இசையமைப்பாளர் வீ. தஷி
[இப்பதிவைப் படிக்குமுன் பதிவு – 27 ஐப் (படிக்காதவர்கள்) படித்து விட்டுத் தொடரவும்]
அந்தமானில் கருக்கொண்ட ’ஆல்பம்’ வளர்ந்து பிரசவிக்க பத்து நாளில் ஒரு வாய்ப்பு கிட்டியது சென்னையில் இசையமைப்பாளர் வீ. தஷியினைச் சந்திக்கும் வகையில்.
லிட்டில் அந்தமான் தீவிலிருந்து பாதிரி அருள்தாஸ் அவர்களின் பாடலை கேட்கச் செய்தேன். கேட்ட இசையமைப்பாளரோ, ”யார் குரல் இது?” கேட்டார்.
”ஒரு டம்மி வாய்ஸ் வேண்டும் என்பதால், நான் தான் பாடினேன்” – என் பதில்;
”பாதிரியார் ஆல்பம் வெளியிடுவது இருக்கட்டும்; நீங்க எப்ப ஆல்பம் போடப் போறீங்க?”
”அதுக்கு இது பதில் இல்லையே?….” என முழித்தேன்.
தஷி அவர்கள் கேட்டார்; “கவிதை எழுதுவீகளா? ரெண்டு கவிதை கொண்டு வாங்க.
பாதிரியார் பாட்டு இருக்கு; ஆல்பம் ரெக்கார்டிங் ஆயிடும்.”
தூது போன இடத்தில் தோது செயத மாதிரி, ‘அந்தமான் அலைகள்’ ஆடியோ ஆல்பம் தயாராகி வந்தது.
குரலைக் கேட்ட மாத்திரத்தில் ஆலபம் வெளி வர வைக்கலாம் என எதிர்பாராத வகையில் ஓர் இன்ப அதிர்ச்சி தந்த அந்தக் கேரள மாநில விருது பெற்ற இசையமைப்பாளர் வீ. தஷி அவர்களின் செயல் வியக்க வைக்கிறது. இவர் 1330 குறளுக்கும் இசை அமைத்து பாடல் வடிவிலும் வெளியிட்டுள்ளார்.
ஆல்பத்தில் ஒரு பாடலுக்கு, ’ஆதிசிவனின் அதிசயத்தைப் பாருங்களேன்’ என்ற வரியினை மட்டும் பாட, பொள்ளாச்சியிலிருந்து ஒரு சிறுமி தனுஸ்ரீயை வரவழைத்தோம்.
சில நாட்களில் அந்த சிறுமி தணுஸ்ரீ பாடிய பாடல்கள் ‘சிறுவாபுரி பிள்ளைத்தமிழ்’ என வெளிவந்தது மேலும் வியப்பு தான்.

அந்தமானில் இருக்கும் நபருக்கு சென்னை இசையமைப்பாளரை எப்படித் தெரியும்?
அதற்கு சந்திக்கலாம் அடுத்த விஐபி சென்னை சிவபுரம் கபிலன்
காத்திருக்கவும்.
அந்தமான் கிருஷ்ணமூர்த்தி. (9531835258)
வலப்பூ: http://www.andamantamilnenjan.wordpress.com