பாமரன் பார்வையில் ஃபாரின் – 72


நாங்கள் எல்லாம் கையில் ஒரு பைசா வச்சிக்காமெ திரிவோம்லே… என வெளி நாட்டிலிருந்து இறங்கிய சில நாட்களில் பீலா விடும் நபர்களைப் பார்த்திருப்பீர்கள். (எல்லாம் கிரிடிட் கார்டே துணை என இருப்போர்)

நாங்க எல்லாம் அன்பே சிவம் படத்தில், அதெல்லாம் மாதவனுக்கும் கூட உதவாது எனப் பாத்திருக்கோமே!

காசு தந்தால் தான் ஆச்சி என சிங்கப்பூர் ஃப்ளையர் வீல் (ரங்க ராட்டினம்) அருகில் உள்ள கடை, அன்று ஒரு நாள் அடம் பிடித்தது.

இப்போது மலேசியாவிலும் அதே நிலை தான். ஸ்டிராபெரி தோட்டம் பாக்க ஆசையா, கார்டு நீட்டினால் தமிழ்ப் பெண் மலாய் மொழியில் மறுத்து பணமாய் தாருங்கள் என்றார்.

*ஆமா…. தமிழ்ப் பெண் என எப்படி கண்டிபிடிச்சீக? – * இது இனிய பாதியின் கேள்வி.

இராமநாதபுர மாவட்ட நிறம் + கமல் மாதிரி முகம் + மூக்குத்தி; இது போதாதா?

நம்ம ஊர்ல் தயிர் பாக்கெட் போல் இல்லாமல், மலேசியாவில் Selamat Detang என்று பெருசா எழுதி வச்சிருந்தாக. விசாரிச்சா, மலாய் மொழியில் வரவேற்கிறார்களாம்.

அந்த நம்மூர் நிறப் பாப்பா சொன்னது தான் என்பதை ஊகித்தோர்க்கு பாராட்டுகள்.

பேசாமெ நாமும் பால் தயிர் பாக்கெட்களில் Paal Thayir இப்படி போடலாமோ!!

அந்தமான் கிருஷ்ணமூர்த்தி

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s