அந்தமான் விஷ்ணு பத ரே
அந்தமானில் முதன் முறையாக கம்பன் கழக பன்னாட்டு ஆய்வு மாநாடு 2016 ஏப்ரலில் நடந்தது. தமிழில் நடக்கும் விழா என்றாலும், உள்ளூரில் இருக்கும் ஒரு விருந்தினரை அழைக்க விரும்பியது கம்பன் கழகம்.
அப்போதைய பாராளுமன்ற உறுப்பினரான திரு விஷ்ணு பத ரே அவர்களை அழைக்கலாம் என்ற பரிந்துரை ஏற்கப்பட்டது. தொலைபேசியில் பேசி ஒப்புதலும் வாங்கியாயிற்று. முறைப்படி அழைப்பிதழ் தந்து பாராளுமன்ற உறுப்பினரை, ஒரு தட்டில் பழம் பூ எல்லாம் வைத்து அழைத்திடக் கோரிக்கை வைத்தது தாய்க் கம்பன் கழகம்.
பாராளுமன்ற உறுப்பினரோ, ”அதெல்லாம் வேண்டாம்; எத்தனை மணிக்கு தமிழர்
சங்கத்தில் இருக்க வேண்டும் என்ற விவரத்தை குறுந்தகவல் வடியில் அனுப்பினால் போதும்” என்றார்.
சொன்னபடியே, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே வந்து விட்டார். அவருக்கோ தமிழ் தெரியாது. பெரும்பாலான தமிழ் ஆர்வலர்க்கோ ஹிந்தி தெரியாது. இருப்பினும் அனைவரைப் பற்றியும் ஒவ்வொருவராய்ச் சென்று விசாரித்து அறிந்தார்.

”தமிழ்நாட்டில் அரசியல் கட்சியின் சிறு சிறு பதவிகளில் இருப்போரையே பார்க்க முடியாத சூழலில், அந்தமானில் தமிழ் தெரியாமல், தமிழ் நிகழ்ச்சிக்கு இவ்வளவு ஆர்வமுடன் வந்திருப்பது வியப்பு” என்றனர் வந்திருந்த தமிழறிஞர்கள்.
நேரில் போய் பேசாமல், தொலைபேசியில் பேசி ஒப்புதல் வழங்கி, குறுஞ்செய்தியில் நேரம் வாங்கி ஒரு பன்னாட்டு ஆய்வரங்கில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பு செய்த திரு விஷ்ணு பத ரே அவர்களை நினைக்கையில் வியப்பு தான் மேலிடுகிறது.
தொடரும் அடுத்த விஐபி மாவீரன் பழ நெடுமாறன்
காத்திருக்கவும்.
அந்தமான் கிருஷ்ணமூர்த்தி. (9531835258)
இதற்கு முன் வெளியான பதிவுகள் படிக்க எனது வலப்பூவுக்குள் செல்லவும்.
http://www.andamantamilnenjan.wordpress.com