எமோஷனல் இப்போது நமோஷனல்…


Namotional

வரலாறு என்பது பலருக்குக் கசக்கும். சிலருக்கே அது இனிக்கும். இப்படித்தான் அந்தமானில் ஒரு மூத்த தமிழாசிரியரும் கல்வி அதிகாரியுமான ஒருவர் சொன்னார். ’இந்த ஆண்டில் இந்த அரசர் பிறந்தார். வளர்ந்தார். சண்டையெப் போட்டார்.. மண்டையைப் போட்டார். அதன் பின்னர் இன்னொருவர் வந்தார் என்பதை வெறும் தகவல் தொகுப்பாய் வரும் செய்திகள் கொண்ட வரலாறுகள் எனக்கும் அறவே (ஆமா… இதுக்கும் என்ன பொருள்?) பிடிப்பதே இல்லை’ என்றார்.

நான் அவரிடம் ஒரு சின்ன கேள்வி கேட்டேன். ”நீங்கள் அந்தமானுக்கு எப்போது வந்தீர்கள்?” சரியான தேதியுடன் தொடர் செய்திகள் பலவும் சேர்ந்து சொல்ல ஆரம்பித்தார் படு சுவாரஸ்யமாக. ”உங்கள் வரலாறு இவ்வளவு சுவாரஸ்யமாய் சொல்லும் போது, மன்னர்கள் வரலாறு மட்டும் கசக்கிறதா?” என்றேன்.

நான் 1986 மே மாதம் அந்தமானில் வந்தேன். இது சாதரணமாய் ஒரு, போரடிக்கும் வரலாற்று நிகழ்வு. ஆனால் அதனுடன் தொடர்பு கொண்ட பல செய்திகள் சொன்னால் மெருகு கூடும். அப்போது மழை செமெயாய் கொட்டிக் கொண்டிருக்கிறது. (அந்தமானில் பருவ மழை மே மாதத்தில் தொடங்கும் என்பது செய்தி) அப்போது ஆட்டோவே அந்தமானில் இல்லை. (டாக்சிகள் மட்டும் தான் ஓடிக்கொண்டிருந்தன அப்போது). ஒரு பைக் கூட அப்போது பார்க்க முடியலை. (பஜாஜ் ஸ்கூட்டர் தான் அந்தமான் ரோடுக்கு உருவானது என்று அப்போது நம்பினர். 1998 வாக்கில் தான் ஆட்டோவும், பைக்கும் வர ஆரம்பித்து இப்போது ஸ்கூட்டரை வைத்திருப்பவரை ஒரு மாதிரியா பார்க்கும் அளவு வரலாறு மாற்றிவிட்டது).

ஆக, வரலாற்றில் பிழை இல்லை. அதனைச் சொல்லும் வகையில் தான் பிழை நிகழ்ந்துள்ளது என்று சொல்லலாமா? ஆனால் வரலாற்றுப் பொக்கிஷங்களாய் வந்த நாவல்கள் தமிழ் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாகவே நின்றன ஒரு காலத்தில். பொன்னியின் செல்வன் தொடங்கி, கடல் புறாவில் பயணித்தவர்கள் வரலாற்றையும் சேர்த்தே பின்னிப் பினைந்து ரசித்துப் படித்தவர்கள் தானே. வரலாறு உங்களுக்கும் இனிக்க வேண்டுமா? மதன் எழுதிய “வந்தார்கள்..வென்றார்கள்” படிங்க. ஆடியோ புத்தகமாவும் வந்திருக்கு. நீண்ட பயணங்களில் ஜாலியா கேட்டுக் கொண்டே போகலாம்.

