சுஜாதா அவர்களின் எழுத்துகளை கவனமாய் படித்தவர்களுக்கு (சும்மா ஜாலியாப் படிதவர்களுக்கும் தான்) அவர் செய்த எழுத்துச் சித்து விளையாட்டுகள் இன்னும் நினைவில் இருக்கும். அவள் ரவிக் அணிந்திருந்தால் என்று சொல்லும் போது கை இல்லாத ரவிக்கை என்பது நம் மனதில் ஓடும். ஆனால் இப்போது ரவிக்கையே இல்லாத ரவிக்கை அணிகிறார்களே இதுவும் ஆச்சரியம் தான். அதை எப்படி அணிந்து வருகிறார்கள் என்பதும் ஆச்சரியரியம் தான்.
சுஜாதாவின் கலைந்திருந்தாள் என்பதும், படிகளில் ஏறினான், இறங்கினான் என்பதையும் எழுதிய விதம் இன்னமும் வாசகர்கள் மனதில் இருக்கும் என்று நம்புகிறேன். எனது போஸ்டிங்க் படித்து சுஜாதா மாதிரி என்றார்கள் சிலர். (இதைவிட் கேவலமாய் யாரும் சுஜாதாவை திட்டிவிட முடியாது. அவர்களின் நோக்கமே ஒரு வேளை சுஜாதாவை மட்டப் படுத்த இருக்கலாம்). தமிழில் எழுதும் ஒவ்வொருவருக்கும் அந்த சுஜாதானுபவம் இல்லாமல் எழுத முடியாது என்பது என் அபிப்பிராயபிராயம். ( அப்படி ஒருவருக்கு இல்லையா.. அவரின் வயது 40க்கு கீழே என்று தெரிந்து கொள்க)
இதை எழுதும் அதிகாலை 6.30 க்கே அருகில் உள்ள பள்ளி குழந்தைகளின் அணிவகுப்பு வந்தது. மௌலானா ஆஜாதின் பிறந்த தினமாம் இன்று (நவம்பர் 11). ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா தேசிய கல்வி தினம் கொண்டாட வர வேன்டுமா என்ற வருத்தம் அனைத்து ஆசிரியைகள் மனதிலும் தெரிந்தது. அதை மறைக்கவோ என்னவோ பளிச்சென்று லிப்ஸ்டிக்கர் (லிப்ஸ்டிக் + ஸ்டிக்கர்) பொட்டும் பளீர் என்றது. புடவை கட்டிய அனைவரும் ஒரு கையால் அதை தூக்கி நடப்பது ஒரு ஸ்டைல் மாதிரி ஆனதும் சொல்லாமல் தெரிந்தது.
மன்னார் & கம்பெனி என்றவுடன் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அந்த டணால் தங்கவேலுவின் காமெடி தான். கல்யாணப் பரிசு தான் படம். படம் என்னவோ சோகம் கலந்த படம் தான். ஆனா இந்த காமெடி தான் அதை தூக்கி நிறுத்தி இன்று வரை பேச (எழுதவும்) வைக்கிறது. நீங்க எந்த மன்னார் & கம்பெனியை சொல்றீங்க? என்று கடைசியில் ஒரு சிக்கல் வரும் போது, அதுவா.. அது ராஜமன்னார் சார் என்று முடியும். வார்த்தை ஜாலங்களில் அதனையும் அடக்கலாம்.
அதே டணால் தங்கவேலு இந்த வார்த்தை ஜாலங்களில் வல்லவர். தங்க லட்சுமீமீமீமீ என்று ஒரு படத்தில் அழைக்கும் போதே அதுக்குப் பின்னால் செம காமெடி வரப்போகுது என்று தெரிந்துவிடும். அப்படி வந்த காமெடி தான் அந்த சமையல் குறிப்பு தரும் அந்தக் கால காமெடி. தங்கவேலுவின் அந்தக் கால இன்னும் ஒரு வார்த்தை ஜாலம் தான் Inteligentally. சாதாரண Inteligent ஐ விடவும் ஒரு படி மேலானா வர்க்கம் என்று பொருள் கொள்க.
