தோழர் தியாகு
2017 ஆம் ஆண்டின் பொங்கல் விழாவுக்காக தமிழ் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு அவர்களை அழைத்தோம். விமான நிலையத்தின் உள்ளே சென்று அவரை வரவேற்கச் சென்றோம். ஒரு சிறிய கைப்பையுடன் மிக மிக எளிமையாக வந்து இறங்கினார்
இவரா, ஒரு பிரபல வழக்கில், தூக்குத் தண்டனை கைதியாக இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டவர்? என்று வியப்பாக இருந்தது. தமிழர் சங்க செயலாளர் காதில், தலைவர் மெதுவாகச் சொன்னார். ”ஐயா அவர்களுக்கு நாளை பொங்கலுக்கு வேட்டி சட்டை எடுத்துக் கொடுத்து விடவும்” என்று.
மறுநாள் பொங்கல் அன்று மிகச்சிறந்த உரையின் நடுவே, அந்தமான் தமிழர் சங்கம் உடுப்பு வாங்கிக் கொடுத்ததையும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
சில மாதங்களுக்குப் பின் நடந்த நிகழ்வினை தமிழர் சங்க தலைவர் சொல்வதைக் கேட்போமே!
அம்பத்தூர் தாய்த்தமிழ் பள்ளி கட்டிட பணி துவங்கும் விழாவுக்கு தோழர் அழைப்பு விடுத்திருந்ததின் பேரில் சென்றிருந்தேன்.

விழா முடிந்ததும் தோழர் செல்ல வேண்டிய வழியில் நானும் செல்ல வேண்டி இருந்ததால் அவரை முதலில் இறக்கி விட்டு விட்டு பின் நான் திரும்பி வந்து விடலாம் என்று நினைத்தேன்.
ஆனால் தோழர் பிடிவாதமாக மறுத்து விட்டார். வழியில் பஸ் டிப்போ பக்கத்தில் இறங்கிக் கொள்கிறேன் என்றார். பேசிக்கொண்டு வந்ததில் ஓட்டுனர் டிப்போவைக் கடந்து விட்டார். வண்டியை நிறுத்தும் போது , ஒரு வழிச்சாலையில் நுழைந்து விட்டது தெரிந்த்து. திரும்பி டிப்போ வருவதற்கு சில கிலோ மீட்டர்கள் ஆகும்.
எவ்வளவோ வற்புறுத்தியும் தோழர், டிப்போவுக்கு நடந்து செல்வேன் கூறிவிட்டு உடன் இறங்கி நடந்து சென்றுவிட்டார். என்னவொரு எளிமை!
சமுதாயப்பணிக்கு நேர்ந்து விட்டவரான தோழர் தியாகு அவர்களின் செயல் வியப்பாய் இருக்கிறதல்லவா?
[நன்றி: அப்போதைய அந்தமான் தமிழர் சங்க தலைவர் திரு காஜா முகைதீன் அவர்கள்]
Sir,
It is unble to view photos etc provided in this office email, of intranet. Pictures are blocked.
Kindly add kalprp258@gmail.com my personal mail also in your mailing list.
Thunko akkun dhee vorsu rhainaa retirementukk?
athha koun office_mm saethtahe? kaaikann?
Safe? How is Corona effect in your place?
You may be knowing about Corona effect in Paramakudi. Raaja Veedhi, Chinnakkadai Theru etc.
Regards,
Dhananjeyan.K.R