தொண்டை வாய்மயில்


மறைந்திருந்து காட்டும் கம்பன் – 2

கம்பன் மறைந்திருந்து காட்டிய பெயர்களில் இன்று….

தொண்டை வாய்மயில்

தொண்டைவாய் மயிலினைத் தொழுது,தோன்றினான் என்பது கம்பன் வரிகள்.

கோவைக் கனி போலும் வாயினை உடைய மயில் போன்ற…. எனச் சொல்லும் போதே சீதையினைத் தான் கம்பன் சொல்கிறார் என்ற உங்கள் ஊகம் சரியே தான்.

சோகத்தில் இருக்கும் சீதை கூட, அனுமன் பார்வையில் எப்படி இருந்தார் என்பதை நம் கண் முன் நிறுத்திய வரிகள் அவை.

ஒரே பாடலில் இராமனையும், சீதையினையும் பெயர் கூறாமல் அவர்களின் குனங்களால் குறிப்பிட்டமைதான் கம்பனின் சிறப்புக்குணம்.

இதோ முழுப் பாடல்.

கண்டனன்அனுமனும்; கருத்தும் எண்ணினான்;

கொண்டனன்துணுக்கம்; மெய் தீண்டக் கூசுவான்,

‘அண்டர் நாயகன்அருள் தூதன் யான்’ எனா,

தொண்டை வாய்மயிலி னைத் தொழுது,தோன்றினான்.

[அனுமன்பிராட்டியைப் பார்த்தான் ; பிராட்டியின் நினைவை ஆராய்ந்து; (அதனால்) திடுக்குற்றான்; பிராட்டியின் மெய்யைத் தீண்ட அஞ்சிய அனுமன்; தேவர்களின் தலைவனான இராமபிரானின் திருவருள் பெற்ற தூதன் யான் என்றுகூறி கோவைக் கனிபோலும் வாயை உடைய மயில்போன்ற பிராட்டியை வணங்கி வெளிப்பட்டான்.]

[5357 – சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]

அந்தமான் கிருஷ்ணமூர்த்தி

அண்டர் நாயகன்


*மறைந்திருந்து காட்டும் கம்பன் – 1*

கம்பன் தனது 10000 பாடல்களில் கம்பராமாயண காப்பியம் படைத்துள்ளார். ஒரு சில கதைப் பாத்திரங்களையே அடிக்கடி சுட்டிக் காட்ட வேண்டிய சூழல். கம்பன் அச்சிக்கலை எளிதாக கையாள்கிறார். பெயரினை அடிக்கடி குறிப்பிடாமல், மறைத்து அவர்களின் குணங்கள் அல்லது பொருள்கள் பற்றி சொல்லவிழைகிறான்.

மறைந்திருந்து காட்டிய கம்பன் பெயர்களை, கொஞ்சம் நாமும் தினமும் ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாமா?

இன்று….

*அண்டர் நாயகன்* அருள் தூதன் யான்’ என்பது கம்பன் வரிகள். அண்டர் நாயகன் அருள் பெற்ற தூதன் யான் என்று சீதையிடம் அனுமன் அறிமுகம் செய்து கொள்ளும் இடம் இது.

அண்டர் நாயகன் என்றால் தேவர்களின் தலைவன்.

இராமனைத்தான் இப்படி கம்பன் சொல்கிறார்.

இதோ முழுப் பாடல்.

கண்டனன்அனுமனும்; கருத்தும் எண்ணினான்;

கொண்டனன்துணுக்கம்; மெய் தீண்டக் கூசுவான்,

‘அண்டர் நாயகன்அருள் தூதன் யான்’ எனா,

தொண்டை வாய்மயிலினைத் தொழுது,தோன்றினான்.

[அனுமன்பிராட்டியைப் பார்த்தான் ; பிராட்டியின் நினைவை ஆராய்ந்து; (அதனால்) திடுக்குற்றான்; பிராட்டியின் மெய்யைத் தீண்ட அஞ்சிய அனுமன்; தேவர்களின் தலைவனான இராமபிரானின் திருவருள் பெற்ற தூதன் யான் என்றுகூறி கோவைக் கனிபோலும் வாயை உடைய மயில்போன்ற பிராட்டியை வணங்கி வெளிப்பட்டான்.]

[5357 – சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]

*அந்தமான் கிருஷ்ணமூர்த்தி*

உரோமபத மன்னன் மகளிர் சந்திப்பு


கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 6

கம்பன் காப்பியத்தில் இன்றும் நாம் காண இருப்பது வசிட்ட முனிவர் சொன்ன காட்சி. உரோமபத மன்னன் அரசாட்சி செய்த காலத்தில் மழை பெய்யாமல் இருந்ததால், அதனைக் களைய முனிவர்களின் சந்திப்பில் சில ஆலோசகள் சொல்லப்படுகிறது. அதனை அமலாக்கும் விதமாய் அடுத்த இந்தச் சந்திப்பு நிகழ்கிறது.

நாட்டிற்கு மழையினை வரவழைக்க ஒரு சிறப்பான தவமுனியினை அழைத்து வர வேண்டும் என்று சொன்னவுடன் அவையில் இருந்த பெண்கள் எழுந்து நின்று, நாங்கள் சென்று அந்தத் தவமுனியை அழைத்து வருவோம் என்று வணங்கிக் கூறினர். நம் முன் இம்மகளிர் சந்திப்பில் சில கேள்விகளை எழுப்புகிறது.

மகளிர் அரசவையில் இருந்திருக்கிறார்களா?
மகளிருக்கு அரசுப் பணிகளில் பங்கேற்கும் உரிமையும் தரப்பட்டிருக்கிறதா?
அப்படி மகளிர் சொல்லும் ஆலோசனையும் ஏற்கப்பட்டுள்ளதா?

இவைகளின் பதில், மகளிரை அடிமைகளாக நடத்தவில்லை என்ற முடிவுக்கு நம்மை இழுத்துச் செல்லும்.

கம்பன் சந்திப்பில் மகளிர் என்றே சொல்வதாய் எனக்குப் பட்டது. ஆனால் அதில் சொல்லப்பட்டிருக்கும் வர்ணனைகளை வைத்து உரையாசிரியர்களோ, அவர்கள் விலைமகளிர் என்று சொல்கின்றனர். அப்படி என்ன சொல்லி விட்டார் நம் கம்பன்? அவையில் வந்த மகளிர் இப்படி இருந்தார்களாம். ஒளி பொருந்திய நெற்றியையும், கருமையான நீண்ட கண்களையும், பவளம் போன்ற உதடுகளையும் கொண்ட வாயையும் முத்துப் போன்ற பற்களையும் மெத்தென்ற இரு தனங்களையும் உடையவர்களாகவும் இருந்தார்களாம். அது போக, யாம் சென்று முனிவனை அழைத்து வருவோம் என்று கூறிய துணிவு இருந்த்தினாலும் அம்மாதர் விலை மகளிர் தான் எனச் சொல்கின்றனர் சான்றோர்.

அப்படியே வைத்துக் கொண்டாலும், விலைமகளிரை அரசவையில் வைத்துக் கொண்டாடும் வழக்கம் இருந்திருக்கிறதா? அதுவும் அரச காரியங்களைல் மூக்கை நுழைக்கும் அளவு அதிகாரமும் தரப்பட்டிருக்கிறதா? யோசிக்க வைக்கிறது.
அதனை தெளிவுபடுத்திக் கொள்ள சங்க மக்களின் பால் உறவுச் சிந்தனைகளும் சமூக ஒழுங்கும் என்ற நூலைக் கையில் எடுத்தேன். சங்க காலம் என்பது மனித வளத்தினை வடித்தெடுப்பதற்கான பொற்காலம் என்கிறார்கள். இதனை திருநெல்வேலியிலிருந்து முனைவர் இரா சிவசங்கரி அவர்கள் சிறப்பான கட்டுரைகளாகத் தொகுத்துத் தந்துள்ளார். (செம்மூதாய் வெளியீடு)

