இந்தப் பேனாவை கொஞ்ச்சம் வச்சிக்கிங்க…இதில் எந்த தப்பும் இல்லை. நான் சிவப்புக் கலரில் ஒரு கார் வச்சிருக்கேன்…இதூம் தப்பே இல்லை.. நான் ஒரு ஆளை வச்சிருக்கேன்…வேலைக்கு..என்று சொன்னால் கூட… கெட்பவர் ஒரு நமட்டு சிரிப்பு சிரிப்பார்!! (நீங்களும் இப்படி சிரிச்சிருப்பீங்களே!!)
இந்த அள்வுக்கு அந்த “வச்சிக்கவா” ரொம்ப பாப்புலர்….
வச்சிக்கா உன்னே மட்டும் நெஞ்ச்சுக்குள்ளே..சத்தியமா நெஞ்சுக்குளே..ஒண்ணும் இல்லே..இது செமெயான ஒரு குத்துப்பாட்டு… எந்த கச்சேரி மேடைகளிலும் களை கட்டும்.
நம்ம கல்லூரி சில்வர் ஜுப்ளியில் கூட இந்த பாட்டுக்கு குத்தாட்டம் போட்டது ஞாபகம் இருக்கு.
மேடையிலும் கீழும் (தண்ணி போடாமல்) நம்மளும் ஆட..செமஜாலியான சங்கதி தான்…
வச்சிக்கவா பாட்டுக்கு அவ்வளவு மவுசு…இதை மட்டும் மனசுலே வச்சிக்கிங்க…
வாயை வச்சிட்டு சும்மா இருக்கியா? என்பது நான் அடிக்கடி வாங்கிய திட்டு…ஆனா
இதுக்கு ஒரு பழைய கதை ஒன்னு சொல்லட்டுமா?? (வேணாம்னா ஒண்ணும் விடப் போவதில்லை..).
ஒரு காடு…அம்மா மானும் குட்டி மானும் விளையாடி களைத்துப் போய் தாகத்துக்கு தண்ணிக்காய் அழைந்தனராம்.. அப்போ..ஒரு சின்ன குட்டையில் கொஞ்சூண்டு தண்ணி
இருந்ததை பாத்தாகளாம். ரெண்டு பேரும் குடிக்க வாய் வைத்தனர்…
நேரமாக..நேரமாக…கொஞ்சமும் தண்ணி கொறையவே இல்லையாம்.. அம்மா மான் குடிக்கட்டும் என்று குட்டி மான் நினைக்க…குட்டிமான் குடிச்சிட்டு போவட்டும் என்று அம்மா மான் நினைக்க ..இதை நான் அந்தமானில் இருந்து எழுதாமல் சென்னை வந்து எழுதுறேன்…. ஆனா இதை தலைவனை பிரிந்த காதலி பாத்து ஆகா…என்று நெகிழ்ந்ததாக ஒரு சங்கப் பாடல் போகுது…
இது இப்படி இருக்க..சிலர் வாயை வச்சிட்டு சிரிச்சித் தொலைப்பாய்ங்க…தேவை இல்லாத நேரங்களில்..அது அதை விட வம்பு..
[சின்ன இடை சொருகல்: நீங்க கல கல டைப்பா அல்லது முசுடா?? நீங்களே
தெரிஞ்ச்சிக்கணுமா?? இப்போ கலகலப்பா இருக்கும் நம்ம நண்பர் கூட கொஞ்ச நேரம் பேசுங்க…ஒரு தடவை கூட நீங்க சிரிக்கலையா??? உங்களுக்கு முசுடுண்னு மத்தவங்க பேரு வச்சிருப்பாங்க..]
சிரிக்கக் கூடாத நேரத்தில் பாஞ்சாலி சிரித்ததால் தான் மகாபாரதமே உருவானது… அதே போல் பிள்ளைகள் விளையாடிய விளையாட்டை விளையாட்டா நெனைக்காமல், இது என்ன வெளெயாட்டான்னு சிரிக்காம விட்ட கூனி காரணம் தான் இராமயண கதையின் திருப்பு முனை.
எப்படியோ கஷ்டப்பட்டு ராமாயணம் கொண்டு வந்தாச்சி..அப்படியே..கம்பரைக்
கூப்பிட வேண்டியது தான்..
சிவன் ஒருத்தியை பாதியாவே வச்சிருக்கான்…இன்னொரு கடவுள் நெஞ்ச்சிலே
வச்சிருக்காக… கலைமகளை நாவில் வச்சிருக்கும் கடவுளு கீறாக…சிற்றிடை சீதையை
…ஆமா…அண்ணா.. உனக்குக் கெடைச்சா…எங்கெப்பா வச்சிக்கப் போறே??? இது இராவணனைப் பாத்து சூர்ப்பனகை பாடும் வச்சிக்கவா பாட்டு…
பாட்டும் இதோ:::-
பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பொன்னை
ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை
மாகத தோள் வீர பெற்றால் அங்ஙனம் வைத்து வாழ்தி
நீதி ??? அது இல்லாமலா…:
அவன் சொல்றான்.. இவ சொல்றான்னு யாரையாவது வச்சிக்க கிளம்பிடாதீங்க…(சொல்றது கூடப் பிறந்த தங்கையாவே இருந்தாலும் சரி)…மனசு முழுக்க மனையாளை மட்டுமே வச்சிக்கிங்க…பாக்க நல்லது…பாக்கிறவங்களுக்கும் நல்லது…முக்கியமா பர்ஸுக்கும் நல்லது..
வரட்டுமா….மீண்டும் வருவேன்