வரலாற்றை நீங்கள் விரும்புகின்றீர்களோ இல்லையோ, இன்றைக்கு சாதாரண நிகழ்வுகள் நாளை சுவாரஸ்யமான் (பிற்கால மக்களும், உங்களைப் போலவே வெறுக்கும்) வரலாறாக மாறும் என்பதே வரலாறு. சிலர் வரலாற்றைப் படிக்கின்றோம். சிலர், அதில் அங்கம் வகிக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே வரலாற்றை உருவாக்குகின்றனர். அந்த வகையில் சமீபத்திய வரலாற்று நாயகன்… இல்லை இல்லை… நாயகர் நரேந்திர மோடி. அப்படி என்ன தான் செய்து விட்டார் அந்தக் குஜராத்தில்? இந்தக் கேள்விக்கு பதில் தேடவும், சௌராஷ்ட்ரா தேசத்திலிருந்து வந்திருக்கும் என் மூதாதையர்கள் வாழ்ந்த வரலாற்று இடங்களையும் என் வாரிசுகளுக்கு காட்டவும் ஒரு டிரிப் அடித்தேன்.

குஜராத் தலைநகரில் தங்கி இருந்த போது, வழக்கம் போல் அந்த ஊர் நியூஸ் பேப்பரை படிக்க ஆரம்பித்தேன். (இப்படி ஜாலியா டூர் வந்த இடத்திலும் படிக்க ஆரம்பிச்சிட்டீங்களா? என்று மனைவி வழக்கமாய் கேட்டார்.) அன்றைய செய்தியில் ஒரு சுவையான தகவல் இருந்தது. ஒரு சூட்கேஸ் தொலைந்து போன சந்தோஷத்தில் இருந்தவர், அளித்த மகிழ்வான பேட்டியின் செய்தி அது. பொட்டி காணாமப் போனா, சந்தோஷமா பேட்டி குடுப்பாகளா என்ன? இருந்ததே…. விஷயம் இது தான்…

பெட்டி தொலெஞ்சி போனதெப் பத்தி அந்த குஜராத்திக்காரர் அவ்வளவு கவலைப் படவில்லையாம். அதில் இருந்த ஏடிஎம் கார்டு, கிரிடிட் கார்டுகள், லைசன்ஸ் இப்படி பல கார்டுகளும் அதே பொட்டியில் இருந்திருக்கின்றன. என்ன தான் இ கவர்னன்ஸ் என்று சொன்னாலும் கூட, ஒட்டுக்கா எல்லா கார்டும் போனதில் கதி கலங்கி இருந்தார் அவர். ஓரிரு நாட்களில் ஒரு கவர் தபாலில் வந்திருக்கிறது. பொட்டியைத் திருடின நபர், பொறுப்பாய் இதெல்லாம் அனுப்பி உதவி செய்துள்ளார் என்பது தான், நான் படித்த செய்தி. ஆக, குஜராத்தில் திருட்டுப் பசங்களே இவ்வளவு யோக்கியமா இருக்கிறச்சே, நல்லவங்களைப் பத்திச் சொல்லவும் வேண்டுமோ??

குஜராத்தில் டாஸ்மாக் கடைகள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் இரவு நேரங்களிலும் பாதுகாப்பாய் நடமாடுவதைப் பார்க்க முடிந்தது. மகளிர் அதுவும் இஸ்லாமிய மாதுக்கள் கூட மது இல்லாத வீதிகளில் இரவு நேரங்களில் உலாவுவதைக் காண முடிந்தது. சாலைகள் எங்கும் சோலார் லைட் வசதிகள். (அதெப்படி குஜராத்தில் மட்டும் இந்த சோலார் விளக்குகள் ஒழுங்கா எரியுது?) ரோட்டில் சுத்தும் போது தொடர்ந்து வரும் காற்றாலைகள் எங்கு பாத்தாலும் இருக்கிறது. திடீரென்று சாலை ஓரங்களில் அதிக மரங்கள் தென்பட ஆரம்பித்தாலே, அப்புறம் ஏதோ தொழிற்சாலை வருவதை அறிவிக்கும்.