தமிழ் இலக்கியங்களில் சங்க காலம் முதல் இன்று வரை பல பெயர்களால் விலைமகளிரைக் குறிப்பிட்டுள்ளனர். பரத்தையர் என்பது சங்க இலக்கிய இலக்கணத்தில் காணமுடிகிறது. பின்னர் அற இலக்கியங்களில் வரைவின் மகளிர் என்று சொல்கிறார்கள். காப்பியங்களில் கணிகையர் என்றும் காலத்திற்கு ஏற்றார்போல் அவர்களின் பெயர்களும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. சங்ககாலத்தில் கூறப்பட்ட காமக்கிழத்தி என்பவள் தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொண்டபின் காமம் காரணமாக உரிமை கொடுத்து மணந்து கொள்ளப் பட்ட பெண்களாவர். இவர்களையும் மூன்று வகைப்படுத்திச் சொல்லி இருக்கிறார் இளம்பூரணார். இதில் ஒத்தகிழத்தி என்பவள், தலைவியை ஒத்த குலத்தை உடைய இரண்டாவது உரிமைப் பெண் என்கிறார். [அதாவது குருடான கோழி எல்லாம் கிடையாது.] இழிந்த கிழத்தி என்பவர் அரசர்களால், அந்தணர்களுக்கு கொடுக்கப்பட்ட பெண்களாம். வரையப்பட்டோர் என்பவர்கள் ஆடல், பாடல், அழகு, அறிவில் சிறந்து பலருக்கு காலம் கணித்து தந்து, கூடி மகிழ்விக்கும் கணிகையர் குலத்தில் இருந்து, தலைவன் தனக்கென வரையறுத்துக் கொள்ளப்பட்ட உரிமை பெண் என்கிறார்.

தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே பொருள் வேறுபாடு உள்ளது. தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர் பொதுமகளிர். தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.
சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது.

கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே சான்று சொல்கின்றன. சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி போன்றவை சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள். [நன்றி: ம.செந்தமிழன் வலைப்பூ] அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்தோர் தேவரடியார்.

கம்பன் எழுதிய இராம அவதார நூலை அரங்கேற்றம் செய்ய ஒரு அரங்கேற்றப்(!) பாவையின் சிபாரிசு தேவைப்பட்ட கதை தெரியுமா உங்களுக்கு? தஞ்சாவூரில் அஞ்சனாட்சி என்று ஒரு தாசி இருந்தாளாம். கம்பன் காவியத்திற்கு சான்றிதழ் இவரிடமிருந்து பெற்று வந்தால் தான் அரங்கேற்றம் செய்ய இயலும் என்றனராம் அறிஞர்கள். தாசி உருவில் நடமாடும் சரஸ்வதியாம் அவர். அவரும் ஒரு பாடலைப் பாடி அதை ஏட்டில் எழுதி கம்பரிடம் கொடுத்தாராம் படிக்காமலே. ”என்னுடைய காவியத்தை ஆய்வு செய்யப் போவதில்லையா?” என்று கம்பர் கேட்க, ”இல்லை இராமகாதை அரங்கேற்றத்தின் போது எப்படியும் எனக்கும் அழைப்பு வரும். அப்பொழுது தங்கள் திரு வாயாலேயே அதைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதில் சொன்னாராம். அஞ்சனாட்சி எழுதிக் கொடுத்த பாடல்

அம்பரா வணி சடை யரண யன் முதல்
உம்பரான் முனிவரால் யோக ராலுயர்
இம்பரார் பிணிக்கரு மிராம வேழஞ்சேர்
கம்பராம் புலவரைக் கருஹ்திலிருத்து வாம்.

இத்தனை சிரமங்களுக்கு பின்னர்தான் அந்த இராமகாதை அரங்கேற்றம் ஆகியிருக்கிறது [நன்றி: கம்பர் இராமாயணம் அரங்கேறிய கதை – கவிமாமணி பூவாளூர் ஜெயராமன்] அந்த ராமகாதை தான் இப்பொழுது கம்பராமாயணம் என்று நாம் எல்லாம் படித்துக் கொண்டிருக்கிறோம். சரி… மீண்டும் அந்த சந்திப்பு நிகழ்ந்த பாடலை பார்த்துவிட்டு அடுத்த சந்திப்பிற்கு தயாராவோம்

ஓத நெடுங் கடல் ஆடை உலகினில் வாழ்
மனிதர் விலங்கு எனவே உன்னும்
கோது இல் குணத்து அருந் தவனைக் கொணரும் வகை
யாவது?” எனக் குணிக்கும் வேலை.
சோதி நுதல். கரு நெடுங் கண். துவர் இதழ் வாய்.
தரள நகை. துணை மென் கொங்கை
மாதர் எழுந்து. “யாம் ஏகி அருந் தவனைக்
கொணர்தும்” என வணக்கம் செய்தார்.

குளிர்ந்த பெரிய கடலை ஆடையாக உடைய இவ்வுலகிலே வாழும் மனிதர்களை எல்லாம் விலங்குகள் என்றே நினைத்திருக்கின்றகுற்றமற்ற குணங்களை உடைய அரிய தவத்தை உடைய அந்த முனிவனை இங்கு அழைத்து வரக்கூடிய வழி யாது? என்று சிந்திக்கும் போது, ஒளி பொருந்திய நெற்றியையும், கருமையான நீண்ட கண்களையும், பவளம் போன்ற உதடுகளையும் கொண்ட வாயையும் முத்துப் போன்ற பற்களையும் மெத்தென்ற இரு தனங்களையும் உடைய மாதர் சிலர் எழுந்து நாங்கள் சென்று அந்த அருந்தவனை இங்குக் கொணர்வோம் என்றனர்.

சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…

துளித் துளித் துளித் துளி மழைத்துளி



[கார் நாற்பதில் கம்பராமாயணம் -17]

இந்தக்கால சூரி, சந்தானம் போல் அந்தக்கால நகைச்சுவை நடிகர்களில் உச்சத்தில் கொடி கட்டிப் பறந்தவர் டணால் தங்கவேலு. பல பாத்திரங்களில் நடித்திருந்தாலும் (வில்லன் உட்பட) மக்கள் மனதில் நிற்பதோ, அந்த நகைச்சுவைப் பாத்திரம் தான். அதுவும் அந்த அறிவாளி படத்தின் வெற்றிக்கே அவரின் காமெடியும் ஒரு காரணம். அவர், படத்தின் ஒரு காட்சியில் ‘ஃபைல் எங்கே’ என்பார். அவரின் மனைவியோ, ‘ஏய் பயலே….’ என வேலைக்காரப் பையனை அழைப்பதும் செமெ தமாஷா இருக்கும்.

பயல் பற்றி செய்தி தேடினால் எளிதில் சிக்கும் நமக்கு, அந்த பாரதியார் தொடர்பான ‘பாரதி சின்னப் பயல்’ சம்பவம். காந்திமதிநாதன் என்ற புலவர், பாரதியின் மீது பொறாமைப்பட்டு அப்படி முடியும் வெண்பா கேட்டாராம். பாரதியோ பாட்டு எழுதி, கடைசி வரியில் ”காந்திமதிநாதனைப் பார் அதி சின்னப்பயல்…” என முடித்தாராம். அப்புறம்தான் அவர் வயதைக் கருத்தில் கொண்டு, காந்திமதிநாதர்க்கு பாரதி சின்னப்பயல் என மாற்றினாராம். (ஆக புலவர்களுக்கும் சண்டையும் சச்சரவும் அப்பவும் இருந்திருக்கு)

ஃபைல், பயல் அடுத்து பெயல் பக்கம் போவோம். பெயல் என்றால் பெய்து கொண்டிருப்பது; அடெ சட்டுன்னு விளங்குதே… அப்பொ மழை தான் அதன் பொருள். அரசனுக்கே அடேய், ஒழுங்கா வேலெ செய்; இல்லாட்டி மழைகூட, போடா வெளியே எனச் சொல்லாமல் கொள்ளாமல் போயிடுமாம்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

இது ஐயன் வள்ளுவன் சொன்னது . அப்படியே, சினிமாப் பக்கம் போனால் அங்கே ஒரு பாட்டு கேக்குது.

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ,
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா

(வீட்டுக்காரிக்கு எப்பொ எது மயக்கும்? என்பது மட்டும், எப்போதும் ஒரு புரியாத புதிர் தான்)

ஆனா, இங்கே ஒக்கூர் மாசாத்தியாரின் கதாநாயகிக்கு மட்டும் பொன் மாலைப் பொழுதுக்குப் பதிலா புன்மாலைப் பொழுதா இருக்காம். ஏனாம்? கார்ப்பருவம் கண்டு வருந்தித் தோழியிடம் தலைவி இவ்வாறு பேசுகிறாள். முல்லைப்பாட்டின் அடி ஆறு சொற்கள் தான்.

பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை

ஆனா பெயல் என்றது அதிகம் அறியப்படும் வாசகம் (கிட்டத்தட்ட ரஜினியின், நான் ஒரு தடவெ சொன்னா….ரேஞ்சுக்கு) இருக்கும் பாட்டும் இருக்கு. ஏன்னா இந்தப்பாட்டு காதலுக்கு (வைரமுத்துவுக்கு முன்னாடியே) வக்காலத்து வாங்கின பாட்டு. நீங்க வேற லெவல், நாங்க இருக்கும் ரேஞ்சே வேறெ, ஐஃபோனும், ஆண்டிராய்டும் ஆகவும் இருக்கலாம்; எப்படி ரெண்டு பேருக்கும் ஜோடி பொருந்தும்? ஆனா அன்பு கலந்து சிவப்பு மண்ணில் மழைநீர் கலந்து செந்நீர் ஆனமாதிரி கலந்துட்டோமாம். குறுந்தொகையில் இப்படி. பாரதிராஜா எடுத்தா இன்னும் தித்திக்கும். இளையராசா இசையோடு.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
செம்புலப்பெயல் நீரார்

பெயல் ஒட்டியே அப்படியே கார் நாற்பதில் 24 வது பாடலுக்கு வருவோம். மலைகள் உயர்ந்த காடுகளில் யானையின் மதம் அடங்காமல் நிற்கும். கரிய வானம் இருக்கும் ஆனால் மழை மென்மையாகத் தோன்றா நிற்கும். கரிய கூந்தலையுடையவள் நான் கூறிய சொல்லை இனிப் பொறுக்க மாட்டாள். ஆகவே எல்லாத் தொழில்களும் ஒழிந்து நிற்க, நீ புறப்படு என்று தலைவன் தன் நெஞ்சிடம் கூறினான்.

எல்லா வினையும் கிடப்ப, எழு, நெஞ்சே!
கல் ஓங்கு கானம் களிற்றின் மதம் நாறும்;
பல் இருங் கூந்தல் பனி நோனாள்; கார் வானம்
எல்லியும் தோன்றும், பெயல். 24

பெயல், அதான், மழை பற்றிக் கம்பன் என்ன மனசிலெ நெனெச்சி வச்சிருக்கார் என்பதையும் பாத்திடலாமே. கோசல நாட்டோட ஆற்றினைப் பாடிக் காட்டும் கம்பன். (ஆமா ஆற்றங்கரையில் வேறு எந்த குளு குளுப்பான சேதிகளும் தென்படலியா கம்பரே?)

கம்பர் வானம் பார்க்கிறார். மேகம் தெரியுது. திருநீறு பூசின மாதிரி இருக்காம். மலையெச் சுத்தி மாலை மாதிரி சுத்திப் போகுதாம். கடைசியில் கடல் போய்ச் சேராமெ மேயுதாம்… (கடலுக்குக்கூட ஈரமில்லையோ எனப் பாட ஏதுவாய்) திடீரெனப் பாத்தாக்கா, சிவப்பா இருப்பவன் கருப்பா ஆயிட்டாராம். அகில் என்ற பியூட்டிபார்லர் சமாசாரத்தை மார்பில் பூசிய இலக்குமியினை இதயத்தில் வைத்துள்ள திருமாலின் கரிய கலரா ஆயிட்டதாம்.

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து, அகில்
சேறு அணிந்த முலைத் திரு மங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே!

மழை பெய்துவரும் நேரமா, கார்நாற்பதின் அடுத்த பாடலோடு மீண்டும் வருவேன்.

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (12-10-2020)

கம்பன் பார்வையில் நிர்வாகவியல்


கவிச்சக்கரவர்த்தி:

கணியமும், அதில் தமிழும் இருக்கும் நவீன வசதிகள் கொண்ட இக்காலத்தில் கூட இரண்டு பக்கங்கள் தமிழில் எழுதுவது என்பது மிகவும் சிரம்மான ஒன்றாக தமிழர்கள் கருதி வருகிரார்கள். ஆனால் பத்தாயிரம் பாடல்களுக்கும் மேலாய் ஏடும் எழுத்தாணியும் மட்டுமே கொண்டு எழுதிய அக்காலத்து புலவர்களை நாம் அப்படியே ஒதுக்கி வைத்து விட முடியாது. இக்காலத்தில் திருத்தம் செய்வது எவ்வளவு எளிதோ, அக்காலத்தில் அவை அவ்வளவு கடிது. அச்சூழலில் கவி பாடியவரில் ஒருவர் தான் கவிச் சக்கரவர்த்தி என்று உலகத் தமிழர்களால் அழைக்கப்படும் கம்பர். கம்பரின் கைவன்னத்தில் அமைந்த கம்பராமாயணம் பற்றி அனைவரும் அறிவர். கம்பராமாயணம் ஒரு மதம் சார்ந்த நூல், காப்பியம் என்ற உண்மைகளையும் மீறி இக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் நிர்வாகவியல் தொடர்பான பல செய்திகளும் இருப்பதை அலகிறது இக்கட்டுரை.

தர்க்கம்

தர்க்கம் என்பது ஒருகாலத்தில் ஒரு சாத்திரமாய் அறியப்பட்டு வந்தது. அதனை ஆங்கிலத்தில் Logical thinking என்று மொழி பெயர்ப்பர். தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையே வரும் மோதல்கள், மேலதிகாரிக்கும் உடன் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இடையே வரும் சிக்கலகள், இவைகளுக்கான ஆதாரமம், அந்தப் பிரச்சினையினை தர்க்க ரீதியாக ஆராயாமல் அடம் பிடிக்கும் காரணம் தான். இதைத் தான் நிர்வாகவியல் சார்ந்த புத்தகங்களில் Industrial Relations, Change management என்று புரியாத பல வழிகளில் சொல்கின்றனர்.

ஒரு பிரச்சினைக்கு முடிவு எடுப்பதற்கு ஆதாரமாய் ஆவணங்களும், பிறர் சாட்சியங்களும் தான் மிக மிக முக்கியமான சாட்சிகளாக இன்றளவும் கருதப் படுகின்றன. இவ்வளவு பெரிய சங்கதியினை எடை போட, இடை பற்றிய செய்திகளொடு சேர்த்து சொல்லும் புலமை கம்பன் காட்டும் நிர்வாக இயலுக்கு ஒரு சான்றாகும். சீதையின் இடையினைப் பார்த்தவர்கள் யாரும் இல்லையாம். அதைப் பார்த்து ஆதாரமாய் எழுதி வைத்த ஆவணங்களும் ஏதும் இல்லையாம்.. இப்படிப் போகிறது கம்பனின் பாடல்.ங்கள்

சட்டகம் தன்னை நோக்கி யாரையும் சமைக்கத் தக்காள்
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்பக் கேட்டு உணர்தி என்னின்
கட்டுரைத்து உவமை காட்ட கண்பொறி கதுவா கையில்
தொட்ட எற்கு உணரலாம் மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை.

Goal Setting

நிர்வாகவியல் படிப்புகளில் எங்கு சுற்றினாலும் கடைசியில் சில பல M என்ற ஆங்கில எழுத்தில் துவங்க்கும் வார்த்தையில் வந்துவிடுவர். Money, Man, Material, Machinery இப்படியாக… பல. அதையும் தாண்டி இலக்கை எட்டுவது எப்படி என்று பயில்வது தான் நிர்வாகவியலின் சிறப்பு. இதனை கம்பர் எவ்வாறு சொல்லி இருகிறார் என்பதையும் பார்க்கலாம். அவர் ஒரு செய்லினை எந்த மாதிரி செய்தல் தகும் என்பதை கூறுகிறார்.

1. என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். Objective of the Job.
2. யாருக்கு என்ன வேலை தரவேண்டுமோ அதனைப் அவரிடம் தேர்வு செய்து தருதல் Assighn the Job.
3. வேலைக்குத் தேவையான அனைத்தையும் தருதல் Give him the required resources.
4. இலக்கினை எட்ட நாள் குறித்தல் Fix the Target.
5. செயலின் விளைவுகளைப் பெறுதல் Feed Back.
6. குறித்த நேரத்தில் வேலை நடக்கிறதா என்பதை கன்காணித்தல் வேண்டும் Review the Task.

