அன்பு நெஞ்சங்களே..
ஆறு மாசமா சம்பளமே ஒழுங்கா தர்ரதில்லை என்று புலம்பும் தொழிளார்களைப் பாத்திருப்பீங்க..
சம்பளம் வராமெ Labour Court க்கு போய் அல்லாடிப் பெறும் நிலையும் வருது சில உழைப்பாளிகளுக்கு.
கொஞ்சம் சொந்தக் கதைக்கு வருகிறேன். (சொந்தக் கதை என்றவுடன் சோகக்கதை என்பதும் தானே வந்து விடுகிறதே!!)
வேறு தொழில்களில் எப்படியோ, கைத்தறி நெசவுத் தொழிலைப் பொறுத்தவரை முதலில் கூலியுடன் அனைத்து மூலப் பொருள்களும் கொடுத்து விடுவார்கள்.. சேலை
நெய்து தந்து முதலாளியிடம் அப்புறம் தர வேண்டும்.
பிரச்சினை எங்கே என்றால், எல்லா சேலையும் தயார் செய்ய 15 நாட்கள் பிடிக்கும். ஆனால்.. வாங்கிய கூலி ஒரு வாரத்தில் தீர்ந்து விடும். நம்ம படிக்கும் செலவுகள் அந்த கூலி தீர்ந்த நாட்களில் தான் வந்து சேரும்…கையைக் கடிக்கும்… இப்படியெல்லாம் படிச்சி…
சரி… சரி… சொல்ல வந்த மேட்டருக்கு வருவோம்…
இந்த பிரி பெய்டு கூலி தரும் முறை பத்தி கொஞ்சம் புராண காலத்தைப் பாக்கலாமே…
அதுக்கு நீங்க எந்த டிக்கெட்டும் எடுக்காம ஜாலியா ஒரு ரவுண்டு பாண்டிய மன்னன் ஆட்சி செய்யும் மதுரைக்கு வரணும்…. வந்துட்டீங்களா…??
இப்பவும் எப்போவாவது வெள்ளம் வந்து கரை புரண்டு ஓடும் வைகை, அன்றும் அப்படித்தான் ஓடியது.. லோக்கல் PWD Dept மக்களால் சமாளிக்க முடியாமல் பாரா டுரூப் ஆள் இறக்கிற மாதிரி… வீட்டுக்கு ஒரு ஆள் வந்து கரை கட்டனும்னு ராசா உத்திரவு போட்டார்.
ராசா உத்திரவு யாராவது தட்ட முடியுமா என்ன???
அப்பொ வந்தி என்ற ஒரு பிட்டு விற்கும் முதலாளியம்மா இருந்தாங்க. (சிறு தொழில் செய்யும் முதலாளி). அவங்களுக்கு சொந்தக்காரங்க யாரும் இல்லெ.. எல்லாரும் பிசியா இருக்கிறதினாலே லேபர் வந்திக்கு கிடைக்கலே..
அப்பொ ஒரு கூலியாள் வர்ராரு…
அக்ரிமென்ட் ஆகுது. வேலைக்கு நான் ரெடி.. கூலி ரெடியா.. உதிர்ந்த பிட்டு தான் கூலி… இந்தா வாங்கிக்க..
பிட்டுக்கு மண் சுமந்த அவன்… வேறு யாருமல்ல.. சிவன்… அவன்
ஆரம்பித்தது தான் இந்த பிரி பெய்ட் கூலி..
பின் குறிப்பு:
1. உதிரிப் புட்டு தான் கூலி என்று அக்ரீமென்ட் ஆன பிறகு எல்லா புட்டும் உதிரியாக உதிர்ந்தே வந்தனவாம். சிவனின் வாயில் போக எல்லா புட்டுகளும் ஆசைப்பட்டு இப்படி ஆனதாம்..
2. இன்றும் பிட்டுத் திருநாள் வருடத்திற்கு ஒரு நாள் மதுரையில் நடக்குது. கோவையிலும் நடக்கிறதாம்.
3. பிட்டுக்கு மண்… விடுங்க.. இப்பொ, துட்டுக்கு மண் எடுத்து வைகை சோகமா இருப்பது சோகம் தான்.
இன்னும் வரும்…
அப்டியே புட்டு புட்டு வைக்கிறீங்களே !