இரண்டாம் கொலெவெறி…


அது என்ன மாயமோ மந்திரமோ தெரியலை… இந்த கொலெவெறி பாட்டு ஒரு தடவை கேட்டாலே போதும்.. அப்படியே முனுமுனுக்க வைக்குது.. பாக்கப்போனா… இல்லை.. இல்லை.. கேக்கப்போனா.. ஏதோ சிம்பிளான பாட்டு தானே என்று Y dis kolaveri kolaveri kolaveri kolaveri di என்று முனுமுனுத்தேன்..

என் பையன் நக்கீரன் ஆகி விட்டான். மூனு தடவெ தான் கொலெவெறி வரும். நீங்க என்ன நாலாவதா சேத்துப் பாட்றீங்க… அட.. ஆமா.. அந்த ரெண்டாம் கொலை வெறியெ தூக்கிப்….. படிச்சா தான் மூனு வெறியில் அந்தப் பாட்டு அடங்கும்.

இந்தப் பாட்டில் எத்தனை தடவை கொலைவெறி வருது என்பதை யாராவது எண்ணிப் பாத்தாங்களா?? அல்லது இப்படி யாராவது என்னியாவது பாத்தாங்களா?? பாத்து வைங்க யார் கண்டா?? கோன் பனேகா குரோர்பதி கேள்வியாகவும் வரலாம்..

கொலை பற்றிய ஆய்வு செய்யும் ஒருவர் என்னிடம் வந்தார். (ஏன் இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் என்னையெ பாக்க வரனும்??) இந்த கொலெவெறி பாட்டுக்குப் பிறகு கொலைகள் அதிகமாகும் என்றார்.. நான் நடுவில் புகுந்து..அட இது வடிவேல் டயலாக்.. டம்மி பீஸ், அவனா நீ, பன்னாடை, கொலெவெறி, வடை பொச்சே, மறுபடியுமா??, ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க…இப்படி தத்துவங்களை சொல்லி சமாளிச்சேன்.. என்ன செய்ய தமிழன் மானம் கப்பல் ஏறி போயிடக்கூடாதுன்னு தான்.

ஆமா சமீபத்திய இண்டியா டுடே ஹிந்தி பதிப்பில், ஒரு பக்கத்துக்கு கொலெவறிப் புராணம் பாடி வைத்திருக்கிறது.. சரி அது மீடியாக்கள் பாடும் பாடு. படுத்தும் பாட்டு. நாம நம்ம பாட்டுக்கு பாட்டுகள் பாப்போமே!!

பாட்டுக்கள் பல விதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்.. இது பலருக்குத் தெரியும். கொஞ்சம் உள்ளே போய்ப் பாக்கலாமே???
கேள்வி கேட்டு பதில் வாங்கும் பாட்டுக்கள், அந்தக் காலத்தில் மிகப் பிரபலம். வின்னுக்கு மேலாடை எது? என்று கேட்கும் சுரதா பாடல் செமெ ஹிட். ஆண்களில்லாத உலகத்திலெ பெண்களினாலே என்ன பயன்? இப்படியும் கேள்வி கேட்டு பாட்டில் பதில் தேடுவது பழைய கலை.

ஒரு பொண்ணைப் பத்தி பையன் பாடுவதும், ஒரு பையனைப் பத்தி பொண்ணு பாடுவதுமாய் பாட்டு வரும். அப்புறம் கிளைமாக்ஸில் அது நீதான் என்று முடியும் வகையான பாடல்கள் கடுப்பேற்றும் பாடல்கள்.. ஆனா கடைசியில் சுபம் கியாரெண்டி.

மெட்டு பாடினால் பாடல் பாடும் வகையும், போட்டி பாடலின் அடுத்த வகை.. கமல் ஸ்ரீதேவி பாடும், சிப்பி இருக்குது முத்துமிருக்குது என்பது அந்த வகை.

