காதலில் ஜெயிப்பது எப்படி?


காதலில் சொதப்புவது எப்படி? என்று அருமையான படம் வந்தது. இன்றைய காதலின் உண்மை நிலவரத்தை தோலிருச்சி (எதை எதையோ உரிச்சியும்) காட்டியது. காதலில் சொதப்புகிறார்களோ இல்லையொ, காதலிப்பவர்களின் சொதப்பல் தான் மிகப் பெரிய சொதப்பல்.

காதல் எவ்வளவு சிரமமோ, அதை விட அதனைச் சொல்வது அல்லது வெளிப்படுத்துவது. ஏன் இப்படி இவ்வளவு சிக்கல்கள்? காதல் மலர்வதற்கு எந்தவித காரண காரியங்களும் தேவை இல்லை. இப்படி ஏதும் காரண காரியங்களுக்காய் காதலித்தால் அதனை புராஜக்ட் என்று அழைக்கலாம் என்று ஓகே ஓகே (ஒரு காதல் ஒரு கண்ணாடி) படம் சொல்லித் தருகிறது. கவுக்கிறது என்ற கொச்சையான சமாச்சாரத்தை மங்களகரமாய் மொழி பெயர்த்து Project என்கிறார்கள்.

காதலை காதலியிடம் தெரிவிப்பது எவ்வளவு சிரமமோ, அதே சிரமம் பெற்றோர்களிடம் அவர்கள் தம் காதலையும் தெரிவிப்பது. எனக்கு அந்த மீடியேட்டர் வேலை வந்து சேர்ந்தது. (புரோக்கர் என்பதை எப்படியெல்லாம் மாத்திச் சொன்னாலும்… அதை சொல்லாமல் இருக்க முடிவதில்லை). பையனின் அப்பாவிடம் நைஸாக ஆரம்பித்தேன்.

உங்க பையனுக்கு ஏதோ லவ் மேட்டர் இருக்கிறதா அரசல் புரசலா பேசிக்கிறாங்ககளே??
கிடைத்த பதில்: “ஆமா…. அவர்களை நம்பி நாம் இருக்கும் போது அவர்கள் நம் அனுமதி கேப்பாங்க என்று எதிர் பாப்பதே தப்பு”. என்ன நிதர்ஷனமான யதார்த்தமான அப்பா…!!!.
சில ஆண்டுகள் கழிந்தன. அதே அப்பாவிடம் கேட்டேன்: மருமகள் எப்படி?

“இந்த மாதிரி மக கெடைக்க ஆண்டவன் அருள் இருந்திருக்கனும்.. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஊரிலிருந்து ஒரே ஜாதி ஒரே மதம் பாத்து பெண் எடுத்திருந்தாலும் கூட இப்படி அமைந்திருக்குமா தெரியவில்லை..” இப்படிப் போனது அவர் பதில். இது ஜெயித்த காதல் கதை.

இன்னொரு வீட்டில் நடந்த கதை. தங்கையின் கல்யாணத்திற்கு, அண்ணன் தன் கல்லூரித் தோழர் தோழிபடை பட்டாளத்துடன் களம் இறங்கி இருக்கிறார். ஒரு தோழி மட்டும் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு பார்த்து வருகிறாள். கல்யாணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் அதை கவனிக்கத் தவறவே இல்லை. விடைபெறும் நேரம் வந்தது. தோழி சாதாரனமாய் ஆசி வாங்க அம்மா காலில் விழுந்தாள். நம்மாளு சொன்ன கடைசி வார்த்தை, “அம்மா இது தாம்மா நம்ம மாட்டுப் பொண்ணு..”. ஏதாவது மறுப்பு சொல்ல முடியுமா? அம்மாவாலும்… யாராலுமே!!!

அதற்கு நேர் மாறாக நாள் நட்சத்திரம் பற்பல பொருத்தம் என்று தடபுடலாக நடந்த ஒரு கல்யாணம். இரண்டு வருடத்திற்குள், தன் IT துறை கணவன் அடிப்பதாய் மனைவி புகார் சொன்ன போது நொந்து போனார்கள் பெற்றோர். “பேசாமல் நீயும் யாரையாவது லவ் பண்ணித் தொலெச்சிருக்கலாமே” என்ற அளவுக்கு வந்து விட்டது நெலமை.

ஜெயித்த காதல் ஒரு பக்கம். தோற்ற காதல் பல. தன் காதலி ஒரு கிளியோபாட்ரா என்று சொக்கி விழுந்தவன் அவன். ஓரிரு வருடங்களில் அந்த காதலி 90 கிலோவை நெருங்க, காதலன் முகம் தொங்கிப் போனது.

ஆட்டத்தோடு பாட்டுப் பாடும் ஜாலியான ஆசாமி இன்னொருவன். காதல் அதில் தான் தொடக்கம். கல்யாணத்தின் பின் ஆட்டமும் இல்லை. பாட்டும் காணோம். மனுஷன் நொந்து போய் குடியில் திளைக்க, வருடங்கள் உருண்டன. தன் கணவர் உயிரோடு இருந்து தொல்லை தருவதை விட இறப்பதே மேல் என்றது அந்தக் காதலி. விதவை ஆவதை விரும்பி ஏற்ற அந்த மாஜி காதலி..ஆமா.. காதல் ஏன் இப்படி ஆச்சி??

