பாவேந்தே… பாவேந்தே
அந்தமான் தமிழர் சங்கத்தின் சார்பில் தமிழ் இலக்கிய மன்றம் நடத்திய பாரதிதாசன் விழாவில் படைத்த்து
மங்காத தமிழென்றுமுழங்க்கிட்டார்பாவேந்தர் சங்கு கொண்டு
தீவுதனில்நெறியாளர் சேர்ந்திங்க்குவளர்த்திட்டார்சங்கம் வைத்துதமிழர் சங்கம் வைத்து.
கவியாளர்கலந்துள்ள இச்சபையில்கவிபாட வந்திருக்கும்பொறியாளன் நான். அனைவருக்கும் வணக்கம்.
எழுக புலவன் என்றதுபாரதியின் சொல் வாக்குபார்முழுதும் விரிந்ததுபாவேந்தர் செல்வாக்கு.
சிறு கதையினையும்கவியாய்க் கதைத்திட்டமுதல் கவிஇந்தப்புதுக்கவி..புதுமை தந்த கவி…புதுவை தந்த கவி…
கதைகளின் முடிவில்தான் வரும் முற்றும்.இக் கவி தந்த தாக்கம் தொடரும்.
பெண்ணடிமைக்கு மூத்த தாரம்விதவைக்கோலம்…விரட்டிவிட முதல்மணியடித்தவன்இந்தப் பாவலன்.
வேதனை துடைக்ககவி கட்டியதும்,மாங்கல்யம்,மாவிலைத் தோரணம்கட்ட வழி காட்டியதும்இந்தக் கவிதான்.
நாற்பதுகளில் (1940களில்)இன்னா நாற்பதுஇனியவை நாற்பதென நூல்பதம் கொண்டுவழி தேடியதோ சொர்க்கவாசல்..
இக்கவியின் கால்நின்றதோகர்ப்ப வாசலில்…ஆம்… அப்போதும்கர்ப்ப வாசலைப்பூட்டிக் கொண்டிருந்தான்இப்புலவன்.
காதலைத் தொடாதகவிஞருண்டா?காதலில் கலந்தவர்காணல் நினைத்தல் மறப்பர்…
பாவேந்தர் பாட்டிலோகாதலின் உச்சத்தில் கூடகாமம் தெரிவதில்லை…சமூகம் தெரிகின்றது…
அனைவர்க்கும் அமுதுஅமைகின்ற வரைகாதலையே துறக்கும்கணல் தெறிக்கிறது.
காதலித்துப் பார்த்தால்தன்னையே அறியலாம்….பாவேந்தர் காதல்கவிபடித்துப் பார்த்தால்உலகையே அறியலாம்.
கூடாய் இருந்திட்டமூட முட்டைகளைஉடைத்திட்டுவா..வா.. எனக்காத்திருந்தான்இக் கவிஞன்.
அறிவுக் குஞ்சாய்அரங்கில் வந்தன…அவை…???வேறு யாரும் அல்லர் அவனியில் பெண்டிர்.
தூங்கும் பெண்ணிவள் கூடதூண்டா விளக்கு..எதற்கு?வேண்டாத சாதி இருட்டு வெளுக்க…
பாவேந்தே… பாவேந்தே..எனக்கொரு சந்தேகம்பாவேந்தே…
கருவினில் மிதந்தபடிகதை கேட்டகதை தனையேநம்ப மறுத்தாய் (அபிமன்யூ கதை)
தொட்டிலில் மிதந்தபடிபடுதுறங்கும் பைங்கிளிக்குகொள்கை விளக்கப்பாடல் தனையேதாலாட்டாய்த்தந்திட்டாய்அதெப்படி???
மங்கையரே… மங்கையரே…பாவேந்தர் வரிகளைவாசியுங்கள்..சற்றேசுவாசியுங்கள்.இல்லையேல்வழக்கம் போல்- ஒருபார்வை பாருங்கள்அது போதும்…பெண்ணடிமைதூரப்போகும்.
ஆணடிமை தீருமட்டும்தலைப்பு தந்துகவியரங்கம் அடுத்தாண்டுநீங்கள்… இங்கேநாங்கள்.. அங்கே..அதுவரை…
கூண்டினுள் தங்ககிளி வளர்ப்போம்,தங்கக்கிளி வளர்ப்போம்.கதவினையும்திறந்து வைப்போம்.பூட்டினாலும்சாவிதனைக்கிளிவசம் தருவோம்.
நிறைவாக…நிரம்பிய அரங்கம்பார்த்து நிம்மதிதான் எனக்கு…
வீழ்ந்த பின் தான்மொய்க்குமாமேஈக்கள் கூடஅதிகமாக…
தமிழும் தமிழனும்வீழ்ந்து விட வில்லை.வாழ்ந்து கொண்டிருப்பதால்..
நிரம்பிய அரங்கம்பார்த்து நிம்மதிதான் எனக்கு…
நன்றி வணக்கம்