எல்லாம் வெலெ ஏறிப்போச்சி… பாக்கெட்டிலெ காசு கொண்டு போய் பையிலெ காய்கறி வாங்கிணு வந்த காலம் போயி, பையிலெ காசு கொண்டு போய் பாக்கெட்டிலெ காய்கறி வாங்கிணு வர வேண்டியிருக்கே என்கிற புலம்பல் ஒரு பக்கம். ஆனாலும் கார் வாங்கும் மக்களும், பல மாடல்களில் மொபைல் மாற்றி வரும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள். [Tab 1 மாடல் தெரியாத்தனமா வாங்கிட்டேன். அடுத்து Tab 2 வந்த பிறகு, இன்னுமா இதெ வச்சிட்டிருக்கே?? என்று துக்கம் விசாரிக்கிற மாதிரி என் தூக்கத்தெக் கெடுக்கிறாய்ங்கப்பா…அடிக்கடி.]
காலேஜ் டயத்திலெ சூப்பரான ஒரு பாட்டு, சுராங்கனி… சுராங்கனி. [இன்னும் கூட இந்த பாட்டுக்கு ஒரு வேல்யூ இருக்கத்தான் செய்யுது] அதுலெ மாலு மாலு மாலு என்று வரும். அதன் அர்த்தம் அப்பொ தெரியலை. ஆனா இப்போ இந்த மால் கலாச்சாரம் வந்த பிறகு தான் தெரியுது. ஓஹோ இந்த மால் பத்தித்தான் சொல்றாங்களோ என்று. மால் என்றால் பணம் என்கின்ற அர்த்தம் இருந்தாலும், மாலுக்குள் போயிட்டு வந்தா பணம் அம்பேல் தான். [ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது.. லிப்ஸ்டிக்கை விட, அத விக்கிற குமரிகள் உதட்டு லிப்ஸ்டிக் நல்லாவே இருக்குங்க..]
மதுரெயிலும் கூட இப்பொ மால் தலையெக் காட்டியிருச்சி.. எங்கே திரும்பினாலும் பிராண்டட் ஐடம் தான். ஒரு சாதாரண செருப்பு, அதாங்க.. சிலிப்பர் அது 2500 போட்டிருக்கு. அதெ வேறு எங்கேயும் போட முடியாது. பாத்ரூமில் மட்டுமே தான் போட முடியும். வேறு எந்த வேலைக்கும் ஆவாது. (லேடீஸ் சப்பலுக்காவது அப்பப்பொ வேலை வரும்) அதுக்கு போயி அம்புட்டு ரேட்டா?? அப்புறம் அதே மாதிரி ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விக்கும் பேனாக்கள். பெரும்பாலும் நம்ம ஏர்போர்ட்களில் நோட்டம் விட்டா தெரியும். அந்தமான் ஏர்போர்ட்டில் இப்பொத்தான் சிப்பி முத்து வச்சி நகை கடை வச்சிருக்காய்ங்க.. ஒரே மகளிர் அணி கூட்டம் தான். நம்மாலெ எட்டிக்கூட பாக்க முடியலை (தூரத்திலிருந்து பாகிறதோட சரி.)
எனக்கும் இந்த பிராண்டட் பொருளுக்கும் என்னமோ தெரியலை ஏழாம் பொருத்தம் தான். ரெண்டாயிரம் ரூபாக்கும் அதிகமா சொன்ன ஒரு பிராண்டட் சட்டை வாங்கி போட்டால், அதன் பட்டன் அடுத்த நாளே பல் இளிக்கும். செமெ பிராண்ட் பெல்ட் வாங்கி போட்ட அடுத்த வாரம் அது ரெண்டு பீஸா ஆயிருக்கும். சரி பேட்மிண்டன் வெளையாட நல்லா பிராண்டட் ஷூ வாங்கி, போட்ட ரெண்டாவது நாள் அன்பே சிவம் கமல் மாதிரி நடக்க வேண்டி வந்திடுச்சி.. நமக்கு என்னமோ அந்த குமார் ஷர்ட் (இன்னும் இருக்குங்களா 90 ரூபாய்க்கு சட்டை தந்த புண்ணியவான்கள்), சரவனா ஸ்டோர்ஸ் அன்னாச்சி கடை சரக்கு தான் ராசி போல் இருக்கு. (ஆமா… அந்த சரக்குகளோட பிரண்ட் பேரு எனக்கு புரியவே புரியாத புதிர். ஒருவர் சூப்பர் சரக்கு என்பார். இன்னொருவர் அதையே புளிச்ச தண்ணி என்பார். அது ஒரு தனிக் கதை)
