தாலியை விட்டு…


thaali

அந்தமான் என்றவுடன் எல்லாருக்கும் ஒரு காலத்தில் ஜெயில் தான் ஞாபகம் வந்திட்டு இருந்திச்சு. ஆனா சமீக காலமா சுனாமி தான் ஞாபகத்துக்கு வருதாம். அந்தா இந்தான்னு அதான் 11 வருஷமும் ஆச்சி. ஆனால் புதுசா யாரும் வந்தா தவறாம கேக்கும் கேள்வி, “ ஆமா, சுனாமி சமயத்திலெ எங்கே இருந்தீங்க?” என்னமோ நமக்கும் ஏதோ காலா காலமா சுனாமியோட பழக்கம் இருக்கிற மாதிரி கேக்கிறாகளே, “நல்லா கேக்கிறாங்கப்பா கொஸ்டினு” என்று பதில் சொல்ல ஆரம்பிப்பேன். ஆனால் நடு ரோட்டில் படுத்ததை இன்னும் மறக்க முடியாது தான். வீடு ஆடிகிட்டே இருந்தா எங்கே சாமி படுக்க? அதான் இப்படி.

அந்தமானில் சுனாமியின் கோரத் தாண்டவம் அதிகம் இருந்தாலும், சமயம் சார்ந்த கோவில் மசூதி தேவலயம் இவை எல்லாம் அதிகம் சேதமடையாமல் தப்பித்துள்ளன். கோவில் அப்படியே இருக்க பக்கத்தில் இருந்த அரசு விருந்தினர் மாளிகை இருந்த இடம் தெரியாமல் போன கதை எல்லாம் உண்டு. ஒரு சமயம் ஒரு கிருத்துவ தேவாலய திறப்பு விழாவில் பேசவும் கையில் மைக் வந்தது. (அப்பப்பொ இந்த மாதிரி கையில் மைக் வருவது தவிர்க்க இயலாத ஒன்று தான்). அப்போது ஒரு அரசுக் கட்டிடம் ஆரம்பித்து முடியாமல் இருந்தது. அதன் பின்னர் ஆரம்பித்த அந்த தேவலயம் திறப்பு விழா வரை வந்துவிட்டது. நான் பேசும் போது, அரசு வெறும் கோட் (CPWD Code) வைத்து வேலை செய்யும். ஆனால் நீங்கள் காட் (God) வைத்து கட்டியுள்ளீர்கள் என்றேன். இது அங்கு நன்கு எடுபட்டது.

cn temple

ஒரு வேளை கோவில் போன்றவை சுனாமியிடமிருந்து தப்பித்தமைக்கு நல்ல கட்டுமானமும் கடவுளின் அருளும் காரணமா? யோசித்தேன். சென்னை ஐ ஐ டி யிலிருந்து ஒரு பேராசிரியர் ஒரு சம்பவத்தினை சொன்னார். அதஒ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு பெரிய அரசுக் கட்டிடம் கட்ட தயாராய் இருந்தது. கம்பிகள் எல்லாம் கட்டி ரெடி. சரி பாக்க வந்தார் ஜுனியர் எஞ்ஜினியர். எல்லாம் நல்லா தான் இருக்கு. ஊரிலிருந்து கம்பி எல்லாம் அந்தமான் வர்ரதுக்குள் தேஞ்சி போயிடுதே. அதனாலெ ஒவ்வொரு கம்பி எக்ஸ்ட்ரா போடுங்க என்றாராம். அப்படியே ஆனது. அடுத்து அசிஸ்டெட் எஞ்ஜினியர் வந்தார். எல்லாம் சை… இங்கே கிரானைட் அளவில் தரமான கல்லு கெடைக்காது. வேணும்னா ஒரு கம்பி கூட போடுங்களேன்.

images rod

அடுத்து எக்ஜிகூடிவ் எஞ்ஜினியர் முறை வந்தது. அவரும் மணலைக் காரணம் காட்டி ஒரு கம்பி கூடுதலாய்ச் சேர்த்தாராம். பின்னர் டெபுடி சீஃப் எஞ்ஜினியர் வருவதாய் தகவல் வந்ததாம். கட்டிடம் கட்டும் வேலையில் இருந்த சூபர்வைசர், தன்னோட சைக்கிளை வேகமாய் போய் மறைத்தாராம். டெபுடி சீஃப் வர்ரதுக்கும் சைக்கிளுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? கைவசம் ஒரு கம்பியும் இல்லை. ஒரு வேளை சைக்கிளைப் பாத்தா அந்த போக் கம்பி எல்லாம் புடிங்கி போடுங்க என்று சொன்னாலும் சொல்லுவார்கள். இப்படி சொல்லி முடித்தார் பேராசிரியர்.

