எப்படி இருந்த நான்…


நொந்து நூலானவர்கள் பொதுவாக எல்லாருக்கும் புரியும் படி சொல்லும் ஒரு டயலாக் “எப்படி இருந்த நான்…இப்படி ஆயிட்டேன்” என்பது தான். அதனை எய்ட்ஸ் விளம்பரத்திற்கென விவேக்கை வைத்து ஒரு படத்தில் செய்ய வைக்க, அது ஓஹோன்னு ஹிட் ஆகிவிட்டது…

மக்கள் மனதில் எய்ட்ஸ் ஞாபகம் இருக்கோ இல்லையோ, அந்த விவேக் டயலாக் இப்பவும் மக்கள் மத்தியில் பளிச் தான்…

ஆமா.. நீங்க ரியல் லைஃபில் இப்படி டயலாக் அடிக்கும் ஆசாமியை பாத்ததுண்டா??

என்னெயெக் கேக்கிறீங்களா??…

அதுக்கு ஒரு சின்ன பிளாஷ்பேக் போகனும். ஓகேவா??

கொஞ்ச நாள் முன்னாடி என் மொபைலில் இருக்கிற எல்லா போட்டோவையும் சகட்டு மேனிக்கு என் பையன் பாத்துகிட்டே இருந்தான்.

(என்ன…பளாக் எழுதுறான்?? ஒரு மெஸேஜ் ஏதாவது இருக்கா அதுலெ? என்று கேட்கும் பொறுப்பான பார்ட்டிகளுக்கு, இதோ ஒரு மெஸேஜ்:

 உங்க மொபைல்லே வில்லங்கமான போட்டோக்கள் இருந்தால், உடனே அதை அழித்து விடவும். இந்த காலத்து பசங்களுக்கு அடுத்தவர் போன் நோண்டுவது தான் வேளை.. ஹி..ஹி..நானும் சான்ஸ் கெடைக்கும் போது அந்த நல்ல காரியம் பன்னியிருக்கேன்.)

 என் பையன் கண்ணுக்கு சிக்கிய போட்டோ ஒண்ணு… வேகமாக வரும் ஆட்டோ. ஆட்டோ டிரைவர் உள்பட யாருமே அந்த போட்டோவிலெ காணாம்.

இதெ ஏம்ப்பா எடுத்து வச்சிருக்கே? ன்னு கேட்டான். பரமக்குடியில் நம்ம வீட்டு பக்கத்து தெருமுனையில் ஒரு அம்மா பணியாரம் (ரம்பா விரும்பிச் சாப்பிடுவாங்களே..அது தான்) சுட்டு விக்கிறாங்க..

அவங்களுக்கு ஒரு காலத்தில் 23க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்ததாம். (20 கோடி இருக்கும் இன்றைய மதிப்பு) ஆனா இன்னெக்கி இப்படி ஆய்ட்டாங்க…

சரி அவங்களை ஒரு போட்டோ எடுத்து வச்சிக்கலாம்னு எடுத்தேன். அதுக்குள்ளார நடுவில ஒரு ஆட்டோ வந்திடுச்சி..அதான் அந்த ஆட்டோ போட்டோ.. அவங்க துரதிர்ஷ்டம் போட்டோ கூட எடுக்க முடியலை. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு அவங்க புலம்பலாம்.

என் பையன் கேட்டான்… சரி..அந்த ஆட்டோ போன பின்னாடி இன்னொரு கிளிக் பன்னியிருக்க வேண்டியது தானே??

(நல்ல கேள்வி.. எப்படி சமாளிச்சேன் தெரியுமா?)

போட்டோ மட்டும் இருந்தா வெறும் தகவல். (RAW Data)..  ஆள் இல்லாமெ வெறும் ஆட்டோ படம் இருந்தா சுவாரஸ்யமான விஷயம். (எனக்கு ஓகே..உங்களுக்கு எப்படி இருக்கு??)..இப்படி சொல்லி சமாளிச்சேன்.

பொதுவாக விதி என்பது, ரொம்ப நல்லா இருந்து நொடிஞ்சு போனா சொல்லும் வாக்கியம் “எ இ நா இ ஆ” என்பது. சில சமயங்களில் அப்படி ஒண்ணுமே இருக்காது.. ஆனா நெனைச்சே அப்படி பீஃல் பன்னிட்டு இருப்பாங்க..

உதாரணமா.. ஒரு ஆளுக்கு ஆபீசில் ஒரு மெமொ கெடைக்கட்டும் அல்லது தண்ணி இல்லா காட்டுக்கு டிரான்ஸ்பர் ஆகட்டும்.. பொலம்பல் ஆரம்பம் ஆயிடும். மொதலாளி திட்டினாலும் அந்த சீன் ஸ்டார்ட் ஆகும். பரீட்சையில் பெயில் ஆகும் பார்ட்டிகள், எதிர்பாத்த மார்க் கெடைக்காத போது…இப்படி ஏதும் விதி விலக்கு இல்லெ.

இவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும் கம்பனை இழுக்காட்டி ..நல்லாவா இருக்கு? எப்பொவுவே கம்பர் டிராக்கே தனி தான்.

எல்லாரும் நல்லா இருந்து கெட்டுப் போன போது தானே புலம்புறாங்க..?? ஆனா கம்பன் வார்த்தையில் “எப்படி இருந்த ஆளு” என்பதிலும் கூடுதல் ஆகுதாம்…அப்புறம் நொந்தும் போகிறாராம். சிச்சுவேஷன் சொன்னா இன்னும் புரியும்.

ராவணன் சீதையை ஜொள்ளு விட்டு பாக்கும் காட்சி.. (நம்ம ஆட்கள் தமண்ணாவை ஜொள்ளுவிட்டு பாக்கிற மாதிரி). அந்த அழகில் மயங்கி ஒடம்பு கொஞ்சம் ஊதுதாம்.. அப்புறம் கிடைப்பாளா மாட்டாளா என்ற சந்தேகத்தில் ஒடம்பு இளைச்சிட்டானாம்..

வீங்கின மெலிந்தன வீரத் தோள்களே.. இது கம்பர் வாக்கியம்.

ஒரு காலத்தில் பத்து தலை இருக்கிற ஆசாமி இருப்பானா? ன்னு கிண்டல் அடிச்ச நானு, இப்பொ ராமாயணத்தெ விழுந்து விழுந்து படிக்கிறேன்.. ம்… எப்படி இருந்த ஆளு… இப்படி ஆயிட்டேன்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s