ஸ்கூல் போகும் குழந்தைகளுக்கு எது புடிக்குதோ இல்லியோ, அல்லது யாரைப் பிடிக்கிறதோ இல்லையோ கண்டிப்பா அந்த ஸ்கூல் போகும் ரிக்சா சாரதியை அதாங்க, டிரைவரை ரொம்பவும் நல்லாவே பிடிக்கும். அதே போல் ஸ்கூல் வேனில் போகும் கொழந்தைகளுக்கும் அந்த டிரைவர் அங்கிளை ரொம்ப நல்லா பிடிக்கும். ஸ்கூல் பஸ்ஸுக்கும் இந்த விதி சப்ஜாடாப் பொருந்தும்.
ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் என்று பாட்டை ரஜினி பாடியது முதலே ஆட்டோக்காரனின்.. இல்லை இல்லை ஆட்டோக்காரரின் இமேஜ் ஏறி விட்டது. அந்த ஸ்டைலில் மங்கையரும் மயங்கித்தான் போகிறார்கள் போல் தெரிகிறது. ஓடிப்போய் கல்யாணம் செய்தவர்களின் உள்ளம் கவர் கள்வர் யார் என்று பாத்தா பெரும்பாலும் இந்த சாரதிகளாய்த் தான் இருக்கிறார்கள்.
உளவியல் ரீதியா யோசிச்சா அதுக்கும் ஒரு நல்ல பதில் கெடைக்கும். நம்மை முழுதாய் அந்த சாரதி வசம் ஒப்படைத்து விடுகிறோம். சரியான இடத்திற்கு அழைத்துச் செல்வான்(ர்) என்ற நம்பிக்கையோடு. [ஆன்மீகவாதிகள் சொன்ன சரணாகதி தத்துவம் போலத்தான் இதுவும்] அது முழுமையாய் நிறைவேறியவுடன் அந்த சாரதி, கடவுளுக்கு சமானம் ஆகிவிடுகிறான். பாதுகாப்புக்கு உத்திரவாதம் வருகிறது. அப்புறம் தாலி கட்ட கழுத்து நீட்ட வலிக்குமா என்ன?
இரண்டு நாளுக்கு முன்பு ஒரு ஆட்டோவில் பயணி மறந்து விட்டுச் சென்ற இரண்டு லட்சம் இருந்த பணப்பையை பொறுப்பாய் காவல் நிலையத்தில் தந்து அந்தமானில் மேலும் நல்ல பெயர் வாங்கியுள்ளார் ஒரு ஆட்டோ சாரதி. [ஆட்டோ சங்கர் கெடுத்த பெயரை இப்பொத் தான் கொஞ்சம் கொஞ்சமா காப்பாத்திட்டு வருகிறார்கள்]. இதே அந்தமானில் திருக்குறள் எழுதி வைத்து தமிழ் பற்றையும் காட்டுகிறார் இன்னோர் ஆட்டோ சாரதி].
முன்னாடி எல்லாம், காரோட்டும் சாரதிகள் பேசிக்கொண்டே வந்தால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஓட்டுவதில் கவனம் இருக்கனுமே என்ற கரிசனம் தான். ஆனால் நான் கார் ஓட்ட ஆரம்பித்தவுடன் தான், துணைக்கு பேச்சுக்கு ஓர் ஆள் இருத்தல் எவ்வளவு முக்கியம் என்று புரிந்தது. தனியாக தவிர்க்க இயலாத சூழல் வந்தால் தவிர வண்டி எடுப்பதில்லை.
கார் ஓட்டுதல் என்பதும் கூட, ஒரு வகையில் யோகம் மாதிரி தான். யோகிகள் மனம் மட்டும், ஒன்றை மட்டும் ஒருமுகப் படுத்தி அதில் கவனம் செலுத்தினால் போதும். கார் ஓட்டும் போது கை, கால், கண், காது, கவனம் இத்தனையும் கவனமாய் வைத்திருத்தல் முழுக்கவனமாகி விடுகிறது. கொஞ்சம் பிசகினாலும் அதோ கதிதான். தூக்கம் வராமல் இருக்க பேச்சுத்துணைக்கு ஆள் தேவைப்படுகிறது. அந்தமான் டிரைவிங் அனுபவமே இப்படி என்றால், சென்னை மதுரை மாதிரியான சிட்டி டிராபிக் பத்தி கேட்கவே வேண்டாமே!!
சமீபத்தில் சென்னை to திருச்சி காரில் சென்ற போது பலவிதமான டாபிக் பேசிட்டே சென்றோம். அதில் முக்கியமான ஒரு டாபிக் இது தான்: சின்ன வீடு ஓரளவு சுமாராய் இருந்தாலும், அதுக்கு பின்னாடி ஏன் மக்கள் விழுந்து கிடக்கிறார்கள்? கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்த அலசலில் திருச்சியே, சீக்கிரம் வந்த மாதிரி ஆயிட்டது.
மலை மேல் சாகசமாய் ஓட்டியும் பேசியும் வந்த டார்ஜிலிங் சாரதி நம்மை திரில்லிங் என்ற பெயரில் பீதியின் உச்சத்திற்கே அழைத்துச் சென்று விட்டார். கேட்டால் டென்சன் லேனேகா நஹி… தேனேகா ஹை என்று வியாக்யானம் வேறு. கிட்டத்தட்ட மூண்று வருடங்கள் கடந்தாலும் அந்த டிரைவர் சொன்ன டயலாக் மட்டும் இன்னும் மறக்கவே இல்லை.
