ரெண்டு பழைய ஹிட் பாட்டுகள்.
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…(நான் பழைய ராஜா பத்திய பாட்டு தான் சொல்றேன்)
பறவைகள் .. பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்..
இதில் பார்வைகள் பலவிதம் என்பதும் வரும். அது என்ன?? பார்வைகள் பல விதம்.
ஆனா இன்னும் ஒருவரோ… பார்வை ஒன்றே போதுமே…பல்லாயிரம் சொல் வேணுமா?? என்றும் கேட்கிறார்.
ஆமாமா…ஒரே நபர் (பெண்ணாக இருந்தால்) சிறுமி, மாணவி, இளைஞி, வாலிபி, பிகர், செமகட்டை, மால், சகோதரி, மனைவி, ஆண்டி இப்படி எத்தனை விதமா பாக்குறொம்.. அப்போ பார்வை மட்டும் ஒன்னா எப்படி இருக்கும்???
பாசத்துக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம்? – இந்த மாதிரி வில்லங்க்கமான கேள்வியை ஒரு வாத்தியார் கேட்டார் பசங்க கிட்டே.. (கேட்டிருக்கக் கூடாது தான்)
பையன் சூப்பரா பதில் சொன்னான்.
சார்… நீங்க உங்க பொண்ணு மேலே வைக்கிறது பாசம். அதே நாங்க வச்சா … அதன் பேர் காதல்…
என்ன ஒரு வித்தியாசமான பார்வை பாத்தீங்களா??
அதே மாதிரி.. ரெண்டு பேர் பொண்ணு பாத்துட்டு வந்திட்டு பாடும் பாட்டு இருக்கே…
நான் பாத்த பெண்ணை நீ பார்க்கவில்லை… நீ பாத்த பெண்ணை நான் பார்க்கவில்லை…
இதுவும் ஒரு மாதிரியான கண் பார்வை தான்…
அப்படியே கொஞ்சம் காவிய காலத்துக்கு கொஞ்சம் பயணிக்கலாமே … (No air fare…all trips are free..free..free)
இலங்கைக்கு விசிட் வந்துட்டோம்… அப்படியே பேசிட்டே… அங்கே ரெண்டு பார்வைப் போர் நடக்குது.. (இலங்கைன்னா போர் தானா??)
ஒரு ராஜா சொல்றார்: வாவ்.. வாள் மாதிரி கூர்மையா இருக்கு… ஆனாலும் மை போட்டதாலே கூலா இருக்கே…இது யாரு??
ராஜாவோட தங்கை: எனக்கு என்னமோ கண்ணு தாமரை மாதிரி இருக்கு… வாய் பழம் மாதிரி இருக்கு. அப்புறம் கம்பீரமா இருக்கிற அந்த ஆளைப் பாத்த ஆண் மாதிரி தெரியுதே…
என்ன ஆச்சரியம்…!!! ரெண்டு பேரும் பாத்தது ஒரு நபர்… ஆனால் ஒருத்தருக்கு பெண்ணா தெரியுது. இன்னொருவருக்கு ஆண் போல் தெரியுது…
நாமளும் பாக்கலாமே.. அது யாருன்னு??
அந்த ராஜா: இராவணன்
தங்கை: சூர்ப்பநகை
ராஜாவின் பார்வை சீதை பக்கம்
தங்கையின் பார்வையோ ராமனின் பக்கம்… மேலும் படிக்க நீங்க போங்க கம்பராமாயணத்தில் சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலம் பக்கம்..
அது சரி… உங்க பார்வை இப்போ யார் பக்கம்?? எந்தப் பக்கம்???