பூவோடு சேர்ந்த நாரு…


இந்தக் காலத்தில் நல்ல கூட்டனி மட்டும் அமைஞ்ச்சிட்டா ஆட்சி நிச்சயம். அந்தக் கால தர்மம் தலை காக்கும் என்பதெல்லாம் பழங்கதை. கூட்டனி ஆட்சியை பிடிக்க உதவும் என்பது தான் இப்போதைய கூட்டனி தர்மம்.

இங்கே தான் பூவோட சேர்ந்த நாரும் மணக்கும் எங்கிறதை சரியாக் கவனிக்கணும். இதையே வேண்டாத ஆட்களோட சேர்ந்தா..பன்றியோடு சேர்ந்த கன்னுக்குட்டியும்………..திங்கும்.

இன்னும் சில பழைய புதுசுகளும் இருக்கு… கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும். இது பழசு.

இளையராஜா வீட்டு இட்லி சட்டியும் இசை பாடும் இது புதுசு

ஏ ஆர் ரஹ்மானின் எதிர் வீட்டு ஃபிகரும் ஹம்மிங்க் தரும் என்பது சமீபத்திய ஜொள்ளர்களின் கண்டுபிடிப்பு.

காந்தி வேடத்தில் படத்திற்காய் நடிக்க இறங்கிய ஹாலிவுட் நடிகர்  பெங்கிங்க்ஷ்லி அசைவம் சாப்பிடுவதை விட்டு சைவத்திற்கு மாறிட்டார் என்பது  பழைய சேதி… நம்ம ஊர் பாரதியாய் நடித்தவரை சகீலாவோட நடிக்க வச்சி அழகு பார்த்தது தமிழ் உலகம். சில படங்களில் காமெடியனாகவும் வலம் வந்தார். என்ன செய்ய?

அம்பதுக்கும் மேலே கம்பராமாயணம் வச்சி போஸ்டிங்க் போட்டு விட்டேன். நானும் கொஞ்சம் நல்ல புள்ளையா மாறணுமோ???

சிலபேர்கூட சேரவே வேணாம்… அவர்களின் தொடர்பு கிடைத்தாலே போதும், வாழ்வு நிலை மாறி விடும்.

ஆனா சில பேரு எதைச் செய்தாலும் எதாவது கிடைக்குமா??என்று தான் கேட்கிறார்கள்??

இந்த மாதிரி போஸ்ட் போடுகிறீர்களே..அதனாலெ என்ன கிடைக்கும்? அதன் அரத்தம் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது தான்… ஒண்ணுமே கிடைக்காதா?? அப்பொ சும்மாவே இருக்கலாமே…சரி சும்மா இருக்கும் இவரு என்னா சாதிச்சிட்டார்??

இப்படித்தான் ஒரு ஏர் போர்ட்டிலெ ஒரு மனுஷன் வெயிட்டிங்க் ரூம்லெ கடையை விரிச்சி தண்ணி சிகரெட் என்று ஜாலியா இருந்தாராம். அப்பொ நம்ம கிட்டெ அனத்தும் பார்ட்டி மாதிரி ஒரு ஆளு பொயி, ஐயா..எப்பொ இருந்து இந்தப் பழக்கம்.. சின்ன வயசில ஆரம்பிச்சது…ஆமா எதுக்கு?? என்று திருப்பிக் கேட்டாராம்.

இல்லெ இவ்வளவு காசை வெட்டியா கரி ஆக்கி இருக்கீங்க… அதெல்லாம் சேத்து வச்சிருந்தா சொந்தமா பிளைட்டே வாங்கி இருக்கலாமே??

போதையிலும் அந்த மனுஷன் தெளிவா கேட்டானாம், …சரி என்னையை விடுங்க..குடிக்காத ஆளு நீங்க..உங்களுக்கு சொந்தமா பிளைட் இருக்கா??

கேட்டு விட்டு தன் சொந்த பிளைட்டில் ஏறப் புறப்பட்டார் அந்த தாடி வைத்த விஜய் மல்லையா… (சும்மா நெட்டில் கிடைத்த கதை தான் இது)

மல்லையாகிட்டெ மல்லுக்கு நின்ற அந்த ஆளை நாமும் கொஞ்சம் அம்போன்னு விட்டுட்டு கம்பர் கிட்டெ போவோம்..நமக்கும் ஏதாவது ஞானம் கிடைக்குமான்னு பாக்கலாமே..

நம்ம ஆட்கள் எதையாவது கலக்கிகிட்டு இருந்தா, நம்ம கம்பர் எக்காலஜி பத்தி யோசிச்சிட்டு இருக்கார். அந்த எக்காலஜி கெடாமல் இருந்தா தான் குளங்களில் மீன்கள் இருக்குமாம். அப்படி இருந்த குளத்தில் திடீர்னு மீன் எல்லாம் காணாமல் போச்சாம். ஏன் தெரியுமா??