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நண்பர்கள் பெரும்பாலும் தங்களுக்குள் மச்சி (மச்சான்) என்றோ, மாப்பிள்ளை என்றோ அழைத்துக் கொள்வர். உண்மையில், நண்பர்களுக்குள் அப்படி உறவு அமைவதும் உண்டு. என் கல்யாணத்திற்கு வந்த ரெண்டு நண்பர்கள் ஒன்றாய் பஸ்ஸில் போகும் போதே இப்படி தங்கை பற்றிச் சொல்ல விரைவில் எனக்கு கல்யாணப் பத்திரிக்கை வந்தது.

சரீ..இதெல்லாம் சரி… தலைப்பு என்ன? காதலில் ஜெயிப்பது எப்படி? சொல்லிட்டு காதல் கத்தரிக்காய் மட்டும் சொல்லிட்டு வந்தா எப்படி? அது ஒண்ணுமில்லை சார். கிரேஸி மோகனின் ஒரு நாடகம் DVD ல் பாத்தேன். “கிரேஸி கிஷ்கிந்தா” அதிலும் ராமாயணம் வந்தது.. கிரேஸியின் டிராமாவில் மட்டும் தான் இராமாயணம் வருமா? நம்ம போஸ்டிங்லெயும் வருமே!!!

காதலித்துப் பார் வருஷங்கள் நிமிஷமாகும். நிமிடங்கள் வருஷங்களாகும். இது வைரமுத்துவின் பார்முலா. காதலில் ஜெயிக்க கம்பர் ஒரு பார்முலா சொல்கிறார். எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க..

காதலில் விழுந்தவர்களின் கண்களுக்கு காதலி மட்டும் தான் காதலியாய்த் தெரிவாராம். மற்றவரெல்லாம் ஆண்கள் மாதிரி தெரிய வேண்டுமாம். என்ன நம்ப மாட்டீங்களா..?? இதோ சற்றே விரிவாய்..

இராவணனுக்கு சீதை மேல் காதல். (அடுத்தவன் பொண்டாட்டி மேலே வருவது மோகம் தானே?? காதலா என்ற கேள்விக்கு பதிலை வேறு என்றைக்காவது வைத்துக் கொள்வோம்.) நாகர்கள் வழும் பாதாள லோகம் தொடங்கி பிரம்மன் வாழும் சத்தியலோகம் வரைக்கும் அதன் இடைப்பட்ட எந்த இடத்திலும் மயில் மாதிரி பிகருங்க இருந்தாலும் அவர்கள் எல்லாம் காதல் கொண்டவர்களின் கண்களுக்கு ஆடவராகத் தெரிந்தார்களாம்.

சரி இப்பொ Test வைக்கலாமா?? உங்க காதலியை மனசுலெ நெனைச்சுக்குங்க.. தமண்ணா முதல் திவ்யாபாலன் ஹன்சிகா அமலாபால் இப்படி யாரைப் பாத்தாலும் ஆண்களாக காட்சி தர வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் காதலில் ஜெயிக்கிறீங்க…

அப்படியே அந்த குஷி மூடில் பாட்டையும் படிச்சிருங்க…:

ஏகநாயகம் தேவியை எதிர்த்ததன் பின்னை
நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன் வைகும்
மாக மால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில்
தோகை மாதர்கள் மைந்தரின் தோன்றினர் சுற்ற.

அப்புறம் வரட்டா..???

[இந்தப் பதிவிற்கு புதிய நடிகைகளின் பெயர் தேவை என்று சொன்னவுடன், இது போதுமா? என்று பெயர் தந்து உதவிய மதுரை மைந்தன் ருப்பா கேசவ ராஜாவுக்கு என் சிறப்பு நன்றிகள்].

6 thoughts on “காதலில் ஜெயிப்பது எப்படி?

  1. Vontivillu Chittanandam says:

    Very good.Keep it up.

    • Tamil Nenjan says:

      தொடர்ந்து என் எழுத்தை ஊக்குவிக்கும் உங்களுக்கு உளம் நிறை நன்றிகள்.

  2. Asokn says:

    TNK..

    What about your Ist love,current love etc.
    Why u hv not written about betterhalf love on you…

    Asokan
    I think I gave u lot of massala.

    • Tamil Nenjan says:

      குடும்பத்திலெ கொழப்பத்தெ உண்டாக்காதே.. அசோகா…

      மனைவியுடன் காதல் மோதல் தான் அங்கங்கே பொத்தாம் பொதுவா வந்திட்டிருக்கே.. படிக்கலையா??

  3. Sankaranarayanan says:

    அந்த படம் ஒரு கல் ஒரு கண்ணாடி.காதல் அல்ல. உங்க போஸ்ட் எல்லாம் நல்லாவே இருக்கு.(வெளுத்து கட்டுங்க.) அடுத்த Blog சப்ஜெக்ட் கிடச்சுருச்சி என நினைக்கிறேன் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s