சுப வீரபாண்டியன்
ஆண்டு தோறும் நடக்கும் விழா போல் 2012 லும் பொங்கல் விழா அந்தமானில் நடந்தது. சிறப்பு விருந்தினராக ‘ஒன்றே சொல் நன்றே சொல்’ புகழ் சுப வீரபாண்டியன் அவர்கள்.
அன்றைய நிகழ்ச்சி தமிழ்ப் பள்ளி மாணவிகள் பாடிய தமிழ்த் தாய் வாழ்த்தில் ஆரம்பித்தது. பின்னர் ஒரு நாட்டிய நிகழ்ச்சி; தொடர்ந்து ஒரு சிறுவன் ‘மந்திரமா தந்திரமா’ என நடத்திய மேஜிக் நிகழ்ச்சி. பின்னர் சிறப்புப் பேச்சாளர் உரை.
சுப வீரபாண்டியன் அவர்கள், தனது உரையில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடிய மோகன்புரா பள்ளி மாணவிகள் பற்றியும், நாட்டியம் ஆடிய சிறுமி சிவரஞ்சினி குறித்தும், மேஜிக் நிகழ்த்திய சிறுவன் விஜய் குறித்தும் குறிப்பிட்டு அவர்களைப் பாராட்டிவிட்டு உரையினைத் துவங்கியது வியப்பாய் இருந்தது (அதுவும் கையில் எந்த விதமான குறிப்பும் இன்றி).

விழா நிறைவானதும், தனது ‘கருப்புச் சட்டைக்காரன்’ பத்திரிக்கைக்கு ”விருப்பமுள்ளவர்கள் சந்தா செலுத்தலாம்” என வேண்டினார். “இது நடுநிலையானாது அல்ல; நான் சார்ந்து நிற்கும் இயக்கம், கட்சிக்கு சார்ந்தே இருக்கும்” என்று சொல்லியே வேண்டிய விதம் , அதன் உண்மை, வியப்பைத் தந்தது.
மேலும் சில வியப்புப் பட்டியல் இதோ: (தகவல் உதவி முனைவர் இராஜ்மோகன்
அவர்கள்):
- அந்தமான் தமிழர் பிரச்சினைகளுக்கு தமிழகத்திலிருந்து தீர்த்திட முயல்வது.
- தமிழக ஊடகங்களில் வெளிக் கொணர்வது
- எப்போது தொலைபேசியில் அழைத்தாலும் உடன் பேசும் குணம்.
சுப வீரபாண்டியன் அவர்களின் அன்றைய நிகழ்வு முழுதும் ஒன்றல்ல, பல சொற்களை அவர் நன்றாய்ச் சொல்லிய விதம் வியப்பாய் இருந்தது.
தொடரும் அடுத்த விஐபி அந்தமான் விஷ்ணு பத ரே
காத்திருக்கவும்.
அந்தமான் கிருஷ்ணமூர்த்தி. (9531835258)
வலப்பூ: http://www.andamantamilnenjan.wordpress.com