கொடுத்த கவிப்பிச்சை ஓரளவு’ என்று கவியரசரே பாடியுள்ளாரே!
நைய்யாண்டியா?
ஏங்க! கிருஷ்ணமூர்த்தி மட்டும் திரைப்பாடல், பட்த்தலைப்புகளை எடுத்தாளலாமா? நான் செய்யக் கூடாதா? கிண்டலில் சமுதாயச் சிந்தனைகளைத் தருவது நல்ல கலைஞர்களுக்கு அழகு! வெறும் சிரிப்பலைகளை மட்டும் வீசாமல் அந்தமான் ஆழ்கடல் பவளம் போல அழகான சமுதாயச் சிந்தனைகளைத் தந்துள்ளமை போற்றற்குரியது. “மனசு முழுக்க மனையாளை வச்சிக்குங்க! பார்க்க நல்லது. பர்சுக்கும் அல்லது” – காலத்திற்குத் தேவையான புத்திமதி இது! ( வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே – பாட்டின் விளக்கம் தொடங்கி, சூர்ப்பநகை இராவணனிடம் பேசுவது வரை கலகலப்புத்தான்.)
’எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்’ விவேக் ‘காமெடி’ எய்ட்ஸ் த்டுப்புக்கான விளம்பரமாயிற்று! தசமுகன், சீதையின் அழகில் மயங்கி உடம்பு பருத்துவிட்டானாம். அவள் கிடைப்பாளா, மாட்டாளா என்ற ஏக்கத்தில் இளைத்து விட்டானாம்!
“வீங்கின, மெலிந்தன வீரத்தோள்களே!” என்றார் கம்பர். தமிழ்நெஞ்சன் ஒரு காலத்தில் கம்பனைக் கிண்டல் செய்தவர் தான்! பத்துத்தலை எந்த வரிசையில் இருந்தாலும் ’பேலன்ஸ்’ ஆகாதே!” என்றவர்! இப்போது இராமாயணத்தை வரிவரியாக விழுந்து விழுந்து படித்து நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார். “எப்படி இருந்தவர் எப்படி ஆயிட்டார்?”
அறை சிறை நிறை
கும்பாபிஷேகத்தின் போது கருடன் வந்த்து என்று தொடங்கி, சடாயு என்ற் கழுகு, இராமனுக்குக் கோபத்தை அடக்கு என்ரு அறிவரை சொன்னதை வளர்த்து,கம்பனின் பாதை அறப்பாதை, அமைதிப் பாதை என முடித்த்து அருமை! லார்ட் மயோ கொலை, அந்தமான் செல்லுலார் சிறை என்று அனைத்தையும் இணைத்து விட்டாரே! அபார மூளை!
‘சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம தோணுதடி’ என்ற பாட்டில் வெற்றிலை இடிக்கும் சத்தம் இடையிசையாக வரும். அதிலே மனம் லயித்து, ‘கொட்ட்டைப் பாக்கும் கொழுந்து வெத்திலை’ குஷ்புவின் ஆட்ட்த்தில் ஈடுபட்டு, அப்பாவின் வெற்றிலை போடும் பழக்கத்தினை அசை போட்டு, ஊரெல்லாம் வெற்றிலையை மென்று வீதியுல் துப்பும் நம் (துப்பு உள்ள துப்பு கெட்ட) மனிதரை நினைத்து வருந்துகிறார். அரக்கிமார் வீசி எறிந்த நகைகள் அனுமனை நடக்க விடாமல் தடுத்ததாம் இலங்கையில் – கம்பர் காட்சிக்கு வம்பர் எங்கெல்லாம் போய் விளக்கம் தருகிறார் பாருங்கள்!
சோகத்திலும் சிரிக்கலாம் – கடவுள் துணையிருந்தால், கடவுள் கூடவே இருந்தால்!
கம்பரைப் படிக்கணும், அன்போடு, இன்னும் அன்பு சேர்ந்து படிக்கணும்.
கம்பன் கணக்கில் புலி. வெள்ளம் என்பதன் விளக்கம் நமக்கு அதைக் காட்டுகிறது.
எதிர்காலத்தில் நிகழ்காலமாய் நினைத்துத் தேசத்திற்கு விடுதலை உணர்வை ஊட்டிய பாரதியாரைத் தினம் நினைவு கொள்வோம்.
பொண்டாட்டி இல்லாத நேரத்தில் அதிக்க் கவனம் தேவை!
மனப்பாடமா வாய்ப்பாடுகள் சொல்லும் இந்தியாவின் மனக்கணக்குத்திறன் உஅலக அரங்கில் அவனை உயர்த்தியுள்ளது.
ஏழ்மையைக் கழித்து, செழுமையைக் கூட்டி, சமதர்ம்ம் பெருக்கிட வழி செய்வோம்.
பேசித் தீருங்க பிரச்சினைகளை!
பிரச்சினைகளை அலசிப் பார்த்து முடிவெடுங்க!