பிராண்டட் வார்த்தைகளை பன்ச் டயலாக் என்று சொல்லலாமா? (இதென்ன கேள்வி? சொல்லிட்டாப் போச்சி.. யாரு எதிர் கேள்வி கேக்கப் போறாக… கேட்டாலுமே, சும்மா ஜாலிக்காக எழுதினதுன்னு சொல்லிட மாட்டோமா என்ன?) ஏதோ பன்ச் டயலாக் இப்பொ வந்த மாதிரி நெனைக்கிறீங்களா?? (இப்பொ கம்பராமாயணம் வருமே… இப்படி நீங்க நெனைச்சா அது ரொம்ப தப்புங்க.. அதுக்கு கொஞ்சம் இன்னும் டயம் இருக்குங்க)
ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்…. அம்பாள் எப்போது பேசினாள்?. இதெல்லாம் அந்தக் காலத்தில் வந்த, பன்ச் டயலாக் என்று பெயரிடப்படாத.. பன்ச் டயலாக்கள். நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று பேசும் திருவிளையாடல் படம் பாத்திருப்பீங்க. இதுவும் ஒரு வகையில் பன்ச் டயலாக் தானே.. இதே படத்தில் திருவிளையாடல் முடிந்த பிறகு நக்கீரனின் கடைசி டயலாக் “மன்னியுங்கள் தவறிருந்தால்”. (இது உண்மையில் நக்கீரனின் சொல்தானா? அல்லது ஏபி நாகராஜனின் டயலாக்கா என்ற கேள்வியை கொஞ்சம் தள்ளி வைப்போம்). சிவனிடம் மன்னிப்பே கேட்டாலும், மதுரெக்காரெங்க இப்புடித்தான் கேப்போமில்லெ என்று சொல்ற மாதிரி குசும்பா இல்லே..??
சொல்வதை எல்லாம் சொல்லிட்டு, மன்னிக்கனும் ஏதாவது தப்பா சொல்லியிருந்தா என்று சொல்வதற்கு உண்மையில் பெரிய மனசு வேணும். (அப்படிப் பாத்தா, சிவ பெருமானையே வம்புக்கு இழுத்து, உண்டு இல்லைன்னு ஆக்கிய நக்கீரனும் பெரிய மனசுக்காரர் தானா??).. சரி..இப்பொ அப்படியே கம்பர் பக்கம் போவோம். அங்கேயும் இப்படி வக்கனையா தன்னோட பாஸ் கிட்டெ சொல்றதெல்லாம் சொல்லிட்டு… தப்பா இருந்தா உட்ருங்க. என்பதாய் வருகிறது.
கம்பர் கவிச்சக்கரவர்த்தி அல்லவா.. அவர் கொஞ்சம் ஒரு படி மேலேயே போவார். பாஸ் கிட்டே, ”நீ தான் பெரிய்ய சூப்பர் ஸ்டார். நான் சாதாரண டம்மி பீசு..ஏதோ எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன்.. ஏதாவது ஏடா கூடமா இருந்தா, திட்டனுமா திட்டு” என்பதாய் வருகிறது. இங்கே (பழைய) பாஸ் இராவணன். ஊழியர் – விபீஷணன். இராமன் படையைப் பற்றி போருக்கு முன்னர் எச்சரிக்கும் இடம். ஆனா எரிச்சல் இராவணனுக்கு… ஆமா உங்களுக்கு எப்படி இருக்கு?? பாட்டு பாருங்க.
கற்றுறு மாட்சி என்கண் இன்றாயினும்
உற்று உறு பொருள் தெரிந்து உணர்தல் ஓயினும்
சொற்றறு சூழ்ச்சியின் துணிவு சோரினும்
முற்றுறக் கேட்டபின் முனிதி மொய்ம்பினோய்.
(யுத்த காண்டம்; இராவணன் மந்திரப் படலம்)
ஒரு அதிகாரி (அரசன்) கிட்டெ ஊழியம் எப்படி பேசனும்கிறது சொல்லாமெ சொல்ற மாதிரி இல்லே..????
time pass writings but tends to be thought out/.
Thanks.
டே! கிட்டு …. மால் போனமா பொருள் வாங்கினோமா எனறு வராமல் salesgirl ஒத்தடை ஏன்டா பார்க்கிறாய் ! வயசு 50 ஒரு பொண்ணுக்கு அப்பா
என்ன செய்ய?? அவங்க கிட்டெ அது மட்டும் தான் நல்லா இருந்தது. ரசிக்க வேண்டாமா?? சொன்னா அது தவறா??