இதை எல்லாம் கம்பர் தனது ராமாயணத்தில் கையாண்டு இருக்கிறார். இடம் பொருள் ஆகியவற்றுடன் சற்று நோக்கினால்,நிர்வாக குரு என்று கம்பனை நீங்களே இனி அழைப்பீர்கள்.

1. வேலையில் தெளிவு : சீதையினை தென் திசை சென்று தேட வேண்டும்.
2. Team Leader: அனுமனை அதற்கு தேர்வு செய்தல்.
3. Resource: இரண்டு வெள்ளம்(மில்லியன் அல்லது பில்லியன் என்று என் ஊகம்) வானரப் படை தருதல்.
4. கெடு: முப்பது நாள் தான். (அட..இதைத்தான் இன்றும் தகவல் பெறும் உரிமை சட்டத்திலும் தகவல் தர நாள் கெடுவாய் வைத்துள்ளாட்களே?)
5. தகவல் அவ்வப்போது பெற வேண்டும்.
6. ஒரு மாசம் முடிந்து மறுபடியும் சந்திப்பதாய் முடிகிறது.

இது சுக்ரீவன் இட்ட நிர்வாக திட்டம். கம்பர் தான் இங்கு நிர்வாக ஆசான். இதோ கம்பன் வார்த்தைகள்:

வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும்
சுற்றி ஓடித் துருவி ஒருமதி
முற்று றாதமுன் முற்றுதிர் இவ்விடை
கொற்ற வாகையினீர் எனக் கூறினார்.

இதுக்கு முன்னாடியும் இப்படி

அரசு மற்றும் தனியார் நிர்வாக அலுவலகங்களில் ஏது பிரச்சினை எழும் போது, “இப்படி ஏற்கனவே செய்திருக்கிறார்களா??” என்று கேட்டு முடிவு எடுப்பார்கள். இதற்கு விதி விலக்க்காய் தனித்துவம் வாய்ந்த முடிவுகள் எடுப்பவர்களும் உண்டு. அது ஒரு சிலரால் தான் முடியும். திரு டி என் சேஷன் அவர்கள் தலைமை தேர்தல் அதிகாரியாய் நின்று ஒளிர்ந்தது இந்த ரகம் தான்.

இராமயண காதையில் கம்பருக்கும் இப்படி ஒரு சிக்கல் வருகிறது. அரக்கியாகவே இருப்பினும் ஒரு பெண்ணைக் கொல்ல்லாமா? என்ற குழப்பம் கதாநாயகன் இராமனுக்கே வருகிறது. கூட இருக்கும் ஆலோசகர் விசுவாமித்திர முனிவர் சொல்கிறார்,” இதுக்கு முன்னாடியும் இப்படி நடந்திருக்கிறது”. இப்படி முன்பே நடந்ததாக முனிவர் கொடுக்கும் இரண்டு முன் உதாரணங்கள்: கியாதி & முகதி என்ற இரண்டு பெண் அரக்கிகளை திருமாலும் இந்திரனுமே இதுக்கு முன்னர் அழித்துள்ளனர் என்பது தான். (கம்பராமாயணம் : பாடல் 381 & 382)

ஈகோவை உதறுங்கள்:

அரசு வேலைகளிலும் தாமதம் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகி இருக்கிரது. அதற்கான காரணம் பற்றி சற்றே யோசித்தால், “யார் பெரியவர்? யார் யாரைப் பார்க்க வரவேண்டும் போன்றவைகளால் கூட தாமதங்கள் ஆகும். இந்த சிக்கல் முழுதும் Decision Making, Art of Communication, Relatioship தொடர்பானவைகள். இவற்றிலிருந்து விடுபட கம்பர் ஒரு நல்ல தீர்வு சொல்கிறார். ஒரு சிக்கல் அல்லது பிரச்சினைக்கு முடிவு வேண்டுமா அந்த பிரச்சனையை அலசும் நல்ல ஓர் ஆளைப் பிடியுங்கள். அவரோட ரேங்க் அல்லது status எல்லாம் யோசிக்காதீர்கள். சட்டுன்னு அந்த Expert இருக்கும் இடத்துக்கே செல்லுங்கள்…வேகமாகச் செல்லுங்கள். விமானதிலும் கூட செல்லலாம். எப்படி போனாலும் தனியாகவே செல்லுங்கள். காரோட்டியைக் கூட தவிர்க்கவும். இது தான் கம்பர் தரும் நிர்வாக ரகசியங்கள்.

கம்பர் கையில் எடுத்த பிரச்சினை, இராவணன் சீதையை கவர வேண்டும். சரியான ஆலோசகர் மாரீசன். இராவணன் வான வழியே பறந்து செல்லும் விமானத்தில் ஏறி, தனியா போனதை கம்பன் சொல்கிறார்.. என்ன தான் மாரீசன் தன் கீழ் வாழும் சொந்தக்காரன் என்றாலும் Expert Opinion தேவைப்பட்டால், ஈகோவை உதறிவிட்டு நேரில் போகவேண்டும் என்பதாய் கம்பர் சொல்கிறார். (கம்பன் கதாநாயகன் பக்கம் தான் இருக்க வேணும் என்ற கட்டாயம் இல்லையே? வில்லனுக்கும் உதவுகிறார்)

வந்த மநதிரிககளோடு மாசு அற மரபின் எண்ணி
சிந்தையில் நினைந்த செயயும் செய்கையன் தெளிவி இலநெஞ்சன்
அந்தரம் செல்வது ஆண்டு ஓர் விமானத்தில் ஆரும் இன்றி
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான்.

வரமா சாபமா??

உங்களுக்கு ஏதாவது சங்கடங்கள் வரும் போது யாராவது சந்தோஷமாகச் சிரியுங்கள் என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஆனா வள்ளுவர் கூட இதையே இடுக்கண் வருங்கால் சிரி என்றிருக்கிறார்.

நடப்பதெல்லாம் எல்லாம் நன்மைக்கே என்று இருப்பது நல்லது. எது நடந்தாலும் சரி… எதுவுவே நடக்கவே இல்லையென்றாலும் சரி, எல்லாம் நல்லதுக்குத்தான் என்று இருப்பது பக்குவமான நிலை. சில இடர்பாடுகளைக் கூட, நாம் வாழ்வின் கிடைத்தற்கு அரிய வரமாய் கருதும் சூழலும் நிர்வாகத்தில் வரும். கம்பரின் காவியத்திலும் இப்படி, வரமா? சாபமா? என்று கேட்கும் சம்பவம் வருகிறது.

வேட்டைக்குப் போன தசரதன், யானை என்று நினைத்து சிரவணனை அம்பு எய்து கொல்கிறான். விபரம் தெரிந்த சிரவணனின் குருட்டுத் தந்தை சாபம் தருகிறார். “நீயும்இப்படி மகனை இழந்து துடிப்பாய்” என்று. இதை கேட்டு தசரதனுக்கு ஒரே குஷி… “எனக்கு குழந்தை பிறக்கப் போகிறது” என்று. சிக்கலைக் கூட சிக்கலாக கருதாமல் இருக்கும் நிர்வாகக் கலையினை கம்பர் தருகிறார்.

ஹிந்தியில் பான்ச் பான்ச்

பெரும்பாலான தமிழர்கள் அந்தமானுக்கு வருகையில் ஹிந்தி தெரியாமல் தான் வருவர். பின்னர் அதே ஹிந்தியில் கவிபுனையும் திறமையும் பெற்ற தமிழர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழர்களுக்கு ஹிந்தியில் எண்கள் சொல்வது என்பது சிக்கலான ஒரு செயல். தமிழில் பத்து வரை தெரிந்து கொண்டு இருபது, முப்பது..என்று மட்டும் படித்தால் போதும். ஆனால் ஹிந்தியில் ஒன்று துவங்கி நூறு வரை மனப்பாடம் செய்தாக வேண்டும். தமிழர்கள் அந்த சிக்கலுக்கு தீர்வும் கண்டனர். அவர்கள் கண்டுபிடித்த எளிமையான ஹிந்தி நம்பர்கள் இப்படி வரும்.

