ஒரு படத்தில் வரும் காட்சி. விவேக்கும் சூர்யாவும் இருப்பார்கள். விவேக்கிடம் ஒரு பெரியவர் (நாசரோ அல்லது விஜய்குமாரோ சரியா ஞாபகம் இல்லை – அதுவா முக்கியம்? மேட்டருக்கு வருவோம்)
விவேக் கிட்டெ அந்த பெரியவர் கேப்பார் – “அந்த மூட்டை வந்திடுச்சான்னு பாருபா” – என்று.
உடனே நம்ம விவேக் ஃபோன் போட்டு விசாரிச்சிட்டு “வந்தாச்சி” – என்பார்.
“எத்தனை மூட்டை?” – மறுபடியும் கேள்வி வரும். மறுபடியும் ஃபோன் போட்டு கேட்டு விட்டு அப்புறம் பதில் சொல்வார்.
“என்ன என்ன வந்ததாம்?” கேள்வி மீண்டும்.
“எத்தனை கேள்வி??? நல்லா கேக்கிறாய்ங்கப்பா கொஸ்ட்டினு…ஒட்டுக்கா கேக்க வேண்டியது தானே..” புலம்பலுடன் மறுபடியும் ஃபோன்.. இப்படியே தொடரும்.
அடுத்து ஹீரோவிடம் பெருசு அதே கேள்வி கேக்கும். வந்து இறங்கிய மூட்டைகள் எத்தனை? எங்கிருந்து வந்தவை? என்னென்ன இருந்தது? யார் கொண்டு வந்தா? எங்கே வச்சாக? இப்பொ என்ன பன்றாய்ங்க? என்று தகவல் கொட்டி விட்டுப் போவார்.
இதை ஒரு முதலாளி – தொழிலாளின்னு பாக்காமெ ஒரு Manager Subordinate இப்படி யோசிங்க. இப்படிப்பட்ட ஒரு Sunordinate கெடைச்சா எப்படி இருக்கும் ஒரு மேனேஜருக்கு?
நமக்கெல்லாம் அந்த பாக்கியம் கிடைக்குமா?
நமக்ககு கெடச்ச ஆளுங்க, வச்சிட்டு வாடான்னா, கொளுத்தி வச்சிட்டு வராத ஆளா இருந்தா சரி தான்.
நாட்டுலெ நடக்கிற காட்சி பாத்தோம். ஒரு காட்டுலெ நடக்கிற கட்சியைப் பாக்கலாமா…??
வாசல்லே எதோ சத்தம் கேட்டு வெளியே வர்ராரு ஒரு நம்பர் டூ. காட்டான் ஒருத்தன்
நிக்கிறான்.
“யாருப்பா நீ? “
காட்டான் சொன்ன பதில்:
“நானு வேடன்.. ஆனா Boat ஓட்டுறேன் இப்பொ.. உங்களைப் பாத்து ஒரு வணக்கம் வச்சிட்டு போலாம்னு வந்தேங்க..ஒரு நாய் மாதிரிங்க நானு…”
அந்த காட்டான் சொன்னதை ஒட்டுக் கேட்டு நான் அப்படியே சொன்னேன். அம்புட்டு தான்.
ஆனா அந்த நம்பர் டூ வீட்டுக்குள்ளார போய் நம்பர் ஒண் கிட்டெ சொன்னது என்ன தெரியுமா? (ஒட்டுக் கேக்கிறதுண்னு முடிவு செஞ்சாச்சி.. அதை பாதியிலெ உடுவானேன்.??. முழுக்கவே செய்யலாமே.. காதை தீட்டி கேட்ட சமாச்சாரம்..சும்மா உங்களுக்கு சொல்றதுக்குத் தான்.)
“வந்திருக்கிறவன் ரொம்ம்ம்ப நல்லவன்..
தூய்மையான் உள்ளம் கொண்டவன்
தாயைக் காட்டிலும் நல்லவன்
பெரிய ஷிப்புங்க் கம்பெனி ஓனர்..
நெறைய்ய கப்பல் வச்சிருக்கான்
அவன் பேரு இதான் (கொஞ்சம் சஸ்பென்ஸ்க்காக மறைச்சிருக்கேன்)
பெரிய கும்பலோட வந்திருக்கான்
அதிலெ அவய்ங்க சொந்தக்காரங்க எல்லாம் நெறைய்ய கீறாங்க..
அந்த ஆளு உங்களைப் பாக்க வந்திருக்காரு..”
யாருப்பா இப்பேர்பட்ட அதிகப் பிரசங்கி நம்பர் டூன்னு பாக்கீகளா?
நம்பர் டூ : இலட்சுமணன்
நம்பர் ஒண் : இராமன்.
காட்டான் : குகன்.
இந்த லட்சுமணன் மாதிரி ஒரு நல்ல Subordinate கெடைச்சா எப்படி இருக்கும்?? ஆஃபீஸ் அல்லது குடும்பம் எவ்வளவு நல்லா இருக்கும்.
சரி… அந்த கொடுப்பினை தான் இல்லை.. அட்லீஸ்ட் நாம ஒரு நல்ல Subordinate ஆ இருந்து காட்டலாமே.. வீட்டில் நல்ல பேராவது கிடைக்குமே!!
இன்று உங்களை தொந்திரவு செய்ய இரு பாடல்கள்:
குகன் சொன்னது இது:
கூவாமுன்னம் இளையோன் குறுகி நீ
யாவான் யார் என அன்பின் இறைஞ்சினான்
தேவா நின் கழல் சேவிக்க வெந்தனென்
நவாய் வேட்டுவன் நாய் அடியேன் என்றான்.
இலக்குவன் கேட்டு சொன்னது இதோ:
நிற்றி ஈண்டு என்று புக்கு நெடியவன் தொழுது தம்பி
கொற்றவ நின்னைக் காணக் குறுகினான் நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும் தானும் உள்ளம் தூயவந்தாயின் நல்லான்
என்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறைகுகன் ஒருவன் என்றான்.
மீண்டும் வருவேன்.. (பயம்மா இருக்கா??)
அந்தமான் செவத்த பாப்பையா டி என் கே