பாமரன் பார்வையில் ஃபாரின் – 86


சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா
வானக்கருமை கொலோ

பாரதி தன் கண்ணம்மாவுக்கு கற்பனையில் வைத்த பெயர்…

மலேசியாவின் அருங்காட்சியகத்தில் படம் பார்த்ததும், இப்படித்தான் நினைக்கத் தோன்றியது. அப்படியே தொடர்ந்து இந்தப் பாட்டும் காதுகளில் ஒலித்தது…

சம்மதமா ???

நான் உங்கள் கூட வர சம்மதமா?

சரி சமமாக நிழல் போலே
நான் கூட வர
சம்மதமா?
நான் உங்கள் கூட வர சம்மதமா?

மலேசியாவிலும் மறக்க முடியாத அந்த வசீகர முகம்.. யார் இவர்?

மூன்று மொழிகளில் திரைப்படங்கள் தயாரித்து இயக்கிய முதல் பெண்; திரைப்பட ஸ்டூடியோ அமைத்து நிர்வகித்த முதல் பெண். கர்நாடக இசை பாடகி, நவரச நடிகை, திரைக்கதாசிரியர், இசையமைப்பாளர், சிறுகதை எழுத்தாளர், திரைப்பட இயக்குன…
பாடலாசிரியர், படத்தயாரிப்பாளர், பரணி ஸ்டூடியோ அதிபர், கைரேகை நிபுணர், ஜோசியர், கண்டிப்பான எஜமானி (எல்லா வீட்டு அம்மணி போல்).

இந்திய அரசு, இரண்டு தேசிய விருதும் தந்து தபால் தலையும் வெளியிட்டிருக்கு.

எனக்கு என்னமோ, இதே பெயரில் ஒன்பதாம் வகுப்பில் உடன்படித்த மாணவி தான் நினைவுக்கு வருது.

ஆமா… உங்களுக்கு?