15 க்கு பந்தராவுக்கு பதிலா ஏக் பான்ச்.
47 க்கு சைந்தாலீஸ் சொல்லனுமா ?? சார் சாத் போதும்
55 க்கு பச்பன்… இதை தமிழ் மக்கள் பான்ச் பான்ச் என்பர்.

இந்த குறுக்கு வழியை நமக்கு சொல்லிக் கொடுத்ததில் கம்பருக்கும் பங்கு உண்டு. பதினான்கு ஆண்டுகள் வனவாசம் பற்றி கோசலையிடம் ராமன் சொல்கிறான். அது என்ன பெரிய்ய பத்தும் நாலும் தானே!! என்பதாய் வருகிறது. பதிநான்கு ஒரு தடவையும், பத்தும் நான்கும் என்று ஒரு முறையும் சொல்லிப் பாருங்கள்..  இரண்டாவதில் மனம் இளகி நிற்கும்.

சித்தம் நீ திகைக்கின்றது என் தேவரும்
ஒத்த மாதவம் செய்து உயர்ந்தோர் அன்றே
எத்தைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை
பத்தும் நாலும் பகல் அலவோ என்றான்.

பெற்ற தாயிடம் 14 ஆண்டுகள் பத்தும் நாலும் நாள் போல போயிடாதான்னு கேட்டது போல் தான் படுகின்றது. அந்தமான் செல்ல கப்பலில் மூன்றே நாளில் போய் விடுவேன் என்பதற்கும் மூ…ன்று நாளா?? என்று பெரு மூச்சு விடுபவர்களுக்கும் உள்ள வித்தியாசம் உணர கம்பன் பாடல் உதவுகிறது. நிர்வாக சிக்கலைனை எதிகொள்ள நாம் எப்போதும் தயாராய் இருக்க வேண்டும். மேலும் அதனை சுலபமாய் எதிர் கொள்ளவும் பழக வேண்டும் என்பதை கம்பர் மூலம் நாம் அறிய வேண்டும்.

அதுவா? இதுவா?? எதை செய்ய ???

இந்த மாதிரியான சிக்கல்கள் நமக்கு பல நேரங்களில் வந்திருக்கும். சில சமயங்களில் ஆண்டவன் அல்லது இயற்கை objective type கேள்வியாய் சந்தர்பங்களை தந்து விடும். இரண்டில் ஒண்றை த்ற்வு செய்தாக வேண்டிய நிலை அமையும் அல்லது அத்றகு இது பரவாயில்லை மாதிரியும் சூழ்ல்கள் வந்து சேரும்.

ஒரு நிறுவனத்தின் வெற்றி தோல்வி எல்லாமே நாம் நமக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பங்களை எப்படி பயன் படுத்தியுள்ளோம் என்பதைப் பெறுத்து தான் அமையும். சைக்ளோஸ்டைல் மிஷின்களின் ஜாம்பவனாய் இருந்த ஒரு நிறுவனம் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் ஓடி விட்டது. காலச்சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்காமை தான் அதன் வீழ்ச்சிக்குக் காரணம்.

இராமயணத்திலும் ஒரு சூழல் வருகின்றது. ராமனும் சுக்ரீவனும் இருவருமே மனைவியைப் பிரிந்தவர்கள். அனுமன் மெதுவாக ஆரம்பிக்கிறார். (சுக்ரீவனைப் பார்த்து ) “அரசனே, இவர்களைப் பார்த்தால் உங்கள் மனைவியைத் தேடிக் கொடுக்கும் ஆளாத் தெரிகிறார்கள்”.

சுக்ரீவனோ… இந்த இராமனே, மனைவியை பறி கொடுத்து நிற்கிறார். இவரால் எப்படி முடியம்? சந்தேகம்.. நமக்குத்தான் வரனுமா என்ன? வானரங்களுக்கும் வந்தது. வானர அரசனுக்கும் வளர்ந்து வந்தது. ஒரு வழியா கடைசியில் ஒரு முடிவுக்கு .. வழிக்கு வந்தனர். புரிந்தோ புரியாமலோ ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கை குலுக்காமலும் கையெழுத்து போடாமலும் அரங்கேறியது.

அடுத்த கேள்வி.. “யாருடைய மனைவியை முதலில் கண்டு பிடிக்க களம் இறங்குவது?” நாம் பரீட்சையில் பதில் எழுதும் போது என்ன செய்வோம்? நல்லா பதில் தெரிந்த கேள்விக்கு முதலில் பதில் எழுதுவோம். அதே அந்த இரண்டில் ஒன்றினை தெரிவு செய்யும் உத்திதான் இங்கும் வருது.

ஒரு மனையாள் சிறை வைக்கப்பட்ட இடம் வாலியிடம். சீதை இருக்கும் இடம் எங்கே? என்பதே யாருக்கும் தெரியாத விடயம். என்ன செய்யலாம்?. பரீட்சை எழுதும் அதே டெக்னிக். தெரிந்த இடத்துக்கு உடன் போகலாம் . இப்படித்தான் முடிவானது அந்த வாலியின் முடிவின் ஆரம்பம். நிரவாக காரியங்களில் முடிவு எடுப்பது எப்படி என்று கம்பன் கற்றுத் தரும் பாடம் இது.

முடிவுரை:

கம்பனின் காப்பியக் கடலின் ஓரத்தின் நின்று வேடிக்கை பார்த்த போது கிடைத்த செய்திகள் தான் இந்த நிர்வாகவியல் கருத்துகள். இன்னும் கம்பன் கடலில் மூழ்கினால் முத்துக்கள் எடுக்கலாம். நிர்வாகவியல் என்பது இப்போதைய காலகட்டத்தில் பய்ற்சி அளித்து வந்தாலும் அதன் அடிப்படையான கருத்துகளை தமிழர்கள் முன்னரே அறிந்திருந்தனர் என்பதை இங்கே பதிவு செய்வது தான் இக கட்டுரையின் நோக்கம். இன்னும் கலகலப்பாய் கம்பராமாயணம் படித்து மகிழ http://www.andamantamilnenjan.wordpress.com வலைப் பூவிற்கு வருக வருகவென அழைக்கின்றேன்.

கம்ப தர்மர்


ஏழாம் அறிவு படம் மூலமாய் போதி தருமர் பற்றி தமிழ் உலகமே கண்டு கொண்டது. தமிழர்களுக்கு ஆறாம் அறிவு தாண்டி வேறு என்னவெல்லாம் இருந்தது..இருக்கிறது..இருக்கும் என்ற கோணத்தில் இப்போது யோசிக்க வேண்டியுள்ளது.

வடிவேலு காமெடி ஒன்று.. “ஹலோ நான் வட்டச் செயலாளர் வண்டுமுருகன் பேசுறேன்…யார் பேசுறது” என்று கேட்பார். பதிலுக்கு நான் சதுரச் செயலாளர் பேசுறேன் என்றும், வட்டத்துக்கு ஒரு செயலாளர் இருக்கும் போது சதுரத்துக்கு இருக்க மாட்டாரா என்று கேள்வி வேறு இருக்கும் அருமையான ரசிக்க வைக்கும் காமெடி அது.

ஒரு உன்மை மட்டும் மறுக்க முடியாது இதில். வட்டம் ஏதாவது வம்பு செய்தால் நாம் அனுக வேண்டிய இடம் மாவட்டம். மாவட்டம் ஏதும் வில்லங்கம் செய்தால் அவரை விட மேலிடத்தை நாம் அணுக வேண்டும் என்பது தான் அந்த காமெடி பீஸ் நமக்கு உணர்த்தும் 6ம் அறிவு.

நியூட்டனின் விதி தெரியுமா என்று யாரைக்கேட்டாலும் அந்த மூன்றாம் விதி தான் கூறுவர். இது தான் விதி போலும் என்று மற்ற விதிகள்,  விதி வலியது என்று சொல்லிவிட்டு சும்மா இருந்திருக்குமோ..??

முதல் விதியினை கொஞ்சம் பாருங்கள்.. நகரும் பொருள் நகர்ந்து கொண்டே இருக்கும்… நகராப் பொருள் நகராதும் இருக்கும்.  எது வரை?? ஏதாவது ஓர் இடைஞ்சல் அதற்கு வராத வரை..

அதுவும் புவி ஈர்ப்பு விசை உள்ள இடத்தில் அதையும் மீறி ஏதாவது பொருள் போக வேண்டுமா..என்ன செய்யணும்?? அதை விட மஹா சக்தி தேவை. இதைச் சொல்லத்தான் மாவட்டம் வட்டம் கதை எல்லாம் எடுத்தேன் முன்னாடியே..

