ஏதாவது முக்கியமான வேலையா நீங்க வீட்டைவிட்டு கெளம்பும் போது இப்படி யாராவது உங்களை “எங்கே போறீங்க?- ன்னு கேட்டு வம்பு செய்தால்… உங்களுக்கு
ஏகமாய் கோபம் வந்திருக்கும்.
நீங்கள் தீவிர பெரியார் பக்தராக இருந்தால் உங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை தான்.
சரி இந்த சகுனம் பாக்குறது சரிதானா?? இதில் என்ன சங்கதி இருக்கு? கொஞ்சம் யோசிச்சுப் பாத்தேன். [எதுக்குன்னு கேக்கிறீகளா?? சும்மா உங்களுக்கு ஒரு போஸ்டிங்க்
எழுதத்தான்].
முதலில் இப்படி “எங்கே போறீங்க?- ன்னு கேட்டு சங்கடம் செய்பவர்கள் யார்? என்று அலசலாம்.
1. உங்கள் வீட்டில் இருப்பவர்கள்;
2. பக்கத்து வீடு எதிர் வீடு இப்படி எங்காவது இருப்பவர்கள்;
3. திடீரென்று வரும் உங்கள் விசுவாசிகள்.
இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னன்னா, இவர்கள் மூவருமே உங்கள் நல்லதுக்கு பாடுபடுபவர்கள். உங்கள் நல விரும்பிகள். ஒரு போதும் உங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரோ அல்லது உங்கள் எதிரியோ உங்களை வழிமறிச்சி எங்கே போறீங்கன்னு உங்கள் உயிரை கண்டிப்பா எடுக்க மாட்டாக..
அடுத்து ஏன் இந்த கேள்வி வருது?? சில காரணங்கள்; அதையும் தான் பட்டியல் போடலாமே…
1.நீங்க ஏதோ ரகசியமான வேலை செய்யப் போறீங்க.. (அது சின்ன வீடு சம்பந்தமாகவும் இருக்கலாம்.. அலலது ஐ ஏ எஸ் பரீட்சை எழுதுவதாகவும் இருக்கலாம்.)
2.நீங்க போகப் போற இடம் செய்யப் போற வேலை பத்தி கேக்கிறவங்களுக்கு தெரியல்லை.
3.உங்கள் அவசரம்… பரபரப்பு… டிப்டாப் டிரஸ் சொல்லுது.. ஏதோ எங்கோ போகப் போறீங்கன்னு..
ஆக மொத்தத்தில் உங்கள் நல விரும்பிகளுக்குக் கூட தெரியாமல் நீங்கள் ஏதோ செய்ய நினைக்க, அந்த குட்டு “எங்கே போறீங்க?” என்ற கேள்விக்கு கோபம் தான் பதிலாய் வெடிக்கிறது.
என் முடிவு : நம் முன்னோர்கள் எதையும் எல்லாரிடமும் கலந்து பேசி செய்வதை வலியிறுத்தத்தான் இந்த சாத்திரம் வந்திருக்கும் என்பது.
நீதி:
1.எதையும் மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் கலந்து பேசி செய்ங்க.
2.அப்படி முடியாட்டி இனிமேல் யாராவது “எங்கே போறீங்க?”ன்னு கேட்டா… போற காரியம் விளங்கின மாதிரி தான்னு கோபப் படாதீங்க…
அதுசரி… ஹலோ…இப்போ எங்கே போறீங்க???