செம்மொழியான தமிழ்மொழி என்ற பாடலுக்கு அடுத்து இப்போது எல்லோராலும் முனுமுனுக்க வைக்கப்படும் பாடல் இந்த ஆத்தி..ஆத்தி தான்.
நம் மக்களுக்கு கலர் என்றாலே ஒரு மயக்கம்… கிறக்கம் தான். அதுவும் செக்கச்செவேல்னு ஒரு பிகர் மாட்டாதான்னு லோ..லோன்னு அலைவானுங்க.. அப்புறமா அந்த வெளுப்பைப் பாத்து என்ன கலரு தெரியுமா???
சுண்டுனா ரத்தம் வரும்.. இப்படி டயலாக் வேறு.(எம்
ஜி ஆர் முதல் சோணியா வரை எல்லாம் கலரும் வியப்பு தான்)
செவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது
சமீபத்திய வடிவேலானந்தாவின் பொன்மொழி..
இது இப்படி இருக்க… எப்புடி இம்புட்டு கலரா இருக்காக? என்ற ஆய்வின் விளைவு தான் சமீபத்திய ஆத்தி… ஆத்தி…
பாடல்.
“வெள்ளாவி வச்சுன்னை வெளுத்தாகளா??
வெயிலுக்கு காட்டாம இருந்தாகளா??”
இவைகள் கவிஞர் வியப்பின் உச்சங்கள்.
வெள்ளாவி என்பது பழுப்பான வேட்டியினை சலவைக்கு போட்டு வெள்ளையாக்கி வருவதைத் தான் பெரும்பாலும் குறிப்பிடுவர். ஆனால் துணி வெந்து போய் வருவது
தான் அந்த வெண்மையின் ரகசியம். (ஒரு சில வாஷிங்க் மிஷின்கள் கூட இப்படி வெந்நீர் சலவை செய்யும் வசதியை வைத்துள்ளது)
வெள்ளாவியில் வேகவைப்பது ஒரு பழங்காலத்து தண்டனை முறை என்று தான் இது வரை நினைத்து
வந்தேன். இந்தப் பாட்டு கேட்ட பிறகு அந்த நினைப்பை
மாத்திகிட்டேன்..
அதே வெள்ளாவியில் தண்டனை என்று தேவாரம் அருளிய அருளாளரை நிக்க வச்சாகளாம்.
அது அப்போ அவருக்கு அபஸ்வரம் இல்லாத வீணை, மாலை இள வெயில், வண்டின் ரீங்காரம் இருக்கும்
பொய்கை இப்படி எல்லாம் இருந்ததாம்.
அன்மையில் நடிகரும் இயக்குநருமான சேரன் அவர்கள்
அந்தமான் வந்திருந்த போது இங்கு ரம்யமான இயறகையோடு இயைந்த வாழ்வை சிலாகித்துப்
பேசினார்.
இந்த ஊரில் மூன்று நாளாய் இருக்கும் நானே கொஞ்சம் கலரா ஆய்ட்ட மாதிரி தெரியுது என்றார். பயங்கர கருப்பாய் இருந்த பக்கத்து சீட்டில் இர்ந்த நபரை பாத்து,
நீங்க இப்பவே இப்படி இருக்கீக.!!! முன்னாடி ஊர்ல
எப்பிடி இருந்திருப்பீங்க்க!!! என்று வெறுப்பேத்தினார்.
ஆக மொத்தத்தில் வெயிலுக்கு காட்டாம இருந்தா வெளுக்குமோ??
இந்தியர்களின் நிறத்தை கேலி செய்த ஆங்கிலேயருக்கு பதிலடி தந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பத்தி படிச்சிருக்கீங்களா??
“இறைவன் மூன்று கேக் செய்தார். ஒன்று சுத்தமாய் கருகி
விட்டது. அவர்கள் கருப்பர்கள். இன்னொரு கேக் வேகாமலேயே எடுக்கப்பட்டது. வெள்ளையர்கள் அவர்கள். மூன்றாவது தான் பக்குவமாய் சமைக்கப்பட்ட சுவையான கேக். இந்தியர்கள் நிறம் அது.”
பாட்டை ரசிப்போம்..
நிறங்களையும் ரசிப்போம்…
ஆனால் பேதம் பாராட்டாமல் இருக்க பழகுவோம்.
Dr. Radhakrishanan’s comment is nice
Thanks for the response.