செம்முதாய் சதாசிவம்
அந்தமானுக்கு தமிழ் அறிஞர்கள் பலர் வந்திருக்கின்றனர். ஆனால் பல தமிழறிஞர்கள் ஒன்றாய் வருவது அரிது. அத்தகைய ஒரு நிகழ்ச்சியாக ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம் நடக்க ஏற்பாடு ஆகியிருந்தது.
தமிழகம், வெளி மாநிலங்கள் தாண்டி வெளி நாடுகளிலிருந்தும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்திலிருந்து வந்தவர்களில் பேராசிரியர் முனைவர் சதாசிவம் அவர்களும் ஒருவர். தங்குவதற்கு நாம் செய்த ஏற்பாடுகளினால் அவருக்கு சற்று மன உளைச்சல் ஏற்பட்டதை அவர் முகத்தின் கவலை ரேகை சொல்லியது.

”நாமெல்லாம் இப்படி பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருப்பதால், எங்களின் அனுபவங்களை நீங்கள் கேட்டு வாங்கி, விழாவை இன்னும் சிறப்பாய் அமைத்திருக்கலாமே …?” என ஆலோசனை கூறினார்.
”சரி ஐயா… அடுத்த முறை நடக்கும் விழாவின் அதனை மறவாமல் செய்கிறோம்” எனச் சொல்லி சமாதானப் படுத்தினோம். விழா இனிதே முடிந்தது. சதாசிவம் அவர்கள் முகம் மலர ஆரம்பித்தது.
அதன் பின்னர் சென்னையில் பல்வேறு இலக்கியவாதிகளைச் சந்தித்து, இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றது; இப்படி எல்லா சதா தரிசனங்களும் இந்தத் சதாசிவம் மூலமாயத்தான். அண்மையில் அந்தமான் அரசுக் கல்லூரியுடன் இணைந்து கருத்தரங்கமும் நடத்தினோம்.
தமிழில் அதிகமான அளவில் ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து, அதனை நூல் வழியில் வெளியிட்டவர்; பற்பல தலைப்புகளில் கருத்தரங்கம், உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் நடத்துவபர். கருத்தரங்க நூலை, கருத்தரங்கு நடத்தும் போதே வெளியிடுவது இவரது சிறப்பு. சங்ககாலம் தொடர்பாய் முனைவர் பட்டம் வாங்கி சென்னை கிறுஸ்தவக் கல்லூரியில் பேராசிரியராய் இருப்பவர்.
இவ்வளவு பெருமைகளை தன்னுள் வைத்திருந்து, நாம் அந்தமான் தீவில் நடத்தும் விழா கூட சிறப்புற வேண்டுமென நினைத்த செம்முதாய் சதாசிவம் அவர்களின் மனப்பாங்கு வியப்பாய் இருந்தது.