கோபமான ரோஜாவே…


ஈரமான ரோஜாவேன்னு தான் கேள்விப்பட்டிருப்பீங்க.. அது என்ன கோபமான ரோஜா?? அது ஒன்னுமில்லை…

ரோஜா – ஈரம் = கோபமான ரோஜா.

அது சரி.. கோபம் பத்தி நம்ம சுகி சிவம் கருத்து பாக்கலாமா??

சுகி சிவம் தனது வீட்டில் நெளிந்து போன அலிமினியத் தட்டை ஃபிரேம் போட்டு வரவேற்பு அறையில் வைத்துள்ளாராம். தன் கோபம் ஒரு தட்டை என்ன பாடு படுத்தியுள்ளது என்று தினம் ஞாபகப்படுத்தவாம்.

இப்பொ அவர் “எப்படி இருந்த நானு இப்படி ஆயிட்டேன்”னூ நினைச்சிக்குவாரோ??!!!

சுகி சிவம் கோவத்தை அடக்கும் கலையினை கற்றுத்தருகிறார்.

ஒரு சம்பவம் சொல்கிறார். ஒரு தொழிலதிபர் அழுதபடி வந்தாராம்.

தொழிலதிபர்: என் நண்பர் ஒருவர் என் தாயை விபசாரி என்ற பொருள் படும்படி திட்டி விட்டார்.எனக்கு கோவம் தலைக்கு ஏறிவிட்டது.

சுகி சிவம்: சரி உங்கள் தாய் விபசாரியா??

தொழிலதிபர்: என்ன நீங்களும் இப்படி கேட்கிறீர்கள்???

சுகி சிவம்: அப்பொ.. அது பொய்…அதில் நீங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்? அவள் விபசாரியாய் இருக்கும் பட்சத்தில், உங்கள் நண்பர் உண்மை தானே பேசுகிறார்.. நீங்கள் ஏன் கோபப்பட வேண்டும்??

ஆக உங்களுக்கு ஆறிவே இல்லை என்று யாராவது திட்டினால், உங்களுக்கு கோபம் வருது… ஏன்?? … நீங்கள் உங்களுக்கு அறிவு இருப்பதாய் இரு இமேஜ்… கற்பனையில் வாழ்கிறீர்கள்… யாராவது அந்த நினைப்பிற்கு எதிராய் பேசும் போது உங்களுக்கு கோபம் வருது… ஆமா…எனக்கு உண்மையில் அறிவு இருக்கிறதா? என்ற கேள்வியை உள் நோக்கி கேட்க ஆரம்பித்தால் கோபம் தவிர்க்கலாம்.

ம்… நெனைப்புத்தான் பொழைப்பைக் கெடுக்கும் என்பார்கள்… அது இது தானோ!!!

என்னோட சரக்கும் எழுதலைன்னா எனக்கும் தூக்கம் வராதே!!

நீங்கள் கோபப்பட வேண்டுமா?? ஒரு நிமிடம் யோசியுங்கள்… அது அடுத்தவர்களை காயப்படுத்தும் திட்டம் தானே?? அது சாத்தியப் படுகிறதா??

இந்த நாயி இப்படித்தான்…லொன்னு விழும் – என்ற நினைப்பில் உங்களிடம் ஒருவர் திட்டு வாங்கினால், அதில் தோற்றவர் நீங்கள் தான்.

கோபப்படும் போது சந்தோஷமா, ஜாலியா இருக்கா ?? (சாடிஸ்ட் ஜாதி)..நீங்கள் தாராளமா கோபப்படலாம்..

எல்லாராலும் கோபப் பட முடியாது. ஒரு வார காலமாய் வீட்டில் வாஷிங்க் மிஷின் வேலை செய்யலை. வாங்கிய புதிது தான். டீலரோ இந்தா அந்தா என்றதில் ஒரு வாரம் ஆகி விட்டது. கோபமா ரென்டு வார்த்தை கத்திட்டு வாங்கண்ணு மனைவி சொல்ல… வீரமா கெளம்பீட்டேய்யா… கிளம்பிட்டேய்யா…

என்ன தான் நெனைச்சிட்டீங்க?? என்று Starting நல்லா தான் போயிட்டு இருந்தது. நடுவுல… ஒரு பிட்டு போட்டேன்…

உங்க வீட்லெ வாஷிங்க் மிஷின் ரிப்பேர் ஆகட்டும்… விவாகரத்தே ஆயிருக்கும்.. தெரியுமா??

கடைகாரர் சந்தோஷமா அப்படியா??? என்று சிரித்து விட்டார். ரொம்ப எதிர் பாத்த செய்தியா இருக்குமோ?? (10 நிமிடத்தில் வாஷிங்க் மிஷின் சரியானது வேறு கதை)

உங்களுக்கு உறுப்படியா கோபப் படக்கூடத் தெரியலையேன்னு என் மனைவியின் பார்வை சொல்லியது. ஆமா இதுக்கெல்லாம் டிரைனிங்க் தருவாங்களா என்ன??

கோபமானால் கை கால் நடுங்குகிறதா?? சத்தம் போடுகிறீர்களா?? வியர்க்கிறதா??? இதயம் படபட்க்கிறதா??…சாமி… உங்களுக்கு எதுக்கு இந்த கோபமெல்லாம்??? போயி ஜாலியா வலைபூ படிங்க…

உங்களை கோபமாக்க சிலர் முயற்சிப்பர்… அந்த வலையில் விழுந்து நீங்கள் கோபமானால் அவர்கள் வெற்றி பெற்றவர்கள் ஆகி விடுவர். நீங்கள் பொறுமை காட்டினால் அவர்கள் தோற்றுப் போவார்கள்.

இப்பொ சொல்லுங்க… நீங்க ஜெயிக்கனுமா???
மற்றவர்கள் ஜெயிக்கனுமா??

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s