எனக்கு வாய்த்த சாரதிகள் எல்லாம் பொறுப்பான ஆசாமிகள். நான் Facebook ல் போடும் போட்டோக்களுக்கு முதலில் லைக் போடுவது தொடங்கி தமிழ்நாட்டுச் செய்திகள் அணைத்தும் மொபைல் நெட்டில் பார்ப்பது வரை ஹைடெக் ஆசாமி என் தற்போதைய சாரதி. ஏதும் எசகு பிசகா பேசி விட முடியாது.
சமீபத்தில் அந்தமானுக்கு உறவினர்களான டாக்டர் தம்பதிகள் வந்தனர். அவர்களை வரவேற்கப் போன இடத்தில், 15 வருடப் பழக்க டாக்சி சாரதி பேச ஆரம்பித்தார். வந்தவர்களோ, என்ன இப்படி டிரைவர்களுடன் பழக்கம் என்ற கேள்வி அவர்கள் முகத்தில் தெரிந்தது. டாக்டர்களின் பஸ்ஸில் லக்கேஜ் ஏற்றப் போக அதன் சாரதியும், நமஸ்தே சார் என்றார். ஊரிலுள்ள எல்லா சாரதிகளுடனும் தோஸ்த் போலெ என்று நினைத்திருக்கலாம்.
இதெல்லாம் இருக்கட்டும். பேசும் சாரதிகளின் கேப்டன் யார் தெரியுமா? சாட்சாத் அந்த கிருஷ்ண பகவான் தான். பார்த்தனுக்கு சாரதியாய் வந்து 18 அத்தியாயங்கள் Non Stop FM மாதிரி சொல்லிட்டே இருந்திருக்காரு. (விளம்பர இடைவெளி இல்லாப் படம் என்று இப்பொ வருதே…. அது மாதிரி எந்த இடைவெளி இல்லாமல் பேசிய பேச்சு தான் அதுவும்… ஆனா அதுக்கு மட்டும் செமெ விளம்பரம்)
இராமாயணத்தில் கூட அங்கங்கெ சாரதிகள் பேசும் இடமெல்லாம் வருதுங்க. அப்படியே ஒரு சாம்பிள் பாக்கலாமே??
அனுமன் செஞ்ச சேட்டைகளை கேள்விப்பட்ட நம்ம இராவண்குமாரன் அக்ககுமாரன் செமெ கோபமா கெளம்புறார். அப்பத்தான் அவரோட சாரதி லேசா, (அடங்குடா என்ற அர்த்ததில்) அடக்கி வாசிக்கச் சொல்லும் இடம் தான் அது. அந்தக் காலத்திலே கூட சாரதிகளுக்கு முழுச்சுதந்திரம் கொடுத்திருக்காங்களே. Freedom of Expression இன்று அதைத்தானே மாத்திப் போட்டு சொல்றோம்!!!
இதெக் கேளும்மா… உலகத்திலெ எல்லாமெ நாம நெனைக்கிற மாதிரி நடக்குமா என்ன?? சிவப்பா இருப்பவன் பொய் சொல்லமாட்டாங்கிற மாதிரி எல்லாம் நெனைக்கப்படாது. அல்பக் கொரங்கு தானே என்ற நெனைப்பெ உட்டுறு. நம்ம இராவண மஹாராஜா தோத்து போனதே வாலிங்கிற ஒரு கொரங்கு கிட்டெ தானே. அதான் நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். மிச்சத்தை நீ யோசிச்சி செய்.
நல்ல சூப்பரான சாரதி இல்லெ… சொல்றதெல்லாம் நல்லா வக்கணையா சொல்லிட்டு, மகனே உன் சமத்துன்னு கடைசியிலெ ஒரு பன்ச்.. பாட்டெயும் ஒரு பார்வை பாத்திடலாமே..
அன்னதாம் நகு சொல்கேட்ட சாரதி ஐய! கேண்மோ!
இன்னதாம் என்னல் ஆமோ உலகியல்? இகழல் அம்மா
மன்னனோடு எதிர்த்த வாலி குரங்கு என்றால் மற்றும் உள்டோ?
சொன்னது துணிவில் கொண்டு சேறி என்று உணரச் சொன்னான்.
மீண்டும் வேறு கோணத்தில் வருகிறேன்.
The post about the importance of driver is good with your usual touch…
Thanks for the quick response
வேறு கோணத்தில் வருவதை விட, வேறு உருவத்தில் வந்தா இன்னும் சூப்பரா இருக்கும்னேன் !
ஓ.எஸ்.ஸுப்ரமண்யன்.
Pl see the Photo as Auto Driver.
khobbo rhii auto dovDan nikiLriyo? gOs ‘pose’ dEriyo kii?
Just for Pose OSS jee
Makes very interesting reading as usual. Keep it up.
Kindly write more often.
Thanks for the comments.
super sir………..
Thank You Very much
Awesome bro. I just saw your posts.
keep it up.
ஆதரவுக்கு நன்றி….