ஓங்கி அடிச்சா ஒன்றை டன்னு வெயிட்டு


ஆர்டர்.. ஆர்டர்.. என்று சொல்லும் கோர்ட் சீன்கள் அடிக்கடி படத்தில் பாத்திருப்பீர்கள். அந்த சுத்தியல் வைத்து, கனம் நீதிபதியவர்கள் தட்டுவார். நான் பாத்த CAT, மாவட்ட நீதிமன்றம், ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று எதிலும் இந்த தட்டும் வழக்கத்தை பாக்க முடியலை. [ஒரு வழியா அலுவல் சம்பந்தமாய் படியேறி இறங்கிய நீதிமன்றங்களின் பட்டியல் முழுக்க காட்டி விட்டேன்]. ”ரெண்டு தட்டு தட்டினா, சரி ஆயிடுவான்” என்று சொல்கிறார்களே, அதைத் தான் இப்படி சிம்பாளிக்கா காட்டுறாங்களோ படங்களில்.. இன்னும் மூளையை கொஞ்சம் தட்டிப் பாக்க வேண்டும்.

குழந்தைகளை வளர்ப்பது, அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது இரண்டும் இரு பெரும் பிரச்சினைகள். ஆசிரியர்களை இரண்டாவது பெற்றோர் என்கின்றனர். பெற்றோர்கள்தான் முதல் ஆசிரியர் என்பதும் தெரியும் தானே!! ஆக, இருவருக்கும் இதில் பங்கும் உண்டு. பொறுப்பும் உண்டு. எப்படி அதனைச் செய்வது? அடிச்சி சொல்லித் தரவேண்டுமா? அல்லது ”அன்பாலெ தேடிய என் அறிவு செல்வம்..” என்று பாட்டுப் பாடிச் சொல்லித் தருவதா? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்கிறார்கள்.. (நம்ம ஆட்கள் தான் எல்லாத்துக்குமே பழமொழி வச்சிருக்காங்களே!!.. கட்டிங்கை நம்பினோர் கைவிடப்படார் என்று கூட புதுமொழி இருக்கு. நான் அதெல்லாம் சொல்ல மாட்டேன்)

அடியாத மாடு படியாது என்று மாட்டிற்கு இலக்கணம் வைத்திருக்கிறார்கள். BSc (Agri), BVSc ல் கூட இதனைச் சொல்லித் தருகிறார்களா என்று கேட்டுப் பாக்கனும். அடிச்சுத் தான் சொல்லித் தரணும் என்பதில் பிடிவாதக் காரர்கள் இவர்கள். இந்த ”ஐந்தில் வளையாததை” கொஞ்சம் வளைந்து பாத்தா, வேற அர்த்தம் வருது. ஆரம்பம் சரியில்லை என்றால் முழுக் கிணறை எப்படித் தாண்டுவது? ”ஐ” யே சரியா வளைத்து எழுதத் தெரியலை. ஐம்பது எப்படி எழுத முடியும்? இப்படியும் யோசிக்கலாமே. பெரியார் பக்தர்(??)களுக்கு இந்தப் பிரச்சினை இல்லவே இல்லை. ”அய்” என்ற எழுத்து போட்டு சமாளித்து விடுவர்.

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்கிறார்கள். வெறும் கல்லிலிருந்து கூட, வேண்டாததை எல்லாம் அடிச்சி எடுத்துட்டு… அப்புறம் பாத்தா, நல்ல அழகான சிலை வந்துருமாமில்லெ… [அதுக்காக, மனைவியைப் பாத்து, ”அப்பொ ஏன் இப்படி வேண்டாததை மட்டும் வச்சி சிலை மாதிரி அனுப்பிட்டே” என்று பிரம்மன் கிட்டெ கேக்கக் கூடாது. ரம்பை ஊர்வசி எல்லாம் அவர்கிட்டெ இருக்கும்.. ”நமக்கு வாய்த்த அடிமை(கள்) புத்திசாலிகள்.. என்ன.. வாய் தான் கொஞ்சம் நீளம்” என்று இருந்துட்டுப் போக வேண்டியது தான்.

பெரும்பாலும் எனக்கு வாய்த்த PET மாஸ்டர்கள் அனைவருமே கையில் விசில் வச்சிருந்தாங்களோ இல்லையோ,கையில் பளபளப்பா மின்னும் கம்பு வச்சிருந்து மிரட்டுவார்கள். இதுக்குப் பயந்து நானு, அந்தப் பக்கமே போகாமெ இருந்துட்டேன். வேறு சில ஆசிரியர்களோ, அடியாத மாடு படியாது என்றார்கள். அவர்களை நம்ம பாலகுமாரன் என்ன சொல்கிறார் தெரியுமா?? (அடிச்சா…? அடிக்காமெயா?) இந்த மாதிரி கேக்கும் ஆசிரியர்கள், வாத்தியார் வேலையை விட்டுட்டு, பேசாமெ மாடு மேய்க்கப் போலாமாம். (என்ன பசங்களை மேக்கிறதெ விட அது ஓக்கேவா??)