தெய்வீகப் பெண்கள் எல்லாம் தங்கள் அங்கங்களில் பூசி இருந்த சந்தனம் போக தேய்த்துக் குளித்தார்களாம். அப்புறம் அவர்கள் சூடியிருந்த பூ, அதில் இருக்கும் தேன் எல்லாம் சேர்ந்து அந்த எக்காலஜி மாறிப்போக..மீன் வாசம் போயே போச்சாம்… அங்கே வந்த பறவை எல்லாம் தீனி இல்லைன்னு ஓடிப் போச்சாம்.

சிலர் சிலர் கிட்டெ போனாலெ..என்ன நடக்கும் என்பதும் ஊகிக்கலாமே??

அள்ளல் நீர் எலாம் அமரர் மாதரார்
கொள்ளை மா முலைக் கலவை கோதையின்
கள்ளு நாறலின் கமல வேலி வாழ்
புள்ளும் மீனுணா புலவ் தீர்தலால்.

அது சரி நீங்க எங்கே யார் கூடப் போய் சேரப் போறீங்க??

யாரது?? யாரது??? யாரது????


யாரது?? யாரது??? யாரது????

என்று விஜய் காவலன் படத்தில் அப்பாவியாய் பாடுவது கொஞ்சம் சிரிப்பாத் தான் இருக்கு..

என்னதான் காவலாய் கத்தினாலும் கூட, அந்த… பழைய முகம் காட்டாமல்… பாட்டெல்லாம் பாடி காதலித்த “ஹலோ மை டியர் ராங்க் நம்பர்” பாட்டும், “நம்ம ஊருசிங்காரி சிங்கப்பூர் வந்தாளாம்..” பாட்டும் தேவையில்லாமல் ஞாபகம் வந்து
தொலைக்குதே..??

இதே மாதிரி யாரதுன்னு யார் யார் தேடினாங்கன்னு ஒரு அலசல் அலசலாமா??

யார் யார் யார் அவர் தானோ!!  ஊர் பேர் தான் தெரியாதோ… ன்னு இப்பொ கேட்டாலும் தெவிட்டாத இனிய பாடல் அது.

“யாருக்கு மாப்பிள்ளை யாரோ.. அவர் எங்கே ஒளிந்திருக்கிறாரோ” என்றும் ஒரு பாடல் புது மாப்பிள்ளையைத் தேடுகிறது.

பாடலை விட்டு விட்டு ஒரு வெற்றி பெற்றவர் யாரதுன்னு மிஸ்டர் ஜேம்ஸ் வில்ட் கிட்டெ கேட்டா அந்த மனுஷன் ஒரு ஃபார்முலா தருகிறார்.

நல்ல எண்ணம் + முறையான விடாமுயிற்ச்சி + தொடர்ச்சியான கடின உழைப்பு =வெற்றி

ஓ.. இது தான் சக்சஸ் ஃபார்முலாங்கிறதா??

யாரது – ன்னு கேட்டு ஒரு யுத்தத்தில் ஜெயித்த கதை தெரியுமா??

இந்தியாவுக்கு படை எடுத்து வந்த பாபர், ஒரு நாள் தன்னோட படை பட்டாளத்துக்கு லீவு வுட்டு கங்கை கரையில் தங்கினார்.

அக்கரையில் இரண்டு இடங்களில் புகை வந்து கொண்டிருந்தது.

யாரது – அக்கரையில்? அக்கரையொடு கேட்டார் பாபர்.

இக்கரையிலிருந்து வந்த பதில்: உங்களோட சண்டெ போட சண்டேலா மன்னன் வந்திருக்கான். சைவம் & அசைவம் தனித் தனியே சமையல் வேலை நடக்குது.

பாபர் சொன்னாராம்… சாப்பாட்டிலேயே ஒண்ணா இல்லையா!!! அப்பொ வெற்றி நமக்கே…

உண்மையில் நடந்ததும் அதானே…

கம்பராமாயணத்தில் ஓரிடம் யாரது – ன்னு கேள்வி கேட்டு வருது.

ராமனின் வருங்கால மாமனார் கேட்கும் கேள்விதான் இது. இடம் மிதிலை.

கூட்டி வந்த முனிவர்.. நல்லவரு .. வல்லவருன்னு சொல்றமதிரி வரும் பாட்டு. பாட்டு மட்டும் பாருங்க… அர்த்தம் புரிஞ்ச்சா சரி.. புரியலையா… அங்கவை சங்க்கவையொடு பழகுங்க… தன்னாலே புரியும்.

“இருந்த குலக்குமரர் தமை இரு கண்ணும் முகந்து அழகு பருக நோக்கி
அருந்தவனை அடி வணங்கி யார் இவர்கள் உரைத்திடுமின் அடிகள் என்ன
விருந்தினர்கள் நின்னுடைய வேள்வி காணிய வந்தார் வில்லும் காண்பார்
பெருந்தகைமைத தயரதன் தன் புதல்வர் என அவர் தகைமை பேசலுற்றார்”

இனி மேல் காவலன் படத்தின்
“யாரது” பாட்டு கேட்டா உங்களுக்கு மேலே உள்ள ஏதாவது ஞாபகம் வரனும்… ஒன்னுமில்லையா… மொக்கெ போஸ்டிங்க்ன்னு நெனைச்சாலும் …என் ஞாபகமாது வரணும்.

வரட்டுமா???