புதுக் கவிதையை போட்டு வாங்குவதாய் பாட்டும் வந்தது.
சமீபத்தில் விதண்டாவாத வகையாய், எது சொன்னாலும், என்ன சொன்னியா என்பது போல்… ஆனா கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமெ பாடும் பாட்டு, ஒரு புது ரகம்.. இதெய் இப்பொ செத்தெ விரிவா பாக்கலாமே…

காதலனுக்கு, காதலி தலை முடியைப் பாத்தா.. கரிகாலன் கருகிய கால் ஞாபகம் வருதாம்; சொன்னா நாம ஒத்துக்குவோமா?? இல்லெ..இல்லை.. அது தாஜ் மஹால் நிழல் இது காதலியின் பதில்.

சரி இப்படியே காதலன் சொன்னதுக்கு கொஞ்சமும் சளைக்காமெ சொன்ன அடுத்தடுத்த வீம்பான, ஆனா ஆனந்தமான கற்பனை வர்ணனை வரிகள்.

காதலன்: சேவலேட செவப்புக் கொண்டெ தான் உன் உதடு.
காதலி: No…No… அது மந்திரிச்ச தகடு.

கழுத்து வலம்புரி சங்கு மாதிரி ஹீரோவுக்கு தெரிஞ்சா.. ஹீரோயினுக்கு அது கண்ணதாசன் எழுத்து மாதிரி இருக்காம்… ஜாலியா இருக்கு இல்லை.. இல்லையா?? டன்டன டக்கன டன்டன டக்கன பாட்டை உத்து கேட்டல் உங்களுக்கே அந்த திரில் புரியும்.
இன்னும் ஒரு வித்தியாசமான ரகம்.. கடைசியில் எதையாவது சொல்லி முடிப்பது. உதாரணமா.. எவ அவ?? என்னைக் கணக்கு பன்னேன்டா???.. இப்படி

கணக்கு என்பது பிரச்சினை.. தீர்ப்பது என்பது விடை வெளியே கொண்டு வருவது. கணக்கு பண்றது என்றால்… முட்டி மோதி தலைய ஒடைச்சிக்கிறதா… அல்லது கணக்கோட மூழ்கி இருப்பதா??
இதை அப்படியே ஓரம் கட்டி வைத்து இதே மாதிரி ஒரு சிச்சுவேஷனுக்கு கம்பர் என்ன சொல்றார் என்று பாத்துட்டு வரலாமே..

அரக்கர் Vs அரக்கியர் – உயிருக்குயிராய் இருப்பவர்கள்; அரக்கர்கள் கள் சாப்பிடுகிறார்கள் (கவனிக்கவும்… அரக்கர் தான் சரக்கடிப்பாய்ங்க… நான் சொல்லலை… கம்பர்; நமக்கு எதுக்கு அந்த வம்பு?)அனா யார் கலக்கிக் கொடுத்தா தெரியுமா?? (இப்பொ எல்லா படத்திலும் சந்தானம் தான்.. அப்பொ கம்ப காலத்தில்??) அரக்கியர்.. அட.. பெண்களுக்கு எல்லா உரிமைகளும் அப்பொவே குடுத்திருக்காங்களோ??

வேறு என்ன சாப்பிட்டாய்ங்க?? இசைத் தேனையும் சேர்த்து.. அடடே அப்புறம்??

லிப் டு லிப் கிஸ் (நாகரீகமா சொன்னா செவ்வாயின் அமுதம் பருகினர்).

சொன்ன பேச்செல்லாம் கேட்டனர். காலில் விழுந்து வணங்கினர்.. திட்டினாலும் கேட்டு சும்மா இருந்தாகலாம்.

ஒரு வேளை… என்னைக் கணக்குப் பன்னேன்டாடாடாடா என்று சொல்லி இருப்பாங்களோ?? யார் கண்டா?? பாத்த அனுமனுக்குத் தான் வெளிச்சம்.

தேறல் மாந்தினர் தேன் இசை மாந்தினர் செவ்வாய்
ஊறல் மாந்தினர் இன் உரை மாந்தினர் ஊடல்
கூறல் மாந்தினர் அனையவர்த் தொழுது அவர் கோபத்து
ஆறல் மாந்தினர் அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கியர்.

அது சரி.. நீங்க யார் கிட்டேயாவது நல்லா வாங்கிக் கட்டிகிட்டது உண்டா??

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s