இப்போதெல்லாம் நம் காதுகளில் அடிக்கடி விழும் வாசகங்கள் என்ன தெரியுமா???
… வரும் காலம் எப்படி இருக்குமோ!!!
….குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ!!!
இதற்கு ஒரு பதில் கிடைத்தது.
லிட்டில் அந்தமனில் பட்டர்ஃபிளை என்ற ஒரு குழந்தைகள் முன்னேற்ற தொண்டு நிறுவனம் பள்ளி குழந்தகளுக்கான பெயிண்டிங் & மாடல்களின் கன்காட்சி நடத்தியது.
Engineering Drawing Subject- குறைவான் மதிப்பெண் வாங்கிய நான் அந்த டிராயிங் கன்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த போது, கை கொஞ்சம் நடுங்கியது.
என் ஜி ஓ மேலும் குழந்தைகள் மேலும் நம்பிக்கையின்றித்தான் உள்ளே நுழைந்தேன்..கிட்டத்தட்ட 80க்கும் மேலான ஓவியங்கள் 15க்கும் அதிகமான மாடல்கள் என்று பசங்கள் அசத்திவிட்டனர்.
ஓவியங்களை ஒரு பார்வை பார்த்ததில், தண்ணி அடிக்கும் அப்பா, அம்மாவை அடிக்கும் அப்பா, ஆறுதல் சொல்லும் அம்மா, அப்பா அம்மா போடும் சண்டையில் படிக்க முடியாமல் தவிப்பு, குழந்தகளின் உரிமை, பாலியல் வன்மம், தூங்கும் வாத்தியார்… இப்படி தம்மை பாதித்த பல….
மாடலகள் மட்டும் குறைவா என்ன?? அரசு சார்பில் ஒரு மாடல் தயாரிக்க விசாரித்ததில் ஒரு லட்சம் ஆகும் என்றனர். இங்கே.. பசங்க பூந்து கலக்கி இருந்தாங்க.
இங்கே சின்ன பசங்க கையில் கிடைத்த சரக்கை வைத்து ஜெயில், காலனி, எரிமலை, பூகம்பம்…இப்படியும் கலக்கி இருந்தனர்.
விழா நிறைவில் குட்டி கதையுடன் முடித்தேன்:
சத்ரபதி சிவாஜியை கொல்ல ஒரு இளைஞன் வந்தானாம். இடையே மாட்டிக் கொண்டான். சிவாஜி அந்த இளைஞனை அழைத்து ஏன் என்னை கொல்ல வந்தாய் என்று கேட்டாராம்.
இளைஞனோ, தான் வறுமையில் வாடுவதாகவும் தன் தாயாரின் மருத்துவ
செலவுக்கும் பணம் தேவைப்பட்டதால் அதனை சிவாஜியின் எதிரிகள் பயன் படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்தான்.
அந்த இளைஞனுக்கு மரண தண்டனை உறுதி ஆகிவிட்டது.
இளைஞன் சாவதற்கு முன் தன் தாயிடம் ஆசி வாங்கி வர ஆசைப்பட்டான்.
மந்திரிமார்கள் அனுமதி மறுக்க, அவனை நம்பி தனியே சிவாஜி அனுப்பி வைத்தாராம்.
நம்பிக்கை பலன் தந்தது. தாயிடம் ஆசி வாங்கி உடனே திரும்பி வந்தான்.
மரண தண்டனை கேன்சல் ஆகி தளபதி ஆனான்..
இதே போல்… உங்கள் மேல் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்…
நீங்கள் முன்னேற தயாரா??? என்று கேட்டேன்..
தயார் ஹை… என்று ஒருமித்த குரலில் பதில் வந்தது.
நம்பிக்கை சுடர் தெரிகிறது.. உங்களுக்கு???