முனைவர் அந்தமான் அய்யாராஜு
ஒரு இடம் கலகலப்பாக இருக்கிறதா? அந்த இடத்தில், ஒருவருடைய குரல் மட்டும் ஓங்கி ஒலிக்கிறதா? அங்கு முனைவர் அய்யாராஜு அவர்கள் இருக்கிறார் என்று பொருள்.

அவர் அந்தமான் கல்வித்துறையில் உயர் பதவி வகித்து வந்தார்; நல்ல பேச்சாளர்; நாடக ஆசிரியர்; கவிஞர்; எழுத்தாளர் இப்படி பன்முகம் கொண்ட நல்மனிதர். இந்த அரிய குணங்கள் பார்த்து நாமும் நட்பானோம்.
ஒருமுறை லிட்டில் அந்தமான் தீவில் பணியில் இருக்கும் போது, முனைவர் அய்யாராஜு அவர்கள் அலுவல் நிமித்தமாக வந்திருந்தார். அவர் பணிகள் எல்லாம் முடித்து, இரவு உணவு வேளையில் தான் ஒன்று சேர்ந்தோம்.
ஆர் டி ஐ சட்டம் அப்போது தான் வந்த புதிது. அது தொடர்பாக பொதுமக்கள் கேள்விகளைக் கேட்டுத் துளைக்க, அதை என்னிடம் கேட்டுக் கொண்டே வந்தார்.
எல்லாவற்றிற்கும் தேவையான பதில்கள் (சட்டப் பிரிவு எண்கள் உட்பட) சொல்லிக் கொண்டே வந்தேன்.
”என்ன இது? ஆர் டி ஐ சட்டம் தொடர்பாய்க் கேட்கும் கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் வைத்திருக்கிறீர்களே! பேசாமல் நீங்க ஒரு புத்தகமே எழுதலாம் போல் இருக்கிறதே?”
அவர்தம் அருள் வாக்கு பலித்து, எனது முதல் நூல் ‘தகவல் அறியும் உரிமை – ஏன்? எதற்கு? எப்படி?’ 2006 ஏப்ரலில் வெளி வந்தது.
தான் ஓர் எழுத்தாளராய் இருந்தும், பிறரை நூல் எழுதும்படி செய்தது வியப்பு தான்.
மேலும் மறுநாள் நடந்த ஒரு கூட்டத்தில், என் பெயரின் முன் இருக்கும் T N என்பதினை, யாரும் எதிர்பாரா நேரத்தில் Tamil Nenjan தமிழ் நெஞ்சன் என்று விரிவு செய்ததும் இவர் தான். அது ஒரு புனைப்பெயர் போலும் ஆகிவிட்டது.
தொடரும் அடுத்த விஐபி எளிமை நேர்மை – கக்கன்
காத்திருக்கவும்.