சும்மா இரு


சும்மா இருத்தல் சுகம் என்று ஒரு தத்துவம் இருக்கு தெரியுமா??

நம்ம ரஜினி சார் சொல்லும் சும்மா..சும்மா… வே ஒரு அலாதியான அழகு தான்.

ஹிந்திப் பாட்டு சும்மா சும்மா தேதே கேட்டிருப்பீங்க… ஹிந்தி சும்மா மட்டும் சும்மா கிடைக்காதுங்க… (ஹிந்தி தெரியாத மக்களுக்கு : சும்மா என்றால் முத்தம் என்று அர்த்தம்)

சும்மா இருப்பது எவ்வளவு சிரமம் என்பதை வடிவேல் ஒரு படத்தில் காட்டி இருப்பார்.

ஓரு பொறுப்பான பையனை கூப்பிட்டு கேட்டாகளாம், என்னப்பா செய்றே என்று.

பையனும் பதில் சொன்னான்… என் அப்பாவுக்கு உதவியா இருக்கேன்.

அது சரி … அப்பா என்ன செய்றார்??

அப்பாவா… அவரு சும்மா இருக்கார்.

இது எப்படி இருக்கு???

பிரச்சினைகளுக்கு முடிவுகள் என்று ஒரு பட்டியல் போடும் போது, சும்மா இருத்தலும் ஒரு முடிவு என்கிறார்கள்.

இது எப்படி ஒரு தீரவு ஆகும்?

எனக்கு ஒரு சப்போர்டிங் டாக்குமென்ட் கெடைச்சது.

1869களில் அநாதை ஆசிரமம் கட்ட ஆயிரம் ஏக்கர் நிலம் 88 ரூபாய்க்கு 21 ஆண்டுகள் லீசுக்கு ஆங்கில அரசு ஒரு பாதிரியாருக்கு (டாக்டர் திஸ்ஸாட்) தந்ததாம்.

அவருக்கு என்ன பிரச்சினையோ, ஒரு அஞ்சு ஆறு வருஷத்துக்கு சும்மாவே இருந்திட்டாரு.

ஆங்கில அரசும் அதை திரும்ப வாங்கி பெரிய அளவில் டெவலப் பன்னாங்க…

அது தான் இன்று இந்தியாவின் ஒரே இயற்கைத் துறைமுகம் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம்.

திஸ்ஸாட் சுறுசுறுப்பா இயங்கி இருந்தா ஒரு ஆசிரமம் வந்திருக்கும்.

சும்மா இருந்ததால் துறைமுகம் வந்தது…

சும்மா வலைப்பூ படிச்சி வைக்கும் மக்களே… கலைப்படாதீங்க.. ஏதாவது நல்லது நடக்கும்…. சும்மா இருங்க…

சும்மா இருத்தலும் சுகம் தான்…. சும்மா சொன்னேன்…

(ஆதாரம் : கடல்வழி வாணிபம் – நரசய்யா; இவர் விசாகப்பட்டினத்தில் தலைமைப் பொறியாளராய் இருந்து ஓய்வு பெற்றவர்.)

அப்பொ ரிடையர் ஆனா நமக்கும் வேலை இருக்கு!!!!