ஜப்பானில் கல்யாணராமன் படம் ஜாலியா பாத்திருப்பீங்க…
பொதுவாவே ஜப்பானியர்கள் மேல் எல்லாருக்கும் ரொம்பவே நல்லெண்ணம் இருக்கும். பாவம்…ஹிரோசிமா, நாகசாகி என இன்றும் உச் கொட்டுவர் பலர்.
எப்படி நிமிர்ந்து வாழ வேண்டும்? என்பதை ஜப்பானியர்களிடமிருந்து தான் கற்றுக் கொள்ளவேண்டும் என்பர் பலர்.
எவனும் செய்யலை… நான் எதுக்குச் செய்யணும்? – இது இந்திய மனப்பான்மை.
எனவும் செய்யலையா? நான் ஏன் செய்யக் கூடாது? ஜப்பானிய மன ஓட்டம் என்பர்.
உலகமே ஒப்புக் கொண்டாலும், ஜப்பானியகளை மன்னிக்காத இரு பகுதி மக்கள் உள்ளனர்.
அந்தமான் வாழ் மக்கள் & மலேசிய வாழ் மக்கள்.
நாசிச, பாசிச, கெச்டாபோ முறை அடக்குமுறைகள் பற்றி அவ்வப்போது கேள்விப்பட்டவர்கள் பலர். அதனை ஜப்பானியர் ஆட்சியில் அனுபவித்தவர்கள் அந்தமானிலும், மலேசியாவிலும்.
700 பேரை கப்பல் ஏற்றி நடுக்கடலில் தள்ளிக் கொன்ற கொடூரம். தன் சவக்குழியினை தானே வெட்டி ஜப்பானியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட வரலாறு அந்தமானில்.

ஜப்பானிய லாக்கப்பில் ஏழு தினங்கள் என மலேசியாயில் தன் அனுபவங்களை புத்தகமாக்கியுள்ளார் சீ வி குப்புசாமி அவர்கள். ஒரே மூச்சில் படித்து வைக்கும் படியான கொடுமையின் எழுத்து வடிவம் அது.
ஒரு படம் வரலாற்றை கற்க எப்படி எடுத்துச் செல்கிறது பாத்தீயளா?
வரலாறு முக்கியம் அமைச்சரே!!!