வீட்டு உபயோகப் பொருட்களில் (Consumer durable items) வீட்டிற்கு மிகவும் உபயோகமான ஒரு ஐட்டம் இருக்குன்னா… அது எனக்கு என்னமோ வாஷின் மிஷின் தான் சொல்ல்லாம்னு தோணும். இருந்தாலும் எந்த வாஷிங் மிஷினும் அவ்வளவு திருப்தியா தொவைக்க மாட்டேங்குதே???. இது என் கவலை.
என் துணவியார் கேட்டார்… உங்களுக்கு எந்த மாதிரியான வாஷிங் மிஷின் வேணும்?
நான் என் கனவு வாஷிங் மிஷின் பத்திச் சொன்னேன்.
அழுக்குத் துணிகளை நாம ஒரு பக்கெட்டில் போட்டுகிட்டே வரனும். குறிப்பிட்ட அளவு துணி அங்கே வந்தவுடன், தானே வாஷின் மிஷின் போய் அந்த அழுக்குத் துணிகளை எடுத்து உள்ளாறெ போட்டுக்கனும்…தானா சோப்பு பவுடர் போட்டுக்கனும்.. ஆட்டோமேட்டிக்கா சத்தமே வராமெ… அழுக்கு இருக்கிற இடமா தேடிப் பிடிச்சி.. நல்லா தொவைச்சி…அப்புறம் சுத்தமா ஈரமில்லாம காயவச்சி… நல்லா சூப்பரா பிரஸ் செய்திட்டு.. நம்ம பீரோவில மடிப்பு களையாம அடுக்கி வைச்சிரனும்..
இப்படி வீட்டிலெ பொண்டாட்டி அல்லது கணவர் செய்ற மாதிரி எல்லாமெ பாத்து பாத்துச் செய்யும் ஒரு ஃபுல் ஆட்டமேட்டிக் வாஷிங்மெஷின் கிடைக்குமா??
என் மனையாள் சொன்னார்.., ஏங்க… இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை??
சும்மா… இல்லாததை இருக்கிற மாதிரி யோசிக்கிறதே ஒரு சுகம் தானே!! (நீங்க எல்லாருமே என்னேட போஸ்ட்களை ரசிச்சிப் படிக்கிறீங்க – ன்னு நினைக்கிற மாதிரி)
நூறாவது திருட்டு அடிக்கப் போகும் வடிவேலுக்கு அவர்களின் சிஷ்யப் புள்ளைங்க போஸ்டர் ஒட்டி அமர்க்களம் செய்வது – எதில் சேர்த்தி??
அந்தக் கால ஆனந்த விகடனில் வந்த, சாரி..கொஞ்சம் ஓவர் என்பதின் எக்ஸ்டென்சன் தான் இது என்று சேர்த்துக்கலாமா???.
இதையாவது காமெடின்னு ஓத்துக்கலாம். இந்த பஞ்ச் டயலாக் இருக்கே…அது தான் தாங்க முடியலை…
அந்தமானில் சுனாமிங்கிற பேரைக் கேட்டாலே துண்டெக் காணாம் துணியைக் காணாம்னு ஓடுற பார்ட்டிங்க நாமெல்லாம். ஆனா அடிக்கிற டயலாக் எப்படி தெரியுமா??
நாங்க.. சுனாமியிலேயே ஸ்விம்மிங்க் பன்றவங்க…
இன்னும் கொஞ்சம் ஓவரா போச்சின்னா… “இன்னுமாடா இந்த ஊரு நம்மளை நம்பிகிட்டு இருக்குன்னு” – அதுக்கும் ஒரு டயலாக் உட வேண்டியது.
இது நம்ம நாட்டு நடப்பு…
அப்படியே கொஞ்சம் காட்டு நடப்புக்கும் போலாமா??
அங்கே திடீர்னு மாயமான சங்கதி எல்லாம் நடக்குதாம். இதோ அதன் பட்டியல்:
1.வில்லை வச்சிருந்த வேடர்கள் எல்லாம் முனிவர் ஆயிட்டாங்களாம்!
2.முனிவர்ன்னா எப்படி? கோபமே வராத முனியாம்!! (இது தேவைதான்)
3.கெடச்சதயெல்லாம் அடிச்சி சாப்பிட்ட விலங்குகள் பசியே இல்லாமெ திரியுதாம்!!!
4.அப்படியே பாக்கிற சின்ன விலங்குக்கும், சிரிச்சிகிட்டே ஹாய் சொல்லுதாம் friendly யா..!!!!
5.(இது தான் டாப்பு..) புலி கிட்டெ குட்டிகள் பால் குடிக்குதாம்… எந்தக் குட்டி தெரியுமா? மான் குட்டிகள்..!!!!!
இது எப்படி இருக்கு
ராமன் புகுந்த காடு (சித்திரக்கூடம்) இப்படி ஆச்சின்னு கம்பர் ஓவரா யோசிச்சி சொல்றார்.
கம்பர் ஓவரா யோசிச்சா காவியம் .. நானு ஓவரா யோசிச்சா..ஒரு போஸ்டிங்க் அம்புட்டுதான்.
இந்த மெயில் எழுத கம்பர் எனக்கு உதவிய பாடல் இதோ:
…முழுவில் வேடரும் முனிவரின் முனிகிலர் உயிரை
தழுவி நின்றன பசி இல பகை இல தணிந்த
உழுவையின் முலை மான் இளங்கன்றுகள் உண்ட.
இன்னுமம் வளரும்.