ரொம்பவும் நெருங்கிய நட்பு வட்டாரம் வீட்டில் வந்தாலோ அல்லது தெருவில் சந்தித்தாலோ..வாங்க அப்படியே இட்லி கிட்லி சாப்பிட்டே பேசுவோம்..என்று அழைப்போம்..
ஆமா..இந்த இட்லி ஓகே…அந்த கிட்லி என்றால் எனன்?? (மதுரெ இட்லிக்குத்தானேடா பேமஸு…கிட்லிக்குமா..? என்று வடிவேலு ஸ்டைலில் புலம்பலாம் போல இருக்கா??)
உபசரிப்புகள் பலவிதம்… காப்பி சாப்பிடலாமா?? என்னத்துக்கு வீட்டிலேயே சாப்பிட்டு வந்திருப்பீங்களே.. என்று கேட்பது கல்யாணப் பரிசு தங்கவேலு ரகம்.
காப்பித் தண்ணி சாப்பிடலாமா என்ற கேள்வியும் சில இடங்களில் வரும். காபி தண்ணியாத்தான் இருக்கும் என்பதின் முன் ஜாக்கிரதை முத்தண்ணா ரகம் அது.
ஒரு வேலையா ஒருத்தரைப் பாக்க அந்தமான் அரசு அலுவலகம் போனேன். டீ சாப்பிடலாமா என்று கேட்பதற்குள் இன்னொரு வேண்டாத விருந்தாளி உள்ளே வந்தார். (நீ உள்ளே போனா விருந்தாளி..அடுத்தவன் உள்ளே வந்தா, வேண்டாத விருந்தளியா??…ம்…மௌனம் சம்மதம் தானே). சக ஊழியரை அழைத்து, சாப் லோகோங்கோ.. ஜரா சாய் பிலானா என்றார்…
பேச்சு தொடர்ந்தது.. ஆனால் சாயா வந்த பாடில்லை.. வெறுத்துப் போன அந்த வேண்டாத விருந்தாளி எழுந்தார்..அந்த அதிகாரியோ… இந்த ஊழியர் அப்படித்தான்… பத்து பேருக்கு ஒரே ஆள் தான்..அதனால் உங்களுக்கு டீ தர முடியவில்லை என்பதை வழிந்தார்.
மறுபடியும் ஊழியரை அழைத்தார்..நல்லா செமையா திட்டப் போகிறார் என்று தான் நினைத்தேன்.. ரொம்ப கூலா…சாப்கோ சாய் பிலானா என்றார். இரண்டே நிமிடத்தின் திடம் மணம் எல்லாம் சேந்து (ஜோதிகா இல்லாமல்) வந்தது.
என்ன நடக்குது இங்கே?? யோசித்த போது தான் “ஜரா” என்ற ஹிந்தி வார்த்தைக்கு பின்னால் இப்படி ஒரு போட்டுக் கொடுக்கும் குணம் இருப்பது தெரிந்தது.
தரகர்கள் சொல்லும் பொதுவான வார்த்தைகள் – கை நிறைய சம்பளம். பொண்ணு ரதி மாதிரி இருப்பா…என்பார்கள். (இந்தப் இழவுப் பொய்யைத்தான் எல்லார்ட்டேயும் சொல்றேமே – என்று விவேக் தரகராக ஒரு படத்தில் அப்ரூவர் ஆகி இருப்பார்).
ரதி மாதிரி என்று சொன்னாலே, ரதி தான் உள்ளதில் அழகு..இந்தொ பொண்ணு அது மாதிரி இப்படித்தானே அர்த்தம். கொரங்கு மூஞ்சி என்றால் அப்பொ என்ன அர்த்தம்?? குரங்கே பெட்டர் என்று அர்த்தம்.
இப்பொ அப்படியே கம்ப ராமாயணத்துகு வருவோம். நம்மாளுக ஹீரோயின் வயிற்றைக் காட்டாமெ… தொப்புளை ஃபோகஸ் செய்து அதில், பம்பரம் உட்டாங்க.. ஆம்லெட் போட்டாங்க… அத்தோட உட்டாங்க… அதில் ரசனை போய் விரசம் மிஞ்ச்சினது.
நம்ம கம்பர் தான் ரசிப்பதில் ஆஸ்கார் தரம். அவர் ஒரு ஹீரோயினோட வயிறு பத்தி எழுதனும். ஆலம இலை, சித்திரப் பலகை, வெள்ளித்தட்டு, கண்ணாடி இதுமாதிரி இருக்கும் என்று சொல்ல வந்தவர் அப்புறம் அந்த லாஜிக் யோசிச்சி….. No…No…. இவை எல்லாம் ஹீரோயின் வயிறு மாதிரி இருக்கு என்று சொல்லலாம் என்று சீதையின் வயிறை வர்ணிக்கிறார் கம்பர்.
ஆல் இலை படிவம் தீட்டும் ஐய நுண்பலகை நொய்ய
பால் நிறத் தட்டம் வட்டக் கண்ணாடி பலவும் இன்ன
போலும் என்று உரைத்த போதும் புனைந்துரை பொதுமை பார்க்கின்
ஏலும் என்று இசைக்கின் ஏலா இது வயிற்று இயற்கை என்னும்.
இனி ஆல் இலை, கண்ணாடி பாத்தா உங்ககுக்கு என்ன ஞாபகம் வரணும்???
gud…
Thanks for the response.