சில பாட்டுகளை மேடைக் கச்சேரிகளில் நாம் கேக்க முடியாது. பாடும்படி கேக்கவும் முடியாது அவர்களும் பாடமாட்டார்கள்.. அவர்களால் பாடவும் முடியாது.. இப்படியான பாடல்கள் லிஸ்ட் இதோ..
சோதனை மேல் சோதனை.. போதுமடா சாமி
நான் ஒரு ராசியில்லாத ராஜா
என் கதை முடியும் நேரமிது…
தூக்கம் என் கண்களை தழுவட்டுமே..
இதில் கடைசி பாடல் மட்டும் அடிக்கடி இரவு நேரங்களில் இரவின் மடியில், நடுநிசி என்றும் அப்பப்பொ போடுவார்கள்.. Mid Night Masala வராத காலங்களில் இந்தப் பாட்டுக்கு இருந்த மவுசு தனி தான்.. இருந்த மவுசு என்ன?? இன்னும் இருக்கிறது.
தூக்கம் என்பது ஒரு தற்காலிக மரணம் தான். ஆனால் அது மட்டும் சரியா இல்லை என்றால், எவ்வளவு சிக்கல்கள் வரும் என்பதை.. தூக்கம் வராமல் தவிப்பவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்..
எனக்கும் தூக்கத்துக்கும் ரொம்ம நெருங்கிய சம்பந்தம். எங்கே போனாலும் நல்லா தூங்கிடுவேன்.. எவ்வளவோ முக்கியமான விவாதங்கள் சூடு பறக்க நடந்திட்டு இருக்கும். எனக்கு தூக்கம் வருதே என்று நைஸா தூங்கப் போயிடுவேன்.
டீவிகளில் அடிக்கடி பார்க்கலாம். பட்டிமன்ற நிகழ்சிகளில் தங்கள் முகம், டிவியில் வரும் என்ற ஒரே காரணத்துக்காய் போனவர்கள் அடிக்கடி கொட்டாவி விடுவதை (எடிட்டிங்க் செய்ததையும் மீறி வரும்).
கணக்குப் பாடத்தில் தூங்கும் மாணவர்கள் இருப்பார்கள். ஆக ஒரு விஷயத்தில் மனது லயிக்கவில்லை என்றாலும் தூக்கம் வரும். யோகா போன்ற வகுப்புகளில் ஒரு விஷயத்தில் மனதை லயிக்க வைத்தாலும் தூக்கம் வரும்.
ஆனா காதல் விஷயத்தில் அது உல்டா.. இங்கே லயிச்சா முதலில் காலியாவது பர்ஸ்.. அப்புறம் உங்க தூக்கம்.. சொல்றதெ சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம்.
உலகம் முழுவதும் நடத்தப்பட்ட சர்வேயில் பிரேயர் நடக்கும் இடங்களில் தான் மக்கள் அதிகம் தூங்குகிறார்களாம். அது சரி… நாம அதை இப்படி ஏன் எடுத்துக்கக் கூடாது? உலகம் முழுவதிலும் பிரேயருக்கு வரும் மக்கள் தான், தாங்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக உணர்கிறார்கள்.
ரசித்து லயித்து தூங்கின வருஷங்கள்.., கோவையின் குளிரான… இதமான அந்த CIT இல் பொறியியல் படித்த அந்த நான்கு வருஷங்கள் தான். இரவு 12 மணிக்கு விழித்து படிக்க ஏதுவாய் ஹாஸ்டல் மெஸ்ஸில் தேநீர் ஏற்பாடாகி இருக்கும். டீ குடித்து ரெண்டு மணி நேரமாவது படிப்பாய்ங்க பசங்க.. ஆனா டீ குடிச்சிட்டு வந்து சொகமா தூங்கும் ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன்.
எப்பொ ஒரு மனுஷனுக்கு தூக்கம் வரும்? நல்ல டைல்ஸ் போட்ட பெட் ரூம்.. ஏசி எல்லாம் இருக்கு.. பஞ்சு மெத்தை? அதுக்கென்ன பஞ்சம்?? எல்லாம் இருந்தா தூக்கம் வந்திடுமா என்ன??? குழந்தைகள் நல்லா தூங்குகிறார்கள். அவர்கள் தாயின் அரவணைப்பில் பாதுகாப்பாய் இருப்பதாய் உணர்ந்து நிம்மதியாய் தூங்குகிறார்கள். அப்புறம் குழந்தைங்க ஹார்ட் டிஸ்க் காலியா இருக்கு. நமக்கு??? எத்த்னை GB இருந்தாலும் பத்த மாட்டேங்குது. எல்லாம் அதிகப்படியான தேவையில்லாத குப்பைகள்.
சிலருக்கு… இல்லாத பொல்லாத எண்ணம் எல்லாம் தூக்கத்தை கெடுக்க தூங்குறப்பத்தான் ஞாபகத்துக்கே வந்து தொலைக்கும் தூக்கத்தை. உப்பு சப்பில்லாத விஷயங்கள்.. அட அவன் நம்மலெ பாக்காமெப் போயியோட்டானே… இது போதும் நம்ம தூக்கம் போக. பக்கத்து வீட்டுக்காரர் அல்லது காரி ஏதாவது வாங்கினதை காட்டினாலும் தூக்கம் போகும்… சில சமயம் அப்படி காட்டாது போனாலும் தூகம் போவும். அட.. எல்லாத்தையும் வந்து காட்டுவா..இதெ ஏன் காட்டாமெப் போனா… அப்பவும் தூக்க்கம் தான் அவுட்..
