ABC 0F COMMUNICATION


தமிழ் இலக்கியங்களில் மேனேஜ்மெண்ட் கருத்துக்கள் இருப்பதாய் அடிக்கடி இணையங்களில் தகவல்கள் வரும். இதனை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது சமீபத்தில்
பரமக்குடி சென்ற போது கிடைத்த தீபாவளி மலர்கள் மற்றும் இதர நூல்கள் வாயிலாக.

(ஆனந்தவிகடன், கல்கி, சக்திவிகடன், தினமணி செம்மொழி மலர் இப்படி). தீபாவளி மலர்களை பொங்கல் கழித்தும் பொறுப்பாய் வைத்து எனக்கு அளித்தவர் எனது
மாமா தான். (என்னை முதல் வகுப்பு முதல் பி இ வரை படிக்க வைத்ததோடு நில்லாமல் இப்படியும் இன்றும் என்னை படிக்க வைக்கிறார்).

புத்தகங்களின் மொத்த எடை ஏழு எட்டு கிலோவை நெருங்க இல்லாள் முனக ஆரம்பித்து விட்டார். எதை எதையோ தொலைத்து விட்டு வரும் இந்த மனிதர் இந்த புத்தக மூட்டையை தொலைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று வேண்டுதல் வேறு. வேறு ஒன்றுமில்லை அந்த எடைக்கு வெங்காயம் தக்காளி என்று விமானத்தில் ஏற்றி வரலாமே என்ற நல்ல பொருளாதார சிந்தனை தான்.

திணமனி செம்மொழி மலரில் படித்த சேதியினை உங்கள் முன் வைக்கிறேன். கம்பராமாயணத்தில் வரும் மேனேஜ்மென்ட் கருத்துகள் பற்றி ஒரு சின்ன சாம்பிள். டேல் கார்னகி என்ற மேலாண்மை குரு சொன்ன விஷயத்தை கம்பர் பயன்படுத்துகிறாராம்.

Always communicate Authenticity , in Brevity, with Clarity என்பது தான் காரனகியின் சூத்திரம்.

கம்பராமாயணம் போலாமா?

இடம்: இலங்கை சென்று அனுமன் திரும்பிய நேரம்

சூழல்: வருத்தமாய் இருக்கும் ராமனுக்கு சேதி சொல்ல வேண்டிய தருணம்.

ABC Technique அனுமன் வழியாய் கம்பன் வழங்குகிறார்.

அனுமன் சொன்னதாய் கம்பன் சொல்வது:

“கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்”

“கண்டனென்” – சீதை உயிரோடு இருக்கிறாளா? என்ற சந்தேகத்திற்கு விடையாக Authenticity யோடு சொன்ன முதல் வார்த்தை அது.

கற்போடு இருக்க வேண்டும் என்ற ராமனின் ஆசைக்கு பதிலாய் அடுத்த வார்த்தைகள்
“கற்பினுக்கு அணியை” Brevity ரத்தினச் சுருக்கமாய்.

நச்சென்று கண்களால் பார்த்த Oral witness என்று Clarity யில் கலக்குகிறார் கம்பர். இது
எப்படி இருக்கு?.

என்னக்காவது இந்த மேலாண்மை தத்துவம் மாதிரி பொன்டாட்டியிடம் பேசி பேச்சு வாங்காமல் தப்பிக்க முயற்சி செய்த்துண்டா? இனி முயற்சி செய்யிங்க..

[ தகவல் உதவி : கம்பன் அடிசூடி பழ பழனியப்பன். நன்றிகளுடன்]