இப்படி அடிச்சுப் பாத்தும் தேறாத கேசுகள் என்று முடிவு கட்டிய பல சின்னஞ் சிறுசுகள், பின்னாளில் பல சாதனையாளர்களா ஆயிருக்காகலாம். இந்தக் கதை தெரியுமா உங்களுக்கு? ”இது பூட்ட கேசும்மா… இந்தப் பையனை நாம இந்த ஸ்கூல்லெ வச்சிருந்தா நம்ம ஸ்கூல் இமேஜே கானாமப் போயிடும்” என்று சொல்லி விரட்டியது ஒரு பையனை. பிற்காலத்தில், அந்தச் சிறுவன் இல்லாங்காட்டி உலகம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல, ஒரு நிமிடம், ஒரு நாடு முழுதும் இருட்டாக்கி அவனை நினைவு கூறுதாம். அந்தப் பையன் வேறு யாடும் இல்லை.. தாமஸ் ஆல்வா எடிசன். [தமிழ் நாடும் இப்பொ அடிக்கடி அந்தச் சிறுவனை நினைவு கூறுது மணிக்கணக்கா]

கற்றுக் கொடுப்பதில் பள்ளியாகட்டும், வீடாகட்டும், இந்தச் சிக்கல் இருந்தபடியே தான் இருக்கும். அடி உதவுவது போல் அண்ணன் தம்பிகூட உதவ மாட்டான் என்பார்கள். அப்படிப் பாத்தா, வீடும் பள்ளியும், ஏன் உலகமுமே தண்டனை தரும் அந்தமான் செல்லுலார் ஜெயில் மாதிரி தான் இருந்தாகனுமா என்ன? தேவையே இல்லையே… தண்டனை தேவைப்படும் போது மட்டும் கையில் எடுக்கலாம். எப்போவும் அப்படி இருந்தால் என்னத்துக்கு ஆகும்? என் தந்தை எனக்கு தந்த மோசமான அடியில் நான் அவரிடமிருந்து விலகி, கிட்டத்தட்ட 15 வருஷமாச்சி அவர்கிட்டெ நான் அன்பாய் திரும்ப ஒட்ட… தேவையா இதெல்லாம்???

வாத்தியார்களை விடுங்க… அடிவாங்கியபடி ஒரு பாட்டு வருமே?? உங்களுக்கு ஞாபகம் இருக்கா?? ”பட்டத்து ராணி… பார்க்கும் பார்வை” என்று சாட்டையடி வாங்கியபடி வரும் பாட்டு அது. எல் ஆர் ஈஸ்வரியின் குரல் அது. இவ்வளவு காலம் ஆனாலும் இன்னும் சலிக்காமல் கேக்க வைக்கும் பாட்டு அது.

அது சரி… தலைப்பெ உட்டு ரொம்ப தூரம் வந்துட்டோமோ?? சாதாரன அடியே இப்படி இருக்கறச்சே, ஓங்கி அடிச்சா எப்புடி இருக்கும்? ஒரு கிலோ படிக்கல்லை வச்சி அடிச்சாலே, மூஞ்சி மொகறெ பேந்து போகும். (அப்படியான்னு யாரும் செஞ்சி பாக்காதீங்க) அதுலெ 10கிலோன்னா எப்படி எப்பெக்ட் தரும். அதெ விடுங்க.. ஒன்றெ டன் (அதாவது 1500 கிலோ) எப்படி இருக்கும்? HP Horse Power மாதிரி இது TP டன்ஸ் பவரா இருக்குமோ??

ஆமா இவ்வளவுக்கு அப்புறமும் கம்பர் வரலைங்கிறது வருத்தமா இருக்கத்தான் செய்யும். (இதுக்கு ”இல்லை” என்பது உங்கள் பதிலாய் இருந்தாலும் என்னோட பதில் தொடரத்தான் செய்யும்). நம்ம ஆளுங்க சினிமா படத்திலெ பன்ச் டயலாக் சொல்ல ஒன்னறை டன்னுன்னு சொல்லிட்டாய்ங்க. ஆனா இதே மாதிரி ஒரு சீன் கம்பராமாயணத்திலெ வருது. எவ்வளவு வெயிட்டு இருக்கு என்ற கேள்வியும் வருது. எங்கே? எப்பொ? தெரியுமா? இரணியன் வதைப் படலத்தில் வருது. இரணியனைப் பிடிச்சி நரசிம்ம அவதாரத் திருமால் கையால புடிக்கிறார். அது எம்புட்டு ஃபோர்ஸ் தெரியுமா? பெரிய்ய பெரிய்ய கணக்கு வாத்தியாருங்க, புரபஸருங்கு எல்லாராலெயும் கூட, சொல்ல முடியாதாம் அதை. இது எப்படி இருக்கு?

நகைசெயா வாயும் கையும் வாளொடு நடந்த தாளும்புகைசெயா நெடுந்தீப் பொங்க உருத்து எதிர் பொருந்தப் புக்கான்தொகை செயற்கரிய தோளால் தாள்களால் சுற்றிச் சூழ்ந்தான்மிகைசெய்வார் வினைகட்கு எல்லாம் மேற் செயும் வினையம் வல்லான்.

உங்களுக்கும் கோபம் வந்து வெயிட்டா ஏதாவது தூக்கிட்டு அடிக்க வந்துடாதீங்க… அன்பே சிவம். அன்பு தான் எல்லாம்..ம்..எல்லாம் தான்.

2 thoughts on “ஓங்கி அடிச்சா ஒன்றை டன்னு வெயிட்டு

  1. Samy sathi says:

    Intha padalukku porulayum solliddan irukkalam. Samy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s