அகநானூறு வைத்து எக்சல் கற்போம் (பாடம் – 3)


என்ன இது மொட்டைத் தலைக்கும் முழங்காலுகும் ஏதோ நானு முடிச்சு போட்றதா நினைக்கலாம்..

இன்னெக்கி அகநானூறு பக்கம் கொஞ்சம் பாத்தேன். முதல் பாடலே தூக்கியடித்து விட்டது. மொத்த பாடல்கள் நானூறு. அவை அணைத்தும் ஓர் ஒழுங்கு முறையில் தொகுக்கப் பட்டுள்ளன.

பண்டைய தமிழக நிலங்களை ஐந்தாக பிரித்து அதற்கு குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று பெயரும் இட்டனர்.

நானூறு பாடலகளிலும் ஏதோ ஒரு நிலம் சம்பந்தப் பட்டு இருக்கும். அதிலும் ஒரு நேர்த்தி இருக்கும். எப்படி ???

1 3 5 11 13 15 21 23 25 இப்படியான ஒற்றைப்படை எண்கள் உள்ள பாடல்கள் பாலை நிலப் பாடல்கள்.

4 14 24 இப்படி 4ல் முடியும் எண்கள் கொண்டு உள்ள பாடல்கள் முல்லை நிலப் பாடல்கள்

மருத நிலப் பாடலகள் 6ல் முடியும் (அதாவது 6 16 26 இப்படி)

10 20 30 இது போன்ற எண்களின் பாடல்கள் நெய்தல் நிலத்து மேட்டர்கள்.

2 அல்லது 8 இவைகளில் முடியும் பாடல்கள் குறிஞ்சிப் பாடல்களாகவே இருக்கும். (42 62 332 இப்படியும் 18 178 258 398 இப்படி எண் உள்ள பாடல்கள்.

என்ன தலை சுத்துதா??

சரி எக்செலில் A1 செல்லில் 1 முதல் 400 வரை உள்ள நம்பரில் ஏதாவது ஒரு நம்பரை அடித்தால் A2 ல் எந்த நிலப் பாடல் என்று வரவழைக்க முடியுமா??

இதில் என்ன பிரயோஜனம்?? என்று கேட்பவர்களுக்கு…

ஒழுகுப்படம் (Flow Chart) போட கத்துக்கலாம்.

உதாரணம்:

முதல் படி:
ஒற்றைப்படை எண்ணா?

ஆம்: பாலை நிலம்

இல்லை: இரண்டாம் படி செல்க.

இரண்டாம் படி:
நான்கில் முடிகிறதா?

ஆம்: முல்லை நிலம்

இல்லை: மூன்றாம் படி செல்க..

இப்படியே போகலாம்.

அடுத்தபடியாக..

A1 செல்லில் 1 முதல் 400 வரை மட்டுமே தரும் Validation தெரிஞ்ச்சிக்கலாம். (அடுத்த பாடத்தில் இதை தனியே பாக்கலாம்)

அப்புறம்..  பல Functions வருது இதிலெ..

 IF
ISODD
RIGHT

நீங்களே டிரை பன்னுங்க…

முடியலையா.. இதோ பார்முலா..A2 ல் போடுங்க..

=IF(ISODD(A1)=TRUE,”Paalai”,IF(RIGHT(A1,1)=”4″,”Mullai”,IF(RIGHT(A1,1)=”6″,”Marudham”,IF(RIGHT(A1,1)=”0″,”Neidhal”,”Kurinji”))))

பழந்தமிழரிடம் எத்தனை ஒழுங்கு இருந்திருக்கு?? அதை வச்சி நாம எக்செலாவது ஒழுங்கா கத்துக்குவோம்.

ஹலோ.. எங்கே போறீங்க..??? பாட்டு இல்லாத போஸ்டிங்கா?? பாட்டையும் பாத்துட்டு போங்க…

ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை ஓதாது
நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை – அன்றியே
ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு
கூறா தவைகுறிஞ்சிக் கூற்று.

என்ன இந்தப் பாடம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா??

2 thoughts on “அகநானூறு வைத்து எக்சல் கற்போம் (பாடம் – 3)

  1. karthik says:

    nanru
    vazhga tamizh !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s