இசை ஒன்று மட்டும் தான் எல்லா தேசத்திற்கும் பொதுவான மொழி. என்ன… நம்ப கஷ்டமா இருக்கா??
ஹவா..ஹவா…முஜ்கோ பதாதே.. என்ற பாப் பாடல் அந்தக் காலத்தில் மிகப் பிரபலம். இந்தப் பாடல் பிறந்த இடம் பாகிஸ்தான். ஆனால் இந்தியா அதனை ஆதரித்தது. இதே போல் தேரே அங்குனே மே பாடலுக்கு ஆடிய அமிதாப்புக்கு தங்க முள் கிரீடம் வைத்து அழகு பார்த்து மகிழ்ந்தது அதே பாகிஸ்தான்.
ஆனால் அந்த ஹவா ஹவா பாடலை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்த பெருமை கவுண்டமனி செந்தில் ஜோடிக்குத்தான் சேரும்.
ஒரு படத்தில் அந்த பாடலை பாடிக்கிட்டே செந்தில் தூக்கில் தொங்குவது போல் ஒரு சீன்… அதை பாத்து நம்ம கவுண்டமனி வாத்தியார் போல கதவெல்லாம் ஒடெச்சிட்டு உள்ளே போனா… ஜாலியா நம்மாளு ஹவா ஹவான்னு பாடிட்டு இருப்பாரு.
சமீபத்திய சன் டிவி நிகழ்சியில் சுகி சிவம் அவர்கள், குடிப்பவர்களை தற்காலிக தற்கொலை செய்து கொள்வவர்கள் என்றார்.
சாதாரண விஷயமான வீட்டில் திட்டுதல், சந்தேகப் படுதல், என்னைப் பத்தி மத்தவங்க என்ன நெனைப்பாங்க? எனற நினைப்புகள் தான் இந்த தற்கொலை எண்ணங்களுக்கு காரணம் என்கின்றனர் உள்வியல் வல்லுநர்கள்.
பரமக்குடி பள்ளியில் என் குரு மணி சார் அவர்கள் மனிதர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை விளக்கிச் சொன்னார்.
ரகம் 1: ஒரு வாத்தியார் கிளாசில் கேக்கிறார். இன்னெக்கி என்ன பாடம் நடத்தனும். நானு முந்திரிக் கொட்டை மாதிரி…. சார் 34 ம் பக்கம் சார் என்கிறேன். வாத்தியாருக்கு அதெக் கேட்டவுடன் செமெ கடுப்பு. நான் வாத்தியா நீ வாத்தியா?? கிளாசிக்கு வர்ர மனுஷனுக்கு எந்த பக்கம் பாடம் எடுக்கனும்னு கூடவா தெரியாமெ இருக்கும்?? என்ன நெனெச்சி கிட்டு இருக்கீங்க???
இப்படி எரிந்து விழுபவர் முதல் ரகம்.
ரகம் 2: சார்… உங்களை நேத்து பெரிய கடை பஜார்லெ பாத்தேன் சார். உங்க ரெண்டு பொண்ணுங்களும் சூப்பரா இருந்தாங்க சார்…
வாத்தியார்: அப்படியா?? ரொம்ப சந்தோஷம்… ஹி..ஹி..ஹி…
எல்லாம் சரி தான்… ஆனா எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு தான். நேத்து என் கூட வந்தது என் மனைவியும் பொண்ணும்..
புத்தகத்தோட பக்கம் சொன்ன பையன் மேல் பாயும் வாத்தியார் ஒரு ரகம். பொண்ணையும் பொண்டாட்டியையும் பாத்து ஜொள்ளு விட்டதை கண்டுக்காத வாத்தியார் ஒரு ரகம்.
இதில் முதல் ரகம் தான் தற்கொலைக்குத் தயாராய் இருக்கும் ரகம். எது எப்பொ எப்படி நடந்தாலும் ஒரே டென்ஷனாய் இருப்பவர்கள்… பிரச்சினைகளைப் பாத்து ஓடுபவர்கள்…
அந்தமான் தீவுகளில் தற்கொலைகள் அதிகம் என்று புள்ளி விவரம் சொல்கிறது. ஒரு வேளை தங்கள் மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ள நல்ல உள்ளம் கிடைக்காதது தான் அதற்கான காரணமாய் இருக்குமோ?? (ஒரு வேளை Face Book வந்த பிறகு அது குறைய வாய்ப்பு உள்ளதோ??)
இதை எழுதி வரும் இதே நாளில் முதல் பருவத்தேர்வில் குறைவான மார்க் வாங்கிய காரணம் காட்டி ஒரு மாணவன் உயிர் விட்டிருக்கிறான். என்னவொ பிரம்மன் அந்த தேர்வில் வெற்றியடையத்தான் இவனை அவதாரம் எடுக்க வைத்திருப்பதாக நினைப்பு..
பிரம்மன் ஏமாந்தான் என்று பாடலாம் போல் இருக்கு.
கம்பர் உடன் ஆஜர் ஆகிறார் சம்மன் இல்லாமல் (எங்கிட்டெ வர ஏதும் அவருக்கு தேவை இல்லை)
கம்பன் ஏமாந்தான் தானே பாட்டு…இது என்ன மாத்தி பிரம்மன் போட்டு பாடறே??
ஒண்ணும் இல்லை தலைவரே… தற்கொலை பத்தி ஒரு சின்ன அலசல்.. உங்க கிட்டெ ஏதாவது சரக்கு இருந்தா தரலாமே???
கம்பர் ஆரம்பித்தார்: நானு நேரடியா சொல்லலை… உனக்கு தோதா.. ஒரு பாட்டு இருக்கு பிடி… (குடுத்து மறைந்து போனார்)
தற்கொலையில் ஒரு வித்தியாசமான் வித்தையை கம்பர் காட்டுவதை மட்டும் சொல்லாம விட்டா.. அவரே நம்மை ஒதைக்க வருவாரு…
இடம் வாலி ரெண்டாம் தடவையாக போருக்குப் போகும் இடம். தாரை வழி மறிக்கிறாள். ஹீரோ ராமன் கூட் இருந்து கொல்ல வந்திருப்பதை மோப்பம் பிடித்து சொல்கிறாள் (பின்னெ ஏன் நம்ம மேல் நாட்டவர் கூட Why women can’t read maps என்று சொல்கிறார்கள்??)
வாலிக்கு செமெ கோபம். ரொம்ப தப்பு. அப்படி செய்றதினாலெ ராமனுக்கு என்ன லாபம்?? அப்படி செய்தா தர்மம் தற்கொலை செஞ்சிகிறதுக்குச் சமம் என்கிறான் (எப்படியோ நமக்கு தற்கொலை டாபிக் முடிக்க பாட்டு கெடைச்சாச்சி)
இருமையும் நோக்குறும் இயல்பினார்க்கு இது
பெருமையோ இங்கு இதில் பெறுவது எங்கொலோ
அருமையின் நின்று உயிர் அளிக்கும் ஆறுடைத்
தர்மமே தவிர்க்குமோ தன்னைத் தான் அரோ
மீண்டும் சந்திக்கலாம்.