அந்தக் காலத்திலெ, நாங்கள்ல்லாம்..


அந்தக் காலத்திலெ, நாங்கள்ல்லாம்..என்றும், அப்பொ எல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா? என்றும் கேட்கும் பெருசுகளை ரொம்பவவே பாத்திருப்பீங்க.

எனகக்கும் 50 வயது நெருங்குவதால் அந்தக் கூட்டணியில் நானும் சேந்திட்டேன். நானும் என் பங்குக்கு ஆரம்பித்தேன்….

அந்தக் காலத்து ஹோலி மாதிரி இலலையே!!

அந்தமானில் 20 வருடங்களுக்கு முன்பு வரை ஹோலி அன்று வீட்டை விட்டு வெளியில் வநதால் முகத்தில் கலரின் சுவடு தெரியாமல்   வீடுதிரும்ப முடியது.  இன்றோ வெள்ளையயும் சுளையுமா சட்டை போட்டடும் ஹோலி அனறு திரிய முடிகிறது.

முன்பெல்லாம் வீட்டிற்கு கும்பல் கும்பலல்களாக வந்து கலர் அடித்து விட்டுப் போவார்கள். இப்போதோ கீழ் போர்சன் ஆள் கூட வரவில்லை.

விசாரித்த போது தான் தெரிந்தது காலம் மாறிய போது யார் யார் வீட்டிற்கு போவது என்ற குழப்பம் காரணமாய் இருப்பது தெரிந்தது. (ஆமா.. நீ ஏன் ஒரு ரவுண்ட் போகலைங்க்கிற கேள்விக்கு என்னிடமும் பதில் இல்லை)

அரசு வேலைகளிலும் யார் பெரியவர்? யார் யரைப் பாக்க வரனும் இதில் கூட தாமதங்கள் ஆகும்.

இந்த சிக்கல் முழுதும் Decision Making, Art of Communication, Relatioship தொடர்பானவைகள்.

எல்லத்துக்கும் ஒரு நல்ல தீர்வு சொல்லட்டுமா??

ஒரு சிக்கல் அல்லது பிரச்சினைக்கு முடிவு வேணுமா?

அந்த பிரச்சனையை அலசும் நல்ல ஓர் ஆளைப் பிடிங்க.. அவரோட ரேங்க் அல்லது status எல்லாம் யோசிக்காதீங்க.

சட்டுன்னு அந்த Expert இருக்கும் இடத்துக்கே போங்க..

வேகமா போங்க… விமானதிலும் போலாம்..

எப்படி போனாலும் தனியா போங்க… Self Driving தான் போகனும்.

இது தான் tips…

அது சரி… நீங்க எம்பி எம்பி   MBA  நேத்து பாஸ் பன்னிட்டு இன்னெக்கி சொன்னா நாங்க கேட்டுக்கனுமா?? (சந்தடி சாக்கிலெ நானு MBA பாஸ் பன்ன மேடடர் சொல்லலிட்டேன் பாத்தீகளா??)

சரி.. நான் சொன்னா கேக்காடதீங்க!! கம்பன் சொன்னா கேப்பீங்களா???

இப்ப வாரன்…

இராவணன் சீதையை கவர வேண்டும். இதுதான் பிரச்சினை. எக்ஸ்பெர்ட் மாரீசன்.

இராவணன் வான வழியே பறந்து செல்லும் விமானத்தில் ஏறி, தனியா போனதை கம்பன் சொல்கிறார்..  என்ன தான் மாரீசன் தன் கீழ் வாழும் சொந்தக்காரன் என்றாலும் Expert Opinion தேவைப்பட்டா, நேரில் போகணும். 

நாமும் இந்த மாதிரி எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துக்களாமே!!  (அதுக்காக அடுத்தவன் பொண்டாட்டியை தூக்க ஐடியா கேக்காதீங்க….) கருத்து மட்டும் எடுத்துகுங்க.

பாட்டு பாருங்க:

வந்த மநதிரிககளோடு மாசு அற மரபின் எண்ணி
சிந்தையில் நினைந்த செயயும் செய்கையன் தெளிவி இலநெஞ்சன்
அந்தரம் செல்வது ஆண்டு ஓர் விமானத்தில் ஆரும் இன்றி
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான்.

மீண்டும் இன்னொரு கோணத்தில் கம்பரை மீண்டு(ம்) பாப்போம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s