குஜராத் புராணத்தை விட்டுவிட்டு, லேசா நம்ம மீடியாக்கள் செய்த செய்து கொண்டிருக்கும் செய்யும் மோடி புராணத்துக்கு (மறுபடியுமா?) வருவோம். மோடி நாய் பற்றி பேசினாலும் சரி, டீ பற்றிப் பேசினாலும் சரி, அது தான் தலைப்புச் செய்திகள், எல்லா டீவிகளிலும். (ஆதித்யா போன்ற டீவிகள் நீங்கலாக). இதில் ஹைலைட்டான செய்தி, மோடி அவர்கள் அந்த எமோஷன் ஆன நிமிடங்கள். ஆனால் நம் மீடியாக்கள், நமோஷனல் என்று அலங்கரித்து ஆங்கிலத்துக்கே புது வார்த்தை வார்த்துத் தந்து விட்டார்கள்.

இப்படித்தான், தகவல் பெறும் உரிமை சட்டம் பற்றி நம்ம ஆம் ஆத்மி கெஜ்ரிவால் முன்பு ஒரு புத்தகம் எழுதினார் ஹிந்தியில். தகவல் பெறும் உரிமை சட்டம் என்பதை ஹிந்தியில் ஸூசனா கா அதிகார் என்பர். (இதில், இந்தக் கா போடவா? கீ போடவா? என்பது ஹிந்தியில் நமக்குப் பெரும் தலைவலி) ஆனால் நூலுக்கு அவர் ”ஸூசனாதிகார்” என்று பெயர் வைத்து புது வார்த்தையினை ஹிந்திக்கு வழங்கினார்.

அப்படியே சேனல் மாத்தி நம்ம “கம்பர்” டீவிக்கு மாற்றிப் பாக்கலாம். அங்கும் இதே மாதிரி புதுப்புது வார்த்தைகளை தமிழுக்கு அறிமுகம் செய்யும் தமிழ் வயலும் வாழ்வும் நடந்து கொண்டிருக்கிறது. கம்பன் வயலில் செம அறுவடை நடக்கிறது. எம்பி, உம்பி, நும்பி இப்படிப் பல. என் தம்பி, உன் தம்பி, நுன் தம்பி இப்படிப் பல அரத்தங்கள் வரும் படி புதுசு புதுசா பாட்டு வைக்கிறார். என்ன நான் கதை உட்ற மாதிரி தெரியுதா? ஒரு பாட்டு சொன்னா நம்புவீங்க தானே?

ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு, ‘எம்பி நின் தம்பி; நீ
தோழன்; மங்கை கொழுந்தி’ எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்

ஆழமான கங்கையில் படகோட்டியான சிம்பிள் குகனிடம்,” என் தம்பி உன் தம்பி; நீ நன்பெண்டா; சீதை உனக்கு மச்சினி, மச்சி…” இப்படி தன் மச்சான் சொன்னதை நினைத்து சீதை கலங்கிய இடம் தான் இந்தப் பாட்டின் இடம் பொருள் விளக்கம். இந்தப் பாட்டை வைத்து பலர் பலவிதமான விளக்கம் சொல்லிவிட்ட காரணத்தால் நான் வெறும் எம்பி – என் தம்பி எனபதை மட்டும் சொல்லி கலண்டுக்கிறேன். விரிவான தகவல்களுக்கு நாஞ்சில் நாடன் எழுதிய “அம்பறாத் தூணி” படியுங்கள்.

வரட்டுமா??

அவனா நீ???


இன்றைய படங்களையும் காமெடி காட்சிகளையும் தொடர்ந்து பார்த்து வந்தால் ஓர் உண்மை தெளிவாகப் புரியும். அவைகள் ஒரு வகையில் நம் சமூகத்தோடு ஒன்றாகக் கலந்து போய் உள்ளன என்பதும் தான், நான் சொல்ல வந்த சேதி. சில வார்த்தைகள் திரைப்படங்களில் “சினிமாவில் பயன்பாட்டிற்கு முன்” மற்றும் “சினிமாவில் பயன்பாட்டிற்கு பின்” என்று சொல்லும் அளவுக்கு மாறியே போய் விட்டன. வருங்கால வரலாறு இதனை கிமு கிபி என்று அழைப்பது போல், சிமு சிபி என்று சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

