அன்பு நெஞ்சங்களே…
இடை என்பதில் ஒரு கவர்ச்ச்ச்சி இருக்கத்தான் செய்கிறது. இடை பத்தி
கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் இடைத்தரகர்கள் பத்தி எழுத வந்திருக்கேன்.
இடைத்தர்கர் என்றதுமே, என்னடா இது… இவனும் 3ஜி சமாச்சாரம் ஏதோ எழுத வந்துட்டானேன்னு நெனைச்சிப் பயந்துராதீங்க… நானு அந்த டாபிக்குக்கு
கொஞ்சம் indirect ஆ வர்றேன்.
தரகர்களின் தேவை எதுக்கு?
ஒரு சேவை தேவைப்படும் நபருக்கும் அது வழங்கும் இடத்திற்கும் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்பவர்கள் தான் தரகர்கள். அவர்கள் இடையில்
இருப்பதால் இடைத்தரகர்கள். அம்புட்டுத்தான்.
விளைவிக்கும் விவசாயிக்கு 50 ரூபாய் கிடைக்கும். ஆனால் மார்க்கெட்டில் ரூ 300க்கு அந்த பொருள் விற்கும். அப்பொ 250 ரூபாய்க்குச் சொந்தக்காரர்கள் அந்த
இடைத்தரகர்கள்.
புரோக்கர் மாமா பூஜாரி Lobbiest Facilitator Contractor இப்படி செய்யும் தொழில்
வைத்து பெயர்களும் மாறுபடும்.
(இந்தப் பில்டப்புக்கு அப்புறம் கண்டிப்பா ஒன்னோட… இலக்கிய அறிவை எடுத்து
உடுவியே…சொல்லு..சொல்லு.. அப்பத்தானே இந்தப் போஸ்ட் சீக்கிரம் முடியும்!!)
இந்த நீனா ராடியா போன்ற இடைதரகர்கள் அந்தக் காலத்திலும் இருந்திருப்பாங்களா?…
யோசிச்சிகிட்டே கொஞ்சம் கப்பல் ஏறுவோம்.
போர்ட்பிளையர் முதல் லிட்டில் அந்தமான் வரை கப்பல் பயணம். சுமார் 9 மணி நேர பயணம். ஜாலியா படிக்க ரெண்டு பெரிய்ய புக் எடுத்துட்டு கிட்டுக் கிளம்பினேன். ரெண்டு பெட் இருக்கும் கேபினில் இன்னொருவர் வந்து சேர்ந்தார்.
இங்கிருக்கும் ஒரு மிருக வைத்தியர் (கன்சூமர் கோர்ட், கம்ப்ளைண்ட் என்று ஏதும்
செய்யாத மிருகங்களுக்கு வைத்தியம் செய்வதில் சுகம் என்றார்)..
ரொம்ப போரில்லை.. 9 மணி நேரம் …
அப்படி ஒன்னுமில்லை… நான் புக் வச்சிருக்கேன். – இது நான்.
என்ன புக்கு அது..இவ்வளவு பெரிஸ்ஸ்சா? (கேட்டவர் மலையாளி மிருக வைத்தியர்)
கம்ப ராமாயணம். பாடல்கள் மட்டும் ஒரு புக்.. அர்த்தம் தெரிய இன்னொரு புக் என்றேன்.
டாக்டர் ஒரு மாதிரி பாத்தார்… இதெல்லாம் சுத்தமா ஒரு எடத்திலெ இருந்து தானே
படிப்பாங்க. இப்படி ஜாலியா படிக்கிற புக்கா இந்த ராமயணம்??
அவருக்கு நான் சொல்லிய பதில் தான் உங்கள் முன் சொல்ல வருகிறேன்..
ஜாலியான சமாச்சாரங்கள் நிறைய இருக்கு இந்த கம்ப ராமாயணத்தில். இடைத்தரகர்கள் இல்லை என்றால் ராமன் இல்லை. ராமன் இல்லையெனில் ராமாயணம் ஏது??
தசரதனுக்கு குழந்தயே இல்லை. என்ன செய்றதுன்னு கைனக்காலஜிஸ்ட்களிடம்
பேசினார். எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் இந்த டெஸ்ட் செய்யின்னு சொல்ற மாதிரி ஒரு யாகம் செய்யனும்னு ஒரு சின்னதா பிரஸ்கிரிப்ஷன்.
நம்ம டாக்டர்கள் தெரிஞ்ச லேபில் ரெக்கமண்ட் பண்ற மாதிரி ஒரு வில்லங்கமான
முனிவரை வச்சி யாகம் செய்யனும்னு வம்பில் மாட்டி விட்டார்.
அந்த முனியோ சொஞ்சம் அப்படி இப்படி ஆளு.. ஆனா அவரோட அப்பாவோ,
மக்களை விலங்கு மாதிரி நெனைக்கிற ஆசாமி..பயங்கர முனி.. இந்த நேரத்லெ தான் நம்ம ராஜாவுக்கு (தசரதனுக்கு) ஓர் இடைத்தரகர் தேவைப்பட்டார்.
அது ஸ்பெட்ரம் மேட்டரை விட கொஞ்சம் பெரிய்ய மேட்டர் என்கிறதினாலெ கொஞ்ச பேரை பிடிச்சாரு நம்ம தசரதன். யாரு அந்த இடைத்தரகர் தெரியுமா…
ஸ்…ஸ்.. யார்கிட்டேயும் சொல்லாதீங்க.. கொஞ்ச்சும் பெண்கள் சிலர்.
அவங்க எப்படி இருந்தாங்க தெரியுமா??
பிரைட்டான நெத்தி… கருப்பா நீளமா கண்ணுங்க… ரத்தச் சிவப்பா லிப்ஸ்
இருக்கும் வாய்.. முத்துப் பல்லுக்காரிகள்.. மென்மையான இரு மார்புகள்..
இப்படியெல்லாம் இருக்கும் விலைமகளிர்…
இவங்களை அனுப்பி கலைக்கோட்டு முனிவனை கலக்கி கூட்டிவந்து யாகம் நடத்தி … ராமன் பிறந்து… இப்படி வந்தது ராமாயணம்…
டாக்டர் தூங்க ஆரம்பிச்சிட்டார்… நீங்க இன்னும் தூங்கலையா?? பாட்டு கேட்டு தூங்குங்க…
“சோதி நுதல் கரு நெடுங் கண் துவர்
இதழ் வாய் தரள நகை துணை மென்
கொங்கை மாதர் எழுந்து யாம் ஏகி
அருந்தவனைக் கொணர்ந்தும் என வணக்கம் செய்தார்.”
என்ன மக்களே… இது தப்பு இல்லையா??
இல்லவே இல்லை… நாலு பேத்துக்கு நல்லது நடக்கனும்னா எதுவுமே
தப்பில்லை.
நீங்க என்ன சொல்றீங்க???