கம்பராமாயணத்தில் ஒரு கட்டம் வருகிறது.. அனுமன் இலங்கையின் மதிற்சுவரை தாவி அதன் மேல் நிக்கிறார்..(மதில் மேல் பூனை கேள்விப்பட்டிருப்பீர்கள். இது மதில் மேல் குரங்கு) அதைப் பார்த்து சந்தோஷப்பட்ட மேல் உலகு வாழ் தேவர்கள், அனுமனுக்கு வாழ்த்து தெரிவிக்க மலர்கள் தூவினார்களாம்… அந்த மலர்களும் நேரே கொஞ்சம் இறங்கி வந்தனவாம்.. அப்புறம் அந்த இராவணனுக்கு கோபம் வந்துட்டா என்னா செய்றது என்று நெனைச்சி அப்படியே மேலே போயிடிச்சாம்..

கீழே விழுவது வேண்டுமானால் புவி ஈர்ப்பு விசையில் விழுவதாய் வத்துக் கொள்ளலாம்.. ஆனால் தேவர்களின் ஆசியையும் தாண்டி இராவணனின் எதிர் விசை செயல் படுகிறதாம்.. அதுவும் அந்த புவி ஈர்ப்பு விசையையும் தாண்டி… நட்சத்திரம் போல் அங்கேயே நின்னுடுதாம்…கம்பர் சொல்றார்..நானும் படிச்சதைச் சொல்றேன்.

இரண்டு விஷயங்கள் இங்கு தெளிவாகுது:

  1. நியூட்டனின் முதல் விதி நியூட்டனுக்கு முன்பே கம்பன் அறிந்திருக்க வேன்டும்.
  2. புவி ஈர்ப்பு சக்தி பற்றிய சேதியும் கம்பர் தெரிந்து வைத்திருக்கிறார்.

 இதோ அதன் ஆதரவுப் பாடல்:

எண்ணுடை அனுமன் மேல் இழிந்த பூமழை
மண்ணிடை வீழ்கில மறித்தும் போகில
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி ஆய் கதிர்
விண்ணிடைத் தொத்தின போன்ற மீன் எலாம்.

கம்பனின் பார்வையில் என்னும் என்ன என்ன கிடைக்குமோ?? பாக்கலாம்..

மதுரெ மதுரெ தான்…


சுத்தி சுத்தி எப்படியாவது மதுரைக்காரங்க வாயிலிருந்து அவர்களுக்கே தெரியாமல் வந்து விழும் வார்த்தைகள் தான் இந்த மதுரெ மதுரெ தான்.

எனக்கு என்னவோ மதுரை என்றதும் மல்லி தான் நினைவுக்கு வரும். அந்தமான் தீவுகளில் மல்லிகை பூ வந்து சேர்கையில் பக்கத்தில் போய் பாத்த தான் அட இது மல்லி..என்பதே தெரிய வரும்.

கையில் கிளி வைத்திருக்கும் மீனாட்சி இருக்கும் ஊரில் கிளி மாதிரி அழகான பெங்களுக்கு பஞ்சமே இல்லை என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதுவும் அந்த 4ம் நம்பர் பஸ்ஸில் ஒரு வேளையும் இல்லாமல் சும்மா சுற்றுபவர்களும் இருக்காங்க..

வீட்டில் மதுரையா?? சிதம்பரமா?? என்று உலகத்தில் எந்த மூலையிலுன் கேட்கும் அளவுக்கு மதுரை பேமஸு. சமீப காலமாய் மதுரெ கிட்னிக்குமாடா பேமஸு என்ற வடிவேலுவின் டயலாக் அசத்தலோ ஆசத்தல்.

மதுரை மண்ணை அனுபவித்து வைரமுத்து கவிதையே பாடலாக தொகுப்பில் எழுதி இருக்கிறார். அதில் எனக்குப் பிடித்த வரிகள்..உங்களுக்கும் பிடிக்கும்..அட..அடடே என்று சொல்ல வைக்கும்.

பாண்டியர் குதிரைக் குளம்படியும் – தூள் 
பறக்கும் இளைஞர் சிலம்படியும் – மதி
தோண்டிய புலவர் சொல்லடியும் – இளந் 
தோகைமார்தம் மெல்லடியும் 
மயங்கி ஒலித்த மாமதுரை – இது 
மாலையில் மல்லிகைப் பூமதுரை!

நீண்டு கிடக்கும் வீதிகளும் – வான் 
நிமிர்ந்து முட்டும் கோபுரமும்
ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் – தமிழ் 
அழுந்தப் பதிந்த சுவடுகளும் 
காணக் கிடைக்கும் பழமதுரை – தன் 
கட்டுக் கோப்பால் இளமதுரை!

தமிழைக் குடித்த கடலோடு – நான் 
தழுவேன் என்றே சபதமிட்டே
அமிழ்தம் பரப்பும் வையைநதி – நீர் 
ஆழி கலப்பது தவிர்ப்பதனால் 
மானம் எழுதிய மாமதுரை – இது 
மரபுகள் மாறா வேல்மதுரை!  

போட்டி வளர்க்கும் மன்றங்களும் – எழும் 
பூசை மணிகளின் ஓசைகளும் – இசை
நீட்டி முழங்கும் பேச்சொலியும் – நெஞ்சை 
நிறுத்திப் போகும் வளையொலியும் 
தொடர்ந்து கேட்கும் எழில்மதுரை – கண் 
தூங்கா திருக்கும் தொழில்மதுரை!

ஆலைகள் தொழில்கள் புதுக்காமல் – வெறும் 
அரசியல் திரைப்படம் பெருக்கியதில்
வேலைகள் இல்லாத் திருக்கூட்டம் – தினம் 
வெட்டிப் பேச்சு வளர்ப்பதனால் 
பட்டாக் கத்திகள் சூழ்மதுரை – இன்று 
பட்டப் பகலில் பாழ்மதுரை!

நெஞ்சு வறண்டு போனதனால் – வையை 
நேர்கோ டாக ஆனதனால்
பஞ்சம் பிழைக்க வந்தோர்கள் – நதியைப் 
பட்டாப் போட்டுக் கொண்டதனால் 
முகத்தை இழந்த முதுமதுரை – பழைய 
மூச்சில் வாழும் பதிமதுரை

கடைசி வரிகள் பாடும் போது உங்களையும் அறியாமல் ஒரு சோகம் வரத்தான் செய்யும்… எப்படி இருந்த மதுரை இப்படி ஆயிடுச்சே என்ற கவலையும் கண்டிப்பாக சேர்ந்திருக்கும்.

சமீபத்திய மதுரையே இப்படி இருந்தா…கம்பன் காலத்து மதுரை எப்படி இருக்குன்னு பாக்க வேணாமா… வாங்க..ஏறுங்க…நம்ம Time மிஷினில் ஏறினால் கம்பன் காலத்துக்கு நொடியில் பயணம் at free of cost.

எல்லா உலகமும், எல்லா வகையிலும் புகழ்ந்து பாராட்டும் விதத்தில் இருப்பவை ரெண்டாம்..1. முத்து 2. தமிழ் (அதுவும் இயல்,இசை, நாடகம் மூன்றும் சேர்ந்தது). இந்த ரெண்டும் எக்கச்சக்கசக்கமாய் ஓர் எடத்திலெ இருந்தா அங்கெ செல்வங்களுக்கு குறையே இருக்காதாம்… அப்பேற்பட்ட இடம் தேவலோகம் தான்.. ஆனா மதுரையிலு இதெல்லாம் கீது..அதனாலெ மதுரெயும் தேவலோகம் தான் என்கிறார் கம்பர்.

அத் திருத் தகு நாட்டினை அண்டர்நாடு
ஒத்திருக்கும் என்றால் உரை ஒக்குமோ
எத் திறத்திலும் ஏழ் உலகும் புகழ்
முத்தும் முத் தமிழும் தந்து முற்றலால்.

இப்பொ மதுரெ மதுரெ தான் ஒத்துக்கிறீங்களா??? எங்கே..எல்லாருமா சேர்ந்து ஓ போடுங்க பாக்கலாம்.