”நாமளும் தான் அந்த பேராசிரியர் ரேஞ்சுக்கு சொல்லுமோலெ….” கம்பர் குரல் ஒலித்தது. நானும் தொடர்ந்தேன். “உலகப் பேராசிரியர்கள் ஒருவருக்கும் நீங்க கொறெஞ்சவர் இல்லெ… சங்கதியெ, ஒரு கோடா சொல்லுங்க..நானு ரோடே போட்டுடறேன்”

கம்பர் பதில், “சிவில் எஞ்ஜினியருக்கு கோடும் ரோடும் நல்லாவே போடத் தெரியும் என்பது எனக்கும் தெரியும். அனுமனை கட்டிப் போட்டாங்களே, அங்கே போய்த் தேடு… தேடியது கிடைக்கும்.” இப்படியாய் வந்தது.

இலங்கைக்கு ஓடிப்போய் பாத்தா…அடெ…சூப்பர் சமாச்சாரம் இருக்குதே.. வாங்க எல்லோருமா சேந்து ஒட்டுக்கா எட்டிப் பாப்போம்.

கட்டிப்புடி கட்டிப்புடிடா கண்டபடி கட்டிப்பிடிடா என்று பாடாமல் அனுமனை கயிற்றால் கண்டப்டி கண்ணில் கண்ட கயிறு எல்லாம் வச்சிக் கட்டினாகளாம். அப்படி கட்டி முடிச்சி திரும்ப ஒரு எட்டு எட்டிப்பாத்தா இலங்கையில் ஊஞ்சலோட கயிறெல்லாம் காணவில்லையாம். தேரேட கயிறுகளும் காயப். குதிரை யானை இதெல்லாம் கட்ட கய்று மிஸ்ஸிங். அதான் அங்கே அனுமனை கட்ட எடுத்துட்டு போயிட்டாகளே.. அப்புறம் கண்ணுலெ கண்ட எல்லா கயித்தெயுமே எடுத்துக் கட்டப் போயிட்டாகளாம்…

சைக்கிள் கேப்லெ, நம்ம சைக்கிளை மறைச்ச மாதிரி இலங்கை மகளிர் எல்லாம் ஓடி ஒளிஞ்சாகளாம். தாலிக் கயிறைக் கையில் மறைச்சிட்டு. அதனாலெ அந்த தாலிக்கயிறு மட்டும் மிஞ்சி நின்னதாம்.

கயிறு கட்டாமெ மனசிலெ நிக்கும் அந்தப் பாட்டும் பாக்கலாமா?

மண்ணில்கண்ட, வானவரை வலியின் கவர்ந்த, வரம் பெற்ற,
எண்ணற்கு அரியஏனையரை இகலின் பறித்த–  தமக்கு இயைந்த
பெண்ணிற்குஇசையும் மங்கலத்தில் பிணித்த கயிறேஇடை பிழைத்த
கண்ணில் கண்டவன் பாசம் எல்லாம் இட்டு, கட்டினார்.

நிலவுலகில் கண்ட கயிறு வகைகளும்;  தேவர்களைத் தன் வலிமை காட்டி அபகரித்துக்
கொண்டு வந்த பாசங்களும்;  வரங்களால் பெற்றிருந்த தெய்வத்தன்மைப் பாசங்களும்;  எண்ண முடியாத மற்றையோரிடத்தினின்று போரிட்டுப் பறித்துக் கொண்ட பாசங்களும் (ஆக);  தம் கண்ணால் பார்த்த வலிய கயிறுகள் எல்லாம் கொண்டுவந்து போட்டு அரக்கர்கள் அனுமனைக் கட்டினார்கள்; தங்களுக்கு மனைவியராய்ப் பொருந்தியிருந்தபெண்களுக்கு அமைந்த;  திருமாங்கல்யம் என்னும் தாலியில் பிணித்துக்கட்டியி்ருந்த கயிறே, அந்தச்சமயத்தில் அறுத்துக் கொண்டு போகப்படாமல் தப்பின.

”தாலியை வித்து….” என்று சொல்வதெத்தான் இது வரை கேட்டிருப்பீங்க. ”தாலியெ விட்டு….” கம்பன் சொல்லும் கதெ எப்படி கீது?

10 thoughts on “தாலியை விட்டு…

  1. G.R.Ravindran,Pondicherry says:

    சுனாமியில் ஆரம்பித்து சுந்தரகாண்டத்தில் கம்பனைத் தொட்டவிதம் பாராட்டப் பட வேண்டும்.அனுமன் வாலில் கட்டிய கயிறும்,அரசு கட்டிடத்தில் தேவைப் பட்ட கம்பியும் என்ன ஒரு ஒப்பீடு .

  2. Kuppurao Madhavan says:

    Namma aalungalai vittirundhal nalla getti kayirai thiruchi eruppargal. Arumaiyana thagaval.

  3. கம்பர் காலத்தில் தாலி கட்டும் வழக்கம் இருந்திருக்கு.
    வால்மீகி ராமாயந்த்தில் மங்கல் ஸூத்ரம் வருதா?
    O.S.Subramanian.

    • Tamil Nenjan says:

      கொஞ்சம் லேசா தேடிப்பாத்ததில், வால்மீகியில் அப்படி ஒன்று இருந்ததாய் அந்த இடத்தில் (அனுமன் கட்டப்பட்ட இடத்தில்) குறிப்பு ஏதும் இல்லை.

  4. Meyyanathan says:

    Super explanation sir very nice

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s