அரண்டவன் கண்ணுக்கு…


வெளிப்பார்வைக்கு சாதுவாய் இருப்பவர்கள் வீட்டிலும் அப்படியே இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. வீட்டில் ராமன் வெளியில் கிருஷ்ணன் என்று சில லீலை செய்பவர்களும் இருக்கிறார்கள்.

அலுவலகத்தில் சாந்த சொரூபியாய் இருந்து கொண்டு, வீட்டிற்கு வந்தால் மூக்குக்கு மேலும், தொட்டதுக்கெல்லாம் அடி என்று விளாசுபவர்களும் இருக்காக..

பிறர் முன்னர் தான் இன்னார் என்று நல்லதாகவோ கெட்டதாகவோ ஒரு இமேஜ் உருவாக்க வேண்டியது.. பின்னர் அதைக் காப்பாற்ற சிரமப் பட வேண்டியது..இதுவே பலரின் வாழ்க்கை தத்துவம்.

என் நண்பர் ஒரு பார்ட்டிக்கு போனார்… நல்ல வெளிநாட்டு சரக்கை ஒரு பிடி பிடிக்கலாம் என்று இருந்தாராம். ஆனா..நீங்க எல்லாம் எங்கே தண்ணி அடிக்கப் போறீங்க??.. இந்தாங்க..என்று ஒரு ஜுஸ் கிளாஸ் கையில் கிடைத்ததாம்… அட..உலகம் இன்னுமா என்னையெ நல்லவன்னு நெனைச்சிட்டு இருக்கு?? என்று அவரும் நல்ல புள்ளையா ஜூஸ் குடிச்சிட்டு வந்திட்டாராம்.. இது எப்படி இருக்கு??

மாமியார் ஒடைச்சா மண்குடம்…அதே மருமகள் ஒடைச்சா.. பொன்குடம் என்று கேள்விப்பட்டிருப்பீங்க…. அந்தமானில் ஒரு மாமியார் ஊரிலிருந்து வந்தால் போதும்… அந்த மருமகளின் நண்பிகள் அனைவரும் அந்த மாமியாரை அம்மா என்று அழைத்து விடுவார்கள்… எனக்கு அது விளங்கலை ஆரம்பத்தில்.. நண்பியின் அண்ணாவை அண்ணா என்றும், தங்கையை தங்கை என்றும் அழைப்பவர்கள்… அத்தையை மட்டும் அம்மா என்கிறார்களே..ஏன்??

அத்தை உறவு கொஞ்சம் சிக்கலானது..அம்மா..அன்பு மயமானது.. இதை விட்டால் வேறு என்ன காரணம் பெரிசா இருக்கப் போவுது.

மரத்துக்கும் பேய்க்கும் சம்பந்தம் இருக்கிறதா யாரோ நல்லா கதை கட்டி விட்டாங்க… புளிய மரம்… மரத்து உச்சி…என்ன சம்பந்தமோ… பேய்க்கு வாழ்க்கைப்பட்டா புளிய மரத்தில் தொங்கித்தானே ஆகனும்…இப்படி வேறு…

டி என் கே, அந்த பேயும் புருஷன் கூட சன்டை போடும் தெரியுமா??

யாரது?? திரும்பினா… அட..நம்ம கம்பர்.. வாலை சுருட்டி ஐயா என்ன சொல்றாருன்னு கேப்போமே…

இலங்கைக்கு அனுமன் போகும் மெய்டன் விசிட். பாக்குறது எல்லாம் வித்தியாசமா தெரியுது.

அங்கே அரக்க மகளிர் சரக்கு அடிச்சி கெடக்கிராய்ங்க… இடை எக்கச்சக்கமா இருக்காம்…ஆகாயம் மாதிரி.. ஒரு ஷேப்பில் இல்லாமெ..

தண்ணி அடிக்கிற அடியில் கண்ணே சிவந்து போச்சாம்… ஓரம் வேறு கருப்பா அந்த மை வேறு… வாய் வெளிறிப் போச்சாம்… புருவம் வளைஞ்சே போச்சாம்… துடித்தன வாயும் கண்ணும்..

மதிமுகம்…புதுமுகமா ஆச்சாம்… எங்கே பாத்தாக அதை?? அதே கள்ளில் முகம் பாத்தாக..

அட..யாரு இந்த சக்களத்தி…?? அப்படியே புருஷன் கூட போய் சன்டை போட்டாகளாம்…

அனுமன் அமைதியா ஜாலியா அதை ரசித்தபடி நடக்கிறார்.

உள்ளுடை மயக்கால் உண் கண் சிவந்து வாய் வெண்மை ஊறி
துள் இடைப் புருவம் கோட்டித் துடிப்ப வேர் பொடிப்ப தூய
வெள்ளிடை மருங்குலார் தம் மதி முகம் வேறு ஒன்று ஆகிக்
கள்ளிடைத் தோன்ற நோக்கிக் கணவரைல் கனல்கின்றாரை.

நாம ஏதோ சீரியல் பாக்கிற மாதிரி இல்லை??

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s