சரக்கு பேசுது


நண்பர்களே…

அடிக்கடி நீங்கள் கேட்டிருக்கும் வாசகம் இது. “அது அவன் பேசலை.. அவனுக்கு உள்ளே போன சரக்கு பேசுது…”. அப்பொ சரக்குக்கும் வாய் உண்டா பேசுறதுக்கு??

நாம நிதானமா ஏதாவது பேசும் போது அதன் பின் விளைவுகள் ஏதும் இருக்குமான்னு யோசிச்சி பேசுவோம்…

சில நேரம் சில பின் விளைவுகள் வருவதற்காகவும் பேசுவோம்.. போட்டுக் கொடுக்கும் வேலைகள்..

மேடைப் பேச்சாளர்கள் நீண்ட நேரம் பேச இந்த சரக்கு ஏத்திட்டு பேசுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்… நேரில் பார்த்தும் இருக்கிறேன்.

முழுமையான ஈடுபாடு, பேசும் பொருளின் ஆளுமை, நல்ல ஒத்திகை இவைகள் எல்லாம் தராத ஒரு தைரியத்தை ஒரு ரெண்டு பெக் சரக்கு தரும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…

மக்களின் ரியாக்சன் தெரியாது பேச வேண்டுமா?? சரக்கு அடிச்சிட்டு பேசலாம்..

பேச பயமா இருக்கா…சரக்கடிச்சா… அந்த பயம் போகும் (எங்கே போகும்???..அந்த பயம் இருப்பது தெரியாமல் போகும்…ஆனா…மீண்டும் வரும்).

ஆக மொத்தம் சரக்கு ஏத்திட்டுப் பேசினால் உண்மைகள் தான் வரும் அல்லது உண்மை விளம்பிகளாக மாறி விடுவார்கள்.

அது சரி நம்ம சரக்குக்கு வருவோம்..

பேசுறவன்.. சரக்கு அடிக்கலாம்…உண்மை பேசலாம்… இதை ஒரு வகையில் நாட்டு நடப்பென்று ஒத்துக்கலாம்.

ஊமையன் சரக்கு அடித்தால்…

(சுத்தி வளைச்சி ஏதோ இலக்கியம் சொல்லனும்.. அவ்வளவு தானே… சொல்லுப்பா…)

ஆமாம்….

மறுபடியும் கம்பன். கோசலை நாட்டை வர்ணிக்க இயலும் போது தான் இப்படி ஊமையன் சரக்கடிச்ச மாதிரி, எப்படி சொல்றதுன்னு தெரியலையேப்பான்னு சொல்றார்..

ஆனா ஒரு சின்ன வித்தியாசம்…

நம்மாளுக பட்டை முதல் பாரின் சரக்கு வரை அடிப்பானுங்க..

நம்ம கம்பன் அடிச்சது என்ன சரக்கு தெரியுமா??
கள்ளு.. ஆமா…கள்ளு தான்..

அன்பு என்னும் கள்…

ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி
மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியலுற்றேன்

(நாட்டுப்படலம் – பாடல் எண் -33; கோசல நாட்டு வளம்)

நாமளும் அந்த அன்பு எனும் கள் தினமும் பருகலாமே???

நீங்க அசப்பில் தமண்ணா மாதிரி…


நீங்க அசப்பில் தமண்ணா மாதிரி…

இப்படி நீங்க யார் கிட்டெயாவது சொல்லிப் பாருங்க… உங்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான்.. (கொஞ்ச நாளுக்குத்தான் இந்தப் பெயரை யூஸ் செய்யலாம். அப்புறம் ஆள் பேரை மாத்தி அதே புளுகு புளுக வேண்டியது தான்).

நாம பொதுவா எப்பொ சந்தோஷமா இருப்போம் தெரியுமா?? யாராவது நம்மளை பத்தி ஏதாவது சொல்லனும் நல்ல விதமா…அதே ஏதாவது வில்லங்கமா சொன்னாங்க…அம்புட்டு தான்…அன்னெக்கி பூரா மூட் அவுட்… அவங்களுக்கும் அவங்களை சுத்தி இருக்கிறவங்களுக்கும்..

துணிமணி நகை நட்டு இவை எல்லாம் அந்த எதிர்பார்ப்பின் விரிவு தானோ… ஒரு வகையில் ஃபேஸ்புக்கில் எழுதுவது கூட அதன் extension மாதிரி தான். அதுவும் ஒருத்தரோட கம்பேர் செய்து சொல்லிட்டா தாங்கவே முடியாது நம்மாலெ…

நாம ஏதாவது எசகு பிசகா சொன்னா… அண்டப் புளுகு…ஆகாசப் புளுகு என்பார்கள்… ஆனா அதையே கவிஞர்கள் சொன்னா… தலையில வச்சி ஆடுவாங்க…

எப்பொவுமே தமிழ் பாட்டு பக்கமே தலை வச்சி படுக்கும் நாம் கொஞ்சம் மாறுதலா வடக்கே தலை வச்சி படுத்துப் பாக்கலாமே…

ஜேசுதாஸ் பாடிய ஜப் தீப் ஜலே ஆனா பாட்டில் வரும் வரிகளில், நீ வந்த பிறகு தான் நட்சந்திரங்களே வருதுங்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொருவர் காதலியின் கையைப் பாக்கிறார்… மெஹந்தியில் சிவந்திருக்காம்..(அது இல்லாமலும் சிவப்பு தானே??) ஆனா அது அந்த சிவப்பு இல்லையாம்.. என் இதயம் வடிக்கும் ரத்தமாம்.. இது எப்படி இருக்கு?? (அச்சா சிலா தியா துனே)

தூனே காஜல் லகாயா பாடலில் உன் கண்ணில் கரு மை இட்டால், பகல் கூட ராத்திரி அயிடுமடி என்கிறார் மற்றவர்.

கஜல் பாடல்கள் போல் தமிழிலும் பல பாட்டு இருக்கு… வைர முத்து அதை எல்லா வாயிலும் கொண்டு சென்றவர். சாம்பிளுக்கு ஒரு பாட்டு போடலாமா??

உன் வெள்ளிக் கொலுசொழி வீதியில் கேட்டால்…. அத்தனை ஜன்னலும் திறக்கும்.

நீ சிரிக்கும் போது பௌர்னமி நிலவு அத்தனை திசையிலும் உதிக்கும்

நீ மல்லிகை பூவை சூடிக் கொண்டால் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்

நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும். …

இந்த மாதிரி நீங்க சொன்னா..உங்களை ஒரு மாதிரியா பாப்பாய்ங்க.. கவிஞருக்கு லைசன்ஸ் இருக்கு இப்படி சொல்லலாம்.

அடப்பாவிகளா.. இல்பொருள் உவமை என்று இதைத் தானே காட்டுக் கத்தல் கத்தி தமிழ் வாத்தியார் சொன்னார்.. அப்பொ மண்டையில் ஏறலையே..

இப்பொ சிம்பிளா சொல்லவா… தமண்ணா சிரிச்சா காது வரை வாய்… காது வரை வந்தா அது வாயா??? அது கார்ட்டூன்.. ஆனா அப்படி சொல்லுவோம்… அப்பொ இ பொ உ அ இனி மறக்காது உங்களுக்கு..

டொய்ங்க்… Hi …
ஒரு Chat Message வருது. யாருன்னு பாத்தா… நம்ம friend கம்பர் தான். Hai… Whats Up பதில் தந்தேன்..

என்ன டாபிக் இன்னெக்கி?

உவமை பத்தி…உங்களை பத்தி சொல்ல இருந்தேன்…அதுகுள்ளே நீங்களே வந்துட்டீங்க….

கம்பர் Offline ஆகி விட்டார்.

சரி நம்ம தொடர்வோம்.. பாரதி மேலெ நல்ல அபிப்பிராயம் வந்து பாரதி தாசன் ஆனார் கனக சுப்புரத்தினம். அவர் மாதிரியே…மாதிரியே சுப்பு ரத்தின தாசன்…ஆகி அதுவே சுரதா ஆன கதை சொல்லிட்டு அப்புறம் கம்பருக்கு போவோமே… ஆமா உவமைக் கவிஞர் சுரதாவை உவமை டாபிக்லெ எடுக்காமெ இருக்க முடியுமா???