என்னுடைய அந்தமான் வருகை மத்திய அரசின் ஒரு Apperentice வேலையாகத்தான் அமைந்தது. (அது 1986 களில்… அப்பொ ஆரம்பித்த அந்தமான் மீதான காதல். இன்னும் விட்டபாடில்லை. (காதல் சரி… காதலி… ஐய்யோ..பொன்டாட்டி தூங்கும் நேரத்தில் எழுதிகிட்டிருக்கேன்.. வீட்லெ கொழப்பத்தெ உண்டு பன்னிடுவீங்க போலெ).. சரி இந்த Apprentice என்பது நம் வடிவேலு வாயில் வராமல் அப்ரஸண்டிகள் என்று மாற…. போற போக்கில் அதுவே தமிழாக்கம் என்று ஏற்றுக் கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.
சர்தார்களை கிண்டல் செய்வது என்பது உலகம் பூரா நடந்திட்டு தான் இருக்கு. சர்தார்களை நல்ல விதமா காட்டி தமிழ் படம்கூட வந்திருக்கு. ஆனா ரமணா என்ற படத்தில் தமிழர்களை ஒரு சர்தார் Emotional Idiot என்று திட்டுவதாய் வரும். சாய்ந்தால் சாயிர பக்கம் சாயும் செம்மெறி ஆட்டு மந்தைகள் என்று அதனை (சுருக்கமாய் ) மொழி பெயர்க்கலாமா?? இந்த emotional விஷயங்கள் டால்பின் மாதிரியான மீன்களிடமும் உண்டாம். (அதாவது தீவு போல் வாழாமல் கூட்டமாய் வாழும் எல்லாரிடமும் இப்படி emotional feelings இருக்கும் என்பது என் கருத்து. எப்படியோ தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்பதாவது விளங்கட்டுமே எல்லாருக்கும்.
ஆனால் வேடிக்கை என்ன வென்றால், ஒரு டால்பின் மாட்டிக் கொண்டால் அத்தனை டால்பின்னும் அதன் பின்னாலேயே வந்து தலையை வெட்டிக்கப்பா என்று தந்து விடுமாம். (கலயாணத்து பெண் பர்க்கும் போது இப்படி நடந்தா… செமெ ஜாலியா இருக்கும்லெ??) சமீபத்தில் 35 வகையான திமிங்கிலங்கள் அந்தமானின் வடகோடி தீவான டிக்லிபூர் என்ற தீவில் இறந்து கிடந்தன. (அதென்ன தெற்கு என்னும் போது மட்டும் தென்கோடி, வடக்கை வடகோடி என்று சொல்லக்கூடாதா என்ன??). காரணம் தேடிய ஆய்வு சொல்கிறது இந்த emotional feelings ஆக இருக்கும் என்று.
இதே மாதிரி அந்தக் காலத்திலேயே ஒரு ஐட்டம் நடந்திருக்கு. அனுமன் கடல் தாண்டி போய்க் கொண்டிருக்கிறார். அப்போ அந்த உடம்பிலிருந்து வீசிய காற்றால் கடலே கலங்கியதாம். (நம்ம “வடை போச்சே” சிச்சுவேஷனில் வாயுசூடனின் காற்று வீசியே சூடான டீ எல்லாம் பறக்கும் போது, கடல் கலங்காதா என்ன??) அப்படியே மீன்களுடன் திமிங்கிலமும் செத்து மிதந்தனவாம். கூடவே திமிங்கிலகிலங்களும் தானாம். அது என்ன திமிங்கிலகிலங்கள்? திமிங்கிலத்தையே சாப்பிட்டு ஏப்பம் விடும் திமிங்கிலமாம். வீராதிவீரன் சூராதிசூரன் மாதிரி. இது எப்படி இருக்கு?
‘ஓசனை உலப்பு இலாத உடம்பு அமைந்துடைய’ என்னத்
தெசமும் நூலும் சொல்லும் திமிங்க்கிலகிலங்களோடும்
ஆசையைஉற்ற வேலை கலங்க அன்று அண்ணல் யாக்கை
வீசிய காலின் வீந்து மிதந்தன மீன்கள் எல்லாம்.
இப்பொ புரியுதா?? நம் பாட்டன் முப்பாட்டன் காலம் முதல் இந்த வார்த்தை ஜாலங்கள் இருக்கத்தான் செய்யுது.
Interesting write-up. Sujatha really revolutionalised writing in Tamil.
Thanks for the comments Vichu…