பாமரன் பார்வையில் கம்பர்
By அந்தமான் கிருஷ்ணமூர்த்தி
First Published : 14 July 2014 12:30 AM IST
பாமரன் பார்வையில் கம்பர் – அந்தமான் கிருஷ்ணமூர்த்தி; பக்.268; ரூ.110; மணிமேகலை பிரசுரம், த.பெ.எண். 1147, தியாகராய நகர், சென்னை-17; )044-24342926/ 24346082.
பாமரரையும் கவர்ந்திழுக்கும் நூலின் தலைப்பு போலவே உள்ளிருக்கும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் யாவரையும் படிக்கத் தூண்டும் வகை.
காக்கா பிடிக்கலாமா?, இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை? மாத்தி யோசி மாமூ, காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை, முத்துக்குளிக்க வாரீயளா? அடைந்தால் மஹாதேவன் இல்லையேல் மரணதேவன், என்னெக் கணக்குப் பண்னேண்டா, எப்படி இருந்த நான்…, கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்திலையும், மலரே குறிஞ்சி மலரே…, பெண்டாட்டி ஊருக்குப் போயிட்டா, பாசக்காரப் பயலுவ, உலக நாயகனே இவையெல்லாம் அடிக்கடி கேட்கும் திரைப்பட சொற்றொடர்களாயிற்றே என்று நினைக்க வேண்டாம். தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவற்றை, அதாவது, கம்ப காவியத்தில் உள்ள பாடல்களை இதனோடு தொடர்புப்படுத்தி நகைச்சுவையோடு பாமரருக்கும் விளங்கும்படி கொச்சைத் தமிழில் கொண்டு சென்றிருக்கிறார் நூலாசிரியர்.
*****
தினமணிக்கும், தொடர்ந்து வலைப்பூவில் என் பதிவுகளைப் படிப்பவர்க்கும் பகிர்வோர்க்கும் தொடர்பவர்களுக்கும் என் நன்றி.