இப்பொ கம்பரை பாக்க போவோம்… ஒரு இடத்திலெ கம்பர் தினறுகிறார்.. இதுக்கு உவமையே சொல்றதுக்கு இல்லையேன்னு…எந்த இடம் தெரியுமா?? சீதையை முதன் முதலில் பாத்த இடம் தானே??? அது தான் இல்லை… அந்த ஐயோ..சமாச்சாரம் தான் எல்லாரும் சொல்றாகளே…நாம வேற மேட்டர் பாக்கலாமே??

நம்பிக்கை இல்லாத மனத்தோட வாணர சேனையைப் பாக்கிறார்…பாக்கிறார்…பாக்கிறார்… நம்பிக்கை அப்பவே வந்திருச்சி. ஆமா எப்படி இருந்தது தெரியுமா?? கம்பர் யோசிக்கிறார்.. கடல் ஆழம் மாதிரி… இல்லையே…அதைக் கண்டுபிடிக்கத்தான் Echo Sounder மாதிரி சாதனம் இருக்கே…

இருபது நாள் ராமர் லெட்சுமன் ரெண்டு பேரும் Shitf போட்டு மாத்தி மாத்தி Duty பாத்து… பாத்தால் கூட பாதி கூட்டத்தைத்தான் பாக்க முடியுமாம்… முழுப் படை பத்தி சொல்ல உவமையே இல்லையேன்னு கவலையில் இருக்காராம் கம்பன்..

அடங்க் கொப்புரானே… கம்பண்டா…

அத்தியொப்பு எனின் அன்னவை உணர்ந்தவர் உளரால் வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறுயாதோ பத்து இரட்டி நன் பகல் இரவு ஒருவலர் பார்ப்போர் எத் திறத்தினும் நடுவு கண்டிலர் முடிவு எவனோ

இந்த ரேஞ்ச்சுலே போனா நானும் கம்பராமாயணம் பாதி முடிக்கிறதே பெரிய விஷயம்ன்னு நெனைக்கிறேன்.

நீதி: முடிந்தவரை எவரையாவது பாராட்டுங்கள்… முடியலையா..இந்த மாதிரி நாம எழுதுவதையாவது படிங்க..

தொடருவேன் !!!

நூத்துக்கு நூறு


இந்தப் பெயரில் ஒரு பழைய படமும், அந்தப் படத்தில் நூத்துக்கு நூறு என்ற அட்டகாசமான TMS பாட்டும் இருக்கு தெரியுமான்னு நான் கேக்கிறேன்.

உங்கள் பதில், தெரியும் என்றால் உங்கள் வயது 45 +

அதே மாதிரி இன்னொரு டெஸ்ட்:

அந்தக் காலத்தில் Maths ல் மட்டும் தான் நூத்துக்கு நூறு வாங்குவாங்க.. என்று அடிக்கடி புலம்பும் நபரா நீங்கள்?? அப்பொ உங்கள் வயதும் 45 + தான்.

பத்தாம் வகுப்பு ரிசல்ட் வரும் நாளில் தினத் தந்தியில் வந்த ஒரு முழுப்பக்க விளம்பரம் பாத்து என் நண்பரின் துணைவியார் திருமதி நாச்சியார் தன் குழ்ந்தையை அங்கே சேர்க்க முயற்சிக்க… என் பொண்ணும் திருச்செங்கோடு போக வழி வகுத்து விட்டது.

சமீபத்தில் எனக்கு ஒரு போன் வந்தது பொண்ணு கிட்டெ இருந்து. நம்ம ஸ்கூல டைரக்டர் உங்க போன் நம்பர் வாங்கினார். யாராவது அந்தமானுக்கு வருவார்கள் போல் தெரியுது என்று.

நான்கு நாட்கள் கழித்து ஒரு போன் வந்தது. அழகு தமிழில் பெயர் அறிமுகம் செய்து கொண்டு பேசியது.. திருசெங்கோடிலிருந்து வந்ததாய்.

நானும் பந்தாவாய் English ல் பேச..(தமிழ் காரர் என்று தெரிந்த பிறகு கூட அவர் கிட்டெ English பேசுவதில் நம்ம ஆட்களுக்கு அலாதி சுகம் தான். நான் மட்டும் அதுக்கு விதி விலக்கா என்ன??)

வந்த பதில் : எனக்கு இங்கிலீஸ் எல்லாம் வராதுங்க..நான் அவ்வளவா படிக்காதவனுங்க…

அந்தமான் பாத்துட்டு நாளை கிளம்பும் தகவல் தெரிவித்தார்.
அடுத்த நாள் ஒரு சின்ன அந்தமான் ஆதிவாசியின் உருவம் பொறித்த நினைவுப் பரிசோடு ஏர்போர்ட்டில் அவரை சந்திக்க கிளம்பினேன்.

கதர் வெட்டியும் கதர் சட்டையும் எளிமையின் மொத்த உருவவுமாய் நின்றார். பரிசினை கறாராய் மறுத்தார். பரிசு வாங்குவது இல்லை என்ற கொள்கை முடிவில் இருப்பதாயும் சொன்னார். அன்போடு ஒரு காபி சாப்பிடலாமே என்றார்.

தான் படிக்கலை என்ற கவலையில் ஆயிரக்கணக்கான மாணவர்களை (மலேசியா உள்பட) படிக்க ஏதுவாய் கல்வி நிறுவனம் நடத்திவரும் வித்ய விகாஷ் கல்வி குழுமத்தின் தலைவர் தான் அந்தமான் வந்தவர்.

காமராசரும் நேருவும் திருச்செங்கோடுக்கு வந்த போது எடுத்த போட்டோவினை தந்தார். கர்மவீரரின் பாதையில் (தான் படிக்காவிட்டாலும் சமூகத்தை படிக்க வைக்க) கல்விக் பணி செய்வது சொல்லாமல் தெரிந்தது.

மனசு அவருக்கும் அவர் தம் குழுமத்துக்கும் 100 க்கு 100 போட்டது.

நல்லவங்க உலகத்திலெ கொறெஞ்ச்சிட்டே வாராங்களேன்னு பலர் சொல்வாய்ங்க..

என் கருத்து என்ன அப்படீன்னா…??? நல்லவர்கள் பாண்டவர் மாதிரி குறைவு. கெட்டவர்கள் அதிகமா இருப்பாக… கௌரவா மாதிரி.. 100 க்கணக்கா..

கம்ப ராமாயணத்திலெயும் இதே மாதிரி ஒரு பிரச்சினை வருது.

அடுத்தவர் மனைவியை கவர்வது ஒரு செயல்.

அதை மனிதர்கள் செய்தால் பாவம்.

அரக்கர்கள் செய்தால் தண்டிக்கலாம்.

விலங்குகள் செய்தால்??…அது எப்படி தவறாகும்??

அது போக… சுக்கிரீவனை விட வாலி பலசாலி. கூட்டமும் அதிகமா இருக்கு. என்ன.. விலங்கோட இயல்பா இருந்தான்..அது ஒரு தப்பா… ??

இது லெட்சுமணன் போட்ட சின்ன பிளான்.

தலைவர் ராமர் ஒத்துக்குவாரா என்ன?? (நல்லதா இருந்தா கண்டிப்பா ஒத்துக்குவாரு)

ராமன் சொல்லும் வார்த்தைகளாக கம்பன் சொவது:

நல்லவங்க கொஞ்ச ஆளு தாம்ப்பா.. அப்படி இல்லாத ஆளுங்க எக்கச்சக்கம். நாம் சுக்ரீவனுக்கு தோஸ்த் ஆயிட்டோம். அவருக்கு நல்லதா யோசிக்கலாமே என்று சொல்ல வாலி வதம் தொடர்கிறது.

அட.. அங்கேயும் கம்பருக்கு 100 க்கு 100 குடுத்துட்டு அப்படியே பாட்டு பாத்துட்டு மத்த வேலையைப் பாப்போம்.. ராமர் வாலியை பாத்துக்கட்டும்… நாம நைஸா பாட்டை பாப்போமே…

வில் தாங்கு வெற்பு அன்ன விலங்கு எழில் தோள மெய்ம்மை
உற்றார் சிலர் அல்லவரே பலர் என்பது உண்மை
பெற்றாருழைப் பெற்ற பயன் பெறும் பெற்றி அல்லால்
அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர் ஆர்கொல் என்றான்.

அது சரி இவ்வளவு சொல்ற எனக்கு எவ்வளவு மார்க் தருவீங்க???