இப்பெல்லாம் “அவனா நீ?” என்று யாரையும் சாதாரணமாய் கேட்டுவிட முடியாது. கேட்டால் அதனால் உண்டாகும் பாதகங்களுக்கும் அவர்களே பொறுப்பு ஏற்க வேண்டி வரும். அடுத்தவர் மனம் கோணாது நடப்பது என்பது ஒரு கலை. அது சிலருக்கு பிறப்பிலேயே வரும். சிலருக்கு என்பது வயது தாண்டினாலும் வராது. கோவை பக்கம் சூப்பரான ஒரு வட்டார வழக்கு இருக்கு. சுட்டுப் போட்டாலும் வராது என்பார்கள். ஏன் தான் இப்படி சொல்கிறார்கள் என்று எனக்கு இன்னும் சுட்டுப் போட்டாலும் புரியலை.

சமீபத்தில் அலுவலக அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் ஒரு சின்ன உல்லாச விருந்துக்கு ஏற்பாடு ஆனது.. (உல்லாசம் என்றவுடன்.. உங்கள் கற்பனை சிறகுகள் எல்லாம் பறக்க விட வேண்டாம்.. ஏதோ வீட்டுல உக்காந்து சாப்பிடறதுக்குப் பதிலா, ஹோட்டலில் போய் நின்னுட்டு சாப்பிட்டு வர வேணும் அம்புட்டு தான். பில்லுக்கும் பல்லிளிக்கும் நபருக்கும், வாசற்கதவு திறந்து சலாம் வைப்பவருக்கும் பணம் தரவேணும் என்பது எழுதப்படாத விதி).
சில ஜாலியான குடும்ப விளையாட்டுகள் வைத்தோம். பேப்பர் கப் என்று கிடைக்கும் 25 கப்களை ஒன்றாக அடுக்கி, அதனை வலது & இடது என்று கை மாற்றி மேலிருந்து எடுத்து கீழாய் அடுக்க வேணும். கணவன் மனைவி ஜோடிகளுக்கு இடையே போட்டி நடந்தது. போட்டி போட்டு நடந்த போட்டியின் முத்தாய்ப்பாய், அன்று ஓய்வு பெறும் அதிகாரியை அழைத்தோம். பொறுமையாய் தன் மனைவியை சற்றும் விட்டுத் தராமல் மனைவிக்கு சமமாய் கப்களை நகர்த்தி ஒரு நிமிடத்தில் விளையாட்டை முடித்தார். இறுதியில் சிறந்த ஜோடிக்கான சிறப்பு பரிசை தந்தோம் என்பது கொசுறுத் தகவல்.
மனைவியின் மனம் வருந்தி விடக் கூடாதே என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். முகம் தெரியா விருந்தினர்களையும் உபசரிக்க திண்ணை வைத்து வீடு கட்டியது அந்தக் காலம். உழைப்பாளிகளின் சுமைகளை இறக்கி வைக்க, சுமை தாங்கி எல்லாம் இருந்தது. குடிக்க தண்ணி கேட்டால் செம்பு நிறைய கிடைத்தது ஒரு காலம். இப்பொ பாக்கெட் தண்ணி வாங்கி குடிக்கும் காலம். அடுத்தவர் பற்றி நமக்கு அக்கறை குறைக்கும் வித்தை மிக அக்கரையோடு கற்பிக்கப் படுகிறதோ!!!