காலேஜ் காலத்தில், நாங்களும் முழிப்போம்லெ என்று ஒரு மஹாசிவராத்திரி அன்று பந்தயம் போட்டு எப்படியோ முழு இரவு முழித்து (ரம்மி ஆட்டம் எல்லாம் ஆடி) முடித்தேன். ஆனால் அதுக்கும் சேத்து அடுத்த நாள் சோறு தண்ணி கூட இல்லாமெ (தூக்கத்தை எதுக்கு கெடுத்துக்கணும் என்கிற நல்லெண்ணத்தில் தான்) முழு நாள் & இரவும் சேர்த்து தூங்கியது என மலரும் தூக்க நினைவுகள்.
5 மணிக்கே பொல பொலவென்று சூரியன் உதிக்கும் அந்தமான் தீவுகள்… அதிகாலை 6 மணிக்கு பணிகள் துவங்கி விடும் சூழல்.. என் தூக்கமும் எல்லாரையும் போல் போயே போச்சு… ம்…
அப்படியும் ஊர் பக்கம் வரும் போது, என்னை மறந்து தூக்கம் வரும். அரக்கோணம் மைத்துனி வீட்டில்,.. கும்பகோணத்தில் ஒரு நண்பரின் குடும்பத்தில்..நானும் ஒரு அங்கம் போல்..சுகமாய் தூங்குவேன்.. என்ன உங்களுக்கும் தூக்கம் வருதா??
மிகப் பெரிய தூக்கம் தூங்குவதாய் Mr Bean ஐக் காட்டுகிறார்கள் Pogo டீவிக்காரர்கள். மிஸ்டர்பீன் தூங்கிக் கொண்டிருப்பார். அலாரம் அடிக்கும். தலையணையை காதில் பொத்திப் படுப்பார். அடுத்து இன்னொரு அலாரம்.. அதை பக்கத்தில் இருக்கும் தண்ணியில் போடுவார்..(அதுக்காகவே மொத நாளே.. தயாரா வச்சிருந்த மாதிரி..) அப்புறம் தண்ணி எல்லாம் காலில் பீச்சி அடிக்கும். அதை கால் விரலில் அழுத்தி நிப்பாட்டி தூங்குவார்… முகத்திலும் தண்ணி அடிக்க.. எப்படியோ எழுந்து விடுவார்…
இந்தக் கதை எல்லாம் நம்ம கிட்டெ ஆவாது மவனே.. என்ன ஆனாலும் நானு எந்திரிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் கேரக்டர்கள் சமீப காலமாய் படத்திலெ வருது. கட்டிலோடு ரோட்டுக்கு வரவழைப்பர் அவர்களை.. எழுப்பப் பயந்து தான்.
இவங்க எல்லாத்துக்கும் சூப்பர்மேன் தூங்குறதில் இருக்கார். அவரை நாம எப்படி விட முடியும்? அவர் தான் திருவாளர் மாண்புமிகு தூக்க சக்கரவர்த்தி கும்பகர்ணன் அவர்கள். கம்பர் அவரை நமக்கு காட்டும் முதொ இடம் அனுமன் பாக்குற இடம் தான். அனுமன் பாக்கும் போதும் கு.க தூங்கிட்டுத்தான் இருந்தார். அப்பவுமா??? எப்படி இருந்ததாம் அந்த சீன்.. வாங்களேன்.. அனுமன் Skype இல் அழைக்கிறார். அப்படியே Live ஆ பாக்கலாமே.
கும்பகர்ணன் தூக்கம் தான் உலகப் பிரசித்தம். (அந்த பீன்ஸ் எல்லாம்.. இத்துனுகான்டு) சாதாரணமாவே தூங்கும் மனுஷன்.. சாரி… அரக்கன். தேவ மகளிர் காலை பிடிச்சி வுட்டா எப்புடி??? அவங்க முகம் சந்திரனா பிரகாசிக்குதாம். பக்கத்திலெ சுவத்திலெ கல்லு,,, அதுவும் சந்திர காந்தக் கல். அது அந்த மகளிரைப் பாத்து ரூட் விடுது. தண்ணியை அவங்க முகத்திலெ அடிக்குது.. அது கும்பகர்ணன் முகத்திலெ தெறிக்குது.. அப்பவும் அவர் தூங்கிக் கொண்டிருந்தார்…
அட ஸ்கைப் கனெக்சன் கட் ஆயிடுத்தே… ஓகே.. அப்புறம் பாக்கலாம் மத்ததை… இப்பொ பாட்டை பாப்போம்:
வானவர் மகளிர் கால் வருட மா மதி
ஆன்னம் கண்ட மன்டபத்துள் ஆய் கதிர்க்
கால்நகு காந்தம் மீக் கான்ற காமர் நீர்த்
தூநீற நறுந் துளி முகத்தில் தூற்றவே..
சரி.. இப்பொ போய் நல்லா தூங்குங்க..
How about the sleep at 7th floor in Waterford Apartment?
ஆஹா…அது ஒரு ஆனந்த பவன் அல்லவா?? அதுவும்
அந்த ஊஞ்சல் தான் ப்ளஸ் பாயிண்ட். லிட்டில் அந்தமான்
வீட்டின் முன்னும் ஓர் ஊஞ்சல்.. கற்பனை குதிரை அதில்
ஆடினால் ஓடி வரும்.
எல்லாம் எழுத ஆசை தான். ஏற்கனவே பெரிசான
போஸ்ட் என்று சிலவற்றை வெட்ட வேண்டி வந்தது..
இப்பத்தானே அனுமன் உள்ளே நுழைகிறான்.. இன்னும்
எவ்வளவோ இருக்கே…
தூக்கம் தூக்கமா வருது.good night.
எதுக்காக எழுதினேனோ அது நிறைவேறிய சந்தோஷம்.
தூக்கம் வரணுமா இதை இனி படிக்கலாமே..
Nice post.. Keep rocking…
நன்றி நண்பரே…