மலேசியாவின் அருங்காட்சியகத்தில் சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டதை அறிவிக்கும் தினசரியினை வைத்திருந்தனர். 1965 களில் சிங்கப்பூருக்கு நடந்த அல்லது திணிக்கப்பட்ட அநீதி என்றே சொல்லலாம்.
ஆளே இல்லாத இடத்தில் டீ ஆத்தும் வேலை தான் ஒரு நாட்டுக்கும் வந்து வாய்த்தது.

எனக்கு என்னமோ 1968 இல் கண்ணதாசன் எழுதிய வரிகள் தான் ஞாபகத்துக்கு வந்தது.
யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே
வாங்கடா வாங்க
குளத்திலே தண்ணி இல்லே
கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே
பெத்த புள்ளே சொந்தமில்லே
பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா
சொந்தமில்லே பந்தமில்லே
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக
நீ யார் நான் யார் போடா போ
ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
தேடி வரும் காலம் வந்தா
செல்வமெல்லாம் ஓடி வரும்
அந்தப்பாடலை சிவாஜிக்குப் பதிலா லீ குவான் பாடுவதா நினைத்துப் பார்த்தேன். அப்படியே பொருந்தும் வார்த்தைகள். ஒரு வளமும் இல்லாத இடமாய் சிங்கப்பூர். அட…. குடிக்கத்தண்ணி கூட மலேசியா தந்தாத்தான் உண்டு.
எப்படி இருந்த சிங்கப்பூர்… இன்று… உச்சத்தில்.
வெற்றியைச் சாதித்த அந்த மாமனிதர் லீக்கு வணக்கம் சொல்லியே ஆகணும்.