காக்கை வடை திருட்டும் கதை, நரி காக்கையை ஏமாற்றும் கதை இவை எல்லாம் நமக்கு கிடைத்த பால பாடங்கள். ஏமாற்றுவது என்பது ஒரு தவறு இல்லை என்று அந்த பிஞ்சு உள்ளங்களில் பதிந்து விட்டது. நடுவில் சினிமா படங்களும் சில தத்துவங்களை மனதில் பதிக்கின்றன. நாலு பேருக்கு நல்லது என்றால் எதுவுமே தப்பில்லை – போன்றவை சாம்பிள் சினிமா தத்துவங்கள். நேர்மை நியாயம் எல்லாம் அந்தக்காலத்து நாடகம் & சினிமாக்களில் மட்டுமே பாக்க முடிகிறது.

இப்பேற்பட்ட சூழலில் நம்மை யாராவது மனசு நோகடிக்கும்படி செய்தால் அல்லது பேசினால் கஷ்டமாத்தான் இருக்கு. அதை எப்படி சமாளிப்பது என்பது அவரவர் சாமர்த்தியம். ஆனா இதே சங்கடத்தை அடுத்தவர்க்கு நாம் தராமல் இருக்கலாமே?? மாமியார் மருமகள் கொடுமை, ராகிங்க் போன்றவை ஒழிய இந்த மனோபாவ மாற்றம் தேவை. ஒரு புரமோஷன் கொடுக்க உயர் அதிகாரிக்கு வலிக்கிறது. ஏன் என்று கேட்டா, அவருக்கு இப்படி லேசா கெடைக்கலியாம்??? கோர்ட்டுக்கு எல்லாம் போய் தான் கெடேச்சதாம்.. அதனாலெ.. அடுத்தவங்களுக்கும் லேசிலெ தரமாட்டாராம்..
நான் செருப்பு கூட இல்லாமல் ஸ்கூலுக்கு போனேன். நடந்து தான் போனேன். நானும் இப்பொ என் பையனையும் “செருப்பில்லாமெ போ” என்று சொல்லவில்லையே… நல்லதா ஷு வாங்கி தரலையா?? காரில் போக வசதி செய்து தரலையா?? இதே மாதிரியான எண்ணங்கள் வேலை செய்யும் இடத்திலும் இருக்கலாமே என்பது என் கருத்து..
நல்லா இரு… என்று சொல்வதும், நல்லா வருவே என்று சொல்வதும் கூட சினிமாவில் வேறு பொருள்.. சரி.. நாம கம்பர் இந்த மாதிரி சமாசாரம் ஏதாவது சொல்லி இருக்காரா என்று தேட ஆரம்பிக்கலாமா என்று தேடினேன். தேடினால் கிடைக்காமல் போகாது என்பது சரி தான் கிடைத்தது.
ஹனுமன் நெற்றியில் ஒரு Spy Camera வச்சிட்டேன். அவரு என்ன பேசுகிறார் யோசிக்கிறார் (??) பார்க்கிறார் வரைக்கும் நீங்களும் பார்க்கலாம். ஆனா சிந்தனையின் Copy Right மட்டும் கம்பருக்கு. இலங்கையின் ஏரியல் வியூ தெரிகிறதா உங்களுக்கும்?? பிரம்மாண்டமான அரண்மனை… சுகமான நித்திரையில் ஒருவன். ஹனுமன் பார்க்கிறார். “அவனா நீ?” (இராவணனா நீ என்று தான் பொருள்??) அப்படியே இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் தானே ஆயுள்.. அது வரை.. நல்லா இரு என்று ஆசி செய்து நகர்கிறார். செவிக்கு தேனாய் இனிக்கும் இராமனின் புகழினை திருத்தமாய் சொல்கின்ற வானரத் தலைவன் வாயால் வாழ்த்தினால் பலிக்காமலா போகும்!!
அவித்து நின்று எவன் ஆயினும் ஆக என்று அங்கைகவித்து நீங்கிடச் சில பகல்என்பது கருதாசெவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும்கவிக்கு நாயகம் அனையவன் உறையுளைக் கடந்தான்.
இனி மேல் வாழ்க வளமுடன் என்றாவது சொல்லிப் பாருங்கள்.. அவங்களோடு நீங்களும் நல்லா இருப்பீங்க..