நியூட்டனின் விதி – 3 ‘ஒவ்வொரு விசைக்கும் அதற்க்குச் சம்மான எதிர் விசை உண்டு’ என்பது. வாலி சுக்ரீவனைப் போருக்கழைக்குமிட்த்தில் (கிட்கிந்தா காண்டம் – வாலி வதைப்படலம்) இதைக் கம்பன் முன்னரே சொல்லி இருக்கானே! என வியக்கிறார் ஆசிரியர். ‘வாழைப்பழத்தில் ஊசி’ நுழைந்த மாதிரி வாலியில் மார்பில் இராமபாணம் சென்றது. பின் நின்றது! இதை வாழைப்பழ (கரகாட்டக் காரரின் கவுண்டமணி செந்தில்) நகைச்சுவைக் கலாட்டாவில் தொடங்கி, விளங்கிவிட்டு, ஆமாம் எது வாழைப்பழம்? எது ஊசி? என்று கலாய்க்கிறாரே! அழகு!
கழுதைக்குப் பின்னாலும், ஆபீசருக்கு முன்னாலும் அடிக்கடி போய் நிற்காதே! – நல்ல அறிவுரை.
அரசு அலுவலகத்திற்குப் போன கடிதம் மாதிரி ஒரு பதிலும் இல்லை. நல்ல அங்கதம் (Satire). கலைஞரை வாலியும் வைரமுத்துவும் புகழ்வது போல எனக் கிண்டல் வேறு!
மென்மையாகக் காலைப்பிடித்துக் கொடுத்து எழுப்பினால், (கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர்) எழுப்பிப் பாருங்கள் சண்டை சச்சரவே இருக்காது. நல்ல தீர்வு! காலில் விழும் கலாச்சாரம் – கம்பனில் நிறைய உண்டு.
தேவையில்லாத கவலைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள் என்கிறார்! சீதையைப் பிரிந்த இராமன் இயந்திர மனிதன் (Robot) மாதிரி இயங்கினான் எபதால் கம்பனுக்கு எந்திரன் பற்றித் தெரிந்திருக்க்க் கூடும் என்கிறார்.
நொடிப் பொழுதில் விபத்து. ரேஷன் கார்டிலிருந்து அவன் பெயரே நீக்கப்படுகிறது.
திமிங்கில கிலங்கள் (திமிங்கிலங்களையே கொன்றுவிடும் கடல்வால் உயிரினம்) என்று கம்பன் குறிப்பது வியப்புக்குரியது.
நிறைவாக்க் கம்பன் மேலாண்மை குரு என்று கட்டுரைத் தொடரை நிறைவு செய்கிறார். இன்று காலம், ஆற்றல், மனாழுத்தம் எல்லாவற்ரிற்கும் மேலாண்மை தேவை என்கிறோம். அவையனைத்தும் கம்பநாடனின் இராமகாதையிலே உள்ளன என்றுஇந்த நிர்வாக மேலாண்மையாளர் சொன்னால சரியாய்த்தானே இருக்கும்!
இன்னும் எழுதுக!
எடுத்துப் படிக்க ஆரம்பித்துவிட்டால் கீழே வைக்க மனம் வராது அத்தனை செய்திகள்! அதுவும் எளிய இனிய நடையில்! பாமரனிடம் கம்பனைக் கொண்டு செல்லும் அரிய முயற்சி இது! தமிழ்நெஞ்சனே! இனிய கம்பநேசனே! அந்தமானைப் போன்ற அழகான நூலைத் தந்த உங்கள் தமிழ்த் தொண்டு வாழ்க! வளர்க! இன்னும் எழுதுங்கள்.
என வாழ்த்தும்,
சரசுவதி இராமநாதன்
நல்லதோர் வீணை நீங்கள்.. நாளும் நலமுடன் வாழ்க… கம்பனில் தோய்ந்த நீங்கள்.. கவிதையும் தமிழும்போல் வாழ்க…
காவிரிமைந்தன்
நிறுவனர் – பொதுச்செயலாளர்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்
பம்மல், சென்னை 600 075
தற்போது.. அபுதாபி – 00971 50 2519693
kaviri2012@gmail.com
நன்றி… நல்லதோர் வீணை நலம் கெடாமல் செய்த கவியரசர் சிஷ்யை சரசுவதி அம்மையாருக்குத்தான் கூடுதல் நன்றிகள் சொல்ல வேண்டும்.
iraagamum thaalamum inainthathu pol irukkirathu ammaiyaarudaiya munnurai.ingithamaana angathathudan ithuvarai oru silarukkup pona TNK padaippugal ippothu ulagath thamizharkalidai oppadaikkappattullathu. paaraattuvorum thaalaattuvorum thamizhaal .kamban thamizhaal onrinaivom.
நன்றி… எல்லாம் நீங்கள் சரசுவதி இராமநாதன் அம்மையார் குழுவோடு அந்தமான் வந்து சென்ற பின்னர் நிகழ்பவை தான்.
Kambanil thoaintha ullam…..kavithaiyai paadi thullum….vambaram ungal nenjam….kamban boadaiyil konjum…. sundaram paamarath thamizh…..sugamtharum amudach chimizh…..manthiram poalnamaik kattum ……maathamizh vazhga, velga. ILAVAL HARIHARAN, D.I.G.Registration, Thanjavur. Cell: 9841613494
Nandri…Nadri..Nandri